-
-
அண்மைய பதிவுகள்
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
- தொல்சொல் வேர் தேடும் அகவுநர் திரள்
- Oru Oorla Oru Rajakumari
- பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்
- “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு”
- ஞானபீட இதிகாசம்: ஆழ்ந்த ஞானங்கள்
- மணல், மழை, பச்சை
- அரசியல்-தத்துவ விளக்கம்
- அளவுகோலின் அபத்தம்
- வாசிப்பின் இன்பமும் மகிழ்கூடுதலும்
- விமர்சன ஆய்வு: ஜெயமோகனின் “இன்வெர்னெஸ்”
- ஸ்டோரிஜட்ஜ்: சென்ற வார இலக்கியம் #5
- நாட்டு நடப்பு
- கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’
காப்பகம்
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Monthly Archives: ஜனவரி 2005
கனவுவிமர்சனம் : மகா நடிகன்
நேற்று சத்யராஜ் என் கனவில் வந்து அடுத்த படத்தை காண்பித்தார். “நான் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் கார்டில் போடுவது போல் நீயும் அறிவிப்பு போடு” என்றார். “அதுதான் எல்லோருக்கும் வெள்ளிடை மலையாச்சே” என்றேன். “வெள்ளியங்கிரி எல்லாம் நம்பாதீங்கடா” என்று ஈசனை அழைத்தார். “ரொம்பப் பேசி கழுத்தறுக்காமல் பிட்டை ஓட்டுங்கண்ணே” என்று முடித்துக் கொண்டேன். அதன் விமர்சனமே இது!
ஒரே பதிவில் பத்து மணடை என்ற ரீதியில் ஒரே படத்தில் சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் என்ற அனைத்து தரப்பினரையும் தனக்கே உரிய லொள்ளால் விளாசித் தள்ளியிருக்கிறார் வலைப்பதிவாளர்.
விமர்சனம் செய்தால்தான் தன் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்ற ஆணித்தரமான கொள்கையுடைய ‘வலைப்பதிவாளர்’ முதலில் பின்னூட்டம் கொடுக்கிறார். ஏடாகூடமாக விவாதித்து, தானே ஒரு வலைப்பதிவைத் தொடங்குகிறார். வலைப்பதிவுக்கு அதிக வருகைகள் இல்லாத நிலையில் தன் பதிவில் எழுதிய கட்டுரை சுடப்பட்டது என்றும், தான் அதைத் தட்டி கேட்டதால் தரைமட்டம் ஆக்கப்பட்டதாகவும் செய்தியைப் பரப்புகிறார். விளைவு – வ.பதிவு ஓட்டமாய் ஓடுகிறது. முன்னணி வலைப்பதிவாளர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்.
இது இப்படியிருக்க, காபி-பேஸ்ட் மோசடியில் சிக்கும் ‘வார்த்தைப்புலி’ தனது வலைப்பதிவை மூடிவிட்டு அந்த இடத்தில் தனது வாரிசை இருத்த முயல்கிறார். இதை எதிர்க்கும் ‘படைப்பாளி’, ‘ஜால்ரா’ கோஷ்டி புதுக் கட்சித் துவங்குகிறார்கள். வலை கூட்டங்களுக்கு ஆள் சேர்க்க ஒரு ‘ஒப்புக்கு சப்பாணி’ வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளி, வலைப்பதிவாளரை தங்கள் கட்சியில் இணையுமாறு வருந்தி அழைக்கிறார். அரசியலில் இறங்குகிறார் வலைப்பதிவாளர். எதிர்பார்த்தபடியே படைப்பாளி வலை அதிக விருந்தினர்களைப் பிடித்து தனிப் பெரும்பான்மை அடையும்போது, நரித்தனமாய் வேலை செய்து படைப்பாளி பக்கம் உள்ள ஆட்களைத் தன் பக்கம் இழுத்து தானே முதல்வராகிறார் வலைப்பதிவாளர்.
