Monthly Archives: ஜூலை 2005

காலச்சுவடு ஜூலை 2005

  • உலகமயமாக்கலின் பின்னணியில் மொழிக் கொள்கைகளின் அரசியல் :: செ.ச. செந்தில்நாதன்
    ஒரு பெரும்பிரிவு மக்கள் பாதுகாப்பான நிலையை அடைந்திருக்கிறார்கள். அவ்வாறு அடைந்திருப்பவர்களின் பொருளாதாரப் பார்வை (மொழிப் பார்வையும்தான்) வேறு மாதிரி இருக்கும். தலித்துகளும் பிறரும் இந்தச் சலுகை பெற்ற சமூகத்தவரின் முன்னுரிமைகளை முன்மாதிரியாகக் கொள்ளாமல் புதிய உலகளாவிய வாய்ப்புகளை முன்னிறுத்திக்கொண்டுதான் தங்கள் பொருளாதாரப் பார்வையை வகுக்க வேண்டும்.
  • கீழிருந்து எழும் உலகமயம் :: ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் – தமிழாக்கம்: சிங்கராயர்

    காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கும் கீழிருந்து எழும் உலகமயம் நூலிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்படுகிறது. இந்நூல் ஜெரமி பிரெச்சர், டிம் கோஸ்ட்டெல்லோ, பிரெண்டன் ஸ்மித் ஆகியோர் எழுதிய Globalization From Below என்னும் நூலின் மொழிபெயர்ப்பு.

    கூட்டுக்கழகங்கள், சந்தைகள், முதலீட்டாளர்கள், மேல்குடிகள்யாவும் உலகமயமாகிக்கொண்டு உள்ளன. பொருளியல் வல்லுனர்களும் மேதைகளும் கூட்டுக்கழக நிர்வாகிகளும் உலகின் பெரும் பணக்கார நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி கொண்டாடிவரும் உலகமயமானது உண்மையில், அவர்கள் ‘மேலிருந்து திணிக்கும் உலகமயம்’ ஆகும்.

