Monthly Archives: மார்ச் 2006

Malgudi Suba about ‘Bussthaan PTC’ Song

வெளிப்படையாக பேட்டி கொடுக்கிறேன்; மனம் திறக்கிறேன் என்றெல்லாம் நிறைய பேர் சொல்வார்கள்.

வித்தியாசமான குரலினாலும் புகழ்பெற்ற திரைப்பாடல்களையும் பாடிய ‘மால்குடி’ சுபா தன்னுடைய பெயர்க்காரணத்தையும், இளையராஜாவின் இசையமைப்பில் வந்த ‘வீட்ல விசேஷங்க‘ பாடல் பதிவையும் ஜாலியாகப் பகிர்ந்து கொள்கிறார். (நேரம்: 3நி. 00வி.)

Malgudi Suba about 'Bussthaan PTC' Song : Ilaiyaraja Music - Veetiley Viseshanga - this is an audio post - click to play

| |

புவியிலோரிடம்

வாசக அனுபவம்

கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்ப்பது போல் இருக்கிறது. பெரிய குடும்பம். நிறைய கதாபாத்திரங்கள். பா. ராகவன் அநாயசமாக அனைவரையும் மனதில் நிலைநிறுத்துகிறார்.

நாம் நாமாகவே இருப்பதில்லை. இன்னொருவராகவே இருக்கிறோம் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லும் கதை.

பல வருடம் முன்பு படித்தாலும் அதன் தாக்கங்களை இன்றளவிலும் தக்க வைத்திருக்கிறது. நாவல் படித்து முடித்தபின்பு உடனடியாக instant gratification-ஆக ‘புத்தக விமர்சனம்’ எழுதும் எனக்கு இது ஒரு புது அனுபவம். இரண்டு மூன்றாண்டுகள் கழித்து என்றோ படித்த நாவலைப் புரட்டுவ்து, அந்தக் குடும்பத்துடன் சில நிமிடங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்வது போல் இருக்கிறது. என்றோ வாழ்ந்த வீட்டுக்கு மறுவிஜயம் செய்வது; எப்பொழுதோ கூடப் படித்த பள்ளித் தோழனை அங்காடியில் சந்திப்பது; தொலைந்து போன கணினி கோப்பை வேறெதோ தேடும்போது வந்து விழுவது போன்ற உணர்வுகளை மீட்டும் நாவல். உடனடியாக ‘வாசக அனுபவம்’ எழுதாமால் விட்டுப் போனதால் கதையின் கோர்வை கிட்டாமல் போகலாம்.

வாசுதேவன் ஹீரோ. வாசுவின் அப்பா சௌரிராஜன். அம்மா செண்பகா. ஒன்பது பிள்ளைகள். கல்வியார்வம் அற்றவர்கள்; ஆனால் தறுதலைகள் அல்ல; பொறுப்புமிக்கவர்கள். ஏழு வருமானம். பன்னிரெண்டு பேர் சாப்பாட்டுக்கு பின் மீதம் எதுவும் வைக்காத பட்ஜெட். கல்யாண வேலைகளுக்கு செல்லும் பெரியண்ணா. அவன் வழியில் தொடரப்போகும் சுந்தரா.

எதிர்மறை சிந்தனைகளில் லயிக்கும் மத்தியவர்க்கப் பிரதிநிதியாக வாசு. தப்பித் தவறி கூடத் தவறான நம்பிக்கைகளைத் தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். +2வைத் தேறிவிட்டாலும் ‘ஜஸ்ட் பாஸ்’ என்று இந்தப் பக்கம் விழுந்தவன். அந்த மோசமான மதிப்பெண்களை வைத்துக் கொண்டு ·பார்வார்ட் கேஸ்ட்டுக்கு எந்தக் கல்லூரியும் இடம் ஒதுக்காது.

