ஒரு பெரும்பிரிவு மக்கள் பாதுகாப்பான நிலையை அடைந்திருக்கிறார்கள். அவ்வாறு அடைந்திருப்பவர்களின் பொருளாதாரப் பார்வை (மொழிப் பார்வையும்தான்) வேறு மாதிரி இருக்கும். தலித்துகளும் பிறரும் இந்தச் சலுகை பெற்ற சமூகத்தவரின் முன்னுரிமைகளை முன்மாதிரியாகக் கொள்ளாமல் புதிய உலகளாவிய வாய்ப்புகளை முன்னிறுத்திக்கொண்டுதான் தங்கள் பொருளாதாரப் பார்வையை வகுக்க வேண்டும்.
காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கும் கீழிருந்து எழும் உலகமயம் நூலிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படுகிறது. இந்நூல் ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் ஆகியோர் எழுதிய Globalization From Below என்னும் நூலின் மொழிபெயர்ப்பு.
கூட்டுக்கழகங்கள், சந்தைகள், முதலீட்டாளர்கள், மேல்குடிகள்யாவும் உலகமயமாகிக்கொண்டு உள்ளன. பொருளியல் வல்லுனர்களும் மேதைகளும் கூட்டுக்கழக நிர்வாகிகளும் உலகின் பெரும் பணக்கார நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி கொண்டாடிவரும் உலகமயமானது உண்மையில், அவர்கள் ‘மேலிருந்து திணிக்கும் உலகமயம்’ ஆகும்.
‘கடவு’ இலக்கிய அமைப்பும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘அசோகமித்திரன் – 50’ நிகழ்வில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரையின் பதிவு.
(பேராசிரியர் பி.ஆர். ராமானுஜம் புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்விக்கான ஊழியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (STRIDE) இயக்குநர். 1986இல் ‘இலக்கியக் கோட்பாடுகள்: நவீனத்துவமும் மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஹைதராபாதில் உள்ள ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIEFL) முனைவர் பட்டம் பெற்றவர்.
அறிவுசார்ந்த தேடலும் ஆராய்ச்சியும் கேள்விகள் கேட்பதும் கல்விக்கு அந்நியமானவை என இந்தக் கல்விக்கூடங்கள் நினைப்பதால் கையாலாகாத ஆசிரியர்களும் கற்கும் திறமையற்ற மாணவர்களும் பல்கிப் பெருகும் கல்வித் தொழிற்சாலைகள் மிகவும் லாபகரமாக இயங்குவதற்கு உலகமயமாதல் வசதிசெய்து தருகிறது.
சுகாதார வசதி என்பது மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கும் நமது நாட்டில் மருத்துவர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
எவ்வளவு பெரிய நூலாக இருந்தாலும், எத்தனை புகழ் பெற்றிருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை, பெயரை மட்டும் மாற்றித் தன்னுடையதாக்கிக்கொள்ள முடியும் என்பது தமிழ்ச் சூழலில் சாதாரணம். மூலநூல் தொடர்பானவர்கள் உயிருடன் இருப்பினும் பிரச்சினை இல்லை.
‘உங்க தோஸ்த்து ஜெர்மனிக்குப் போயும் இப்ப பத்துப் பதினைந்து வருஷங்களாச்சு, ஒவ்வொரு முறை வாறபோதும் தவறாமல் ‘நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு’ என்கிறாரேயொழிய உருப்படியாய்க் கூப்பிடுறதுக்கு வழியொன்றும் பண்றதாய்க் காணமே . . . ‘
பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட நடக்க முடியாத அளவுக்கு இங்கே சாதிக் கொடுமைகள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் நாகரீகத்தின் அடையாளமாகவும் முன்னேற்றத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும் நகரமயத்துக்குப் பதில் நாடே கிராமமயம் ஆகிவிட்டது என்றுதான் முடிவு செய்யத் தோன்றுகிறது.
மொழி நடை, மொழி நயம் ஆகியவற்றின் சில நுட்பமான அம்சங்களைப் பற்றி நஞ்சுண்டன் எழுதுகிறார். இலக்கணச் செறிவை மட்டுமன்றி நடைமுறைப் பிரச்சினைகளையும் இப்பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
கல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் வாழ்ந்து, அவர்களைப் பற்றி விவரணப் படம் எடுத்து ஆஸ்கார் விருது பெற்றார்கள் ஜானா பிரிஸ்கி, ராஸ் காஃப்மன் என்ற பிரிட்டிஷ் இயக்குநர்கள். இவர்கள் படமெடுத்த கதையும் பேட்டியும்.
