Tag Archives: Lit

ஆத்திச்சூடி எழுதுவது எளிதா?

கேள்விக்கு விடை: ‘சுருட்டுக மக்கள் பணம்‘ என்னும் வெண்பா ஈற்றடி போல் எல்லா எழுத்துக்கும் எழுதுவது கஷ்டம்தான்!

கலைஞரின் ஆத்திச்சூடி

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம் உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறுபோல் வீறு கொள்!
ஐயம் கலைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!

கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

நன்றி: கலைஞரின் புதிய ஆத்திச்சூடி « கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் | கலைஞரின் ஆத்திச்சூடி – முத்தமிழ்


1. அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியாரின் ஆத்திச்சூடி

2. சிறில் அலெக்சின் தேன் » e-த்திச் சூடி

3. ஞகரம் – என். சொக்கன்: “‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்திச்சூடி'”

4. பார்வையாளனாக…: நவீன ஆத்திச்சூடி: “அகமது சுபைர்

5. Tamil | Literatue | Poem | Michael | Tamil: “இளைய ஆத்திச்சூடி! – தொ. சூசைமிக்கேல்

6. அசல்: ஒளவையார் – ஆத்திசூடி, Auvayar ‘s Athisoodi

7. கொசுறு: கொன்றைவேந்தன்


பாரதிதாசன் ஆத்திச்சூடி – Andhimazhai – Web Address of Tamils

1. அனைவரும் உறவினர்
2. ஆட்சியைப் பொதுமைசெய்
3. இசைமொழி மேலதே
4. ஈதல் இன்பம்
5. உடைமை பொதுவே
6. ஊன்றுளம் ஊறும்
7. எழுது புதிய நூல்
8. ஏடு பெருக்கு
9. ஐந்தொழிற்கு இறை நீ
10. ஒற்றுமை அமைதி
11. ஓவியம் பயில்
12. ஔவியம் பெருநோய்
13. கல்லார் நலிவர்
14. காற்றினைத் தூய்மைசெய்
15. கிழிப்பொறி பெருக்கு
16. கீழ்மகன் உயர்வெனும்
17. குள்ள நினைவுதீர்
18. கூன்நடை பயிலேல்
19. கெடு நினைவு அகற்று
20. கேட்டு விடையிறு
21. கைம்மை அகற்று
22. கொடுத்தோன் பறித்தோன்
23. கோனாட்சி வீழ்த்து
24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
25. சாதல் இறுதி
26. சிறார் நலம்தேடு
27. சீர்பெறல் செயலால்
28. சுவைஉணர் திறங்கொள்
29. சூழ்நிலை நோக்கு
30. செல்வம் நுண்ணறிவாம்
31. சேய்மை மாற்று
32. சைகையோடு ஆடல் சேர்
33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
34. சோர்வு நீக்கு
35. தளையினைக் களைந்து வாழ்
36. தாழ்வு அடிமை நிலை
37. திருஎனல் உழுபயன்
38. தீங்கனி வகைவிளை
39. துன்பம் இன்பத்தின் வேர்
40. தூய நீராடு
41. தெருவெல்லாம் மரம் வளர்
42. தேன்எனப் பாடு
43. தைக்க இனிது உரை
44. தொன்மை மாற்று
45. தோல்வி ஊக்கம்தரும்
46. நடுங்கல் அறியாமை
47. நால்வகைப் பிறவிபொய்
48. நினைவினில் தெளிவுகொள்
49. நீணிலம் உன் இல்லம்
50. நுண்ணிதின் உண்மை தேர்
51. நூலும் புளுகும்
52. நெடுவான் உலவு
53. நேர்பயில் ஆழ்கடல்
54. நைந்தார்க்கு உதவிசெய்
55. நொடிதோÚம் புதுமைசேர்
56. நோய் தீயொழுக்கம்
57. பல்கலை நிறுவு
58. பார்ப்பு பொதுப்பகை
59. பிஞ்சு பழாது
60. பீடு தன்மானம்
61. புதுச்சுவை உணவுகாண்
62. பூப்பின் மணங்கொள்
63. பெண்ணோடு ஆண்நிகர்
64. பேயிலை மதலால்
65. பைந்தமிழ் முதல்மொழி
66. பொழுதென இரவுகாண்
67. போர்த்தொழில் பழகு
68. மறைஎனல் சூழ்ச்சி
69. மாறுவது இயற்கை
70. மிதியடியோடு நட
71. மீச்செலவு தவிர்
72. முகச்சரக்காய் வாழ்
73. மூப்பினுக்கு இடம்கொடேல்
74. மெய்கழிவு அயற்கின்னா
75. மேலை உன்பெயர் பொறி
76. மையம் பாய்தல் தீர்
77. மொடுமாற்றுப் பொது இன்னா
78. மோத்தலில் கூர்மை கொள்
79. வறுமை ஏமாப்பு
80. வாழாட்கு வாழ்வு சேர்
81. விடுதலை உயிக்குயிர்
82. வீடு எனல் சாதல்
83. வெறும் பேச்சு பேசேல்
84. வேளையோடு ஆர உண்
85. வையம் வாழ வாழ்


The Perfect Insult for Every Occasion: Lady Snark’s Guide to Common Discourtesy

…the only way you can “crush annoying persons” is by being a model of anti-etiquette.
:::
Kemp culled weird words and phrases (e.g., omphaloskepsis, crangle, pupaphobia, joot balls, feculent) from books…
Find your vituperative voice

Her Perfect Insult offers step-by-step instructions for doling out sophisticatedly and obscurely worded wounding slights to everyone from “Persons Who Erroneously Believe Themselves to Be Better Than You” to your own family.

புத்தகம் குறித்து அறிய: Official Website of Lady Arabella Snark

க்விஸ் இன்ன பிற: Slang City


தொடர்பில்லாத இடுகை:
வேதசகாயகுமாரின் கதை உண்மையில் சுந்தர ராமசாமி, பிரமிள்,நகுலன் வகையறா நடுவே நாய்களை உருவகமாக்கி நடந்து வந்த ஒரு நெடுங்கால வசையிலக்கிய மரபின் நீட்சி. அதில் சுந்தர ராமசாமி ,நகுலன், பிரமிள் எழுதிய பல கவிதை மற்றும் கட்டுரைகளின் நுண்ணிய உள்ளர்த்தங்கள் உண்டு. வேதசகாயகுமார் அந்த வசையிலக்கியங்கள் வெளியான கொல்லிப்பாவை முதலிய இதழ்கள் வழியாக வளர்ந்தவர். அவ்விலக்கிய மரபில் நம்பிக்கை உடையவர்.
:::
வசையிலக்கியம் இல்லாத மொழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில வசையிலக்கிய மரபில் பேரிலக்கியங்கள் உண்டு. தமிழில் பிரமிளும் நகுலனும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். அவை பூடகமானவை. அதேபோலவே வேதசகாய குமாரின் கதையும் பூடகமானதே.