Category Archives: Beliefs

Njaani – DMK Movie Production Company & Pondycherry Churches

கற்பிதங்கள் என்றால் என்ன? மூட நம்பிக்கைதான்.

ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.

இந்த வார குட்டு

கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு

இந்த வார கேள்வி

தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?

முழுவதும் வாசிக்க: தமிழ்2000: ஓ பக்கங்கள் – 7

Hinduism Today

கண்ணில் பட்ட இரு செய்திகள்:

1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

‘கிழக்கே போகும் ரயில்’ ஞாபகம் வந்துச்சே!

2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.

இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா?


| | |