நான் +2 முடித்தவுடன் கல்லூரிகளைப் படையெடுத்தது கழிவிறக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்தாலும் காலை எட்டு மணி முதல் காத்திருக்க வேண்டும். சந்திக்கும் சில விநாடிகளில் மார்க் அதிகம் எடுக்காத கணிதமும் ஆங்கிலமும் மட்டுமே கேள்விகளாக ‘ஏன்? எப்படி? எதற்கு?’ என்று வினாவாகும். ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று திருப்பியனுப்பப்படுவேன். வாசுவிற்கோ எல்லா சப்ஜெக்டுமே கால் வாறியிருக்கிறது. பச்சையப்பன் கல்லூரி அனுபவங்கள் என்னுடைய லயோலா, விவேகானந்தா காத்திருப்புகளை மருக வைக்கிறது. கரெஸ்பாண்டன்ஸ் படிக்குமாறு ஆலோசனையுடன் சிபாரிசுகள் எல்லாம் பயனற்று செல்லாக்காசாகின்றன.

மைதிலி அண்ணி பொறுமைசாலி. சடகோபன் அண்ணனின் மனைவி. இளமைக் காதலுக்காக, கல்யாணம் செய்த பிறகும் கிராமத்துக் காதலியை கண்டினியூ செய்பவன்.

சின்ன அண்ணி வத்ஸலா. இன்னொரு அண்ணன் வரதனுக்குத் ‘நாடார் கல்லூரி’யில் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நாடாராக சான்றிதழ் பெற்றால் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்.

வரதன் பெண் பார்க்க செல்லும் படலம். தாசில்தார் ஆபீஸ் படலம். ரங்கன் ஷேத்ராடனம் சுற்ற அழைத்துப் போகும் படலம். தவறாமல் கிராமத்திற்கு செல்லும் சடகோபனை மைதிலி புரிந்துகொள்ளும் படலம். சமாஸ்ரயணப் படலம். என்று ஆங்காங்கே தேவையான உபகிளைகள் உண்டு.

குற்றவுணர்ச்சியில் தள்ளாடுகிறான் வாசு. போலியாக சர்டி·பிகேட் வாங்கி பி.காம். சேர்ந்தாகி விட்டது. வெளியாளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் சிக்கன் உண்டு பார்க்கிறான். கல்லூரி அரசியலில் பூந்து விளையாடுகிறான். சுடுசொற்களை வீசுகிறான். புகை, மது சகலமும் பயிலுகிறான். அவனைக் கண்டு கல்லூரி மாணவர்களே அஞ்சும்படி நடந்து கொள்கிறான்.

நாளை நடக்கப் போவது தெரிந்தால் நல்லதை விட நடக்காதவற்றையே எண்ணிப் புலம்புகிறோம். என்றாவது ‘அய்யங்கார் ஆத்துப் பையன்’ குட்டு வெளிப்படுமோ என்னும் அச்சம். சுய அடையாளங்களை மூடி மறைத்து பொய் வேஷம் கட்டுகிறோமே என்னும் கோபம். வெறுப்பும் படபடப்பும் இனப்பற்றா அல்லது அல்லாத வார்த்தைகளைக் கேட்டு உண்டாகும் அருவருப்பு மட்டுமா என்னும் உணர்ச்சிக்குழப்பம்.

அளவற்ற ஹாஸ்டல் சுதந்திரம். தன்னிலை மறந்த தேடல். விரக்தியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு டெல்லிக்கு இரயிலேறுகிறான். சுதந்திரமாக உணர்கிறான். இப்படித்தான் உன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும்; இதை சொன்னால்தான் உன்னால் ‘அவர்களுள்’ ஒருவராக ஆக்க முடியும்; இப்படி நடந்து கொண்டால்தான் நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய் என்னும் கட்டுப்பாடுகள், அதிகாரபூர்வமற்ற விதிமுறைகள் இல்லை. முன்முடிவுகள் கிடையாத உலகத்தில் பரிகசிக்க ஆரம்பிக்கிறான்.

‘நான் யார்’ என்னு தேடல் கொண்டவர்கள்; சாதீயக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளிவேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; சுதந்திரத்தை எத்தனிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை.

“மனித வாழ்வின் அர்த்தமே, புரிந்து கொள்வது என்கிற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.”


