Tag Archives: உறவு

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை? நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்?

இங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்!
இங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.

பெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.

Louisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .

அது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள்! கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்! New york, California, New Jersey state ல் கணிசமான வாக்குகள் உள்ளன.

Super Tuesday- இல் நம்முடைய பங்கு பற்றி oru sample article:
************************************************************

Washington, February 6: The three million-strong Indian- American community is believed to have swung the electoral fortunes of major US Presidential hopefuls, including Senators Hillary Clinton and Barack Obama, in the primaries of ‘super Tuesday’.

For Democratic Senators Hillary Rodham Clinton and Barack Obama, the community has not only played a crucial role in the run-up to the primaries both by way of physical and financial support but also with their huge concentrations in big and diverse states may have played even a “swing” role.

Indian-Americans are well dotted across the states of New York and New Jersey, the two major states going to Clinton last night; and Illinois, the home state of Obama, also has a large population of the community that has for the most part thrown its weight behind the son of the soil.

In California, especially where the Indian American community is present in large numbers, their voting impact has certainly helped Clinton get this huge state that offered as many as 441 delegates to the national convention.

There is no saying what would have happened to Clinton if she had lost California.

Exit polls in California showed that Clinton did very poorly among the White and African American population but did spectacularly well with the Asian American community by a three-to-one margin and with the Hispanic community by a two-to-one margin.

****************************************************************************
ஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்!

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை?

அணு ஒப்பந்தம்:

முதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.

மற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட! [I remember George Bush senior after taking oath, took time to call Rajiv Gandhi and opened a new era in the bilateral relations].

நம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் !!

please opinion your voice…