  • அசோகமித்திரனின் கலை மேதை :: சுந்தர ராமசாமி
    ‘கடவு’ இலக்கிய அமைப்பும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘அசோகமித்திரன் – 50’ நிகழ்வில் சுந்தர ராமசாமி ஆற்றிய உரையின் பதிவு.
  • கல்வி உலகமயமாதல்: சில ஆபத்துகள் :: பி.ஆர். ராமானுஜம்
    (பேராசிரியர் பி.ஆர். ராமானுஜம் புதுதில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்விக்கான ஊழியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (STRIDE) இயக்குநர். 1986இல் ‘இலக்கியக் கோட்பாடுகள்: நவீனத்துவமும் மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து ஹைதராபாதில் உள்ள ஆங்கில மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIEFL) முனைவர் பட்டம் பெற்றவர்.
    அறிவுசார்ந்த தேடலும் ஆராய்ச்சியும் கேள்விகள் கேட்பதும் கல்விக்கு அந்நியமானவை என இந்தக் கல்விக்கூடங்கள் நினைப்பதால் கையாலாகாத ஆசிரியர்களும் கற்கும் திறமையற்ற மாணவர்களும் பல்கிப் பெருகும் கல்வித் தொழிற்சாலைகள் மிகவும் லாபகரமாக இயங்குவதற்கு உலகமயமாதல் வசதிசெய்து தருகிறது.
  • தலையங்கம்: தேர்வு முறையைத் திருத்துங்கள்
    சுகாதார வசதி என்பது மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக இருக்கும் நமது நாட்டில் மருத்துவர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
  • சோரகவி மரபு: ‘லீலா வினோதம்’ :: பெருமாள்முருகன்
    எவ்வளவு பெரிய நூலாக இருந்தாலும், எத்தனை புகழ் பெற்றிருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை, பெயரை மட்டும் மாற்றித் தன்னுடையதாக்கிக்கொள்ள முடியும் என்பது தமிழ்ச் சூழலில் சாதாரணம். மூலநூல் தொடர்பானவர்கள் உயிருடன் இருப்பினும் பிரச்சினை இல்லை.
  • சிறுகதை: இரட்சகன் வருகிறான் : பொ கருணாக்ரமூர்த்தி
    ‘உங்க தோஸ்த்து ஜெர்மனிக்குப் போயும் இப்ப பத்துப் பதினைந்து வருஷங்களாச்சு, ஒவ்வொரு முறை வாறபோதும் தவறாமல் ‘நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு’ என்கிறாரேயொழிய உருப்படியாய்க் கூப்பிடுறதுக்கு வழியொன்றும் பண்றதாய்க் காணமே . . . ‘
  • கீரிப்பட்டி, பாப்பாபட்டி: கதவருகில் நிற்கும் மரணம் :: ரவிக்குமார்
    பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில்கூட நடக்க முடியாத அளவுக்கு இங்கே சாதிக் கொடுமைகள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் நாகரீகத்தின் அடையாளமாகவும் முன்னேற்றத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படும் நகரமயத்துக்குப் பதில் நாடே கிராமமயம் ஆகிவிட்டது என்றுதான் முடிவு செய்யத் தோன்றுகிறது.
  • மொழி: நெஞ்சு பதைக்கிறது :: நஞ்சுண்டன்
    மொழி நடை, மொழி நயம் ஆகியவற்றின் சில நுட்பமான அம்சங்களைப் பற்றி நஞ்சுண்டன் எழுதுகிறார். இலக்கணச் செறிவை மட்டுமன்றி நடைமுறைப் பிரச்சினைகளையும் இப்பகுதி கணக்கில் எடுத்துக்கொள்ளும்.
