Monthly Archives: செப்ரெம்பர் 2005

Cats & Bulls 

Cats & Bulls Posted by Picasa

Annamalai 

Annamalai Posted by Picasa

Sundara Ramasamy & Annamalai 

Sundara Ramasamy & Annamalai Posted by Picasa

மைக்ரோசாஃப்ட் நுட்பியல்

1. புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள புத்தம்புதிய விஸ்டா (விண்டோஸின் அடுத்த தலைமுறைப் பதிப்பு) மூலம் உருவான நுட்பம்: Microsoft Codename Max

2. இணையத்திற்காக வடிவமைக்க வேண்டுமா? வலையோவியர் ஆக வேண்டுமா? புகைப்படத்தை மேம்படுத்த வேண்டுமா? Microsoft Expression

நன்றி: MSDN Events :: ப்ரொ. டெவ். 05

அம்பலமான கூட்டு சதி

சமீப காலமாக புகைப்படங்கள் எடுப்பவர்களின் தொல்லை அதிகரித்து வருவதாக வாத்து வளர்ச்சி கழகக் கண்மணி குற்றஞ்சாட்டியுள்ளார். கேனன் கேணையன், சோனி சோனியா, ஃப்யூஜி பூஜ்ஜியம், கோடக் கோடங்கி, கோனிகா கோணங்கி, மினோல்டா டகால்ட்டா, ஒலிம்பஸ் ஒல்லி, பெண்டக்ஸ் ஸ்பாண்டக்ஸ் ஆகிய தலைவர்கள் சுற்றறிக்கை ஒன்றைக் கையெழுத்திட்டு தொடங்கி வைத்துள்ளார்கள்.

அவர்களின் கண்டன அறிக்கையில் இருந்து முக்கிய பகுதிகள்:

  • வாத்துக்களை ஃப்ளாஷ் கொண்டு புகைப்படம் எடுப்பதால் வாத்துக்கள் கண்பார்வை இழக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம்
  • ஃபிலிம் சுருள்கள் நதியில் விழுந்து, அல்லது பழைய ரீல்கள் தண்ணீரை மாசுபடுத்தும்
  • சித்திரங்கள் வரைந்து எங்களின் அழகை முழுமையாக உள்வாங்குவதை புகைப்படங்கள் நசுக்குகிறது
  • வாத்துக்களின் மணவாழ்வு தாண்டிய பந்தங்களை இந்த நிழற்படங்கள் அம்பலமாக்குவதால், இல்லற வாழ்க்கைக்கு பாதகமாக விளங்குகிறது.
  • வாத்துகளைப் புகைப்படம் எடுப்பதற்கு நெடுநேரம் போஸ் கொடுத்து கால்வலியும் சுளுக்கும் ஏற்பட்டு, கைரோபாக்டருக்கு செலவும் அதிகரித்து, காப்புரிமை எகிறுகிறது.
  • வாத்துக்களைப் படம் எடுக்கும்போது குறுக்கே செல்கிறோமோ, அல்லது இயற்கைக்கு இடையூறாக வாத்துக்கள் குறுக்கிட்டதா என்னும் சஞ்சலத்தால் மனப்பிழற்வுண்டாகிறது.

    எனவே, வலைப்படக்காரர்கள் வாத்துக்களை கரிசனத்துடனும் தக்க பரிவுடனும் நடத்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய கூண்டை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  • கயா

    Dubey murder: Main accused flees jail – என்.டி.டிவி: சத்யேந்திர துபே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மந்து குமார் சிறையிலிருந்து தப்பித்துவிட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது தப்பித்திருக்கிறார். அவருக்கு பதிலாக, மந்து குமாரின் தாய் கீதா தேவியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

    * Corruption in the Golden Quadrilateral

    * டி.ஆர்.பாலுவுக்கு ஒரு மின்னஞ்சல்

    * சத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்…

    * இதற்கொரு முடிவில்லையா ?

    Memento

    மெமண்ட்டோ

    மெமண்ட்டோ-வை ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். படாதவர்கள் கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப்பில் மதி கந்தசாமியின் அறிமுகத்தைப் படித்து விடவும்.

    பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஏரிக்கரையிலோ மலைவழிப்பாதையிலோ உட்கார்ந்து கொண்டு கடந்த காலத்தை, சென்ற வருடத்தை நினைத்துப்பார்ப்பேன்.

