Category Archives: Movies

Kamal’s Dasavatharam – Reviews: Audio Release, Music, Songs

கூகிள் முழுக்க தசாவதாரத் தேடல். அதற்கு தீனி போடும் விதமாக, வருகையாளரைப் பெருக்கித்தள்ளி வெற்றிடத்துக்கு தள்ளும் நோக்கிலான பதிவு.

1.உலகநாயகன்… (கம் டான்ஸ் வித்மி)
பாடல்: வைரமுத்து, பாடியவர்: வினித்

Ulagha Nayagan- Dasavatharam Lyrics « ?.i.ili.i….Dimsy’s Lyrics Database i.ili.i.?

2. கல்லை மட்டும் கண்டால்
பாடல்: வாலி, பாடியவர்: ஹரிஹரன் மற்றும் குழு

3. முகுந்தா… முகுந்தா…
பாடல்: வாலி, பாடியவர்: கமல்ஹாசன், சாதனா சர்க்கம்

Mukhundha Mukhundha- Dasavatharam Lyrics « ?.i.ili.i….Dimsy’s Lyrics Database i.ili.i.?

4. ஓ..ஓ… சனம்…
பாடல்: வைரமுத்து, பாடியவர்கள்: கமல்ஹாசன், மகாலட்சுமி ஐயர்

5. கா… கருப்பனுக்கும்….
பாடல்: வைரமுத்து, பாடியவர்: ஷாலினி சிங்

6. ஓ…ஓ… சனம் (ரீமிக்ஸ்)


பாடல் வெளியீட்டு விழா
1. தசாவதாரம் ஒலித்தகடு வெளியீடு – Welcome To Your Senses – Keerthivasan Rajamani

2. “சாத்தான்”குளத்து வேதம்: “தசாவதாரம் – இசை வெளியீடு – என் பார்வையில்”

3. IdlyVadai – இட்லிவடை: `தசாவதாரம்’ விழா பேச்சுக்கள்

4. கடற்புறத்தான் கருத்துக்கள்: : “பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!”

Download:

1. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள் MP3 வடிவில் தரவிறக்க… தமிழ் மசாலா சிறப்பு பதிவு”

2. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்”

Reviews, Audio Critiques:

1. Yours Musically: Dasavathaaram Soundtrack

2. kirukkal .com: dasavathaaram_songs: “தசாவதாரம் – பாடல்கள்”

3. மனசாட்சி: “ஏமாற்றமளிக்கும் தசாவதாரம் பாடல்கள் – விமர்சனம்”

4. மின்மினி: தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு?

5. Dhoda!: தசாவதாரம் – Music Review

6. DesiReviews: DASHAVTAR [DASAVATHARAM ] (2008) MUSIC REVIEW

7. The stupid’s Prism » Dasavatharam Music – First Impressions

வலைப்பதிவு:

1. கமலஹாசனின் தசாவதாரம்

2. ப்ளாக்ஸ்பாட் அவதாரம்


செய்தி:

1. நையாண்டி தர்பார்: தசாவதாரம் ‘புக்கிங்’ ஆரம்பம்

2. கமல் | Tag | News | Articles


பேச்சு, அரட்டை, விவாதம்: மன்ற மையம்

முன்னோட்டம்:

இசை, பாடல்கள், எம்பி3

1. தசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்

2. IdlyVadai – இட்லிவடை: தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


பேட்டி:

1. lazygeek.net | For 25th, I pray !!

2. தமிழ் மசாலா: தசாவதாரம் பற்றி கமல் ,குழுவினர் பேட்டி மற்றும் படப்பிடிப்பு காட்சிகள்

3. நான் அவனில்லை!: “தசாவதாரம் – சில பேட்டிகள்”

விநியோகஸ்தர் : பிரமிட் சாய்மீரா


புகைப்படம்: lazygeek.net | Kamalavatharam

உல்டா பு(ரு)ல்டா: கற்பனை என்றாலும்!