  • நேர்காணல்: பிரிட்டிஷ் இயக்குநர்கள் ஜானா பிரிஸ்கி – ராஸ் காஃப்மன் :: அ. முத்துலிங்கம்
    கல்கத்தா சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் வாழ்ந்து, அவர்களைப் பற்றி விவரணப் படம் எடுத்து ஆஸ்கார் விருது பெற்றார்கள் ஜானா பிரிஸ்கி, ராஸ் காஃப்மன் என்ற பிரிட்டிஷ் இயக்குநர்கள். இவர்கள் படமெடுத்த கதையும் பேட்டியும்.
  • புதிய வாசல், புதிய வெளிச்சம் :: கலையம்சம் கொண்ட படங்களைப் பரவலாகக் கொண்டுசெல்லும் முயற்சி
    அதிநவீன வசதிகளும் தோற்றப்பொலிவும் கொண்டு, சென்னை மேல்தட்டு மக்களின் கேளிக்கை மையங்களில் ஒன்றாக விளங்கிவரும் சத்யம் திரையரங்க வளாகம், கலை உணர்வுடன் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் மாதந்தோறும் இலவசமாகத் திரையிட்டுவருகிறது. இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்துவிடவில்லை.
  • மதிப்புரை: உலக சினிமா – முழுமை கூடாத முயற்சி :: அம்ஷன் குமார்
    உலக சினிமா பற்றித் தகுந்த கட்டுரைகளை முதலில் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவற்றை மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கலாம். அல்லது தகுதியான ஒரே மூலநூலைத் தேர்ந்து அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கலாம். அவ்வாறெல்லாம் செய்யப்பட்டிருந்தால் செம்மையான உலக சினிமா வரலாறு தமிழுக்குக் கிடைத்திருக்கும்.
  • உ.வே.சா. ‘குள்ளமானவர்’ அல்லர்! :: ஐராவதம் மகாதேவன்
    ஐயரவர்கள் தமிழ்ப் பணியில் மட்டுமல்ல, உருவத்திலும் உயர்ந்தவரே!
  • அற்றைத் திங்கள்: ந. முத்துச்சாமியும் நாடகமும்
    மே மாத அற்றைத் திங்கள் நிகழ்வில் பங்கேற்ற முத்துசாமி ‘எழுத்து’ இதழ் காலகட்டத்தையும் அதையொட்டித் தன் பிரக்ஞையைக் கூர்தீட்டிக்கொள்ள உதவிய நட்புகளையும் பற்றிப் பேசினார்; தனது நாடக ஆக்கத்திற்கான முக்கியமான உந்துவிசை புதுக்கவிதை என்றும் அது உருவாகிய புதிதில் தனக்கு ஏற்பட்ட புரியாமையையும் குழப்பத்தினையும் தீர்த்துவைத்தவர் சி.சு. செல்லப்பாதான் என்றும் நினைவுகூர்ந்தார்.
  • இதழ் அறிமுகம்: கூத்தரங்கம்
    ‘கூத்தரங்கம்’ என்னும் பெயரிலான இருமாத நாடக இதழ் ஒன்று, இலங்கையிலிருந்து 2004ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து வெளிவருகிறது. யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் இவ்விதழ் கலை, குறிப்பாக நாடகம், தொடர்பான எல்லாவற்றையும் இடம்பெறச் செய்து பரவலான வாசிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக உள்ளது.
  • கோணங்கள்: அத்வானியின் பயனற்ற சாகசம் :: அரவிந்தன்
    ‘கொள்கைப் பிடிப்புள்ள’ தலைவராகத் தலை நிமிர்ந்து நிற்கவும் முடியாமல் மிதவாதத் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும் முடியாமல் மானத்தோடு ராஜினாமா செய்துவிட்டுப் போகவும் மனமில்லாமல் தவிப்பது அவரது அரசியல் வாழ்வின் வீழ்ச்சிக்குத் தொடக்கமாக இருக்கலாம்.
  • பழனிவேள் கவிதைகள்

  • அகமும் அயலும்: ‘உயிர் தின்ற காலம்’ :: பிரஸன்னா ராமஸ்வாமி
    >கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ப்ரஸன்னா ராமஸ்வாமி தன் அனுபவங்களை இத்தொடரில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
  • எதிர்வினை: அதுவா அழகரசனின் விருப்பம்?
    முற்போக்காளர்களின் அரசு எதிர்ப்பு, ஆதிக்கச் சாதி எதிர்ப்பாக மாறிய நிலையில் அறிவுஜீவிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக அழகரசன் அவதானிக்கிறார். அந்த நெருக்கடியின் விளைவுகளாகப் பெரியார் குறித்த மறுவாசிப்புக்கான எதிர்வினைகளைக் கருதுகிறார். இது அறிவுஜீவிகளின் அடிப்படையையே சந்தேகிக்கும் மோசமான கருத்து.
  • தேவை தடைகள் அல்ல, கருத்துப் பரிமாற்றம் :: அ. ராமசாமி
    புகைபிடிப்பவர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என நமது அரசாங்கம் நினைக்கலாம். அப்படி நினைத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளுக்குத் தடை என்னும் சட்டத்தைக் கொண்டுவருவது அல்ல.

  • அஞ்சலி: சிவராம் – கொலையும் குருதியும் ஒரு துளி மையும்
    ஒரு அறிவுஜீவித வறுமைக்குள் ஈழத் தமிழ்ச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறதா என்று அவர் எழுப்பிய வினாவுக்கு ‘ஆம்’ என்பதாக இருந்தது அவரது படுகொலை.
  • அஞ்சலி: போல் ரிகர் – தத்துவக் கதவுகளைத் திறந்தவர்
    மனித மனசாட்சியின் ஆழங்களையும் ஆழ்மனத்தின் செயல்பாடுகளையும் பற்றி உளவியல் ஆய்வு வாயிலாகவும், உரையியல் வாயிலாகவும் சிந்தித்த போல் ரிகரின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்றபோதிலும், தத்துவச் சிந்தனை அவரை மறக்க முடியாத அளவுக்குப் பல கதவுகளைத் திறந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
  • கதா புருஷன்: அடூரின் உலகிற்கு ஒரு சாளரம் :: சு. தியடோர் பாஸ்கரன்
    கதகளிப் பாரம்பரியத்தில் தோன்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, பின்னர் சினிமாக் கலையை முறைப்படி கற்ற கோபாலகிருஷ்ணன், நிகழ்கலைகளின் அழகியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாமீது பரவலாக இருக்கும் உதாசீன நோக்கில் அக்கலை வடிவின் நியாயங்கள், நெறிகள், தனித்தன்மைகள் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் தீவிர அக்கறை கொண்டவர்.
  • கலை: படித்துறைக் காட்சிகள் :: திவாகர் ரங்கநாதன்
    பொதுவாகப் புகைப்படக் கலைஞர்களுக்குத் தென்படும் வாரணாசிக் காட்சிகளை மட்டுமின்றித் தனது பார்வையையும் தொழில்நுட்பத் திறனுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத். இவரது முதல் கண்காட்சி இது.
  • சுந்தர் சி

    எனக்கு பிடித்த பாடல்‘ என்று சுந்தர் சி பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார். நடிகர்களிடம் இந்த மாதிரி ‘நடித்ததில் பிடித்தது’ என்று கேட்கும்போது ‘politically correct’ நடுநிலைமையான பதில்களை சொல்வார்கள்.

    ‘ரஜினி சார் மாதிரி வருமா… அவர் பெரிய மனுஷத்தனம் இல்லாமப் பழகுவார்.’
    ‘கமல் மாதிரி கலைஞன் இருப்பாரா… எனக்கு நடிப்பு சொல்லித் தந்ததே அவர்தான்!’
    ‘கேப்டனுடன் நடிப்பதற்குக் கொடுத்து வச்சிருக்கணும்… நமக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்று குழந்தை போல் சிரிப்பார்.’

    என்னும் ரேஞ்சுக்கு அடுக்கி செல்வார்கள்.

    சுந்தர் சி கொஞ்சம் அடக்கி வாசித்தார்.

    1. ‘அதோ அந்தப் பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்

    படம் முடியும் தருணத்தில் வரும் பாடல்களின் தாத்பரியத்தை விளக்கினார். அன்னியனில் ‘ரண்டக்க ரண்டக்க’ வரும்போது பார்வையாளன் கடுப்பாகக் கூடாது. ‘எப்படா படம் முடியும்’ என்றோ, தம்மடிக்கவோ வெளியில் செல்லாமல், பாடலை ரசிக்க வேண்டும். அந்த விதத்தில் தன்னைக் கவர்ந்த பாட்டாக அமைந்திருக்கிறது என்றார்.

    (எம். ஜி. ஆர் ஆச்சு)

    2. ‘மறைந்திருந்து பார்க்கும்’ – தில்லானா மோகனாம்பாள்

    திரைக்கதையுடன் ஒத்திசைவாக அமைந்திருக்கும் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொண்டார். நகைச்சுவை சேஷ்டைகள், காதல் ரசம், சீரியஸ் நடனம், அப்பாவி ஜனங்கள் என்று பல விஷயங்கள் கலந்து கட்டி எடுப்பதில் உள்ள கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    (சிவாஜி ஓவர்)

    3. ‘சொன்னது நீதானா’ – நெஞ்சில் ஓர் ஆலயம்

    எனக்கு இந்தப் படத்தில் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ நெஞ்சில் மறக்காத பாடல். அவருக்கு இது பிடித்தமான பாடல். அத்தனை சிறிய அறையில் ஒரு படுக்கை, மெகா வீணை, எல்லாவறையும் சுழலும் கேமிரா கோணங்கள் வைத்து ஸ்ரீதர் படம் பிடித்ததை வியந்தார். ஒளிப்பதிவில் சாதனை கல்லாக தான் கருதும் பதிவு என்ற பிறகுதான் குட்டி ரூமையும், அதில் வரும் காட்சியமைப்பின் மூலம் நிலைமை கை மீறுவதையும் சோகத்தையும் கொண்டு வந்ததை கவனிக்க முடிந்தது.

