Category Archives: Chennai

Chennai Banners, Hoardings (March)

நியூ புக்லேண்ட்ஸ் போகும் வழியில் கோபிகா சிரித்தாள்

‘நிழல்’ பத்திரிகை வாங்கச் சென்றவர்களை நிற்க வைக்கிறாள்

யாதும் ஊரே யாவரும் சீனரே

பேனர் இருக்கு; பேர் இருக்கும்.

சன் டிவி திரைவானத்தில் அமர்க்களத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

மரத்தடியில் முனி

டி.ஆர் எப்பொழுது விஜயகாந்த் பக்கம் சாய்ந்தார்? ‘முரசு கொட்டும் மூன்றாம் வாரம்!’

Why Tamil Nadu should be split into Two states? Requirement for separation

நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் :: தலையங்கம்
மேடை மணி – ஜனவரி 2007

இன்று சென்னையைச் சுற்றி பல்லாயிரக்கோடி மூலதனத்தில் பல தொழிற்பூங்காக்கள் வருகின்றன. பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதி இருக்கின்றது. இது சந்தோஷமான செய்திதான். இன்னும் கூட ஏராளமான தொழிற்சாலைகள் வரவேண்டுமென விரும்புகின்றோம். இது போன்ற வசதி வாய்ப்புகளெல்லாம் மாநிலத் தலைநகரிலும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் ஏற்படும். காரணம், அங்கு தான் அரசு சம்பந்தப்பட்ட அனைத்துத் தலைமை அலுவலகங்களும் உள்ளன.

சாலை வசதிகள், விமானப் போக்குவரத்து வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன. தேவைப்பட்டால், அமைச்சர்கள் உட்பட அனைத்துத் தலைமை அலுவலர்களையும் பார்த்திடும் வாய்ப்பு இங்கு உண்டு. இந்த வாய்ப்பு வசதிகள் எல்லாம் தென்பகுதி மக்களுக்கு இல்லை! ஒன்றிரண்டு ஆலைகளையும், ஓரிரு கல்லூரிகளையும் அங்கே ஏற்படுத்துவதால் மட்டும் இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்திட இயலாது.

தென் தமிழ்நாடு, தனி மாநிலமானால் மட்டுமே, அம்மக்களுக்கு சமவாய்ப்பும் வசதியும் ஏற்படும்! தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் – என அம்மக்கள் கிளர்ச்சி செய்யும் காலம் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. விதர்பா, தெலுங்கானா – போன்ற தனி மாநில கோரிக்கைகளுக்கு எது காரணமோ, அதுதான் நமது தனிமாநில கோரிக்கைக்கும் காரணம்.

எனவே மக்களின் நலன் கருதி, பிற மாநிலங்களில் தனி மாநிலங்கள் உருவாக்கப்படும்போது தமிழ்நாட்டிலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழ்நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்கிட வேண்டுகிறோம்! தென்தமிழ்நாட்டில் உள்ள மக்கள் சம வளத்துடன் வாழ அது ஒன்றே வழி!

Sivaji – The Boss: Chennai Banners, Posters, Hoardings

rajinifans/Sivaji_daytoday_advt – Photobucket – Video and Image Hosting

Thirunelveli, Nellai District Theatre Listing - Rajni Fans Discusions Group for Sivaji The Boss

Sivaji Rajni in Chandramukhi Celebrations

Chandramukhi 700 Day Celebrations in Shanthi Theater

Chandramukhi 730 Day Celebrations Poster Banner in Madras Santhy Theatre

Chandramukhi 700 Day Celebrations in Shanthy Theatre

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Chennai Posters, banners Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

Sivaji the Boss Rajini Ads

‘Sivaji - The Boss’ - Pictures speak

Sivaji the Boss Rajini Ads

Thanks: Sivaji – Paper AdSivaji the boss chennai poster AVM Shankar Rajini

Sivaji - The Boss - Rajini Poster

Shivaji - Shankar, Rajni Banner in Chennai

Sivaji - The Boss - Rajnikanth Posters in madras

Ethiraj_Rajini_shankar_sivaji_Hoarding

Rajni - Sivaji The Boss banner near Ethiraj College

RajinifansDiscussions : Message: Sivaji business! Inside Story!!

Continue reading

Periyar Movie – Rajni Quote: Banner Ad

Rajni_fans_discussions_Udhyam_Periyar Banner_Quote.JPG

பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்

“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:

“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Blogger Meets – Chennai & New Jersey

சந்திப்புகள் குறித்து க்வார்ட்டருக்கு (மூன்று மாதங்களுக்கு) ஒன்றாக எழுதுவது வாய்ப்பாடு. (பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்)

இந்த முறை சென்னை அடுத்த வாரம் நியு ஜெர்சி.

முதலில் ஜெர்சி சந்திப்பில் பிறரைக் கேட்க விரும்பும் கேள்விகள்:

1. நீங்கள் ஏன் வலையில் பதிகிறீர்கள்? எதற்காக நேரம் செலவழித்து பிறர் பதிவுகளில் பதில் போடுகிறீர்கள்?

