உன் ஐடியாவை சீனா தான் நனவாக்கும்


இன்றைக்கு நாள்காட்டி தத்துவமாக ‘செத்த எறும்பை நீ சர்க்கரையில் தான் பார்ப்பாய்’ போட்டு இருந்தார்கள். இதற்கு முன்பு கேட்டிராத பழமொழி.

முதல் அர்த்தமாக, எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தால் பிழைக்கலாம். சாரி சாரியாக செல்லும் எறும்புக் கூட்டம். இந்த மொழியின் படி தனித்து நின்றால் சாகும். அனைத்து பெண் நடிகைகளும் தமிழ் கலாச்சாரப்படி நடிக்கும் போது குஷ்பு மாதிரி கற்பு கருத்தோ, த்ரிஷா மாதிரி குடி கருத்தோ சொன்னால் கல்லடி படுவார்கள்.

இரண்டாவது பொருளாக, கறுப்பு நிறமான எறும்பை வெள்ளை நிறத் துகள் நிறைந்த சர்க்கரையில் எளிதில் பார்க்கலாம். எல்லோரும் செக்கு மாடு வாழ்க்கையில் ஓட, ஒருவர் மட்டும் எதிர் திசையில் வித்தியாசமாக யோசித்தால் ஒன்று நிம்மதியாக வாழலாம்; அல்லது மொத்தமாக இறக்கலாம். தப்பித்துச் செல்ல முடியாது.

கடைசி அர்த்தமாக, தமிழகத்தில் எப்பொழுதுமே குளிர் காலம் கடுமையாக இருந்ததில்லை என்று அந்தக் காலத்தில் நிலவிய தட்ப வெட்ப சீதோஷ்ண நிலையை அறியலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.