    4. ‘காதல் வந்தால்’ – இயற்கை

    அந்தக் காலத்துக்கு ஸ்ரீதர். இந்தக் காலத்திற்கு எஸ். பி. ஜகன்னாதன். நல்ல படப்பதிவு, இசை, வரிகள். அமைதியான ஷாம்.

    5. ‘காதல் வளர்த்தேன்’ – மன்மதன்

    என்னென்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் மனதில் நிற்கவில்லை. ‘ஆளவந்தான்’ மூலம் கமல் அழித்தார்; ‘பாபா’ மூலம் ரஜினியும் சுந்தர் சி.யை மூட்டை கட்டினார். ‘யூ டூ சிம்பு!?’ என்று கேட்கும் போல் படம் ஏதாவது இயக்க வாய்ப்பளித்திருக்கிறாரா என்று அறியேன்.

    6. ‘சின்னத் தாயவள்’ – தளபதி

    ரஜினியின் பாடலை சொல்லாமல் எப்படி நிகழ்ச்சியை முடிக்க முடியும். ராக்கம்மா கையைத் தட்டி இருக்கலாம்.

    Yamuna Rajendran (c) Thinnai.com 

    Yamuna Rajendran (c) Thinnai.com Posted by Picasa

    கண்டனம்

    Yamuna Rajendran (c) Thinnai.comYahoo! 360° – RP RAJANAYAHEM – Entry for July 08, 2005 ::

    யமுனா ராஜேந்திரன் ஆர்.பி. ராஜநாயஹமுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து….

    இது ஒரு கோழைத்தனமான செயல்.இறந்தவர்கள் எல்லாருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் எல்லா இனத்தையும், மதத்தையும் சார்ந்த்வர்கள்.

    தீவிரவாத அரசியலை இழிக்க வேண்டும். இந்த பாதகர்களின் கொடுங்கோன்மையை இந்திய இடதுசாரிகள் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

    ஆங்கில மூலத்தை முழுவதும் படிக்க: LONDON BOMB BLASTS

    திண்ணையில் யமுனா ராஜேந்திரன் படைப்புகள்

    நன்றி: Yahoo! 360° – R.P. RAJANAYAHEM

    டாப் 5

    முற்போக்கான வலைப்பதிவு என்றால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை கிண்டலடிக்க வேண்டும் என்பது முதற்கண் தேவை. ‘மெட்டி ஒலி’ முடிந்து போன இந்த நேரத்தில் வலைவாசகர்களுக்கு எந்த சீரியல் பார்ப்பது, எப்படி விமர்சிப்பது என்று சந்தேகங்கள் இருக்கும். அவர்களுக்கு ஒரு க்விக் கையேடு:

    5. எங்கிருந்தோ வந்தாள்ஜெயா டிவி

    கே. பாலச்சந்தர் இயக்குகிறார். வழக்கம் போல் புரட்சி, புதுமை என்னும் பெயரில் ஒவ்வொரு மனைவியும் வேறொருவருடன் உறவு வைத்திருப்பதை பட்டியலிடுகிறார். கூர் மழுங்கிய கதையை ஷார்ப் வசனங்கள் தூக்கி விடுகிறது. கதாநாயகி ரொம்ப லட்சணம் + தேர்ந்த நடிப்பு.

    4. முகூர்த்தம் சன் டிவி

    ‘மெட்டி ஒலி’ டீம். இயக்குநர் மட்டும் மாற்றம். மூதாதையர்களைப் போலவே நிறைய கதாபாத்திரங்கள். பல்லாண்டு நீடூழி ஒளிபரப்பாகும்.