அலசல்: கோகுல்: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்


கேள்வி நேரம்:

1. ‘சிவாஜி‘யை விட வியாபாரத்தில் மிஞ்சி விட்டால், தமிழ் சினிமா அடுத்த மைல்கல்/கட்டத்தை தொட்டதாகக் கொள்ளலாமா? (இவர் தொட்டிருக்கிறார்: உருப்படாதது: [திரைப்படம்] மீண்டும் மருதநாயகம் [தசாவதாரம் அல்ல])

2. வைணவத்தில் பரிணாம வளர்ச்சியின் திருவிளையாடல்களான பெருமாளின் பத்து அவதாரங்களும் ஓரங்கட்டப்படுகிறதா? (இவர் தொட்டிருக்கிறார்: கடற்புறத்தான் கருத்துக்கள்: நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி’ யும் – திசைகள் அ.வெற்றிவேல்)

3. அஜீத் சிட்டிசனில் எத்தனை வேடம் தரித்தார்?

4. தசாவதாரத்தைப் பார்த்து சுசி கணேசனின் கந்தசாமியில் இன்னொரு முகப்பூச்சு கூட்டப்படுமா?

5. துணை நடிகர்கள் எல்லாரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பாடல் காட்சியில் பற்பல பிரபு தேவாக்கள் விதவிதமாக நடனமாடுவார்கள். அது போல் தொலைக்காட்சித் தொடரில் இளவரசு, பாஸ்கர் போன்றோர் தொலைந்து போனதால், தற்செயலாக தசாவதாரம் எடுக்கிறாரா கமல்?

6. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்! அந்தக் கால பாடல் காட்சிகளில் ஒரே ஃப்ரேமில் இருபது தடவை கமல் முகம் வந்திருக்கிறதே… அதுவும் சாதனைதானே?

7. Our Thoughts: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்் – ஒரு அலசல்

கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. காதில்விழும் சொல்லாக இருந்த நிலை மாறிக் கண்ணில்படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்துகொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகரப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடுகூடிய முகத்தையும் கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி பத்துத் தடவையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்று அர்ச்சிக்கும் அ ராமசாமி தொடங்கி தமிப்பதிவர்கள் வரை ‘மிகை நாடும் கலை’ப் பார்வை தர இன்னொரு வாய்ப்பு தந்திடுகிறாரா?

8. கமல், தசாவதாரம், ஹிந்தி ஆஸ்கர் (ரவிச்சந்திரன் அல்ல) விருது – கேள்வி தொடுக்கவும்

9. முத்தம், பாமரர், சி சென்டர், வெற்றி – வழக்கமான சர்ச்சை வரவைக்கவும்

10. ஜெமினி கணேசன் & கே ஆர் விஜயா நடித்து கேயெஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் – சிறுகுறிப்பு வரைக.


முந்தைய பதிவுகள்:
1. ‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

2. ‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!


முந்தைய செய்திகள்:

1. Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam: “நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு”

2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order: “கமல்ஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”


படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே ‘தசாவதாரம்.’ இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!

படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.

சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.

முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,

‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது

தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது’

என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.

இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.

கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.

படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள். மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.

படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.

கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.

படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். “எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு” என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

“எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்” என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. “கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்.” நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை.

கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.

கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.


“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’


_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.

இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற… கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது.

உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’

பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை!

சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.

மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!

வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!

‘‘உடல் பூமிக்கு போகட்டும்

இசை பூமியை ஆளட்டும்’’

‘‘கடவுளும் கந்த சாமியும்

பேசிக் கொள்ளும் மொழி இசை’’

‘‘வீழ்வது யாராயினும்

வாழ்வது நாடாகட்டும்’’

போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.

படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:

‘‘உலக நாயகனே… கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’

ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?

ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.

_ வி. சந்திரசேகரன்

நன்றி : குமுதம்

இந்து முன்னணியின் புத்தம்புதிய கட்டளைகள்

Toilet - Tamil Movies

வணக்கம்மா என்ற பெயரில் உருவாகவுள்ள பட பூஜை தொடர்பான போஸ்டர்களில் ராமன், அனுமன் ஆகியோரின் படங்களை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட பூஜையும், ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டு விட்டது.