ஆகா… இவர் முதல்வரா என்று நாம் வியக்கும் போது ஃபிளாஷ்பேக் எதுவும் இல்லாமல், முதல்வர் பதிவியேற்பு விழாவில் அதிரடி திருப்பமாய் தொண்ணூறு வயது ‘மஹாபெருசு’ போட்டி வலைப்பதிவு தொடங்குவதுடன் சுபம். இவர்களின் போட்டி ஒருவேளை ‘மகாமக நடிகன்’ என்று அடுத்த வெளியீடாகலாம்.
வலைப்பதிவாளர்கள் அரசியலுக்கு ஏன் வருகிறார்கள் – அல்லது வருவதைப் போல ஏன் அறிக்கை விடுகிறார்கள் என்பதற்கு கொடுக்கும் விளக்கம் அப்ப்பா!!! தியாகி ஏன் கொதித்துப் போய் அறிக்கை விட்டார் என்பதற்கான பதில் படத்தைப் பார்க்கும்போது தெளிவாகக் கிடைக்கிறது. நக்கல் நக்கல் – இதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை வலைப்பதிவாளரின் எழுத்துக்களில்.
இதே ரேஞ்சில் அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்கியிருக்கிறார் வலைப்பதிவாளர். இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் வலைப்பதிய முயலும் வலைப்பதிவாளரிடம் ‘மறுமொழியாளர்’ உலக வரைபடத்தில் இந்தியாவைக் காட்டச் சொல்லும் போது, “என்னோட தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சொல்றியா” என்று அறைகூவுவதிலிருந்து, “நடிகன் என்று ஒருவன். அரசியல்வாதியோ மகாநடிகன். ஆனா, இந்த சூப்பர்லேடிவ் இருக்கு இல்லியாம்மா… அவன் பேருதான் வலைப்பதிவாளன்! தெரியுமா?” என்று தொடர்ந்து சுயகிண்டலடித்து; “மறுமொழி ஒண்ணுமே வரலைன்னு கவலைப்பட்டான் அவன். உடனே இவனே முகமூடி போட்டு கொரலு வுட ஆரம்பிச்சுட்டான்!!” என்று வலைப்பதிவாளர் கூறுவது மிகை தோலுரிப்பு.
மேலும் ப்ளாஃக் தோற்றத்தை மாற்றச் சொல்லும் தலைவரிடம் “ஏண்டா! உங்க பேரு நல்லாயில்லைன்னு நாங்க மாத்த சொன்னா நீங்க மாத்துவிங்களா?” என்று கேட்பதாகட்டும் வலைப்பதிய முன்வரும் ஜால்ராவிடம் “ஏ…. தா… தே… பையா… ஓ… உ… பு…. சூ… ல… கா…. ” என்று வலைப்பதிவாளரும் மறுமொழியாளரும் வசனம் பேச, அதைக் கேட்டு அவர் “யப்பா! இந்த வசனத்தைப் பேச எனக்கு 1 வாரம் டைம் வேணும்!” என்று கேட்பதன் மூலம் யார் யாரையோ நக்கலடிக்கிறார் வலைப்பதிவாளர். வலைப்பதிவு முழுக்க இதே மாதிரியான வசனங்கள் – நையாண்டிகள். வலைப்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளராக வரும் மறுமொழியாளர் இருவரும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.
