Category Archives: Cinema

Anjaathey – Bharathi Aathichoodi

அஞ்சாதே பாடல்:

1. அச்சம் தவிர்
62. நையப் புடை
76. மானம் போற்று
96. ரௌத்திரம் பழகு
2. ஆண்மை தவறேல்
43. தாழ்ந்து நடவேல்
30. சூரரைப் போற்று
45. தீயோர்க்கு அஞ்சேல்
…(¶#¶)…

11. ஓய்தல் ஒழி
61. நேர்ப்படப் பேசு
43. தாழ்ந்து நடவேல்
26. சாவதற்கு அஞ்சேல்

14. காலம் அழியேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
74. போர்த்தொழில் பழகு
52. தோல்வியில் கலங்கேல்
…(¶#¶)…

69. புதியன விரும்பு
106. வீரியம் பெருக்கு
19. கெடுப்பது சோர்வு
51. தொன்மைக்கு அஞ்சேல்

107. வெடிப்புறப் பேசு
54. நன்று கருது
110.வௌவுதல் நீக்கு
53. தவத்தினை நிதம்புரி
…(¶#¶)…

13. கற்றது ஒழுகு
21. கைத்தொழில் போற்று
32. சேர்க்கை அழியேல்
72. பேய்களுக்கு அஞ்சேல்

38. ஞாயிறு போற்று
75. மந்திரம் வலிமை
36. சௌரியம் தவறேல்
55. நாளெல்லாம் வினை செய்


பாக்கி ஆத்திச்சூடி
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
12. ஔடதம் குறை
15. கிளைபல தாங்கேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
20. கேட்டிலும் துணிந்து நில்
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
31. செய்வது துணிந்து செய்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
37. ஞமலிபோல் வாழேல்
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
44. திருவினை வென்று வாழ்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
73. பொய்ம்மை இகழ்
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்

நன்றி: Andhimazhai – பாரதியார் ஆத்திச்சூடி

Fitna – Prabhakaran: Movies

ted-rall-koran-quran-mohammed-censor-expression.gif

நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons

தொடர்புள்ள பதிவு: Fitna – தேவையற்ற அச்சுறுத்தல் | Pa. Raghavan

தொடர்பில்லாத பதிவு: குப்பை வலை: பாலாஜி சித்ரா கணேசன்: “‘பிரபாகரன்’ வளர்க! பிரபாகரன் ஒழிக!”

Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs

தொடர்புள்ள பதிவு:

கவிப்பேரரசு வைரமுத்துவின் பாற்கடல் – Bharathiraja, Kamalahasan

Vairamuthu Question & Answer – Incidents, Detractors

வைரமுத்து கேள்வி பதில் – MSV, Rajaraja Chozhan

பாடலாசிரியர் வைரமுத்து lists his favorite Movie Lyrics & Songs

ப.முரளிகிருஷ்ணா, சமயபுரம்.

அப்துல் ரகுமான் _ மீரா _ நா.காமராசன் _ சிற்பி _ தமிழன்பன் _ மேத்தா இவர்கள் கவிதைகளில் நீங்கள் ரசித்த வரிகள்?

‘‘நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது’’
அப்துல் ரகுமான் (பால்வீதி)

‘‘பூங்கொடியே உனக்குப்
பூ வாங்கி வருகிறேன்
முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன்
கர்ணன் வீட்டுக் கதவைத்
தட்டியது மாதிரி’’

மீரா (‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ தொகுப்பில் விடுபட்ட கவிதை ஒன்று)

வானவில்
‘‘இந்தப் பொல்லாத வானம்
மழையையும் தூறிக் கொண்டு
துணியையும் உலர்த்துகிறது’’
நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)

‘‘ஐந்து புலன்களும்
கால் பந்து விளையாடும்
மைதானம் உடல்
விதிகள் தெரிந்தால்
விளையாட்டு
ஆழம் தெரியாமல் ஆடினால்
பேய் மணல்’’
சிற்பி (இறகு)

‘‘அம்பு கூர்மையாய்
இருந்தென்ன
பார்வை?’’
ஈரோடு தமிழன்பன் (ஒரு வண்டி சென்ரியு)

காதல்
‘‘இரண்டு கண்களும்
இரண்டு கண்களும்
எதிர்ப்பட்டுக்கொள்ள
நான்கும் குருடானபின்
நடக்கும் நாடகம்’’
மு.மேத்தா (அவர்கள் வருகிறார்கள்)

கே.சுந்தரேசன், உத்தமதானி.