செய்தி: Hindu Munnani opposes Vanakkamma pooja posters: வம்பில் சிக்கிய ‘வணக்கம்மா’! | இந்து முன்னணி எதிர்ப்பு: ‘வணக்கம்மா’ பூஜை ரத்து

இதன் தொடர்ச்சியாக ‘ஹிந்து முன்னணி’யினரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்…

1. நவராத்திரி கொலுவில் இனி குழந்தைகள் ‘கிருஷ்ணன்’ வேஷம் கட்டக்கூடாது.

2. அமெரிக்க ‘ஹாலோவீன்’ சமயத்திலும் இது போன்றவை அரங்கேறக் கூடாது. மீறி எவராவது போட்டதாக தெரிந்தால், விமானப் பயணத்திற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்டவரிடம் இருந்து கோரி, அமெரிக்கா வந்து போராடுவோம்

3. மாறுவேடப் போட்டி, ஃபேன்சி டிரெஸ் ஆகியவற்றிலும் இனி யாரும் பிள்ளையாரகவோ, சிவனாகவோ மேடையேறக் கூடாது.

Symbols, Rituals, PRactices, Beliefs4. நடனமணிகளும் தங்கள் பாடல்களில் ராமர்/சீதை இன்ன பிற இந்துத்வா தெய்வங்களை அபிநயிக்கக் கூடாது.

5. ரஜினி நடித்த உழைப்பாளி படத்தில் தோன்றும் சிவபெருமான் திருக்கோல காட்சிகளை நீக்கி மீண்டும் தணிக்கை செய்யவேண்டும்.

6. தாரா சிங், அருண் கோவில், தீபிகாவிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்த வேண்டும்.

7. சன் டிவியின் ‘திருவிளையாட’லில் நடிப்பவர்கள் இனிமேல் எந்த சினிமாவிலோ, தொலைக்காட்சித் தொடரிலோ நடிக்க கூடாது. நிஜ வாழ்க்கையிலும் காணாமல் போய்விட வேண்டும்.

கொசுறு: ராமயாணம் அடிப்படையே தெரியாம படம் போடுறாளே. ராமன் பாதகைய கழட்டி பரதனுக்கு தானம் கொடுத்தப்றம்னா குரங்க சந்திச்சான்
தறுதலை

தொடர்புள்ள பதிவுகள்: கடவுளுக்கு மடல்கள்

பார்த்தவரெல்லாம் மொட்டை! அரைப்படத்திலே அரோகரா!!