வலைப்பதிவு முழுக்க எதிர்க்குரலே ஆக்கிரமிப்பதால், நாயகிகள் — ‘இலக்கியம்’ மற்றும் ‘நேர்மறை’ இருவருக்கும் கவர்ச்சி காட்டுவதைத் தவிர வேறு வேலை ஒன்றுமே இல்லை. சில நிமிடங்களே வந்தாலும் மனதில் நன்றாகப் பதியும் கேரக்டர் அப்பாவி. ‘உள்மனசு’ தன் மகனிடமிருந்து கொண்டு வர முடியாத நடிப்பை எப்படியோ வரவழைத்திருக்கிறார் வலைப்பதிவாளர். இதே மாதிரி அப்பாவித்தனமான கேரக்டர் ‘புது-வரவு’. படத்தில் ‘பெருசு’ம் இருக்கிறார். இவர் தான் வலைப்பதிவாளரைத் திருத்துகிறார். அவ்வளவே!! ‘சாஹித்ய அகாடெமி’, ‘கமல்ஹாஸன்’ என்று பல சர்ச்சைகளும் சர்ச்சைகளாகவே நடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் பின் விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வலைப்பதிவின் மூலமாக வலைப்பதிவு ஆட்களையும் யாஹு குழு ஆட்களையும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் பொதுவில் மக்களுக்குத் தெரிந்தவைதான் என்றாலும் அதைத் துணிச்சலுடன் வலைப்பதிவாக கொடுத்ததற்காக நமது பாராட்டுக்கள்.
உல்டாவுக்கும் கண்டுபிடித்து மாற்றுவதற்கு உதவியதற்குமான ஆதிமூலம் : Tamiloviam
Posted in Uncategorized
2004 – Top Tamil Movies
சென்ற வருட சவட்டுதல்கள்
கடந்த வருடம் வெளிவந்த தமிழ்ப்படங்களின் தலைபத்து பட்டியல்கள் நிறைய பார்க்க கிடைத்தது. ‘ஜெயா டிவி’யில் திரைக்கு வந்து சில மாதங்கள் ஓடிய ‘அழகிய தீயே‘ தீபாவளிக்கே காட்டப்பட்டதால் சன் டாப் 10-இல் இடம் கிடைக்கவில்லை. சிஃபியில் வசூலில் சாதனை படைத்த படங்களை சொல்லியிருந்தார்கள். ‘கிரி‘ இடம் பெற்றிருப்பது ரீமா சென்னின் ‘கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா’வுக்கு கிடைத்திருக்கும் மதிப்பையும் சிம்ரனின் வெற்றிடத்தை நிரப்பப் போவதையும் பால் வார்த்தது.
ஆஸ்கர் ஓட்டத்தில் இருக்கும் படங்கள் வருடத்தின் இறுதியில் வெளிவரும். மக்களும் மறக்கமாட்டார்கள். வாக்களிக்கும் சந்தாதாரர்களும் எளிதில் படத்தைப் பார்க்கலாம் என்பது தாத்பர்யம். அதுபோல், வருடத்தின் இறுதியில் வெளிவந்த ‘மகாநடிகன்‘ படம்தான் எனக்கு மிகவும் பிடித்த 2004-இன் தமிழ்ப்படம். அன்று வந்த ம.கோ.ரா.வில் ஆரம்பித்து இன்று ‘ஏய்‘ போடும் ‘சுள்ளான்‘ வரை நைச்சியமாக நக்கல் அடித்துப் போட்டிருக்கிறார்கள்.
உள்ளத்தை தொட்ட படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது ‘காமராஜ்‘. சரித்திரங்களை திரையில் எடுப்பது அரிது. அதுவும் அந்தக் காலங்களை கண் முன்னே நிறுத்தி டிஷும் டிஷும் படுத்தல் இல்லாமல் சொன்னவிதம். காலங்கடந்து பார்ப்பதால் நல்ல விஷயங்கள் மட்டுமே சொல்லப்பட்டதா, பாரபட்சமில்லாததா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் கூட அற்புதமான 2004-இன் படைப்பு.
சூப்பட் ஹிட்டான படங்களில் மிகவும் ரசித்தது ‘கில்லி‘. பெண்மையை மதிக்க வேண்டும்… ஹிட்டும் ஆகியிருக்கணும். பாட்டும் தாளம் போடணும். நகைச்சுவையும் புன்முறுவலிக்க வேண்டும். இப்படியெல்லாம் பார்த்தால் ‘கில்லி’.