பாரதியார் கவிதைகளை அவர் எழுதிய காலத்தில் யாரும் விமர்சித்தது உண்டா?

உண்டு.

கண்ணன் பாட்டில் _

‘‘தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி _ பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்’’ என்று எழுதினார் பாரதி.

வக்கீல் நண்பர் ஒருவர் கேட்டார்: ‘‘நீங்கள் எழுதியது கண்ணன் பாட்டு, கண்ணன் கதை நிகழ்ந்த காலம் முற்காலம்; தில்லிக்குத் துருக்கர் வந்தகாலம் பிற்காலம். கண்ணன் பாட்டில் துருக்கர் பற்றிய குறிப்பு வருவது காலமுரண் இல்லையா?’’

கண்சிவந்த பாரதி அள்ளி வீசினார் அனல் வார்த்தைகளை : ‘‘ஏங்காணும்… பணியாரம் கொடுத்தால் ருசி பார்த்துச் சொல்வீரா… மாவு எங்கிருந்து வந்தது, யார் சுட்டது என்று கேட்பீரா? கவிதையைக் கவிதையாய்ப் பாரும் ஓய்…’’

ஆவேசத்தின் சிகரங்களிலிருந்து காட்டாறாய் இறங்கி வருகிறது கவிதை. அதில் நுரை பார்க்கும் கூட்டம் நதி பார்க்காது.

என்.பார்கவி, தேவகோட்டை.

ஓர் ஆணோ பெண்ணோ அதிகபட்சம் எத்தனை குழந்தைகள் பெற முடியும்?

18ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888.

1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிக குழந்தைகள் பெற்றவர். 27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். பதினாறு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள்; ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்; நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகள்.

இனவிருத்திக்கான ஆற்றல் இயங்க முடிந்த எல்லாருக்கும் உண்டு.

மதம் அரசு என்ற நிறுவனங்களாலும், நாகரிகம் பண்பாடு என்ற கருத்தியல்களாலும் நம் சக்தி நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.

க.ஞானசேகரன், கதிராமங்கலம்.

நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னப் பறவைதானே பறவைகளில் அறிவாளி?

அதே அன்னப் பறவையை முட்டாள் என்கிறான் பர்த்ருஹரி.

இரவில் குளத்தில் தெரியும் நட்சத்திரங்களை ஆம்பல் முனை என்று கடித்து ஏமாந்து போகும் அன்னம், பகலில் நட்சத்திரம் என்று கருதி ஆம்பலைக் கடிக்காமல் பட்டினி கிடக்குமாம். மதி அன்னங்களும் உண்டு மட அன்னங்களும் உண்டு மனிதர்களைப் போலவே.

பி.புகழேந்திரன், மேலவழுத்தூர்.

பல இசையமைப்பாளர்கள் இசையமைத்ததில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல்…

நீண்…..ட பட்டியல். உங்கள் பொறுமையை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.

கே.வி.மகாதேவன் _வானம் எங்கே முடிகிறது (பாய்மரக்கப்பல்)

எம்.எஸ்.விஸ்வநாதன் _ கண்ணான பூமகனே (தண்ணீர் தண்ணீர்)

இளையராஜா _ பொன்மாலைப்பொழுது (நிழல்கள்)

சங்கர் கணேஷ் _ மேகமே மேகமே (பாலைவனச்சோலை)

கங்கை அமரன் _நீ தானா நெசந்தானா (நாளெல்லாம் பௌர்ணமி)

சந்திரபோஸ் _மனிதன் மனிதன் (மனிதன்)

ஷியாம் _ ஆனந்த தாகம் (வா இந்தப் பக்கம்)