90 Days

நியூட்டனின் மூன்றாம் விதி – எஸ் ஜே சூர்யா: Ads

Newton Moonraam Vithy - Tamil Cinema

Notable Hindi Songs – 2007 – Film Music: Top 13

2008 முடிவதற்கு முன்பாகவே பதிந்து வைக்க முடிகிறது 🙂

எந்த வரிசையிலும் இல்லை; என்றாலும்

  • ‘ஹே கண்பத்’, நோ ஸ்மோக்கிங் போன்றவை அடிக்கடி கேட்கும் பட்டியலில் இருக்கின்றன.
  • சக்தே இந்தியா, சீனி கம், குரு ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப்பீர்கள்!
  • வெல்கம் படத்தின் குத்துப் பாடல், சிவாஜியோடு முட்டிய ஜூம் பராபர் ஆகியவை கேட்டிருக்காவிட்டால், பாப் கல்ச்சர் அறிய காது கொடுக்கவும்.
  • ‘ஹம் தோ அய்ஸே ஹை பையா’ பாடல் பால் மணம் மாறா பாலகனாக இருந்தபோது வந்த ‘ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி’ போல் துள்ளலாக இருக்கிறது; ‘காசிசென்றுவந்தவுடன் பார்த்ததாலோ என்னவோ தனிப் பாசத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
  • படங்களை மொத்தமாக குறிப்பிட வேண்டும் (அல்லது) எந்தப் பாடலை சொல்வது என்னும் குழப்பத்தில் தீம் கோர்வைகளைத் தவிர்த்து, ஒரு படம் ஒருமுறைதான் இடம்பெறுமாறு அமைத்த பட்டியல் இது.
  • தமிழ்ப்படப் பாடல் பட்டியலுக்கு – Tamil Film Songs – Best of 2007 Movie Music « Snap Judgment
  1. சந்தா ரே (நிலாப் பாடல்) – ஏகலவ்யா
    • பாடியவர்: ஹம்ஸிகா ஐயர்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
    • பாடலாசிரியர்: ஸ்வானாந்த் கிர்கிரே
  2. சா ரஹா‘ராம் கோபால் வர்மா’வின் ஆக்
    • பாடியவர்: ஷ்வேதா பண்டிட், வினோத் ரதோட்
    • இசை: அமர் மொஹிலே, டிஜே அமித், கணேஷ் ஹெக்டே, நிதின் ரால்வாக்கர், பிரசன்னா சேகர்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சாஹ்னி
  3. ஹம்தோ அய்ஸே ஹேன் லகா சுனரி மே தாக்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
  4. ஜப் பீ சிகரெட் நோ ஸ்மோகிங்
    • பாடியவர்: அத்னான் சாமி
    • இசை: விஷால் பரத்வாஜ்
    • பாடலாசிரியர்: குல்சார்
  5. மௌலா மேரே லே லே மேரி ஜான் சக் தே இந்தியா
    • பாடியவர்: கிருஷ்ணா, சலிம் மெர்சன்ட்
    • இசை: சலீம் – சுலைமான்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சானி
  6. ஆஜா நாச்லே ஆஜா நாச்லே
    • பாடியவர்: சுனிதி சௌஹான்
    • இசை: சலிம் – சுலய்மான்
    • பாடலாசிரியர்: பியூஷ் மிஷ்ரா
  7. குர்தி மல்மல் திநிஷப்த்
    • பாடியவர்: அனுராதா போட்வால், கைலாஷ் கெர், ஸ்னேகா பந்த், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே
  8. கண்பத் ஷூட் அவுட் அட் லோகன்ட்வாலா
    • பாடியவர்: அன்ச்சல், மிகா
    • இசை: மிகா
    • பாடலாசிரியர்: மிகா
  9. சீனி கம் சீனி கம்
    • பாடியவர்: ஷ்ரேயா கோஸல்
    • இசை: இளையராஜா
    • பாடலாசிரியர்: சமீர்
  10. ஊன்ச்சா லம்பா வெல்கம்
    • பாடியவர்: ஆனந்த் ராஜ் ஆனந்த் & குழு
    • இசை: ஆனந்த் ராஜ் ஆனந்த்
    • பாடலாசிரியர்: ஆனந்த் ராஜ் ஆனந்த்
  11. மேரி ஜிந்தாரி கன்னா & அய்யர்
    • பாடியவர்: மதுஸ்ரீ, சுக்விந்தர் சிங்
    • இசை: தபுன் சூத்ரதார்
    • பாடலாசிரியர்: ராஜேஷ் ஜோரி
  12. ஜூம் பராபர் ஜூம் ஜூம் பராபர் ஜூம்
    • பாடியவர்: ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுஹான், ஜூபீன் கர்க்
    • இசை: சங்கர் – எசான் – லாய்
    • பாடலாசிரியர்: குல்சார்
  13. திருமணப் பாடல் காந்தி மை ஃபாதர்
    • பாடியவர்: பலர்
    • இசை: பியூஷ் கனோஜியா

Defining Conspiracy Theory with the help of Shreya

கான்ஸ்பிரசி தியரி என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன?

  1. சூழ்ச்சிக் கொள்கை
  2. சதியோசனை
  3. பந்துக்கட்டு
  4. பிதூரி
  5. உட்பகை
  6. சுற்றிக்கட்டுதல்
  7. கொடுமுடிச்சு
  8. கூட்டுமூட்டு
  9. நெஞ்சாங்கட்டை
  10. மாற்றுக்கருத்து
  11. எதிர்மறைக் கொள்கை
  12. அடிப்படையற்ற எதிர்கொள்கை
  13. குற்றச்சாட்டு கோட்பாடு

உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

இனி செய்தியைத் தேர்ந்தெடுக்கும் நேரம்.

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, ரஜினி உடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததால் புகழ் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு ஸ்ரேயா சென்றிருந்தார்.