2. உங்கள் பதிவினால் என்ன பயன்? யாருக்கு எப்படி உபயோகம் என்று தெரியுமா? எவருக்கும் லாபமில்லை என்னும் டிஸ்க்ளெய்மர் கொடுத்தால், என்றாவது உருப்படியாக்கும் எண்ணம் உண்டா என்று அறிய விருப்பம்?

3. ஒரு பதிவுக்கு எத்தனை நேரம் செலவழித்து இடுகிறீர்கள்? பதிவுகள் எவ்வாறு உருக்கொள்கிறது?

4. திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? எந்த வகை எண்ணங்கள், எழுத்துருவாக்கம் காணமல் இப்படி மறையும் அபாயம் உள்ளது? கொந்தி (mask) அணிவது இதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்குமா?

5. நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா?

6. இவருடன் ஒத்துப் போனால் இமேஜ் பரிபாலனம் செய்ய முடியாதே என்று ஈகோவுக்குக் கட்டுப்பட்டு, பதிவுகளின் சுதந்திரம் தடைப்படுகிறதா?

7. பதிவுகளில் கதை/கவிதை மட்டுமே இட்டு வருவது, புகழ்பெற்ற பாடல்களான சங்க இலக்கியம்/குறளுக்கு பொருள் கொடுப்பது போன்றவை தேவையா? ஏன்?

8. குறிப்பெடுத்து, பலரோடு பகிர்வதின் நோக்கமாக எதைச் சொல்வீர்கள்? இத்தனை பேரைக் கொண்டு இயக்கமாக, சமூக சக்தியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

9. லாஜிக் இல்லாத வாதங்கள்; அரைகுறையாகச் சொல்லும் ஓட்டைத்  தகவல்; ட்விஸ்ட் ஆட்டம் போடும் சரித்திரம்; – கண்டால் பொங்கியெழுந்து கண்டிப்பீர்களா? பின்னூட்டமாகவா, பதிவாகவா?

10. #4-இன் உப-கேள்வி: பதிவைப் பாராட்டும்போது முகமிலியாக ‘நன்றி’ சொல்வது சரியா? விமர்சித்தால் ‘ப்ராண்ட் நேம்’ அவசியமா? கொந்தி கொண்டு மாற்றுக் கருத்தை முன்வைத்தால், உரியவாறு சென்றடைந்து, திரட்டி நிர்வாகிகளின் நற்பெயரையும் அடைய முடியுமா?
அடுத்ததாக சென்னை சந்திப்பு

  • நிறைய பேரை சந்திக்க முடிந்தது. பாலபாரதிக்கு நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும்.
  • குறிப்பாக தங்கவேலு, வினையூக்கி, லக்கிலுக், முத்து (தமிழினி), ஜிரா, மோகன்தாஸ், வரவணையான், வீதபீப்பிள், மிதக்கும் வெளி, யோசிப்பவர் என்று எழுத்தில் மட்டும் பார்த்த பலரை நேரிலும் காண மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
  • பெண் பதிவராக ஒருவர்தான் வந்திருந்தார்.
  • யாரும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரவில்லை.
  • மூன்று பேருக்கு மேல் இருந்தாலே உரையாடலாக இல்லாமல், உபன்யாசமாகும் அபாயம் உண்டு. நியூ ஜெர்சியிலும் லெக்சராகலாம்!?
  • சிறில்/தருமி போன்ற தெரிந்த குரல்களை ஒலிக்க விட்டதற்கு பதில், சென்னப்பட்டணம் சாராத பிறரைப் பகிரத் தூண்டியிருக்க வேண்டும். (ஜெர்சியிலும் அதிகம் எழுதாத பதிவாளர்களின் சிந்தனையை கேட்க அவா)
  • அனைவரையும் சிறு சிறு குழுக்களாக சந்தித்து இருந்தால், அவர்களின் எழுத்துக்கள் குறித்த எண்ணங்களையும், கொள்கை மேலான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்திருக்க ஏதுவாகியிருக்கும். (தொடர்ச்சியான இராப்பத்துக்கும் செல்ல இயலாதவாறு அன்றே அமெரிக்கா திரும்பும் சூழல் 😦
  • சந்திப்புக்கு தொலைபேசுவது தவிர்க்கப்பட வேண்டும். ஸ்பீக்கரில் போடாமல், ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசுவது, தனிமடலில் உசாவுவது போல் அன்னியமாகப் பட்டது. பதிவுக்கு வராமல், விசாரணை தொனியில் செல்பேசியில் கதைப்பதை, பதிவர் உரையாடலின் பிற்பாடோ முற்பாடோ வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அமெரிக்காவில் ஜனாதிபதிக்குப் போட்டியிடும் அரசியல்வாதிகள் குட காபி-டேபிள் சந்திப்பு என்று நாமகரணமிட்டு, ஆறேழு பேரை மட்டும் வட்டமேஜையிட்டு விவாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி குறு நிகழ்வுகள் திட்டமிடலாம்.
  • தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் ம. சிவகுமார் ‘எழுதியதை அப்படியே வெளியிட முடியாததால், அடிக்கடி பதிவது இல்லை’ என்று வெளிப்படையாக சொல்லி யோசிக்கவும் விட்டார்.