முன்னுரையில் இருந்து:
சாதிபேதமற்ற சமூகம் என்னும் பொய்க்கனவை சலியாமல் விதைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள். பொய்யை உண்டு வாழ்வதைக் காட்டிலும் பட்டினியில் இறந்துவிடுதல் உன்னதமானதென்று நினைக்கிறேன். தன்னளவில் இது முழுநாவலேயானாலும் என்னளவில் முதல் அத்தியாயமே ஆகும். முன் மதிப்பீடுகளற்று இதனை அணுகும் ஒவ்வொரு வாசகருமே இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களை நிர்ணயிப்பவர்களாவார்கள்.
பா. ராகவன்
ஜூலை 13, 2000

1. நாவலில் இருந்து சில பகுதிகள்

2. ச.திருமலை – RKK


| |

Dinamalar Poster Captures

தினமலரில் இருந்து சுவரொட்டி/மின் விளம்பரங்கள்:

எல்லா காங்கிரஸ் தலைவர்களையும் இப்படித்தான் சேர்க்க முடிகிறது.
(அல்லது)
விட்டுப் போன முகங்கள் தனிக் கட்சியை கூடிய சீக்கிரம் துவங்குமா?
செல்வி. ஜெயாவுடன் கூட்டு அமைத்தாலும் சீட்டு கிடைக்குமா?

Dinamalar - Click for bigger Image

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்கவேண்டும் என்றும் ஒரே சின்னக்கொடி!

Dinamalar - Click for bigger Image

Parasakthi & Gentleman

பராசக்தி – கலைஞர் கருணாநிதி வசனம் – நீதிமன்றத்தில் சிவாஜி:

Sivaji - this is an audio post - click to play

ஜெண்டில்மேன் – பாலகுமாரன் வசனம் – நீதிமன்றத்தில் அர்ஜுன்:

Arjun - Shankar : Court Sequence - this is an audio post - click to play


| |

தேர்தல் செய்திகள்

* அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கிலிருந்த நீக்கப்பட்ட எம்.எல்.ஏ சந்தானத்துக்கு ஒரு சீட் வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா.

* 234 தொகுதிகளிலும் தமது சங்கம் போட்டியிடப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

* ரஜினி ‘நோ வாய்ஸ் திஸ் டைம்; ஒன்லி சிவாஜி’ – என்கிறார் ரஜினி மன்ற அகில இந்தியத் தலைவரும், என் பக்கத்து வீட்டுக்காரருமான சத்தியநாராயணா.

Four Stuff

நான் அஞ்ஞாதவாசம் இருந்தப்ப துபாய்வாசி அழைத்தார். இப்ப கேவியாரும் கூவுகிறார்.

தலை பத்து கணக்கா, தலை நாலு சொல்லச் சொல்றாங்க…

நான்கு வசிப்பிடம்:
முதன் முதலாக இந்தக் கேள்விக்கு அமெரிக்கன் விசாவை நிரப்பும்போதுதான் யோசித்தேன். இவ்வளவு நாடோடியா இருக்கிறேனே என்று சந்தோஷமாக இருந்தது.

1. +2 முடிகிற வரைக்கும் வீடு/பள்ளிக்கூடம் இருந்த சென்னை மைலாப்பூர். +1 சேர்ந்த பிறகுதான் மைலாப்பூரைத் தவிர சென்னையில் வேறு சில இடங்களும் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அப்போதைய திமுக மந்திரிகள் சாதிக் பாட்சா மற்றும் பொன். முத்துராமலிங்கத்தின் மகன்கள் பள்ளியில் சேர்ந்ததும் இரு வருடங்களை கொஞ்சம் வேகமாக நகர்த்தியது.

2. டெல்லி: கொஞ்ச காலம்தான் இருக்கப் போகிறோம் என்று தெரிந்தே ரசித்த ஊர். சென்னைக்கு மாற்றாக உயர்தர சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், இயல்பாக நட்பு பாராட்டும் எதிர்பாலார் கொண்டவை. சென்னையைப் போலவே மோசமான பேருந்து வசதி. சென்னையில் இருக்கும் பத்து மணி நைட் ஷோ சுதந்திரம், இளைப்பாற கடற்கரை, பயமற்ற நகர்வலம் போன்றவை மிஸ்ஸிங்.

3. பெங்களூர்: துள்ளலான நகரம். டெல்லியின் நுகர்வோர் முகத்தையும் சென்னையின் தளர்ச்சியான போக்கையும் தன்னுடைய ஸ்டைலில் கலந்துகட்டி best of both worlds கொண்டது.

