Webulagam : Govt. will look into Chidambaram temple Issue – TN CM!
சிதம்பரம் கோயிலில் திருவாசகம் : கருணாநிதி பதில்
சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் திருவாசகம், தேவாரம் உள்ளிட்ட தமிழ் பக்தி பாக்களை இசைக்க சட்ட ரீதியாக என்ன தடை உள்ளது என்பது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் வேல்முருகன், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாட முடியவில்லை. தமிழுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்நிலையை தடுத்த நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி,
“சிதம்பரத்தை பொறுத்தவரை அங்குள்ள தீட்சிதர்கள் ஆதிக்கத்தில்தான் நடராஜர் இருப்பதாகவும், அதை மீறி யாரும் எதையும் செய்ய முடியாது என்று ஐதீக கருத்து அழுத்தம் திருத்தமாக இருப்பதாகக் கூறி தேவாரம் பாடிய ஒரு தமிழரை வெளியேற்றியுள்ளார்கள்.
அந்த சட்டப் பிரச்சனை என்ன என்பதை மூத்த வழக்கறிஞர்களுடன் ஆராய்ந்து எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கை பற்றி ஆராய்ந்து ஆவன செய்யப்படும்.
இந்து ஆலயச் சுவர்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு உண்மையான தமிழர்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர்களுக்கு கொந்தளிப்புதான் ஏற்படும். தமிழ் இவ்வளவு இலக்காரமாகப் போய்விட்டதா? தமிழ் உணர்வு அடிப்படையில் இந்த அரசின் சார்பாக இனி எந்த ஆலயத்திலும் தமிழிலும் அர்ச்சனை என்று எழுதப்படமாட்டாது. ஏற்கனவே எழுதப்பட்டிருந்தாலும் அவை அழிக்கப்படும்”
என்று கூறினார்.











சட்டபூர்வமான நடவடிக்கைகளை வரவேற்கிறேன். சிதம்பரத்தில் சட்டம் மீரப்பட்டிருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே.
சட்டம் யார் கையில் ????
The temple is managed by Dikshitars
as their collective property.They are considered as a religious denomination according to the
judgment.They enjoy rights under
constitution.In the past attempts
to bring it under HRCE failed.Even in temples under HRCE there are restrictions on entering into sanctum sanctorum aka Garbha Griha.
Let us see what the govt does/ refuses to do.