Tag Archives: பாடலாசிரியர்

ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!

Never knew that “உறவுகள் தொடர்கதை” in “அவள் அப்படித்தான்” was written by ஜீனியஸ், மேதை என்னும் தோரணை இல்லாத கங்கை அமரன்.

முள்ளும் மலரும் படத்தின் ‘ராமன் ஆண்டாலும்’ பாடலை அசலாக எழுத இருந்தவர் கண்ணதாசன்.

அவரும் “வாழ்க்கையெனும் வட்டத்தில் விட்டதை வெல்லும் காலமும் மறக்கும் வேகமும் புத்தனாகினால் கிடைக்குமோ” என்பது போல் எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்த மகேந்திரன், “தண்ணியைப் போட்டுட்டு மிகக் குறைந்த ஏட்டறிவே கொண்ட ‘காளி’ இப்படி தத்துவார்த்தமாகப் பாட மாட்டானே… வாய்க்கு வந்ததை கோபமாக சொல்லவேண்டும்.” என்கிறார்.

கண்ணதாசனைக் கூப்பிட்டு மாற்றச் சொல்ல அவகாசமில்லை. அப்போது எழுதிய எளிய வரிதான்

“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா”

ஒலியும் ஒளியும்

நாற்பது வயதை எட்டிப்பார்ப்பவரின் ஞாபகத்தின் படி எந்தப் பாடல்கள் கொசுவர்த்தியை மீட்டும்? சிதறலாய் ஒரு பத்து

1. ராக்கம்மா கையத் தட்டு: தளபதி

மணி ரத்னம் இரண்டாம் பட்சம்; ரஜினி மூன்றாம் பட்சம்; இளையராஜா #1

2. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா: இந்தியன்

ரஜினிகாந்த் முதலாம் இடத்தில் வந்தால், கமல்ஹாசன் கூடவே வரவேண்டுமே!

3. மலர்களே மலர்களே: லவ் பேர்ட்ஸ்

மாற்றிய சட்டை அனைத்தும் பிரபு தேவாவிற்கா அல்லது அடுத்த படத்திற்கா என்னும் உண்மை தெரிஞ்சாகணும்.

4. ராஜ ராஜ சோழன் நான்: ரெட்டை வால் குருவி

அர்ச்சனாவின் ரவிக் புடைவையின் அன்னியோன்யமோ; ராதிகாவின் ஆரத்தழுவலோ!

5. மன்றம் வந்த தென்றலுக்கு: மௌன ராகம்

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வண்டவாளங்களை இரண்டு சரணங்களில் சுருக்கும் அழகு.

6. இந்த வாழ்வே மாயம்: வாழ்வே மாயம்

கமலுக்கென்று நிறைய பாடல்கள் இருக்கின்றன; ‘அந்தி மழை’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, அண்ணாத்தே ஆடுறார்…

7. தோல்வி நிலையென நினைத்தால்: ஜெய்சங்கர்

பாடலுக்கேற்ற காட்சியமைப்பு; கடவுளை தரிசித்தது போன்ற உத்வேக எழுப்புதல்.

8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: திருடா திருடா

வைரமுத்து மாயாஜாலம்; ரெஹ்மானின் இளமை; திரைப்படத்தின் பசுமை

9. தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு: அவள் ஒரு தொடர்கதை

கண்ணதாசன் அருமை தெரியாத காலம்; பாலச்சந்தர் குன்சாக புரிந்த நேரம்; பெண்ணுரிமை புரிந்ததாக மயங்கிய சமயம்.

10. டேக் இட் ஈசி ஊர்வசி: காதலன்

சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்

கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்: ஒரு தலை ராகம்

நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.