அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
Posted in செய்தி, பொது, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது சாரா பேலின், மெக்கெய்ன்
ஒபாமாவின் வெற்றியின் பின்னணியில் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்ட பிரச்சாரக் குழுவின் கடும் உழைப்பு மறைந்துள்ளது. ஒபாமாவின் பிரச்சாரக் குழு ஒருங்கிணைக்கப்பட்ட விதம் எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்ததென்றால் அது ஒபாமாவின் அனுபவமின்மையையை வலுவற்ற கருத்தாக்கியது. தேசிய அளவில் தனது எதிர் போட்டியாளைர்கள் அளவுக்கு அறியப்பட்டிராத ஒரு சாதாரண செனெட்டர் உட்கட்சி தேர்தலில் வென்றதை பலரும் ஒபாமாவின் செயல்திறனுக்குச் சான்றாகக் கண்டனர்.
துவக்கத்திலிருந்தே ஒபாமா எடுத்துக்கொண்ட பிரச்சாரக் கரு ‘மாற்றம்’. வீழ்ந்து கிடந்த ஜார்ஜ் புஷ்ஷின் Approval Ratingஐ தனக்கு சாதகமாக பயன்படுத்தியது ஒபாமாவின் அணி. ஒரே செய்தி. மாற்றம். ஒரே செய்தி. நம்பிக்கை. ஒரே செய்தி. நம்மால் முடியும். மீண்டும் மீண்டும் ஒபாமாவின் பிரச்சாரம் ஒபாமா என்றாலே மாற்றமும் நம்பிக்கையும் தரும் தலைவர் என்பதை நிறுவியது. ஒரு கட்டத்தில் ‘மெசியா’ என எதிரணியினரால் கேலி செய்யுமளவுக்கு இதன் உச்சம் இருந்தது.
ஒபாமாவின் சிறப்பான வெற்றி உட்கட்சி தேர்தல் வெற்றிதான். வெள்ளையினத்தவர் பெரும்பான்மை இருக்கும் ஐயோவா மகாண உட்கட்சி தேர்தலில் அவர் வென்ற பின்னரே அவர் ஒரு முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். அந்த வெற்றி தந்த ஊக்கமும் நம்பிக்கையும் கறுப்பினத்தவரை தூண்டிவிட்டது. அதன் பின்னரே வரலாறு உருவாக்கப்பட்டது.
மெக்கெயினின் தோல்விக்கும் அவரது பிரச்சாரம் மிகப் பெரிய காரணம். தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘மாவெரிக்’ என தன்னைக் காட்டிக்கொண்ட மெக்கெய்ன் முற்றிலும் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களையும், வலதுசாரிகளையும் மட்டுமே திருப்திப்படுத்தும் பிரச்சாரத்தை செய்தார். ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளால் ரிப்பப்ளிக்கன் கட்சி மிகவும் வலுவிழந்திருந்தது. அதன் அடிப்படை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதொருப்தி நிலவியது. அவர்களை மீட்டெடுக்கும் வேலை மெக்கெய்னுக்கு பெரிதாய் பட்டது. இதன் விளைவாக சாரா பேலின் துணை அதிபர் போட்டியாளரானார். ஒபாமாவுக்கு எதிரான அனுபவமின்மை குற்றச்சாட்டு வலுவிழந்தது. மட்டுமல்ல ஊடக நேர்காணல்களில் படு மோசமாக பதிலளித்து கேலிக்குரியவரானார் பேலின். மெக்கெய்னுக்கு சுமையாக அமைந்தார். அடிப்படை ரிப்பளிக்கன் கட்சிக்காரர்கலைத் தவிர்த்த பெண்கள் பேலினை தங்கள் பிரதிநிதியாகக் கொள்ளவில்லை.
டெமெக்ராட்டிக் கட்சி முதன் முறையாக 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்தது. தங்களுக்கு அதிகம் ஆதரவு தரும் மகாணங்களிலும் மேலும் எந்தப்பக்கமும் சாயலாம் என இருக்கும் நடுநிலை மகாணங்களிலுமே இரு கட்சிகளும் போட்டியிடுவது வழக்கம். ஒபாமா 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்தார். விளைவாக தேசிய அளவிலான கருத்துக் கணிப்புக்களில் சாதகமான முடிவுகளைப் பெற முடிந்தது. இதற்கு தேவைப்பட்ட நிதியை அவரால் திரட்டவும் முடிந்தது. அமெரிக்கத் தேர்தல்களிலேயே அதிக நிதி செலவிடப்பட்ட தேர்தல் இது. அதிக செலவு செய்தவர் ஒபாமா.