4. பாஸ்டன்: ரொம்ப காலம் வசித்ததால் கொஞ்சம் போரடித்து நிறையப் பழகிப் போயிருக்கிறது.

நான்கு அரசியல்வாதி:
1. விஜயகாந்த்: இறந்து போனவர்களை நான் நினைவு கூர்வதை விட இருந்து சாதிப்பேன் என்று நம்பிக்கையாகப் பேசும் இவரை நம்புகிறேன். வரப் போகும் கூட்டணி ஆட்சிகளுக்கு ஏற்றவர். பெண்களை வேட்பாளராக்குவதில் முக்கியத்துவம்; வித்தியாசமாக செய்யவேண்டும் என்னும் துடிப்பு; நடித்து சம்பாதித்ததை அரசியலில் விட்ட முன்னோடிகள் இருந்தும், தைரியமாக களத்தில் குதிப்பு; ரஜினி மாதிரி பொதுமகனாக இல்லாமல் தலைமகனாக வேண்டும்.

2. ஸ்டாலின்: திட்டம் தீட்டுறேன்; அடிப்படை வசதியைப் பெருக்குகிறேன் என்று ஜல்லியடிக்காமல், திறம்பட சென்னை மேயராக செயல்பட்டவர். கலைஞருக்கு மகனாக இருப்பதினாலேயே கிடைக்கும் எதிர்மறை விமர்சனங்களை நேர்த்தியாக எதிர் கொள்பவர்.

3. தயாநிதி மாறன்: வாரிசு என்பதால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தயங்காமல் ஒத்துக் கொண்டு, அதை மீறி, தன்னுடைய தொலைநோக்கு திட்டங்களினாலும் ஆர்வத்தினாலும் வீரியமாய் முக்கியமான மந்திரியாக விளங்குகிறார். சன் டிவி பேட்டியில் இயல்பான பேச்சு; அரசியல்தனமற்ற உரையாடல்; போலிகளற்ற வெளிப்பாடுகள் மூலம் பெரிதும் கவர்ந்தார்.

4. சோ: மார்க்ஸிஸம், பெரியாரியம், காந்தீயம் என்பது போல் இணையத்தில் சோத்தனம் என்று சொல்லுமளவு தனக்கென நடை, எவரையும் உரசிப் பார்க்கும், உறுத்தும் விமர்சனங்கள் வைப்பவர். நக்கீரன், நெற்றிக்கண் என்று புதிய தலைமுறை பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக்கை இன்னும் தாக்குப்பிடிக்க வைப்பது. Provocative & incisive.

நான்கு படம்:
1. ஜோ ஜீதா வஹி சிக்கந்தர்: பதின்மப் பருவத்தில் பார்த்த காதல் படம். ‘வள்ளி’ பாணியில் சொல்வதானால் ‘உன்னை யாரைக் காதலிக்கிறாங்களோ, அவளைக் காதலி!’ இதன் உல்டாவாக வந்த ‘பத்ரி’ ரசிக்கவில்லை. இந்தப் படத்துக்காகவே இன்றளவும் ஆயிஷா ஜூல்காவின் விசிறி.

2. பொய்க்கால் குதிரை: பாலச்சந்தரின் நிறையப் படங்கள் அழுது வடிய கிரேசியாய் சிரிக்க வைத்த படம். அதன்பிறகு இதே பாணியில் வந்த ‘அரிச்சந்திரா’வும் நல்ல உல்டா.

3. இன்று போய் நாளை வா: ‘இதயம் பேசுகிறது’வில் பாக்கியராஜ் தன்னுடைய கதையை எழுதும்போது இதில் நடந்த பல சம்பவங்களை சொல்லியிருப்பார். படத்தைப் பாராட்டினால் ‘ஈவ் டீஸிங்’ என்று ப்ளாங்க் நாய்ஸ் ப்ராஜெக்டில் ப்ராக்கெட் போடப்படும் அபாயம் இருக்கிறது.

