Category Archives: Cinema

Periyar Movie – Rajni Quote: Banner Ad

Rajni_fans_discussions_Udhyam_Periyar Banner_Quote.JPG

பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்

“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:

“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The Language of Puke

மொழி – வாந்தி‘ என்பதன் தூய ஆங்கிலமாக்கத்தை தலைப்பில் காணலாம்.

மொழி திரைப்படத்தில் குடிபோதை மீறிய பிரகாஷ்ராஜ் இன்னொருவரின் வீட்டு வாயிலில் வாந்தியெடுக்கத் தொடங்கி விடுவார். அவரை வீட்டுக்குள் இட்டு, கதவை சாத்தி, பாத்ரூமை பயன்படுத்துமாறு சொன்னபிறகும், மிகத் தெளிவாக மீண்டும் அதே வீட்டு வாயிலுக்கு பிழறாமல் வந்து மீத வாந்தியையும் முடித்து விட்டு உறங்க சென்றுவிடுவார்.

யதார்த்தமான பல காட்சிகள் நிறைந்த படம் என்பதற்கு வசனம் மட்டுமே கொண்ட முதல் காட்சியே ஒரு சோறு பதம். ஆனால், குடிகாரனின் குணாதிசயத்தை சொல்லும் இந்தக் காட்சி இயல்பாக நிகழ்வது.

கல்லூரி முதலாமாண்டு. ‘இந்தியன் ஓசியன்‘ கச்சேரிக்கு புதிய வலைப்பதிவர் ஆசை ஆசையாய் தமிழ் திரட்டியில் சேர்ந்துகொள்வது போல், கிறக்கத்துடன் சீக்கிரமே போய் சீட் பிடித்து உட்கார்கிறோம். பெருங்கூட்டத்தில் ஒருத்தி பாப்கார்ன் பிரியப்பட, வாங்க வெளியே வந்தபோதுதான் பிரகாஷ்ராஜ் ஸ்டைல் அபிஷேகம், மட்டுறுத்தப்படாத பின்னூட்டமாக கிடைத்தது.

‘எப்படி இப்படி தன்னையறியாமல் மூழ்கி நாசமாகிறார்கள்’ என்னும் சினம் கலந்த அறியாமை சீனியரிடம் பயமாக வெளிப்படும்.

கல்லூரி இரண்டாமாண்டு. திட்டமிட்டு நிகழவில்லை. ஆனால், எவர் மீதோ நானே நிறைவேற்றுகிறேன். வினை விதைத்தவன் வாந்தி கொடுப்பான்.

இருபத்தைந்து ரூபாய்க்குள் நிறைவான கிக் வேண்டிய தருணம். 47 ரூபாய்க்கு விஸ்கி வாங்கி இருவர் பகிர்வதாக திட்டம். ‘First come first served’ என்னும் கொள்கையில் இயங்கியதால் கடகடவென்று குடிப்பது சாலச் சிறந்தது. பெப்சியோ, தண்ணீரோ சேர்ப்பதால் அளவும் பெருகும். கிளாஸை அருந்தி முடித்து, அடுத்த பெக் அடிப்பதற்கான நேரமும் செலவாகும். பனிக்கட்டி மட்டும் இட்டு ஈரல் எரிவதை உணர்ந்து சிலாகிப்பது பொருத்தம்.

Oasis‘ கலைவிழாவின் இறுதி நாளில் dutch courage உடன் ‘டேய்… உனக்கு சொல்ல தைரியமில்லேன்னா போடா! உனக்காக நான் போறேன்!’ என்று வீராப்புடன் நண்பனின் தோழிகளிடம் சென்று காதலை வெளிப்படுத்துகிறேன் என்று நட்பை முறித்து சந்தோஷிக்க வைக்கும். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. காலையில் ‘அப்படியா? நானா… இருக்காது… நம்பமுடியவில்லை!’ என்று சத்தியம் செய்யலாம்.