இன்னும் நான் பார்க்காத ஆனால் பலராலும் பெரிதும் மகிழப்பட்ட படங்கள் லிஸ்ட் கொஞ்சம் பெரிது
அடுத்த லிஸ்ட் இந்த மூன்று பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்க படங்கள்.
இயல்பாக இருப்பதால் பிடித்துப் போனதில் ரன்னர்-அப் ‘அழகிய தீயே‘. ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் கதை சொன்னவிதம். பாடல்கள் ஹிட்டாவதை நம்பாமல் காதலை மட்டும் நம்பும் திரைக்கதை. வில்லன் எல்லாம் வைத்துக்கொள்ளும் கொடுமை இல்லை. டாப் கிளாஸாக டைடானிக் கதையளக்கும் காட்சி.
நெஞ்சில் நின்ற பதிவில் இரண்டாம் இடம் — ‘7ஜி ரெயின்போ காலனி‘. ஏற்கனவே நிறைய அலட்டிக் கொண்டாடி விட்டாச்சு.
பொதுஜனம் ரசித்த படங்களில் — ‘நியு‘. வக்கிரமான காட்சிகள் இருக்கிறது என்று அண்டர்கிரவுண்ட் மார்க்கெடிங். அளவுக்கு மீறிய தேவயானி செண்டிமெண்ட் என்று சன் டிவி மார்க்கெடிங். காலையில் சிறுவன்; மாலையில் பொறுப்புள்ள கணவன். நல்ல கருத்து.
இவை தவிர ‘தென்றல்‘ மற்றும் ‘கனவு மெய்ப்பட வேண்டும்‘ ஆகிய இரண்டுமே சென்ற ஆண்டின் கவனிக்கத்தக்க திரைப்படங்கள். பாதி வழியில் வழி தடுமாறியதால் முதல் படமும் பல வழிகளில் ஒரே சமயத்தில் அழைத்து சென்றதால் இரண்டாவது படமும் ஹிட்டாகவில்லை.
மிகை சொல்வது எங்கள் பிறப்புரிமை என்பதை ‘ஆட்டோகிராஃப்‘ சுவாரசியமாக சொன்னது. ‘நியு’வை விட கேவலாமாக பெண்களை இழிவுபடுத்தினாலும், கண்டனங்கள் எதுவும் இல்லாமல் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்‘, மகளிர் எவ்வாறு அடங்கவேண்டும் என்று வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவுக்குள் மொழிமாற்றிப் போனது. இரண்டுமே எனக்கு (மிகவும்) பிடித்திருந்தாலும் 1980-களில் வெளிவந்த மசாலாக்களுக்கும் 2004-இன் புதுசுகளுக்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது.
வித்தியாசம் செய்யப்போகிறேன் என்று கிளம்பியவற்றுள் ‘ஆய்த எழுத்து‘ மட்டுமே தாக்கங்கள் ஏற்படுத்தியது. அதையொத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டதால் ‘City of Gods’, ‘Amoros Perres’ என்று ஸ்பானிஷ் பார்த்து குவித்தாலும் ஃப்ரெஷ்ஷாக இருந்த ஆக்கம்.
போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று அடைமொழி இல்லாமல் வந்ததால் ‘விருமாண்டி‘ வெறுப்பேற்றியது. இரண்டு பேரின் பார்வை என்று காண்பித்தாலும் ஹீரோயிஸ சாகஸங்கள் கொண்ட விருமாண்டிக்கு உயர்வு நவிற்சி. ஆங்காங்கே ‘தேவர் பேர’னின் இயல்பு எட்டிப்பார்ப்பதால் கமல் படம் என அறியலாம்.