    போன வருடம், இந்த நாளில் என்ன நினைத்தோம்? எவ்வளவு முடித்தோம்? ஏன் அதற்காக குறிக்கோள் வைத்தேன்? திருப்தியளித்ததா? அடுத்த வருடம் என்னவாக இருக்க வேண்டும்? ஏன்? ஐந்து வருடம் கழித்து… என்று சிதறலாய் இயற்கையை வெற்றுப்பார்வை பார்த்துக் கொண்டே, மகளுடன் விளையாடியபடியே அசை போடுவது பிடிக்கும்.

    எதிர் காலம் தெரிந்திருந்தால், கடந்த காலத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது, அப்படியே விட்டிருப்பதும் சுவாரசியமே எனவும் எண்ணலாம். மெமண்ட்டோ இது போல அலைகளை எழுப்பும் படம். எதற்காக ஓடுகிறோம்? எதை ஆதாரமாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம்?

    புத்தகத்தைப் படிப்பது சுகம். உண்மைகளை எடுத்து வைக்கும். சரித்திர நிகழ்வுகளை தற்காலப் புரிதல்களுடன் விளக்கும். திடுக்கிடும் திருப்பங்களுடன் செல்லும். இயல்பான வாழ்க்கையை படம் பிடிக்கும். அறிவுபூர்வமாக விவாதிக்கும். உணர்ச்சிபூர்வமாக விவரிக்கும்.

    வாழ்க்கையும் புத்தகங்களைப் போல வெரைட்டியானவை. முடிவு தெரிந்த வரலாற்றுப் புத்தகம். இறப்பு நிச்சயம் என்று தெரிந்த வாழ்க்கை. இறந்த காலக் கொடுமைகளை மறந்தால்தான் நிகழ்காலம் இனிக்கும். கடந்த தினங்களின் கசப்பை காலப்போக்கில் மனிதர்கள் மறந்துவிடுவார்கள்.

    மெமண்ட்டோவில் ஹீரோவுக்கு ஞாபகசக்தி சில மணித்துளிகள்தான். கூகிள், புகைப்படங்கள், நினைவு நாள் என்று ஞாபகப்படுத்திக் கொள்வது போல் அவனுக்கும் உபகரணங்கள் இருக்கிறது. அதன் அடிப்படையில் அனுமானங்களை அமைத்துக் கொள்கிறேன். செய்தித்தாள், நண்பர்களின் கூற்று, அக்கம்பக்க பேச்சு என்று எனது முடிவுகள் அமைகிறது. எனக்கு பத்து வருடத்தில் மறந்து போகும் சங்கதிகள், ஹீரோவுக்கு பத்து நிமிடத்தில் மறக்கின்றன.

    எது மெய்? எப்படி பொய்? நாம் கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாலும், என் பிம்பம் பிரதிபலிக்கிறது. என்னுடைய செயல்கள் தண்டக்கருமாந்திரமாகப் போகாமல் இருப்பதை மனம் விரும்புகிறது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால் சந்தோஷம் வருமே. வலைப்பதிவை கூகிள் தேடல் பட்டியலில் கண்டடைந்தால் மனம் பொங்குமே. அது போல. மூளைக்கு எட்டினால்தான் கருமத்தில் கண்ணாக இறங்கமுடிகிறது.

    மெமண்ட்டோ நாயகனுக்கும் குறிக்கோள் தேவை. உடனடி மறதி இருந்தாலும், வாழும் வாழ்வினால் பயன் தேவை. நல்லதோ, கெட்டதோ; சரியோ, தவறோ; பிரயாணம் முக்கியம். லட்சியங்களை அடைந்துவிட்டால் அடுத்த பயணங்களும், அடைதல்களும் வேண்டும். அவனும் என்னைப் போல் தெளிவாகக் குழம்பியவன் தான்.

    படத்தைக் குறித்து ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், நாயகியைக் குறித்த நாயகனின் வசனம் பொருத்தமாக இருக்கும்:

    “உன் நினைவை அழிக்க, நினைவில் வைக்க முடியவில்லை”. (I can’t remember to forget you.)

    மேலும் முழுமையான திரைப்பார்வைக்கும் அலசலுக்கும் சலொண் பக்கம் எட்டிப்பார்க்கவும்.

    WTC Divorce Case – What not to say in Sep11 

    WTC Divorce Case – What not to say in Sep11 Posted by Picasa

    From The Week Cover Story on South Indian Boomtown…

    From The Week Cover Story on South Indian Boomtowns Posted by Picasa

    BITS, Pilani 

    BITS, Pilani Posted by Picasa