அதிநவீன வசதிகளும் தோற்றப்பொலிவும் கொண்டு, சென்னை மேல்தட்டு மக்களின் கேளிக்கை மையங்களில் ஒன்றாக விளங்கிவரும் சத்யம் திரையரங்க வளாகம், கலை உணர்வுடன் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் மாதந்தோறும் இலவசமாகத் திரையிட்டுவருகிறது. இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்துவிடவில்லை.
உலக சினிமா பற்றித் தகுந்த கட்டுரைகளை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவற்றை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கலாம். அல்லது தகுதியான ஒரே மூலநூலைத் தேர்ந்து அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கலாம். அவ்வாறெல்லாம் செய்யப்பட்டிருந்தால் செம்மையான உலக சினிமா வரலாறு தமிழுக்குக் கிடைத்திருக்கும்.
ஐயரவர்கள் தமிழ்ப் பணியில் மட்டுமல்ல, உருவத்திலும் உயர்ந்தவரே!
மே மாத அற்றைத் திங்கள் நிகழ்வில் பங்கேற்ற முத்துசாமி ‘எழுத்து’ இதழ் காலகட்டத்தையும் அதையொட்டித் தன் பிரக்ஞையைக் கூர்தீட்டிக்கொள்ள உதவிய நட்புகளையும் பற்றிப் பேசினார்; தனது நாடக ஆக்கத்திற்கான முக்கியமான உந்துவிசை புதுக்கவிதை என்றும் அது உருவாகிய புதிதில் தனக்கு ஏற்பட்ட புரியாமையையும் குழப்பத்தினையும் தீர்த்துவைத்தவர் சி.சு. செல்லப்பாதான் என்றும் நினைவுகூர்ந்தார்.
‘கூத்தரங்கம்’ என்னும் பெயரிலான இருமாத நாடக இதழ் ஒன்று, இலங்கையிலிருந்து 2004ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து வெளிவருகிறது. யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் இவ்விதழ் கலை, குறிப்பாக நாடகம், தொடர்பான எல்லாவற்றையும் இடம்பெறச் செய்து பரவலான வாசிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக உள்ளது.
‘கொள்கைப் பிடிப்புள்ள’ தலைவராகத் தலை நிமிர்ந்து நிற்கவும் முடியாமல் மிதவாதத் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும் முடியாமல் மானத்தோடு ராஜினாமா செய்துவிட்டுப் போகவும் மனமில்லாமல் தவிப்பது அவரது அரசியல் வாழ்வின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக இருக்கலாம்.
>கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ப்ரஸன்னா ராமஸ்வாமி தன் அனுபவங்களை இத்தொடரில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
முற்போக்காளர்களின் அரசு எதிர்ப்பு, ஆதிக்கச் சாதி எதிர்ப்பாக மாறிய நிலையில் அறிவுஜீவிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அழகரசன் அவதானிக்கிறார். அந்த நெருக்கடியின் விளைவுகளாகப் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கான எதிர்வினைகளைக் கருதுகிறார். இது அறிவுஜீவிகளின் அடிப்படையையே சந்தேகிக்கும் மோசமான கருத்து.
புகைபிடிப்பவர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என நமது அரசாங்கம் நினைக்கலாம். அப்படி நினைத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை என்னும் சட்டத்தைக் கொண்டுவருவது அல்ல.
ஒரு அறிவுஜீவித வறுமைக்குள் ஈழத் தமிழ்ச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறதா என்று அவர் எழுப்பிய வினாவுக்கு ‘ஆம்’ என்பதாக இருந்தது அவரது படுகொலை.
மனித மனசாட்சியின் ஆழங்களையும் ஆழ்மனத்தின் செயல்பாடுகளையும் பற்றி உளவியல் ஆய்வு வாயிலாகவும், உரையியல் வாயிலாகவும் சிந்தித்த போல் ரிகரின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்றபோதிலும், தத்துவச் சிந்தனை அவரை மறக்க முடியாத அளவுக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
கதகளிப் பாரம்பரியத்தில் தோன்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, பின்னர் சினிமாக் கலையை முறைப்படி கற்ற கோபாலகிருஷ்ணன், நிகழ்கலைகளின் அழகியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாமீது பரவலாக இருக்கும் உதாசீன நோக்கில் அக்கலை வடிவின் நியாயங்கள், நெறிகள், தனித்தன்மைகள் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் தீவிர அக்கறை கொண்டவர்.
பொதுவாகப் புகைப்படக் கலைஞர்களுக்குத் தென்படும் வாரணாசிக் காட்சிகளை மட்டுமின்றித் தனது பார்வையையும் தொழில்நுட்பத் திறனுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத். இவரது முதல் கண்காட்சி இது.