வி.எஸ்.நரசிம்மன் _ ஓடுகிற தண்ணியில (அச்சமில்லை அச்சமில்லை)

ஆர்.டி.பர்மன் _ அடடா வயசுப்புள்ள (உலகம் பிறந்தது எனக்காக)

லட்சுமிகாந்த் பியாரிலால் _ தேனூறும் ராகம் (உயிரே உனக்காக)

சக்கரவர்த்தி _ சமையல் என்பதொரு தத்துவம் (தேன்கூடு)

மனோஜ் கியான் _ அழகான புள்ளிமானே (மேகம் கறுத்திருக்கு)

அம்சலேகா _ சேலைகட்டும் பெண்ணுக்கொருவாசம் உண்டு (கொடிபறக்குது)

சம்பத் செல்வம் _ சந்தனப் பூவச் சம்மதம் கேட்கப்போறேன் (ஓடங்கள்)

தேவா _ புல்வெளி புல்வெளி தன்னில் (ஆசை)

தாயன்பன் _ ஸ்ரீராமனா (அன்று பெய்த மழையில்…)

ஜெர்ரிஅமல்தேவ் _ என் கண்மணி (நினைவோ ஒரு பறவை)

வித்யாசாகர் _ மலரே மௌனமா (ஜெய்ஹிந்த்)

ஏ.ஆர்.ரஹ்மான் _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

தேவேந்திரன் _ மாட்டுவண்டிச் சாலையிலே (வேதம் புதிது)

எஸ்.பி.பாலசுப்ரமணியம் _ வண்ணம் கொண்ட வெண்ணிலவே (சிகரம்)

எல்.வைத்திய நாதன் _உழுதானே உழுதானே(ஏர்முனை)

சங்கீத ராஜன் _ நாடு நாடு (பூவுக்குள் பூகம்பம்)

ரவீந்திரன் _மனமே மயங்காதே (லட்சுமி வந்தாச்சு)

மரகதமணி_ ஜனகணமன (வானமே எல்லை)

எஸ்.ஏ.ராஜ்குமார் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாத மனமும் துள்ளும்)

பரத்வாஜ் _ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் (அமர்க்களம்)

பாலபாரதி_தாஜ்மஹால் தேவையில்லை (அமராவதி)

ஆதித்யன் _ ஒயிலா பாடும் பாட்டுல (சீவலப்பேரிபாண்டி)

சிற்பி _ கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை)

மகேஷ் _ பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் (நம்மவர்)

ஆனந்த்_அச்சு வெல்லமே(சக்தி)

சுரேஷ் பீட்டர் _ பூப்பூவாப் பூத்திருக்கு பூமி (கூலி)

விஜய்ஆனந்த் _ தேவி தேவி (நான் அடிமை இல்லை)

சிவாஜி ராஜா _ சின்னச் சின்ன மேகம் (காற்றுக்கென்ன வேலி)

இனியவன் _ அருவிகூட ஜதியில்லாமல் சுதியில் பாடுது (கௌரி மனோகரி)

சௌந்தர்யன் _ கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை (சிந்து நதிப் பூ)

ரஞ்சித் பரோட் _ மின்னல் ஒரு கோடி (வி.ஐ.பி.)

ஹாரீஸ் ஜெயராஜ் _ மூங்கில் காடுகளே (சாமுராய்)

மணிசர்மா _ மெல்லினமே (ஷாஜகான்)

தினா _ அன்பே அன்பே (கண்ணும் கண்ணும்)

சபேஷ்முரளி _ விளக்கு ஒன்று அணைந்து போனால் (அடைக்கலம்)

தேவி ஸ்ரீ பிரசாத் _ மண்ணிலே மண்ணிலே (மழை)

ஷிவா _ என்ன அழகு எத்தனை அழகு (லவ் டுடே)

விஜய் ஆண்டனி _ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யூம்)

ஸ்ரீகாந்த் தேவா _ பொட்டுவைத்த முகத்தை (சிலநேரங்களில்)

டி.இமான் _ ஏ.தமிழா ஏ.தமிழா (தமிழன்)

பால்ஜே _ பேனாக்காரன் வருகிறேன் (தலைமகன்)

ஜி.வி.பிரகாஷ் _ நீயே சொல் (பொல்லாதவன்)
எஸ்.மகாலட்சுமி, வல்லக்கோட்டை.

பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்?

  • மதிக்கப்படுவதை;
  • தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கப்படுவதை;
  • நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கப் படுவதை;
  • தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை;
  • தன் பலத்தைக் கொண்டாடும் குணத்தை;
  • ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும் தான் என்னும் உயிரழுந்தும் ஸ்பரிசத்தை.
  • சபையில் கொடுக்கும் கௌரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை;
  • தாம்பத்யம் முடிந்த தருணங்களில் ‘குளியல் அறைக்கு முதலில் நீ போ’ என்று வழங்கப்படும் முன்னுரிமையை.

 எஸ். உஷாராணி,  துவாக்குடி.

எம்.ஜி.ஆர். அறிவாளியா? புத்திசாலியா?

சாமர்த்தியசாலி.

ஒரு படப்பிடிப்புக் கூடத்துக்குள் நடித்துக் கொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஒரு லாரியில் வந்து இறங்குகிறது ரசிகர் கூட்டம். தேநீரும் வடையும் தந்து உபசரிக்கிறார். கையெடுத்துக் கும்பிட்டும் வந்த கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. நெருக்கமான காதல் காட்சி வேறு. வரவர ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களை வெளியேற்றவும் முடியவில்லை. என்ன செய்வதென்று எம்.ஜி.ஆர். யோசிக்கிறார். வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த உதவி இயக்குநரை அழைக்கிறார்; அவர் வைத்திருந்த வசனத் தாளை வாங்குகிறார். என்னவோ எழுதுகிறார். கூடியிருந்த கூட்டம் கும்மி கொட்டி ஆரவாரிக்கிறது.

‘‘வசனகர்த்தாங்கறவன் சும்மா, வாத்தியார் படத்துக்கு வாத்தியார்தாண்டா எழுதுறாரு வசனத்த’’ என்று பெருமை பேசுகிறது கூட்டம். கொஞ்ச நேரத்தில் ஒரு சிறிய போலீஸ் பட்டாளம் வருகிறது; ரசிகர்களைக் கலைக்கிறது; லாரி புறப்படுகிறது.

இப்போது வசனத்தாளை எம்.ஜி.ஆர். மீண்டும் வாங்குகிறார். தான் எழுதிய வரிகளை அவரே அடிக்கிறார்.

‘‘போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்து அத்தனை பேரையும் மென்மையாக அப்புறப்படுத்தவும்.’’

வெளியே லாரிக்காரர்களின் கோஷம் சாலையைக் கிழிக்கிறது: ‘எம்.ஜி.ஆர். வாழ்க!’

ஆர். ரூபநாதன், சின்ன காஞ்சிபுரம்.

இந்திய வாழ்க்கை என்பது…?

கடைசி ஐந்து வருடத்தைத் தனக்குப் பிடித்தமாதிரி வாழ்வதென்னும் போராட்டத்தில் தனக்குப் பிடிக்காத மொத்த வாழ்க்கையை வாழ்ந்து தொலைப்பது.

பி. நேருதாசன், பல்லாவரம்.

தலைவர்கள் யாரைப்பார்த்து அஞ்சுகிறார்கள்?

பத்திரிகைக்காரர்களைப் பார்த்து,

பிரதமரான பிறகுதான் பண்டித நேரு முதன் முதலில் அமெரிக்கா சென்றார்.

‘‘எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையாளர்களிடம் மட்டும் கவனமாயிருங்கள்’’ என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள்.

அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு. எல்லாக் கேள்விகளும் ஓய்ந்த பிறகு கடைசியாகக் கேள்வி கேட்கிறார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் லிப்மேன்:

‘‘இந்தியப் பிரதமருக்கு அமெரிக்காவின் இரவு விடுதிக்குச் செல்லும் எண்ணம் உண்டா?’’

நேரு சிரித்துக் கொண்டே திருப்பிக் கேட்டார்.