கல்லூரி முடிந்தவுடன் பொறுப்பு பெறவேண்டும். ‘எவ்வளவு ஏறினாலும் ஸ்டெடியாக இருப்பேன்’ என்று வாக்களித்து, நண்பன் வீட்டில் ஆற அமர திளைத்து, தூக்கத்தில் எழுந்து, மிகச்சரியாக லெட்ரீனுக்கு சென்று குறி பார்த்து வாய் வெளிப்பாடு நிறைவேறுகிறது.

காலை எழுந்தவுடன்தான் சொல்கிறார்கள். அலமாரியை இடம் மாற்றி கட்டியிருந்தார்கள்.

இதே மாதிரி ஃப்ரிட்ஜை, வாஸ்துப் பிரகாரம் ஓவர்நைட்டில் பெயர்த்துவிட்டாய் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதற்காக, வேறொருவன் எனக்குக் கிடைத்தான்.

அளவுக்கு மிஞ்சினால் ஆல்கஹாலும் ஆஃப் பாயில்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருந்து:
The health benefits of alcohol disappear and risk increases when you drink more than a few servings a day…. Pouring too much clearly adds calories….  But the bigger worry is that the maximum health benefits of alcohol come with just less than one serving a day for women and up to two servings for men.

Why I admire TR – 1

Ithu Kuzhanthai Paadum Thalaatu

Movie Name: Oru Thalai Raagam
Singer: Balasubramanyam S P
Music Director: Rajender T

Idhu Kuzhandai Paadum thaalatu
idhu iravu nera poobaalam
idhu merkil thoonthrum udhayam
idhu nadi-illaada oodam

nadai maranda kazhalkal thannin thadaiyathai parthen
vadamilantha ther-rathu ondrai naalthoorum illukiren
sirakilantha paravai ondrai vaanathil paarkiren
sirakilantha paravai ondrai vaanathil paarkiren
uravuvuraatha pennai yenni naalleallaam vazhkiren

(Idhu Kuzhandai…)

Verum naarril karam kondu poomaalai thodukiren
verum kaatril uli kondu silai ondrai vadikiren
vidinthu vita poozhuthil kuda vinai-innai paarkiren
vidinthu vita poozhuthil kuda vinai-innai paarkiren
virupanmila pennai yenni ulagai naan verukiren

(Idhu kuzhandai…)

ulamarinda pinthaanea avalai naan ninaithathu
ularvuvullaval yenna thaanaa manathai naan koodhuthathu
uyireillantha karuvai kondhu kavithai naan vadipathu
uyireillantha karuvai kondhu kavithai naan vadipathu
oruthaalaiyaai kaathaliyea yethanai naal vazhvadu

(Idhu Kuzhandai…)
றேடியோஸ்பதி: இது குழந்தை பாடும் தாலாட்டு

பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு
படம்: ஒருதலை ராகம்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்: T ராஜேந்தர்

இது குழந்தை பாடும் தாலாட்டு!
இது இரவு நேர பூபாளம்!
இது மேற்கில் தோன்றும் உதயம்!
இது நதியில்லாத ஓடம்!

(இது குழந்தை பாடும்…..)

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை பாடும்…..)

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை பாடும்…..)

உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை பாடும்…..)

பாடும் நிலா பாலு!: இது குழந்தை பாடும் தாலாட்டு

Passage to Blogdom

குருதிப்புனலில் வரும் வசனம்:
‘தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது.’

சம்பந்தமில்லாமல் இன்று உதித்த மொழி:
‘பின்னூட்டம்னா என்ன தெரியுமா? வியாக்கியானம் விளங்காத மாதிரி விளம்பி விடுவது.’

சம்பந்தமில்லாமல் இன்று கேட்கும் பாடல்:
‘அழியாத கோலங்கள்’ இன்னும் பார்க்காத படம். டிவிடி வரப்பிரசாதம் சீக்கிரமே கிடைக்கணும்.