4. திருவிளையாடல்: தருமியின் கேள்வி பதில்; பாடல் போட்டிக்கு பயம்; சிதறலான சம்பவங்களைக் கோர்த்து படத்தின் பகுதிகளைப் பார்த்தாலும் சேனல் மாற்றாமல் தொடர வைக்கும். ஷார்ப் வசனங்கள். இன்று இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப் பாராட்டாமல் ஆனால் தத்துவ விசாரத்தைக் கோரும் ஆன்மிகப் படங்கள் வராதது இன்னொரு காரணம்.

நான்கு உணவு:
1. கோபி/சிக்கன் மன்சூரியன்: அமெரிக்காவின் சீன உணவகங்களில் கிடைக்காத பதார்த்தம். சில தென்னிந்திய இடங்களில் மட்டுமே நாவில் நிற்கும் தனிச்சுவையுடன் கொறிக்க விடுகிறார்கள்.

2. ஸ்பினாஷ் க்ரொய்ஸாண்ட்: கிட்டத்தட்ட கீரை வடை போல் டேஸ்ட். ஆனால், நடுநடுவே வெண்ணெய் நீக்கமற நிறைந்திருக்கும். எண்ணெயில் பொரிக்காமால் bake செய்யப்படுவதால் ‘சத்து’ என்னும் பிம்பம் உண்டு.

3. மோர்க்குழம்பு: காரமும் உண்டு; தயிர்ச்சுவையும் உண்டு; பூசணிக்காய், வறுத்த வெண்டை, சுண்டக்காய் என்று விதவிதமான காய்கறிகள்.

4. ஹாஷ் ப்ரௌன்ஸ்: உருளை போண்டா மாதிரியான பதார்த்தம்தான். காலைப்பசியில் மெக்டோனால்ட்/பர்கர் கிங் சென்று வாங்கி விண்டு வயிற்றுக்கு செல்லும்போது ‘கொண்டா… கொண்டா…’ சொல்லும்.

நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:
1. பாஸ்டன் லீகல்: நிறைய சட்டநுட்பங்களை சாமானியனும் அறியுமாறு எளிமையாகத் தரும்விதம். பார்வையாளனை புத்திசாலியாகக் கருதி காட்சிகளை நகர்த்தும் வேகம். இவற்றுடன் துளி காதல்; துளி பாசம்; துளி செண்டிமெண்ட்.

2. முதல் பயணம் (கே டிவி): அதிகம் பிரபலமில்லாதவர்களை அறிய முடிகிறது. திரைக்குப் பின் பணிபரியும் டப்பிங் கலைஞர்கள், ஒளி ஓவியர்கள், பாடகிகள், துண்டு கதாபாத்திரங்கள் எடுப்பவர்களைப் பேட்டி காண்கிறார்கள். கிட்டத்தட்ட ‘நூற்றுக்கு நூறு’ என்னும் நிகழ்ச்சியும் இதே காரணங்களுக்காக விருப்பமானது. (பேட்டி எடுக்கும்போது தேவதர்ஷினி இடையூறாக தடைப்படுத்துவதுதான் ஒரே படுத்தல்.)

3. நினைவுகள் (சன் டிவி): அம்மு. (நடுநடுவே ஏதோவொரு திரைப்படத்தையும் காட்டுவார்கள் என்று ஞாபகம்.)

4. வெஸ்ட் விங்: அமெரிக்க அரசியலை தடாலடியாகப் புரிய உதவுகிறது. ஜிவ்வென்று சீட் நுனிக்குத் தள்ளும் உலகப் போராட்டங்கள்; ஆள்பவர்களின் மனக் குமுறல்கள்; மேலிடத்து பதவி விளையாட்டுக்கள்.

நான்கு வலையகம்:
1. ஜஸ்ட் சமாச்சார்: நோ நான்சென்ஸ்; ஒன்லி நியூஸ்

2. இன்றைய சிறந்தக் கருத்துப்படங்கள்:மாரடைப்பு கொடுக்கவைக்கும் அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பகிடி செய்கிறார்கள்.

3. தேன்கூடு: வரிசைக்கிரமமாக படிக்கமுடிகிறது. எங்கு வரைக்கும் படித்தோம் என்பதை அறிந்து விட்ட பதிவில் இருந்து மேய முடிகிறது. அதிகம் பார்வையிட்ட பதிவுகளைத் தவறவிடாமல் காட்டுகிறது. பின் எப்பொழுதோ நிதானமாகப் போக வேண்டிய பதிவுகளை சேமிக்க முடிகிறது.