‘‘நியூயார்க்கில் இரவு விடுதி இருக்கிறதா?’’

மறுநாள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலைப்புச் செய்தி:

‘‘நியூயார்க்கில் இரவு விடுதி இருக்கிறதா? இந்தியப் பிரதமர் ஆவல்’’

பத்திரிகையாளர்கள் பொல்லாதவர்கள்..

Njaani – DMK Movie Production Company & Pondycherry Churches

கற்பிதங்கள் என்றால் என்ன? மூட நம்பிக்கைதான்.

ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.

இந்த வார குட்டு

கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு

இந்த வார கேள்வி

தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?

முழுவதும் வாசிக்க: தமிழ்2000: ஓ பக்கங்கள் – 7

ரஜினிக்கொரு ஹீரோயின் வேணுமடா (பாய்ஸ் பாட்டு மெட்டில் படிக்கவும்)

meera-nandhakumar5.jpg

புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

  • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
  • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
  • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
  • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
  • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
  • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
  • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு

‘உற்சாகம்’ பாடல் கேட்டிருக்கீங்களா?

கேட்டிருந்தாலும் பரவாயில்லை.

இன்னொரு தடவை கேளுங்க. இந்த ஜீவி பிரகாசுக்கு கிடைக்கிற வாய்ப்புகளுக்கு பத்தில் ஒன்றாவது ரஞ்சித் பரோடுக்கு சென்றுவிட எல்லாம்வல்ல இறைவரைப் பிரார்த்திக்கிறேன்.

இன்றைய சந்தேகம் & அறச்சீற்றம்

anjathey-prasanna-daya-lengthy-hair-cinema-movies.jpgதமிழக சினிமா காவல்துறை மேல் எனக்கு பெருத்த அவமரியாதை கூடிய சந்தேகம் எழுந்துள்ளது.

என் மகளுக்கு இருக்கும் கொஞ்சூண்டு தலைமுடியை வாரி விடுவதற்குள் பிராணன் போகிறது. இங்கே ‘வேட்டையாடு விளையாடு’ டேனியல் பாலாஜி, ‘அஞ்சாதே’ பிரசன்னா என்று எல்லா வில்லர்களும் சடாமுடியுடன் அருள்பாலிக்கிறார்கள். நாராயண் ‘சத்யா’ போன்ற லஞ்சப் பேர்வழிகள் நிறைந்த திரைப்பட போலீசால் ஏற்பட்ட வினை!

Vettaiyadu Vilaiyaduஇதில் டேனியல் பாலாஜி இன்னும் அக்கிரமம். அமெரிக்கா வந்த பிறகு பின் வழுக்கையும் முன் வழுக்கையும் தலை குலுக்கிக் கொள்ளும் தண்ணீரில் நீராடியும் ‘வேட்டையாடு விளையாடு’ என்று கொலையுதிர்த்தும் சிலிர்த்துக் கொண்டே பான்டீன் விளம்பரமாயும் கொழிக்கிறார்.

இதெல்லாம் நல்லதுக்கில்லை.

மயிரை சீராட்டி பாராட்டி சாம்பிராணி போடும் நேரத்தில் நாலு பொண்ணை வியாபாரம் செய்தோமா… ராகவனுக்கு எலுமிச்சை அனுப்பினோமா என்றெல்லாம் பொறுப்பாக செயல்படாமல் கூந்தல் வளர்த்து வெறுப்பேற்றும் நெகடிவ் நாயகர்களை நம்ப முடியாத குணச்சித்திரமாக சித்தரிக்கும் மிஷ்கின் & கவுதம் மேனனுக்கு கண்டனங்கள்!!!

குருவி – தரணி + விஜய் & வித்யாசாகர்

Kuruvi Movie Poster - Ilaiya Thalapathy Vijay & Tharani - Uthayanidhi Stalin

இளவரசு அறிமுகமான படம் எது?

விடை தெரிந்துகொள்வது எளிதுதான் 🙂

ட்ரிவியாபேட்டைக்கு சமர்ப்பணம்.

தொடர்புடைய சுட்டி: திரைப்படம்.காம்