Daily Archives: பிப்ரவரி 15, 2005

Gates Project – Central Park – NY (c) New York Tim…

Gates Project – Central Park – NY (c) New York Times Posted by Hello

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/ch…

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/chennai Posted by Hello

Gates Project – Central Park – NY (c) New York Tim…

Gates Project – Central Park – NY (c) New York Times Posted by Hello

Gates Project Saffron Welcomes- Central Park – NY …

Gates Project Saffron Welcomes- Central Park – NY (c) New York Times Posted by Hello

Gates Project – Central Park – NY (c) New York Tim…

Gates Project – Central Park – NY (c) New York Times Posted by Hello

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/ch…

Madras – 1 : Singaara Chennai (c) princeroy.org/chennai Posted by Hello

நியு யார்க் டைம்ஸ்

ஆர்தர் மில்லரின் இரங்கல் ஆரம்பத்தில் ‘காலையில் இறங்கி வந்து, பென்சிலை எடுத்துவைத்துக் கொண்டு, யோசிக்க முயல…‘ என்னும் மேற்கோளுடன் ஆரம்பிக்கிறார் பாப் ஹெர்பர்ட். சிந்தனாவதிகளின் இழப்பை எடுத்துச் சொல்லும் பதிவு.

அட… நாம கூட காலையில் இங்கு வந்தவுடன், ப்ளாகர் பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு சிந்தனையை தட்டிவிடுகிறோமே என்று நினைத்தவுடன், நியு யார்க் டைம்ஸ் என்னும் அச்சு ஊடகம் தலையில் கொட்டியது. வலைப் பதிவர்களின் பேனா கத்தி வீச்சினால் பதவியிழந்த சி.என்.என். செய்தி மேலாளரை பின் தொடர்ந்து அலசியிருந்தார்கள். ‘பொறுப்பு கிடையாதா!? மெய் அலசி உணராமல் தலைகளை வெட்டி வீழ்த்துபவர்களா!? சுதந்திரம் என்னும் பம்மாத்து காட்டித் திரியும் ஓநாய் கூட்டங்களா!?‘ என்று கருத்து சொல்ல விட்டிருக்கிறார்கள்.

வலைப்பதிவில் மட்டுமல்ல… அனைத்து ஊடகங்களிலும் ‘கதை விடுபவர்கள்’ அதிகரித்துவிட்டார் என்கிறார் ஹாரி ஃப்ரான்க்ஃபர்ட். பரிசலில் வினோபா முன்பொருமுறை குறிப்பிட்டது போல் அத்தியாவசியமாக அலப்ப வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. மேம்போக்காக பேசிச் சொல்வது, ஆழமாக சிந்திக்க மறுப்பது, பொய்யர்களுக்கு இருக்கும் தர்க்க விவாத நெறிகளைக் கூட (இத்தகையவர்கள்) அலட்சியப் படுத்துவது என்று போட்டுத் தாக்குகிறார்.

ஈராக்கில் தேர்தல் முடிவுகளை அலசத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஷியா வாக்கு வங்கிகள் வெற்றி பெற்றதை முன்னிறுத்துகின்றன. வாக்குசாவடி பக்கமே எட்டிப் பார்க்காத சன்னி-களை ப்ளோ-அப் வேண்டாம். ஆறு பாயிண்ட் எழுத்துருவில் நுணுக்கி விடுகிறார்கள். யார் ஜெயித்தாலும் தொடர்வது அமெரிக்க ஆட்சிதான் என்பதும், பொருளாதாரத்தை சுய பரிபாலனம் செய்ய அனுமதிக்காததையும், பெரிதாக கண்டுகொள்ளாமல், ‘எது சுதந்திரம்; எப்படி விடுதலை‘ என்று வார்த்தை ஆராய்ச்சி நடத்த இவர்களுக்கு நிறைய மேட்டர் கிடைக்கிறது.

நியு யார்க்கில்தான் தமிழ் வலைப்பதிவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். மனக்காட்சியில் தோன்றுபவர்களில் பிகேயெஸ், சீமாச்சு, அருண், தமிழோவியம் கணேஷ் சந்திரா என்று சிலர்தான் குதித்தார்கள். செண்ட்ரல் பார்க் பக்கம் யாராவது சென்றால் கேட்ஸ் குறித்த நேரடி வர்ணணை கிடைக்கலாம். க்ரிஸ்டோவும் ழான் க்ளாடும் 7,500 நுழைவாயில்களை அமைத்திருக்கிறார்கள். இவர்களின் முந்தைய கலைப் படைப்புகளை பார்க்கும்போது வாய் பிளக்கிறேன்.