அதிகாலையில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது சிலர் அவரை அடையாளம் கண்டனர். உடனே ஸ்ரேயாவை நெருங்கி `ஆட்டோகிராப்’ கேட்டனர். கையை பிடித்து குலுக்கவும் முயற்சித்தனர். அப்போது ஒரு ரசிகரை ஸ்ரேயா ஓங்கி அறைந்தார். அவருடைய உதவியாளர்களும் அந்த ரசிகரை அடித்து உதைத்தனர்.

ஸ்ரேயாவின் இடுப்பை அந்த ரசிகர் கிள்ளியதால் அவர் கோபமடைந்து அடித்ததாக கூறப்பட்டது. ஸ்ரேயாவிடம் அடி வாங்கியவர் பெயர் ஹரி என்பது, பின்னர் தெரிய வந்தது. திருமலையில் உள்ள ஒரு மடத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

ஸ்ரேயா கூறியதாவது:-

கோவிலில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த நான், பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒருவன் எனது இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் இப்படி நடந்து கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

முதலில் கண்ணில் படுவது ‘புத்தாண்டை முன்னிட்டு’.

தற்போது ஒகெனக்கல் தமிழ்நாட்டில் இருக்கிறதா/சத்யராஜ் தேர்தலில் நிற்பாரா என்னும் சூழல் நிலவுவதை கணக்கில் எடுக்கவும். கன்னட வருடம் பிறந்ததைக் கொண்டாட ‘முன்னாள் தமிழ்நாடு’ (சென்னை மாகாணத்தில்) இருந்து துண்டாடப்பட்ட தெலுங்கு தேசத்தில் உள்ள கோவிலுக்கு ஷ்ரேயா சென்றிருப்பதன் அவசியம் என்ன? அன்று திருப்பதி தாரை வார்க்கப்பட்டது; இன்று ஹொகேனக்கல் சென்று விடக் கூடுமா?

இவ்வாறு சிந்திப்பது ‘ சுற்றிக்கட்டு’ காட்டினாலும், ஷ்ரேயாவை முடிச்சுப் போடாமல் பாதியில் அனாதரவாகத் தொங்கி நிற்கிறது. இந்த மாதிரி எழுதுவது ‘தொலைநோக்கு பார்வை‘ எனப்படும்.

அடுத்ததாக ஹரி ‘இந்து சமயம்’ சார்ந்த மடத்தில் வேலை பார்க்கும் சமாச்சாரம் கிடைக்கும். இது முற்போக்கு பார்வைக்கு மட்டுமே உதவும். பார்ப்பனியம், ஆரியம், மடத்தலைவன் என்று முடிந்த அளவு தட்டையாக சித்தாந்தப் பார்வை ஆக்கி விடலாம்.

மதம் எல்லாம் ‘கதம் கதம்’ என்று பாபா ரஜினி வழியா உங்களுக்கு? பரவாயில்லை! அடிபட்டவர் துப்புரவு பணியாளர் என்பதால், கவிஞர் வாலியைப் போல் ‘சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு; நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு’ என்று இலக்கியப் பார்வை வடிக்கலாம்.

‘ஷ்ரேயாவுக்கு நேர்ந்தது எனக்கும் அன்றாடம் நேர்கிறதே’ என்று பாலாஜி பக்தையின் கதியை எடுத்துவைத்தால் பெண்ணியப் பார்வை என்று முடக்கப்படலாம்.

கரிசல் » பொதுவுடைமை என்பது போல் “சாமானியர்களும் ஏழைகளும் தொடக்கூடாதா என்ன?” என்று ஆணியப் பார்வைக்கு தாவலாம்.

இதெல்லாம் ‘குற்றச்சாட்டு கோட்பாட்டை’ நெருங்கவில்லை.

  • கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரெஸின் ஏசி வகுப்பு போல் அலுக்காத சினேகா இன்னமும் சந்தையில் காலந்தள்ளுகிறார்.
  • பதிவுசெய்யப்படாத வகுப்பு போல் எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயணிக்கும் நமீதா;
  • நிதிநிலை அறிக்கையில் தள்ளுபடியான விலை போல குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் சிம்ரன்;
  • ராஜதானி போல் தலைநகரை நோக்கினாலும் சென்னையிலும் கால் வைத்திருக்கும் அசின்;
  • எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படும் என்று கிசுகிசுக்கப்பட்டாலும் பாஸெஞ்சரின் வாஞ்சையான நடிகையர் திலகம் மீரா ஜாஸ்மின்;
  • கிராமம், நகரம் என்று வித்தியாசம் பாராட்டாமல் பயணிக்கும் இருவுள் போல் இரண்டுவிதமான நடிப்பிலும் அசத்தும் ப்ரியாமணி;
  • ரயில்வே சாப்பாடாக சென்நை பிரியாணி பரிமாறிய பூஜா;
  • பொறிக்கு தக்கவாறு, ஒரே தடத்தில் வேகமாக செல்லும் வண்டியும், நின்று நிதானித்து செல்லும் வண்டியும் செல்வது போல் இயக்குநருக்கு ஏற்ப மிளிரும் பாவ்னா;
  • புதிய விமானங்களாக வந்திறங்கும் பாரதி, விஜயலஷ்மிகள்;
  • ஏர் இந்தியாவாகப் பறந்து கொன்டிருக்கும் த்ரிசா;
  • ‘தவமாய் தவமிருந்து’ என்று எக்ஸ்பிரெசாக அறிமுகம் ஆகி ‘பட்டியல்’ சூப்பர் ஃபாஸ்ட் என்று பதவி உயர்வு அடையும் பத்மப்ரியா;

தடம் மாறக் கூடாது. மீண்டும் சதியாலோசனைக்குத் திரும்பவும்.

சொர்ணமால்யா குறித்த கிசுகிசு வந்தால் எவராவது சீந்துகிறார்களா? இல்லையே! புகழுக்கும் புதருக்கும் மோனை மட்டும் ஒற்றுமை அல்ல. இன்று புகழோடு இருப்பவர் நாளை கோப்புகளாக்கி மூலையில் புதைக்கப்படுகின்றனர்.

கொண்டாட்ட மேடையில் நடிகர்களின் பேச்சு மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. நடிகைகளுக்கு கனவுப்பாடல் தரப்படவில்லை. பின்னணிக்குரல் நாயகி சவீதாவும் வரவில்லை. இப்படிபட்ட சமயத்தில் செய்தியில் எப்படி இடம்பிடிப்பது?

பிடித்தார் துணை நடிகரை; கொடுத்தார் ரியாலிடி டிவியை!

‘நடிக்கிற மாதிரி நடி; அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்’ என்று சொல்லி வைத்ததை அரங்கேற்ற, அகில லோக செய்திகளிலும் தலைப்புகளில் அடிபடல் ஆனார்.

மெரீனாவில் பெருமாளின் திருக்கல்யாண சேவை பார்த்த மக்களிடம் தன் கடவுள் பக்தியை பறைசாற்றினார். புலியை முறத்தால் விரட்டிய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி விளைந்த வீர பரம்பரை சங்கச் சித்திரத்தை செயலில் காட்டி இலக்கிய தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்தார் என்று அடுக்கினால் கான்ஸ்பிரசி கொள்கை எனப்படும் என்றறிக!

அறை எண் 305ல் கடவுள் – போஸ்டர்

arai enn 305 kadavul simbudevan shankar prakash raj karuppu

 

Fitna – Prabhakaran: Movies

ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif

நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons

தொடர்புள்ள பதிவு: Fitna – தேவையற்ற அச்சுறுத்தல் | Pa. Raghavan

தொடர்பில்லாத பதிவு: குப்பை வலை: பாலாஜி சித்ரா கணேசன்: “‘பிரபாகரன்’ வளர்க! பிரபாகரன் ஒழிக!”

Njaani – DMK Movie Production Company & Pondycherry Churches

கற்பிதங்கள் என்றால் என்ன? மூட நம்பிக்கைதான்.

ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.

இந்த வார குட்டு

கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு

இந்த வார கேள்வி

தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?

முழுவதும் வாசிக்க: தமிழ்2000: ஓ பக்கங்கள் – 7

ரஜினிக்கொரு ஹீரோயின் வேணுமடா (பாய்ஸ் பாட்டு மெட்டில் படிக்கவும்)

meera-nandhakumar5.jpg

புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்