மெக்கெய்னின் பிரச்சாரம் ஒபாமாவின் தனிப்பட்ட குணாதிசயங்களை குறிவைத்தது. தன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காயன்றி ஒபாமா மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்தகைய எதிர்மறை பிரச்சாரம் ரிப்பளிக்கன்கள் மத்தியில் செல்லுபடியானதை மறுக்க இயலாது. விளைவாக மெக்கெய்ன், பேலின் பிரச்சாரக் கூட்டங்களில் வந்தவர்கள் ஒபாமாவை தீவிரவாதி என்றும் கொல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியது கட்சி சாரா நடுநிலையாளர்களை வெறுப்பேற்றியது.
இந்தத் தேர்தலில் இளைஞர்களின் பங்கு சிறப்பானது. உட்கட்சி தேர்தல் முதலே ஒபாமாவின் பிரச்சாரம் இளைஞர்களை ஈடுபடுத்தியது. இணையம் முதற்கொண்ட இளைஞர்களின் களங்களில் ஒபாமாவின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கதாயிருந்தது. இறுதியில் இளைஞர்களை வாக்குச் சாவடிகளுக்கு இட்டுச் சென்றது. பல இளைஞர்களும் தங்கள் பெற்றோருக்கும் வீட்டிலிருந்த பெரியவர்களுக்கும் ஒபாமாவை குறித்த உண்மைகளைச் சொல்லி விளங்கச் செய்தனர். மெக்கெய்னின் வயது அவருக்கு எதிரான பண்பாக அமைந்தது.
ஆளுமை விஷயத்தில் மெக்கெய்ன் முதலிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு ரிப்பப்ளிக்கன் செனெட்டராக இரு கட்சிக்காரர்களுடனும் சுமூக உறவை வைத்துக் கொண்டவரும், கட்சிக்கு எதிரான முடிவுகளை துணிந்து எடுப்பவரும் ஊடகங்களால் விரும்பப்படுபவருமாயிருந்த மெக்கெய்ன் விவாதங்களின்போது எரிச்சலுடனும் கோபத்துடனும் நிதானமிழந்தும் காணப்பட்டது கவனத்துக்குள்ளானது. குறிப்பாக ஒபாமாவின் திடமான், உறுதியான ஆளுமைக்கு எதிரில் மெக்கெய்னின் ஆளுமை சறுக்கல்கள் பூதாகரமாய் தெரிந்தன.
ஒபாமாவிற்கு பெரும்பாலும் வாக்களித்தவர்கள் பெண்களும் சிறுபான்மையினருமே. ஜனநாயகத்தில் ஒருங்கிணைந்த சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்பதை கறுப்பினத்தவர்களும், இங்குள்ள ஹிஸ்பானிக்குகளும் உணர்த்தியுள்ளனர்.
ஒபாமா இனப்பின்னணியில் பிரச்சாரம் செய்யவில்லை. அப்படியே அவர் செய்திருந்தாலும் அதற்கு வலுவிருந்திருக்காது. அவர் அடிமைகளின் வழி வந்த ஆப்ரிக்க அமெரிக்கர் அல்லர். அவர் முழுக்க முழுக்க வெள்ளையினப் பின்னணியில் வளர்ந்த கறுப்பர். நிறத்தினனடிப்படையில் பிரிவினை என்கிறபோது நிச்சயம் அவருக்கும் பல கசப்பான இனப் பிரிவினை அனுபவங்கள் இருந்திருக்கும். ஆயினும் மற்ற பல கறுப்பினத் தலைவர்களைப்போல கசப்பான அடிமைத்தன வரலாற்றை கேட்டோ அனுபவித்தோ வளர்ந்தவரல்ல ஒபாமா. இந்த வித்தியாசம் மிக நுணுக்கமானதும் முக்கியமானதுமாகும். இதனாலேயே அவர் தன்னை அமெரிக்காவில் வாழும் ஒரு கறுப்பன் என்றில்லாமல் கறுப்பாகத் தெரியும் ஒரு அமெரிக்கனாக முன்நிறுத்த முடிந்தது. அவரது ஆளுமை அமெரிக்காவின் மதிப்பீடுகளில் தோய்ந்தது, வெறும் கறுப்பின ஆளுமையல்ல அது. அவரது கனவுகள் அமெரிக்காவுக்கானதாயிருந்தது கறுப்பினத்தவருக்கானதாயில்லை. அமெரிக்க மதிப்பீடுகளின் மையத்தை நோக்கி எல்லா இனத்தவரையும் அவரால் இழுக்க முடிந்தது இதனாலேயே.
மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சார அணி, துவக்கத்திலிருந்தே சொல்லப்பட்ட நிலையான பிரச்சார செய்தி, இனம் தாண்டி அனைவரையும் உள்ளடக்கிய பிரச்சாரம், கூடவே ஒபாமாவின் கவர்ச்சிகரமான, நிகழ்காலத் தலைவருக்கு தேவையானதாய் கருதப்படுகிற ஆளுமை ஒபாமாவின் பலமாய் அமைந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளும், தவறுக்கும் மேல் தவறிழைத்த, தன் ஆதரவாளர்களை மட்டுமே திருப்தி செய்த பிரச்சாரமும் மெக்கெய்னின் பலவீனமாய் அமைந்தது.
Posted in ஒபாமா, கருத்து, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது ஒபாமா, பிரச்சாரம். தேர்தல், மெக்கெய்ன்
குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெகயினின் உரை:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பராக் ஒபாமா ஆற்றிய உரை:
பராக் ஹூசைன் ஓபாமா அமெரிக்காவின் 44வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அநேக செய்தி நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
NBC – http://www.msnbc.msn.com/id/27531033/ (ஒபாமா 338 – மெக்கெயின்156)
NYTIMES – http://www.nytimes.com/2008/11/05/us/politics/05campaign.html?hp
ஜான் மெக்கெயின் தனது தோல்வியை ஏற்று தனது பிரச்சார தலைமையகத்திலிருந்து பேசும்போது,
‘இந்த தோல்வி தனது தோல்வியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, ஒபாமாவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்’
சிகாகோவில் பூங்காவில் இன்னும் சில மணித்துளிகளில் 70 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டத்திற்கு நடுவே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்று பேசவிருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு ( & வெள்ளை) குடிமகன் முதன்முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்வின், ஏற்புப் பேச்சு வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற வேண்டுமென்பது நிச்சயம் ஒபாமாவின் எண்ணமாக இருக்குமென்பதால், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் பேச்சை எதிர்பார்க்கலாம்.
Posted in ஒபாமா, ஜனநாயகம், பொது, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது அதிபர், ஒபாமா, மெக்கெயின்
* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.
* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்
* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.
தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!
* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.
* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு
* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்
* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.
* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.
மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.
* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.
விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.
* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.
* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்
பார்ப்போம்…!!!
முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)
அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:
நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?
கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?
மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.
தொடர்புள்ள இடுகைகள்:
1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?
2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:
மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.
Posted in ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, அரசியல், இராக், ஒபாமா, சண்டை, தோல்வி, நிதி, போர், மெகயின், வரி, வருமானம், வெற்றி, Citizens, Common man, Defeat, Economy, Finance, Gulf, Iraq, Mccain, Obama, Polls, President, Tax, Victory, Voters, War
1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!
1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).
1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.
ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.
இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.
அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.
1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.
1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.
காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.
1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,
2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?
மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.
லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.
3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?
Posted in உலகம், ஒபாமா, கருத்து, செவ்வி, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது Affairs, Africa, Africom, Alliance, Army, Bush, Chandra, Cheney, Coalition, Conflicts, Congo, Darfur, Dynasty, External, Foreign, Gulf, GWB, Hamas, Hezbollah, Hussein, Imperial, iran, Iraq, Islam, Israel, Kashmir, Kings, Kurds, Lebanaon, Libya, Mccain, Military, Muslims, Obama, Rajesh, Regime, Saddam, Shia, Somalia, Sudan, Sunni, Turkey, War, World, Zaire
– யாஹு
ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.
இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.
கவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.
முன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.
அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.
வாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.
கல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.
வாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.
சாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.
சாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா? குவைத்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.
முன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
ஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.
பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
அர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.
4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.
அதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.
அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.
இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
– தினமலர்
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:
கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?
பதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.
பாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.
எனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.
அதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Posted in இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு