Monthly Archives: ஓகஸ்ட் 2007

கோம்பை குறித்து ஜெயமோகன் என்ன சொல்கிறார்?

1. தலைப்பை அறிய, படிக்க இங்கு செல்லவும் – Thinnai

ஊர்க்காவல் என்பது ‘திருடனைப்பிடிக்க இன்னொரு திருடனை நிறுத்துவது’ என்ற முறையில் அமைந்தது

2. Thinnai: அழகிய சிங்கரின் கவிதைகள் – வெங்கட் சாமிநாதன்

தேமாங்காயும் புளிமாங்காயும் கூட எங்கே என்று யாரும் கேட்பதில்லை. யாப்பு படிச்சிருக்கியாய்யா என்று கூட யாரும் இப்போது அடித்துக் கேட்பதில்லை. பயமுறுத்துவதற்கே கேட்கப்பட்ட இது போன்ற கேள்விகளைக் கேட்பது கேட்பவருக்கே ஆபத்தாக முடியக் கூடும்.

பாட்டாளிகளின் போர் முழக்கத்திற்காக முரசு கொட்டுவதாக யாரும் சொல்வதில்லை. அவர்கள் எல்லாம் சினிமாவில் குத்தாட்டத்திற்கு பாட்டெழுதப் போய்விட்டனர். உவமைக் கவிஞரெல்லாம் ஒரு பொன்னாடை போர்த்தி மறக்கப்பட்டு விட்டனர்.

படிமங்கள் பெய்து எழுதுவதும் சிரமமும் பழசுமாகிப் போனது. ஆக, கவிதையை இப்படிப்பட்ட வெளித்தெரியும் சீருடைகள் கண்டு இனங்காண்பது சிரமமாகிப் போகவே, கவிஞர்கள் எந்தவித ஒதுக்கீட் டையும் மீறி பேட்டைக்குப் பத்துப் பேராக அமோக விளைச்சல் காணத் தொடங்கிவிட்டனர். இப்போது அதிகாரம், அரசியல் சார்பு, சினிமா, பத்திரிகை முதலாளித்துவம், குழுச் சார்பு எல்லாம் கவிதைக்கு அங்கீ காரம் தருவனவாக பரிணாமம் பெற்றுவிட்டன.

பழங்காலம் பொற்காலம் தான். புலவர் பட்டம் பெற்று வாழ்த்துரை வழங்க வெண்பா இயற்றி கவிஞரான காலமே தேவலாமாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம் பரிசில் வாழ்க்கை தலைமைக்கு மிக நெருங்கிய அடப்பைக் காரர்களுக்குத் தான் சாத்தியமாகியுள்ளது.

சுய எள்ளல் என்பது மிகப் பெரிய விஷயம். நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத குணம். அந்த சுய எள்ளல், உண்மையும் சுவாரஸ்யமும் ஆகும்.

Airtel – Jayahe

கலக்கல் வீடியோ(க்கள்).

Republican Primary – Iowa Straw Poll: Results (Election Series – 7)

1. The American right | Under the weather | Economist.com: “The conservative movement that for a generation has been the source of the Republican Party’s strength is in the dumps”

Economist on Republican Party swing for the Preseident Primary Polls

Party Affiliations - Democarat vs Republican2. Romney Wins Iowa Straw Poll by a Sizable Margin – New York Times

For all the hoopla and hype — there were news crews here from around the globe — the political significance of this event was questionable. Rudolph W. Giuliani of New York, like Mr. McCain, said he would not compete in the poll, citing the early advantage that Mr. Romney had built.

It cost $35 to cast a vote, and most of the campaigns picked up the cost of the voting tickets. Mr. Romney dispatched a fleet of buses to bring in his supporters.

it sought to replicate the strategy that won George W. Bush the nomination in 1999. The campaign spent $25,000 to rent the patch of lawn where they pitched a tent for the afternoon. He received about the same percentage of votes as Mr. Bush did eight years earlier.

3. For a Joke-Telling Candidate, a Second-Place Finish – New York Times

In West Des Moines the other evening, he was talking about cutting spending and taxes to an attentive audience when he was halted by the trill of a cellphone.

“If that’s Dick Cheney wanting me to go on a duck hunt, tell him I’m not doing it,” he said.

Priming – Controlling the thought process

முதன் முதலாக ‘Blink‘ புத்தகத்தில் வாசித்தது. தொடர்பான சில கட்டுரைகள்:

1. The Subconscious Brain – Who’s Minding the Mind? – New York Times

Psychologists say that “priming” people in this way is not some form of hypnotism, or even subliminal seduction; rather, it’s a demonstration of how everyday sights, smells and sounds can selectively activate goals or motives that people already have.

….

Because they’ve been activated, they influence other mental processes that happen to be occurring at the same time, influencing decision making and desire, even if we’re not aware of it.

2. Priming (psychology) – Wikipedia

3. வகுப்பறை ஆராய்ச்சி & முடிவு – கண்டுபிடிப்புகள்

4. ScienceCareers.org | Priming the Mind: Shulman

5. Priming

Using it
Use a prime subtly so the person does not realize they are being primed, thus influencing them towards a desired outcome.

Defending
When you seem to think of something in conversation with someone else, think back to what may have triggered that thought.

USA Primary & Presidential Series – 5: Boston Phoenix

1. So you want to be fair and balanced? – News – The Phoenix: அமெரிக்க அரசியல் அறிய புகழ்பெற்ற பதிவுகள் –

2. The long-winded, winding road – News – The Phoenix: “The journey to the White House is paved with potholes”

  • அமெரிக்கா வந்த புதிதில் டிப்போடு சேர்த்து இருபது வெள்ளிக்கு முடிவெட்டிக் கொண்டதற்கு இருபது நாளுக்கு மேல் மூக்கால் அழுததுண்டு. நானூறு டாலருக்கு முடிதிருத்தியது ஊருக்குத் தெரிந்து விட்டதே என்று ஜான் எட்வர்ட்ஸ் வருந்துகிறார்.
  • 1952, 1968 – அமெரிக்க வீரர்கள் மரிக்கும் போர்கள் நடந்ததால், ஆளுங்கட்சி தோற்ற தேர்தல்கள். எனவே, சுதந்திர கட்சிக்கு வாய்ப்பு பிரகாசம்.

3. Size doesn’t matter – News – The Phoenix: மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. குட்டி மாகாணமாக இருந்தாலும், ஹொவர்ட் டீன் மாதிரி உற்சாகக் கத்தல் கூட நரி ஊளையிடலாக சித்தரிக்கப்பட்டு வழுக்கலாம். மங்களகரமான துவக்கம் முக்கியமானது.

  • Iowa – Jan 14
  • Nevada – Jan 19
  • New Hampshire – Jan 22
  • South Carolina – Jan 29
  • Florida – Jan 29 (?)

பராக் ஒபாமா: ஐயோவா, நெவாடாவில் வெல்வது பிரம்மப் பிரயத்தனம். நியு ஹாம்ஷைரிலும் இரண்டாவதாக வருவதற்குத்தான் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கிறது. கறுப்பர்கள் அதிக அளவில் உள்ள தென் கரோலினாவிலும் தோற்றால் அம்பேல்.

ஹில்லரி க்ளின்டன்: முன்னணி வேட்பாளர். சிங்கம் சிங்கிளாக எல்லாவற்றிலும் ஜெயித்தாக வேண்டிய நிர்ப்பந்தம். புருஷனாலேயே நியு ஹாம்ஷைரில் வெல்ல இயலவில்லை. ஆனால், அம்மணியும் கோட்டை விட்டால், பெப்ரவரி ஐந்தாம் தேதி பெரிய ஆப்பாகலாம்.

ஜான் எட்வர்ட்ஸ்: போன தடவை போட்டியிட்டதில் மிச்ச சொச்ச நல்ல பெயரில் காலந்தள்ளுகிறார். மனைவிக்குப் புற்றுநோய், எதார்த்தமான கருத்துக்களை பட்டென்று சொல்லி மக்களின் மனதைக் கொய்யும் மனைவி எல்லாம் இருந்தும் அந்த நானூறு டாலர் சிரைப்பை நினைவூட்டும் முகவெட்டு. தென் கரோலினாவில் பிறந்து, வட கரோலினாவை ஆண்டவர். ஐயவோவில் தோற்றால் சென்ற தடவை மாதிரி துணை ஜனாதிபதியாகும் கனவு கூட தகர்ந்து போகும்.

பில் ரிச்சர்ட்சன்: நெவாடாவில் பிலிம் காட்டினால் தாக்குப் பிடிப்பார். அங்கும் பூரணமாக சுழிக்கப்பட்டால், துணை ஜனாதிபதியாக தூது தொடங்கலாம்.

தற்போதைய நிலைப்படி கருத்துக்கணிப்பு ரேங்க்:

Iowa Nevada New Hampshire South Carolina
Barack Obama 3 2 or 3 2 1
Hillary Clinton 2 1 1 2
John Edwards 1 3 or 2 3 or 4 3
Bill Richardson 2 ??

4. The shape of things to come – News – The Phoenix: “The defining issues of each party’s campaign are being decided now” –

  • சென்ற முறை மாதிரி ஒசாமா வீடியோவில் அருளுரைப்பாரா,
  • வர்ஜினியா கல்லூரியில் சுட்டது போல் ஏதாவது கடைசி நிமிடத்தில் நிகழ்ந்து திசை திருப்புமா,
  • இராக் போர் – தேசப்பற்றா, தேவையில்லாத இழப்புகளா, தீவிரவாத வளர்ப்பா?
  • மைக்கேல் மூரின் சிக்கோ மனதைத் தொடுமா…

5. Across the universe – News – The Phoenix: “The Republicans are telescoping issues voters will likely still care about on Election Day 2008” – நாட்டுப் பாதுகாப்பை முன்னிறுத்தி, அமெரிக்காவை பயமுறுத்தி, எவ்வாறு குடியரசுக் கட்சியின் வேட்பாளர் அடுத்த ஜனாதிபதி ஆகிவிடலாம்?

6. Power brokers – News – The Phoenix: “Al Gore isn’t running (yet); neither is Elizabeth Edwards. But either could be a factor in an Obama win.”

அரசியல் என்பதே எப்பொழுது யாரை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதில் முடிந்து விடுகிறது. சாதிக் கூட்டணி என்கிறார்கள்; சீட் ஒப்பந்தம் என்பார்கள்; பண பேரம் என்று கிசுகிசுப்பார்கள்; பரஸ்பர பதவி ஒதுக்கீடு என்று கழுகுவார்கள். தமிழ்ப்பதிவுகளில் கூட முத்து (தமிழினி – ஒரு தமிழனின் பார்வை: இளவஞ்சிக்கு ஆதரவாக) தோள் கொடுப்பது போல், கை காட்டுகிற திசையில் வாக்குகள் செல்லும்.

ஹில்லரி பக்கம் ஆல் கோர் சாய்வதற்கு வாய்ப்பில்லை. எட்வர்ட்சா, ஒபாமாவா என்று சீர்தூக்கினால், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரை நியமித்து, சரித்திரம் கண்ட ஹீரோ வரிசையில் சேர கோர் விரும்புவார்.

NPR – India

1. India Bristles at Western-Style Economy
by Philip Reeves

2. Ethnic Magazine Mavens Talk Politics, Intercultural Romance
Editors from three ethnic magazines — East-West, VIBE and Latina — discuss intercultural romance and the connection between hip-hop and politics.

3. A Culture of Song in India’s Tamil Nadu
by Scott Carney

என்.பி.ஆர். போலவே, ஆனால், இன்னும் காத்திரமாக பிரச்சினைகளை ஆராயும் தொலைக்காட்சி:

லிங்க் டிவி 

செய்திகளைப் படிக்காமல், அலசல்களைக் கேட்டு/பார்த்து அறிந்து கொள்ள உபயோகமாகிறது.

இந்த வார விகடன்

vikadan china corruption cartoon joke capital punishmentஹாய் மதன் :: கேள்வி & பதில்

எம்.சந்தியா, நாகர்கோவில்.

தார்மிகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இதற்குச் சரியான ஆங்கிலச் சொல் என்ன?

சாக்ரடீஸ், பிளேட்டோவில் துவங்கி, பிரெஞ்சு தத்துவமேதை- ‘ழான் பால் சார்த்ர்’ வரை தார்மிகம் பற்றி ஏகமாக விவாதித்திருக்கிறார்கள். தார்மிகத்துக்குச் சுருக்கமாக ஆங்கி-லத்தில் ethics என்று பெயர். தமிழில் ‘அறம்’ எனப்படுவதும் அதுவே! தார்மிகம் நிரந்தரமானதும் அல்ல. எல்லா நாடுகளுக்கும் பொது-வானதும் அல்ல. நம்முடைய தார்மிகமும், ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் தார்மிகமும் வேறுபடும். நமக்காக வள்ளுவர் அறத்தை வலியுறுத்தி பத்து குறள்கள் எழுதியிருக்கிறார். அதில் மொத்தமாக அறத்தை விளக்கும் குறள்…

இந்தக் குறளுக்குப் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சுலபமான உரை… ‘பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, அதற்குத் தடை ஏற்படும்போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் (மற்றும் செயல்!) இந்நான்கையும் விலக்கி, தொடர்ந்து செய்யப்படுவதே அறம். ‘தொடர்ந்து செய்யப்படுவதே’ என்கிற வார்த்தைகள் முக்கியம். சும்மாங்காட்டி குந்திக்கிட்டிருப்ப-தல்ல! Ethics must be performed!


பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா
அவன்தான் என்னை சென்னைக்கு கைப் பிடிச்சுக் கூட்டிட்டு வந்து

“இதான் பீச்! அதான் ஏவி.எம். ஸ்டுடியோ, அழகழகா பொண்ணுங்க வெளியே வர்றாங்-களே, அதான் எஸ்.ஐ.டி. காலேஜ்’னு வழி காட்டினான். ஆனால், சில சமயம் அவன் காட்-டிய வழிகளில் நான் போகாமல் தப்பித்துவிட்டேன். குறிப்பா எஸ்.ஐ.டி. காலேஜ் பக்கம்!’’

யார் சொன்னார் என்பதை சந்தா கட்டி அறிந்து கொள்ளவும் 😛


‘மக்கள் எழுச்சி இயக்கம்’ :: சமூக சேவகர் நந்தகுமார்

பொழுதுபோக்குப் பூங்கா நூறு கோடியில்! மகப்பேறு மருத்துவமனைத் திட்டம் குப்பைத் தொட்டியிலா?’ என்று எழுதியது தான் நான் செய்த குற்றம்! மக்களின் அடிப்படைத் தேவையை நிறை வேற்றச் சொல்லும் கோரிக்கைக்கான இந்த இரண்டு வரி எழுத்துரிமை யைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாத தமிழக அரசு என்னைக் கைது செய்து சிறையில் தள்ளியது..!’’

சாந்தோம் மண்டலத்தில் நீண்ட நாட்களாக மூடப்பட்டுக் கிடக்கும் மகப்பேறு மருத்துவமனையை சீர் செய்து மீண்டும் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். இந்த மருத்துவமனை ஏழை மக்கள் மருத்துவம் பார்க்கும் அரசு மருத்துவமனை. இதை நம்பிக் கிட்டத்தட்ட 10,000 பேர் இருக்கிறார்கள். …

கடந்த மாதம் மேயர் மா.சுப்பிரமணியத்திடம் கூட மனு கொடுத்தோம். தேர்தல்நேரத்தில் இந்த மருத்துவமனை திறக்கப்படும் என்று ஆளும் கட்சி கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினோம். இத்தனை செய்தும், எந்த அரசு அதிகாரியும் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால், மூடப்பட்டுக் கிடக்கும் மருத்துவ மனையில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி நூறு கோடி ரூபாய் செலவில் ஹைடெக் பார்க் ஒன்றை அமைத்து, 10-ம் தேதி அதை முதல்வரின் கையால் திறந்து வைக்க இருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டபோது வேதனையாக இருந்தது.


ஓ… பக்கங்கள் (109) :: ஞாநி
இந்தியச் சிறைகளில் இந்த நொடியில் இருக்கும் சிறைவாசிகளில் 74 சதவிகிதம் பேர் இன்னமும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்-படாதவர்களே! அவர்கள் வெறும் விசாரணைக் கைதிகள்!

தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சின்ன பெருமை. இங்கே 100-க்கு 31 பேர்தான் விசாரணைக் கைதிகளாம்! அதுவே மொத்தக் கணக்கில் ஆயிரக்கணக்கில் போகும்.

இந்தியச் சிறைகளில் மொத்தம் 3,04,893 பேர் உள்ளனர். இவர்களில் 2,25,817 பேர் விசாரணைக் கைதிகள். பெரும் பாலானவர்கள் ஏழைகள்; படிப்பறிவு அற்றவர்கள்.


கற்றதும்… பெற்றதும்.. (56) :: சுஜாதா
1. மாமின் உரைநடையின் தெளிவு என் எழுத்தை ஒரு விதத்தில் பாதித்தது. சாமர்செட் மாம் எழுதிய எதையும் படித்திரா தவர்கள், அவருடைய Rain என்னும் சிறுகதையை மட்டும் படித்தால் போதும்.

2. மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, தன் வெற்றியின் ரகசியத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார் (தி.ந.வெங்கடேஷ்). கரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த நூல் இலவசமாகக் கிடைக்கும். வெ.இறையன்பு, சைலேந்திர பாபு போன்றவர்கள் இந்நூலுக்கு முன்னோடிகள்.


கேள்விக்குறி? (16) :: எஸ்.ராமகிருஷ்ணன்வானை அளப்போம் -‘ஒரு ஆளாலே என்ன செய்ய முடியும்?’

தனிமனிதர்களால் என்ன செய்துவிட முடியும் என்பதற்கு, எனக்கு விருப்பமான பத்து பேரை உதாரணமாகச் சொல்ல முடியும்.
1. Wangari Maathai
2. Jack Sim

3. Vandana Shiva
4. Andrew Lieberman

5. Dalai Lama
6. ரிக் கர்சன் (இவரின் ஆங்கிலப் பெயர் மட்டும் தெரியவில்லை 😦 )

7. Carlo Petrini
8. Stephen Hawking
9. மேதா பட்கர்
10. Erin Gruwell

Tamil Gossips

இங்கே வந்திருக்க வேண்டியது. இங்கே போட்டு விட்டார்கள்.

1. முதலாம் சரித்திர குறிப்பு: வெற்றி

/* இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? */

நான் கேள்விப்பட்ட தகவலொன்றையும் [உறுதிப்படுத்தப்படாத தகவல்] இங்கே
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.

ஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.

இந்திய நடுவண் அரசு, ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளைச் செய்து வரும் போதும் விடுதலைப் புலிகள் இந்திய நலனுக்கு எதிராகப் பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ தொடர்பு வைப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

ஆனால், புலிகளாலும், ஈழமும் இந்திய நலனுக்கு எதிரானது எனும் மாயையை ஒரு குறிப்பிட்ட சாதியினரும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த தகவற் தொடர்பு சாதனங்களும் பரப்பி வந்தன. வருகின்றன. அரசியலை நன்கு அறிந்தவகளுக்கு இது எப்படிப்பட்ட மாயை என்பது தெளிவாகப் புரியும்.

8/08/2007 09:00:00 PM


2. இரண்டாம் வரலாற்று சாட்சியம்: Anonymous said…வெற்றி,
நீங்கள் குறிப்பிட்டதுபோல நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல பி.ஜே.பி எதிர்க்கட்சியில் இருந்த போது புலிகளிடம் தம்மை ஒரு இந்துஅமைப்பாகவும் பெளத்தத்துக்கும் அதற்கு ஆதரவுதெரிவிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டமே ஈழப்போரென்றும் பிரகடனப்படுத்தச் சொல்லியும் கேட்டார்கள் என்றும் அறிந்தேன். அதற்கு புலிகளோ தாம் ஒரு மதம் சாராத அமைப்பு என்றும் தம்முடன் ஆரம்ப காலத்திலிருந்தே மிகப்பல கிறிஸ்தவர்கள் இப்ப்போரில் இணந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுகூட போராட்டத்தில் ஆதரவளிக்கும் கிறிஸ்துவர்கள் , முக்கியமாக பாதிரிகள் அவ்வாறே செய்யும்படியூம் தாம் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்து தமக்கு தமிழர் விடுதலை பெறுவதே முக்கியம் எனக்கூறினர் எனவும் அறியக்கூடியதாக இருந்தது. எனினும் புலிகள் எடுத்த முடிவு தூரநோக்குள்ளதே என நினைக்கிறேன்.- 8/08/2007 10:33:00 PM

மீண்டும் பத்து கட்டளைகள்: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி: தர்மா

கமல்ஹாசன் குறித்து சாரு நிவேதிதா – தப்புத் தாளங்கள்

தமிழர்கள் கமலை அந்நியனாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் ஒரு elite. அவ்வளவுதான். ஆளவந்தான் படத்தில் ‘he seems to be a necrophelic’ என்று ஒரு வசனம் வரும். புரிகிறதா?

மற்றொரு சம்பவம்: ஆளவந்தான் வந்த சமயம். என் நண்பரும் நடிகருமான ப்ரதாப் போத்தனும் நானும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். படத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார் ப்ரதாப்.

‘இதையெல்லாம் கமலிடம் சொன்னிர்களா?’ என்று கேட்டேன்.

‘நான் என்ன ஃபீல்டில் இருக்கிறதா, வேண்டாமா?’ என்றார் ப்ரதாப்.

‘பிறகு என்ன சொன்னீர்கள்?’

‘க்ளாஸிக் என்று சொன்னேன். “ம்… உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. மக்களுக்குத் தெரியவில்லையே?” என்றார் கமல்’.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கமலிடம் யாருமே அவரது படங்களைப் பற்றி பேச முடியாது; பேசியதும் இல்லை என்பதுதான். கமலிடம் பேச்சு இருக்கிறது; செவிகள் இல்லை. எந்தளவு கமல் தனிமைப் பட்டுப் போயிருக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

முழுவதும் படிக்க: சிவாஜிக்கு வெளியே – சாரு ஆன்லைன்