ருத்ரனின் பொறிப்புரை, பார்த்திபனின் முன்னுரை, இன்னொரு பார்த்திபனின் விரிவுரை அடங்கிய ‘குடைக்குள் மழை‘ — ஒரு சிறந்த நடிகர் மிகச்சிறந்த கதாசிரியராகலாம். ஆனால், ஒரு மிகச்சிறந்த கதாசிரியர் தன் மேதாவித்தனத்தால் எவ்வாறு சறுக்கி விழுந்த இயக்குநராகலாம் என்றது. பாலச்சந்தர் சொன்ன கடிவாளம் இவருக்கும் பொருந்தும்.
பாரதிராஜா இயக்கியதால் ‘கண்களால் கைது செய்‘யும், ஸ்ரீகாந்த் ரொம்பவே நடித்ததால் ‘வர்ணஜால‘மும் சோபிக்கவில்லை. ‘As good as it gets’-ஐ எவ்விதம் கலாசார மாற்றம் செய்யலாம் என்பதை ‘எங்கள் அண்ணா‘வும்; ‘எங்கள் அண்ணா’ பார்த்ததால் ‘Chronic Bachelor’ பார்க்கும் ஆசையும் வந்தது.
கடந்த வருடத்தில் தொட்டதெல்லாம் பொன்னாக்கியவர்கள் இரண்டு பேர்: பரத் மற்றும் ரீமா சென். இருவரும் இணைந்து மகிழ்வித்த ‘செல்லமே‘ ஹிட் படம். பால்ய வயது சேக்காளிகளை தொட்டும் காட்டியது. தம்பதியர்களுக்கிடையேயான ஊடல்களையும் தாம்பத்யத்தையும் இயல்பாகவும் கொண்டு வந்ததால் என்னுடைய மூன்று பிரிவுகளிலும் ஆறுதல் வரிசையில் இடம்பிடிக்கிறது.
இந்தப் பதிவிற்கு தொடர்புள்ள சில பக்கங்கள்:
rediff.com: The Best Tamil Films, 2004 |
dhoolsotd – Song of the day Special |
lazygeek.net – Top Tamil Cinemas |
Sun TV Top 10
Posted in Uncategorized
Ash on 60 Minutes
மீண்டும் கூகிள் (அல்லது) வ.கே.ம.
‘கொடி பறக்குது’ படத்தில் ‘ஓ… காதல் என்னை காதலிக்கவில்லை’ பாடலில் “மீனுக்குத் தூண்டிலிட்டாய்! யானை வந்தது” என்பார் எஸ்.பி.பி. மணிவண்ணன் ஆகப்பட்டவர் மீனாகவும் அமலா என்பவர் யானையாகவும் சித்தரித்ததால் நெஞ்சில் நின்ற பாடல்.
ஐஸ்வர்யாவுக்காக அறுபது நிமிடத்தைப் பார்க்க ஆரம்பித்தால் கூகிள் வந்து விழுந்தார். ஐஸ்வர்யா மீன். கூகிள் குட்டி யானை.
அந்தந்த சமயத்துக்கு ஏற்றவாறு கூகிள் விதவிதமான சின்னங்களைப் போட்டு அசத்துகிறது. மைக்ரோசாஃப்ட்டை நேரடியாக குறி வைத்து உங்கள் கணினியின் தேடலை துவக்குகிறது. ‘யானுகோவிச் விஷம்’ என்று தமிழில் தேடினால் அதை மொழிமாற்றி, ரஷிய மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தில் தேடி, உங்களுக்கு வேண்டிய மொழியில் பதிலைக் கொடுக்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது.
‘ஹிந்து’வில் வெளிவரும் சென்ற வருட நிகழ்வுகள் என்னும் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியீட்டை தவற விடாமல் புரட்டுவேன். விரல் நுனியில் 2004 (மார்க்கம்) ஆண்டை கொண்டு வருகிறது கூகிள். கம்பெனியில் சேருவதற்கு உண்டான சாம்பிள் கேள்விகள் விழிக்க வைத்தது. அடுத்த வருடமாவது Google Code Jam கலந்து கொண்டு புத்தியை தீட்டிப் பார்க்கணும்.