தற்போதைக்கு சலீல் சௌத்ரி + ஜெயச்சந்திரன் ==> பூவண்ணம்

சம்பந்தம்:

தமிழ் சினிமா டயலாக் லொள்ளு | டயலாக் டென்

பிற:

1. ஸ்மிதா பட்டீல்: ஃபிலிம்ஃபேர் பதிவிலே வந்திருக்க வேண்டியவர். நடிப்பு, பெண்மை, சிந்தனை, லட்சியம், மசாலா எல்லாம் இருந்தும் டக்கென்று மறைந்தவர் 😦  சிறப்பு அஞ்சலி செலுத்தினார்கள்.

  • The only Asian cine-star who had the unique honour of a Retrospective in Paris and La Rochelle (at the promptings of no less a film luminary than director Costa Gavras), a two-time best actress award winner at the National Film Festival, a Padma Shree as well as a devoted wife and brand new mother, Smita Patil had every thing going her way, before the ironic final cut spliced her life from sight to memory. And the loss, even today, remains, irrevocably, ours….
  • In the early 1980s, Smita finally relented and trained her sights on commercial cinema. She won new fans with the blockbuster Namak Halal [1982] opposite Amitabh. Their together item song and dance rain number Aaj rapat jaaye showed her in an entirely new light. Smita had qualms about going the whole commercial hog (lore has it that she cried after shooting Aaj rapat jaaye).
  • Smita was compared ad nauseum with Shabana Azmi, her senior and rival in the off-beat films’ arena. So when the two were pitted opposite each other in Arth [1983], comparisons were inevitable. Shabana had the sympathetic author-backed role but Smita’s on-the-edge characterisation of a guilt-ridden mistress had its fair share of admirers, including Amitabh Bachchan and Kamal Haasan.

2. ப்ளூடூத்: காதில் பச்சை விளக்கு மினுமினுக்கும். அது பட்டவர்த்தனமாகத் தெரியாது. தனியாகப் பேசுவதைப் பார்த்தவுடன் பைத்தியத்தைக் கண்டவுடன் எழும் அச்சம் கலந்த பரிதாபம் கிடைக்கும். கோட், சூட் மாட்டியிருந்தும், இவ்வளவு சின்ன வயதில் ‘இப்படி ஆயிட்டாங்களே!’ என்பேன். காதல் தோல்வி, பதின்ம கர்ப்பம் என்று ‘விடுகதை‘ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மனம் பிழற்வது போல் கற்பனை விமானம் விடுவதுண்டு. இப்போது நானும் ப்ளூடூத்துக்கு மாறி, காற்றோடு உசாவ ஆரம்பித்தாயிற்று.

டயலாக் டென்

ரொம்ப மண்டையைக் குடையாமால் கூகிளைக் குழப்பாமல் யோசித்ததில் மனதில் தங்கிப் போன பத்து சினிமா வசனங்கள்:

1. …’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’…

2. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை

3. அவன் ஹேர்ஸ்டைலை பார்த்தியா? ஏ. ஆர். ரெஹ்மானையும் ஆதித்யனையும் மிக்ஸ் பண்ணி வளர்த்திருக்கான். இன்னொரு ஆங்கிளில் இருந்து பார்த்தா ‘அவதாரம்’ நாஸர் மாதிரியே இருக்கான்.

4. சபாஷ்! சரியான போட்டி.

5. உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா!

6. தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை – மன்னிப்பு.

7. தீவிரவாதியெல்லாம் என்ன மாதிரி அசிங்கமா இருக்க மாட்டான் சார். அழகா… உங்கள மாதிரி இருப்பான்.

8. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

9. ஓடினாள்… ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…

10. நீ மலையா? இருக்கலாம்… ஆனா, மலை உடைஞ்சா மண்ணுதான்.

நிறையப் படம் மனதில் ஓடினாலும், வசனம் வரமாட்டேங்குது. உங்களுக்கு நினைவுக்கு வந்த உரையாடல் என்ன 😉