நுழைவுச் சீட்டு, ஆண்டுச் சந்தா என்றெல்லாம் காசு கறக்காமல், அரசிடமிருந்து நயாபைசா கை வைக்காமல், பொதுமக்களிடமிருந்தும் நன்கொடை வாங்காமல் இவ்வளவு பெரிய, ரம்மியமான ஆக்கங்களை செய்ய ரொம்பப் பெரிய மனசு வேண்டும். நம்ம ஊராக இருந்தால் மஞ்சக் கொடி, சொர்க்க வாசல், கல்கி அவதாரம் என்று நிறைய கற்பனையைத் தட்ட விட்டிருப்பார்கள்.

‘திட்டிவாசல்’ குறித்து டைம்ஸ் விரிவாக எழுதி வருகிறார்கள். வலைப்பதிவாளர்களும் வழக்கம்போல் பதிவொன்றைத் தொடங்கி விட்டார்கள்.

மேலும் தகவல்களுக்கு: The Gates

‘இச்’ இளகல்கள்

ஜூனியர் விகடன்: “திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன் என்றும் வீர வசனம் பேசுகிறார் ராமதாஸ். இதற்கு முன்பு பலருக்கும் இதேபோல் வீர வசனம் பேசி ‘அல்வா’ கொடுத்தவர்தான் இவர். இப்போது அவரது ‘அல்வா’ லிஸ்ட்டில் விழுந்திருக்கிறார் திருமாவளவன்!” — ‘மக்கள் தமிழ் தேசம்’ தலைவர் ராஜ கண்ணப்பன்.

அரசியல் அல்வா இருக்கட்டும். நேற்றைய குல்கந்து அல்வா தினம் இனிதே முடிந்திருக்கும் நேரம் இது. ரோஜாப் பூ வாங்கித் தராவிட்டால் காதலே இல்லை. கூடவே இரண்டு மாச சம்பளத்தைக் கொண்டு வைரக் கல் பரிசு வேண்டும். ஆதர்ச அமெரிக்க காதலன்/புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஹவாயில் வசித்தால் மீன் பிடிக்கும் வேட்கை வேண்டும் என்பது போல் அமெரிக்க வாழ் இந்தியக்குடிகளையும் இந்தப் பழக்கவழக்கங்கள் விருப்பமுடனேயே எட்டியுள்ளது. கண்மூடித்தனமான வரலஷ்மி விரதத்திற்கும், கர்வாசவுத்திற்கும், கணுப்பொடி வைத்தலுக்கும் பர்த்தியாக ‘காதலர் தினம்‘ தோன்றியதும் நன்மைக்கே.

நாள் முழுக்கப் பட்டினி இருப்பது, அதன்பின் நிலாவுக்கு காத்திருத்தலும் இல்லை. கார்போஹைட்ரேட் நிரம்பி வழியும் அடைகள் இல்லை. சீவிக்காத காக்கைகளுக்காக வெள்ளைப் பனியின் மேல் பச்சை இலை போட்டு கலர் கலராக சாதம் உருட்டுவதும் தேவையில்லையே… உருப்படியான மென்வட்டுகள், வாழ்நாள் முழுக்க கூடவே வரக்கூடிய அணிகலன்கள், வசந்த கால புத்தாடைகள், பல் கூசவைக்கும் சாக்லெட்டுகள், ஜேம்ஸ் வசந்தன் விரும்பும் உள்ளாடைகள் என்று குறிகிய கால சிற்றின்பத்துக்கும் நீண்ட நாள் பேரின்பத்துக்கும் வழிவகுக்கும் ‘அன்பர் தின’ நடைமுறைகள் வரவேற்கத்தக்கதுதான்.

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் — விக்ரமாதித்யன்:

ஒருத்தி / இன்னொருத்தி

ஒருத்திபோல
தெரிந்தாள் இன்னொருத்தி
ஒருத்திபோல
ஆவாளோ இன்னொருத்தி
இன்னொருத்தி புதுமையாகலாம்
ஒருத்திதான் உரிமையாவாள்.
இன்னொருத்தி கைப்பையை
எடுத்துப்பார்த்ததுண்டா நீ
ஒருத்தி இடத்தை
இட்டு நிரப்பமுடியுமா இன்னொருத்தி

ஒருத்தி அருமை
இன்னொருத்தியிடம்

(வெளியீடு: காவ்யா. விலை: ரூ.100)

எங்காவது பராக்கு பார்த்துவிட்டு, இது போன்ற கவிதைகளைக் காட்டி அசத்திய காலம் (அண்ணா)மலையேறி செல்வி முடிந்து திருமதியானவுடன் ப்ராக்டிலாகி விட்டது. தற்போதைக்கு, ரயிலைத் தவறவிட்டால் கீழ்க்கண்ட இளகலை எடுத்துவிட்டு சமாளிக்கலாம்.

ஆனந்த விகடன்
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது

கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
— நா.முத்துக்குமார்