கூகிள் வந்தபிறகு எல்லாவற்றையும் தேடிக் கண்டு கொள்வதால் GLAT – Google Labs Aptitude Test எல்லாம் தாண்டுவது உலக மகா கஷ்டம். ஆனால், விடைகள் எல்லாம் கூகிள் மூலமாகவே எளிதில் கிடைக்கிறது.
இவ்வளவு கூகிளித்து விட்டு Google Blog பற்றி சொல்லாவிட்டால் போஜனம் கிடைக்காது.
முப்பது நிமிடம் கூகிள் புராணம் பாடிவிட்டு பதினைந்து நிமிடம் ஐஸ் புகழ் பாடினார்கள். ‘சிரிக்காதே… என்னை சிதைக்காதே’ என்று பார்த்திபன் புதுமைபித்தனாக ஆக்கா விட்டாலும், டென்ஷனில் சிரித்தே கடுப்படித்தார் ஐஸ்வர்யா ராய்.
‘ஆண்கள் உங்கள் முன்னிலையில் வெட்கப்படுவார்களாமே’ என்பதற்கு சாமர்த்தியமாக பேட்டியெடுத்தவரையே திருப்பி கொக்கி போட்டு ‘நீங்க வெட்கப்படுகிறீர்களா’ என்று ஆரம்பித்தது சுவாரசியமாக இருந்தது. ஐஷ்வர்யாவின் ஃபேவரிட் சித்தி விநாயகர் தரிசனத்துடன் பேட்டி தொடர்ந்தது. அமெரிக்கர்களுக்கு பெரிய விஷயமான முப்பது வயதானாலும் இன்னும் பெற்றோருடன் ஒரே இல்லத்தில் வசிப்பதற்கு இதயபூர்வமான பதில் கொடுத்தார்.
‘நான் அம்மா அப்பாவுடன் இருப்பதே சில மணித்துளிகள்தான். அவற்றையும் வேறு வீட்டில் கழிப்பது பிடிக்கவில்லை’ என்பதை இந்தியர் எவரும் ஆமோதிப்பார்கள். கூடவே கொஞ்சம் புன்னகைத்தார். கோயிலுக்குப் போனால் கூட நிம்மதியாக சாமி கும்பிட முடியாமல் தன்னைத் தொழும் ரசிகர்கள் குறித்த செல்ல அங்கலாய்ப்பு கொடுத்தார். தொட்டுக்க தலைமுடியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சிரித்தார். ரசிகர்கள் தன்னை கனவுக் கன்னியாக பார்ப்பதை விட ப்ரியஸகியாக பாராட்டுகிறார்கள் என்றார். பல் தெரிய சிரிக்கிறார்.
அமெரிக்க தொலைக்காட்சியில் ஸ்னேஹா தோன்றும்போது திகட்டல் சிரிப்பை வீசாமல் இருக்க ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்.
ஆங்காங்கே ‘ஹம் தில் தே ஷுகே சனம்’ பாடல் காட்சிகள் போடப்பட்டது. ஐஷ்வர்யாவுக்கும் அந்தப் படத்தின் இயக்குநருக்கும் இடையே நடந்த சொற்சிலம்பத்தைக் குறித்து எதுவும் சொல்லவில்லை. பாய்ஃப்ரண்ட் குறித்து விசாரிக்கப் பட்டது. சுனாமிக்காக கிராமத்தைத் தத்தெடுத்திருக்கும் விவேக் ஓபராயையும் சொல்லவில்லை. மாஜி சல்மான் கானையும் சொல்லவில்லை. சுயசரிதை எழுதப் போகிறாராம். அதில் அவசியம் இடம்பெறும் என்று நகம் கடிக்காத அவஸ்தையுடன் சமாளித்தார்.