4. டெக்னோரட்டி: இணையத்தில் என்ன நடக்கிறது? என்ன பேசிக் கொள்கிறார்கள்?

அடுத்து அழைக்க விரும்பும் நால்வர்:
இதைப் படிக்கும் முதல் நான்கு பேரை அழைக்கிறேன். எனக்கொரு லிங்க் கொடுத்தால் தன்யனாவேன். முன்கூட்டிய நன்றி 🙂


| |

Pre/Post Election Thought

கல்கியில் வெளிவந்தது…
தினகரனில் இறக்குமதியானது…
இங்கும் ஏற்றுமதியாகிறது.

Kalki Joke in Dinakaran

Bits & Pieces – Tamil Magazines

1. சாகசமாயிரம் : விஞ்ஞானத் தொடர்சுஜாதா (கல்கி)

Saagasam Aayiram - Science Series by Sujatha in Kalki

2. டிகாசன் போடும் கலைபாக்கியம் ராமசாமி (தமிழ் சிஃபி)

3. அந்தக் கால அரசியல் நினைவுகளும் தேர்தல் களங்களும்: ஒன்று | இரண்டு (ஆனந்த விகடன்)

4. மிஸ்டர் மியாவ்: ஜூனியர் விகடன்

நீ வேணுண்டா செல்லம்‘ படத்தில் ‘கள்ளத்தோணி கள்ளத்தோணி… என்னை அக்கரைக்குக் கொண்டு போக வாடா…‘ என்ற பாடலை எழுதி இருக்கிறாராம் கவிஞர் யுகபாரதி. ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து யோசித்து எழுதிய பாடலாம் இது. அதுசரி… இன்றைய அரசியலை வைத்து யோசித்தால் இந்தப் பாடல் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கே, மிஸ்டர் யுகபாரதி?

5. அம்ஷன்குமார் நேர்காணல் – நிழல் ப திருநாவுக்கரசு (அமுதசுரபி)

6. சோ தர்மனின் கூகைஅ ராமசாமி (காலச்சுவடு)


|

‘Ghaana’ Ulaganaathan

‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் பாடிய ‘கானா’ உலகநாதனுக்கு அறிமுகம்:

Ilamai-Puthumai Intro to Sithiram Pesuthadi Music :: an audio post - click to play


சன் டிவியின் ‘இளமை புதுமை‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் திறமை வெளிப்பாடு:

Talent Display by a Musician in Sun TV's Ilamai Pudumai : audio post - click to play


கானா உலகநாதனின் மற்றுமொரு கலக்கல் கானா:

Gaana Ulakanadhan's Khana Song in TV : this is an audio post - click to play

கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு‘ என்னும் பாடலுக்கு புகழ்சேர்த்த மாளவிகாவின் ஆடலுடன் இடம்பெறும் ‘சித்திரம் பேசுதடி‘ பாடல் வரிகளுக்கு: கல்யாணமாம் கல்யாணம்


| |

தேர்தல் செய்திகள்

INTUC – அதிமுக கூட்டணி செல்லாது

INTUC தமிழ்நாடு, அதிமுகவுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி செல்லாது என்று அவர்களது அகில இந்திய தலைமை கூறியுள்ளது. இரண்டு சீட்கள் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு தலைவர்கள் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பார்வர்ட் பிளாக் தனித்துப் போட்டியிடும்

நடிகர் கார்த்திக் தலைமையிலான ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக்கின் தமிழகக் கிளை தனித்தே போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது. கார்த்திக் அதிமுகவுடன் கூட்டுசேர்வதை விரும்பினாலும் அம்மா விரும்பவில்லை போல…

விஜயகாந்த் நடிக்கும் படம் சுதேசி

விஜயகாந்த் நடித்து வெளியாகும் ‘சுதேசி’ படம் அவரது கட்சியின் (அவருடைய) கொள்கை விளக்கமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

பிற கட்சியின் தலைவர்களும் இப்படிப் படமாக எடுத்து வெளியிட்டால் மக்கள் நிலைமை என்னாகும்?

மற்றபடி தேர்தல் களத்தில் வேறு ஏதும் அதிரடியாக நடக்கவில்லை.