    3. கெட்டி மேளம் ஜெயா டிவி

    இன்னும் சூடு பிடிக்கவில்லை. யதார்த்தாம் நிறைய இடங்களில் வழுக்குகிறது. என்னதான் அவசரம் என்றாலும் வீட்டை தாழ்ப்பாள் கூட போடாமல் ஓடும் சென்னைவாசிகளை நான் பார்த்ததில்லை.

    2. முடிச்சு ராஜ் டிவி

    கெட்டி மேளத்துக்கு சரியான போட்டி. ரசிகர்களைக் கட்டிப் போடும் வித்தையை நன்றாக செய்கிறார்கள்.

    1. செல்வி சன் டிவி

    மீண்டும் ராதிகாதான் #1. தேர்ந்த வில்லி; இயல்பான ஹீரோ; தியாகச் செம்மல் செல்வி. ஒவ்வொரு முடிவிலும் குட்டி க்ளைமாக்ஸ். எப்பொழுது பார்த்தாலும் சீக்கிரமே பதிந்து போகும் சித்தரிப்புகள். கொஞ்ச நாளுக்கு அசைக்க முடியாது.

    பள்ளிகளின் அவலநிலை

    கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகும் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிக் கட்டிடத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அக்கறை காட்டவில்லை என்று சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன.

  • மே முதல் வாரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கூரை பெயர்ந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடந்தார்கள்.
  • மே இரண்டாவது வாரம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள் சேத்தூர் கிராமத்து ஸ்ரீராம் துவக்கப் பள்ளியிலோ, பழுதடைந்த சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் இறந்தார்கள்.

    நன்றி: இந்தியா டுடே

  • சத்குரு ஜக்கி வாசுதேவ்

    அத்தனைக்கும் ஆசைப்படு! ::

    ‘ஈஷா யோக மையம்’ கிராமப் புத்துணர்வு இயக்கத்தில் இவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறதே, உங்களுக்கு ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?’ என்று என்னை ஓர் இளைஞர் கேட்டார். எனக்கு அந்தக் கேள்வி வேடிக்கையாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

    ‘வீட்டுக்குப் போய் உங்கள் தாயிடம் கேளுங்கள்… உங்களைப் பெற்றெடுத்தபோது பால் கொடுத்தாளே, அதற்கு என்ன உள்நோக்கம் என்று? அதே உள்நோக்கம்தான் எனக்கும்!’ என்று அந்த இளைஞரிடம் சொன்னேன். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆதாயம் இல்லாமல், உள்நோக்கம் இல்லாமல் எதையும் செய்யத் தயாராக இல்லாதவர்களால் இந்தச் சமூகம் நிரம்பிவிட்டது. அதனால், யாவற்றையும் சந்தேகத்துடன் பார்ப்பதற்கே சமூகம் பழகிவிட்டது.

    வாழ்க்கையைகணத்துக்கும் கணம் முழுமையாக அனுபவித்து வாழ வேண்டுமானால்,குறைவற்ற அன்பைச் செலுத்திப் பாருங்கள். மாறாக, வாழ்க்கையைக் கொடுக்கல் வாங்கலாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் நிம்மதி தொலைந்துவிடும்! எல்லாவற்றிலும் உங்களுக்கான ஆதாயத்தை மட்டுமே தேடிக்கொண்டு இருந்தால், மனதுக்குள் சாத்தானை அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

    உங்களுக்கு மரியாதை என்பது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்பதில் அல்ல. நீங்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மையுடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதில்தான்! உங்கள் உண்மையான மதிப்பு, வெளியில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமானவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உள்ளுக்குள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில்தான் இருக்கிறது!

    தீண்டாய்

    Kurunthogai (c) DOK - Laavanya

    Thinnai – AnyIndian 

    Thinnai – AnyIndian Posted by Picasa

    திண்ணை வம்பு

    இந்த வார திண்ணை-யில் எனிஇந்தியன்.காம் எத்தனை முறை இடம் பிடித்திருக்கிறது?

    சரியான விடை சொல்பவரின் கவிதை அடுத்த திண்ணை இதழில் வெளிவரும் 🙂