ஃபேஷன் ஷோ நடத்தினார். பாலிவுட் படம் போலவே அபாயகரமான க்ளோஸ்-அப் கொடுக்கப்பட்டது. என்னுடைய கண்ணுக்கு மட்டும்தான் லோ-ஹிப் புடைவைகளும் ரவிக்களும் பளிச்சிட்டும் என்பதால், ஆடை அணிவகுப்புக்கும் பேட்டிக்கும் உள்ள ஆறு சம்பந்தங்களை டீபீர்ஸ், கோக் விளம்பரங்களில் தோன்றுவதோடு முடிச்சிட்டார்கள்.
காதலன் இருக்காரா ஆச்சு… எப்போ கல்யாணம் என்று பூடகங்கள் ஆச்சு… அதிமுக்கியமான நிருபர் கேள்வி கடைசியில் வைக்கப்பட்டது. ‘ஹாலிவுட்டில் படுக்கையறை காட்சிகள் இயல்பாக நடத்தப்படும். நீங்க முத்த காட்சியில் நடிப்பீர்களா? உங்கள் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்திய பாரம்பரியத்துக்கு பங்கம் வருமா? ஆங்கிலப் படங்களில் தோன்றுவதற்காக சமரசம் செய்து கொள்வீர்களா?’
என்ன சொன்னார் என்பது நடிகைகளின் வழக்கமாக கேட்கப்படும் மழுப்பல் பட்டியலை சார்ந்த்து.
குறைவாகப் பேசி, நிறைவாக கேட்-வாக் காட்டி, அலுக்காமல் சிரித்து, படபடப்புடன் முடித்துக் கொண்டார்.
Posted in Uncategorized
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அருள்தரும் ஐயப்பன் திருத்தலங்கள்: மனித வாழ்க்கையை ஐந்து பருவங்களாக நம் சாஸ்திரங்கள் பிரித்துச் சொல்கின்றன. இந்த ஐந்து பருவங்களையும் விளக்கும் வகையில் ஐயப்பனின் அவதாரங்கள் இருந்திருக்கின்றன.
1. பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை ‘பால்ய பருவம்’. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத் தலம் — குழத்துப்புழா.
பாலகனாக ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டு துண்டாக உடைபட்ட அந்தக் கற்சிலையும் இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது.
2. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயதுவரை உள்ளது ‘யௌவன (யவ்வனம்) பருவம்’. இதை விளக்கும் தலம் — ஆரியங்காவு.
ஐயப்பன் மணம் புரிந்த புஷ்கலாதேவி, சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.மதம் பிடித்த யானையை அடக்கி அதன்மீது வேடன் ரூபத்தில் மாப்பிள்ளை மாதிரி காட்சி தருகிறார்.
3. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயதுவரை ‘கிரஹஸ்த பருவம்’ — இதுதான் அச்சன்கோவில்.
பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோயில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கப்பட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டுப் படிகள் உண்டு. பூர்ண, புஷ்கலாவுடன் ஐயப்பன் காட்சியளிக்கிறார்.
4. ஐம்பத்தாறு முதல் எண்பத்தைந்து வயது வரை ‘வானப்பிரஸ்தம்’ — சபரிமலை.
குழந்தை திருமாலின் கையிலிருந்து பிறந்தது. அதனால் கைஅப்பன் என்று அந்தக் குழந்தையை அழைத்தனர்.
5. எண்பத்தாறு வயது முதல் ‘ஏகாந்த’ நிலை — காந்தமலை.
தேவர்களால் பூஜிக்கப்பட்ட சாஸ்தா கோயில் ஒன்றும் இங்குள்ளது. சபரிமலைக்கும் மேலே சில கி.மீ தொலைவில் உள்ளது.
நன்றி: சக்தி விகடன்
Posted in Uncategorized
pravsworld New Year Greetings
Posted in Uncategorized















