1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?
எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்
- (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
- தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
- ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)
போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.
கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?
கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை
- அயலகத் தமிழர்,
- தமிழ்நாட்டினர்
என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.
தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.
இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.
- ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
- நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
- இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.
Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.
2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)
மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)
பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.
நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.
3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.
தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.
அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.
காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.
இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?
பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.
ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.
இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.
புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:
அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.
ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.
இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.
கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:
2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்
6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?
ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!
ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.
ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…
1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.
2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.
3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.
4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.
5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.
இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!











Feedback: Closed group vs Wider societies – Bane of Tamil Blogodom
உரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு உடன்படுகிறேன்.
மறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire?) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…
1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.—
ஏன்? ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர், இப்படித்தானே மாற்றிப்போட்டு பதிவெழுதுகிறார்? தமிழ்ச்சொல்லின் அர்த்தம் நேரடியாக (எளிமையாக) விளங்கிக் கொள்ள முடியாமல் போவதினால், அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தை சொல்லப்படுகிறது.
குமுதம் ஆசிரியர் சாட்சி சொல்ல வரப்போவதில்லை. Inductive logic படி, இது வரை ஞாநி எப்படி எழுதியிருக்கிறார்? தீம்தரிகிட (Dheemtharikida | Gnani) இதழ்களில் ஸ்டைல், லேட்டஸ்ட் போன்றவை தென்பட்டாலும் குமுதத்தில் வெளியான அளவு நெருடவில்லை.
ஆசிரியர் கைங்கர்யமா, ஞாநியின் விருப்பமா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
2. —வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.—
நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன் 🙂
அதாவது, பொதுமைப்படுத்திவிடமுடியாது.
அதுவும், இன்னொருத்தர் எழுதியதை அனுமதித்தால்
இந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்,
என்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார்.
ஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.
சுருக்கமாக… தாவு தீர்ந்துரும்.
இந்த மாதிரி செய்து கொண்டே அலுவலிலும் நாட்டம் பயில இயலுமா?
3. —என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன?—
இந்தப் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் / எவ்வளவு பேருக்கு புரிகிறது?
அருள்செல்வன் கருத்துப்படங்கள் விளங்குவதில்லை; சன்னாசி கவிதைகள் புரியவில்லை. அறிவியல் குறித்து லாஜிக் (தமிழில் என்ன சொல்லோ? விக்சனரி ‘அறிவுப்பூர்வமான’ என்கிறது – எனக்கு இது பொருத்தமாக தெரியவில்லை) உடன் எழுதினால் ஆக்ரோசமாக விவாதம் செய்ய என்ன இருக்கிறது?
ஈழம், பார்ப்பனீயம் போன்றவற்றில் உத்தம நிலையை (பொலிடிகலி கரெக்ட்) முன்வைத்து எழுதினாலோ, முகமிலியாக எழுதினாலோ நீங்கள் சொல்வது பொருத்தம். கலகக்குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பினால் கல்லடி கிடைப்பது சகஜம்தான் என்று வைத்தியசாலைக்கு பக்கத்தில் வலையகத்தை நடத்துவது சாத்தியமா?
சன்னாசிக்கு…—டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை.—
தட்ஸ்தமிழில் கூட மறுமொழி வசதி இருக்கிறது. சினிமா கிசுகிசுவாகட்டும்; அரசியல் செய்தியாகட்டும்; இந்த மறுமொழி ஒவ்வொன்றுமே, Platonic பண்புகளை வலியுறுத்தி சகலவிதமான NC-17 தரச்சான்றிதழுடன் உலா வருகின்றன.
இங்கேல்லாம் பிரச்சினையே இல்லை.
ஆனால், சில நூறு பதிவர்கள். அனைவரின் இடுகைகளும் படிக்காவிட்டாலும் ‘சூடான பதிவு’ படிக்கப்பெறுகிறது; பதில்கள் கண்காணிக்கப்படுகின்றன. (மின்னஞ்சலிலேயே பதிலுக்கு வந்த பதில்கள் வந்துசேருமாறு வோர்ட்பிரெஸ் முதல் ப்ளாக்ஸ்பாட் வரை வசதி இருக்கிறது!)
ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா? அல்லது அதற்காக ஜென் தத்துவம் பயில வேண்டுமா?
—-டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, —-தொழிலுக்கொரு வேலையை வைத்துக் கொண்டு இயங்கும் தமிழ்ப்பதிவுகளையும் லாப நோக்கில் இயங்கும் ஆங்கில இதழ்களையும் எப்படி ஒப்பிடலாம்?
—-என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. —-
ஆங்கிலம் போன்ற பரவலாக வலைப்பதிவுகள் இயங்கும் இடங்களில் லட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.
கருக்கலைப்பு குறித்த பதிவு என்றால் தீவிர சார்புடைய ஒரு அணியில் இருந்து சில நூறு பேரும், எதிர்த்தரப்பில் இருந்து இன்னொரு நூறு பதில்களும் பதிவுகளும் விழுகிறது. விவாதம் அமைகிறது.
ஜெயமோகன், பாரா போன்றவர்களுக்கும் இந்த மாதிரி பரந்துபட்ட களம் அமைய தற்போதைய சூழல் உகந்ததாக இருக்கிறதா?
இவரின் பதிவின் கருத்தை வலியுறுத்தி பேசினால், ‘அடிப்பொடி’ என்று பட்டமிடும் நிலையும், குறுகிய குழு (எல்லா விவாதத்திலும் பங்குபெறும் நாலைந்து பேர் கொண்ட சபையில் — நூறு பேர் வாசகர்) என்னும் சூழலும் உள்ள இடத்தில் உருப்படியான எழுத்தையும் என்னைப் போன்ற சிலரே திசை திருப்புமாறு அமைந்து விடாதா?
ஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா?
—-நேரடி மனிதத் தொடர்புகளைத் தாண்டிய கருத்து விவாதங்களுக்கு பழம்பெருச்சாளிகள் தயாரில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம் —-
இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
—-ஆற்றில் மணல் எடுக்க வரும் லாரிகள் மாதிரி ஒரு பெரிய லாரி ஊர்வலமே வருகிறது!!—-
எப்படி இவ்வாறு ஒப்புமை செய்கிறீர்கள்?
எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன் ஏற்கனவே பதிவு வைத்திருந்தார். ‘எதிர்த்த வீட்டுக்காரர் E550 வாங்கியிருக்கார்…’ என்னும் தொற்றுவியாதியாகவோ ஒரு சிலர் வந்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வேண்டுமானால், நீங்கள் சொல்வது சரி!
டைம், எகானமிஸ்ட் என்று கண்டங்கள் தோறும்; டைம்ஸ், ப்ராஸ்பெக்ட் என்று தினசரி/வார/மாதாந்தரிகள் தோறும்; முன்னாள் பத்திரிகையாசிரியர், இன்னாள் தொலைக்காட்சி நடத்துனர் என்று எல்லாரும் மொய்க்கிறார்கள்.
தமிழில் உங்கள் லாரி ஊர்வலத்தில் யார் யார் இருக்கிறார்கள்?
—-கோமாளிகளால் எந்த இடத்திலாவது கையெழுத்துப் போடாமல் விட முடிகிறதா?—-
இதைக் கூட விளக்கினால் பயன்பெறுவேன். முகமிலியாக எழுதுவது மட்டும்தான் உயர்ந்ததா? இருபது இடுகைகள் இட்டவுடன் அந்தப் பதிவை மூடிவிட்டு புதியதாக வேறொரு பெயரில் இன்னொன்று துவக்க வேண்டும் என்று இந்தக் கருத்தை புரிந்து கொண்டிருக்கிறேன்.
—-ஹிப்போக்ரஸி தான் பிரச்னையே. பின்னூட்டப் பொட்டியை மூடிவிட்டு எழுதுங்கள் என்று ஒரு அறிவுரை.—-
“A sadist is a masochist who follows the Golden Rule.” என்பது போல் இருக்கிறது.
தன்னைத்தானே அடித்துக் கொள்வது தனக்கு சுவாரசியமாக இருக்கிறது என்பதற்காக அனைவரையும் சவுக்கால் அடிக்க சொன்ன மசாக்கிஸ்ட் கதை போல் இருக்கிறது.
உதவிய புத்தகம்: Joculor, Ergo Sum (May-June 2007)
—பின்னூட்டப் பெட்டி என்றாலே குப்பைக் கூடை என்று எல்லோரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை—நாலைந்து தடவை எழுதிய பிறகு சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், பொருத்தமற்ற அல்லது அதிர்ச்சியடைய வைக்கும் ஒப்புமைப்படுத்தல் (சாடிஸம் மஸோக்கிஸம்), தடாலடி முடிவுரை (முழுவிதண்டாவதம் என்னும் கணிப்பு) போடுதல், தீர்ப்பு விதித்தல் (ப்ராக்ஸியாகப் பெற) என்று ஆகுவதால் இப்படிப்பட்ட எண்ணம் எழுந்திருக்கலாம் 😉
தேடுபொறிகளில் பக்கத்திற்கான மதிப்பெண் உயர, ‘சுட்டும் உரல்கள்’ மிக மிக அவசியம்.உதாரணத்திற்கு கூகிளின் வரிசைப்பட்டியலில் (PageRank – Wikipedia, the free encyclopedia) சில வலையகங்கள் ஆறு மதிப்பெண் பெற்றிருக்கும். அதே மாதிரி விஷயகனம் கொண்ட இன்னொரு வலையகத்திற்கு, ஐந்துதான் கொடுத்திருப்பார்கள்.SEO சூட்சுமமாகக் கூட இந்த மாதிரி பின்னூட்ட பெட்டி மூடுதலை நோக்கலாம்!
சன் டிவியில் மீண்டும் பார்த்த ‘சபாஷ் மீனா’ இரண்டு தடவை தேய்ந்து போன பேழையாக திரும்ப திரும்ப சொற்றொடர்களை சொல்லிப் படுத்தியது… அந்த மாதிரி ஆகும் ஆபாயம் உணர்ந்தாலும், நான் அறிந்தவரை தொகுப்பு.
—இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும்? அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்? —
1. எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).
உலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே!]
2. ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்பட்டார்கள். [வல்லவனுக்கு வில்லி 🙂 ]
நன்றி!
சன்னாசி…
—மேலே சொன்னது உங்கள் கருத்தா? ஆமெனில், உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை முதலில் மூடுங்கள்.—இது எனக்காக சொல்லிக் கொண்டது அல்ல.
இங்கேயே கூட சின்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்…
என்று ‘பெரிய’ ஆளுக்கு பதில் சொல்லி சுருக்கமாக நன்றியோடு முடித்து கொள்ளும் வெங்கட்
என்று எனக்கு மாறிவிடுகிறார்.
மனித இயல்புதான். வெங்கட் தவிர நேற்று புதிதாக ஆரம்பித்த அனானி ‘ஜெமோவும் பாராவும் எஸ்ராவும் இன்ன பிறரும் பிறருக்கு பயந்து பின்னூட்டத்தை மூடியிருக்கிறார்கள்’ என்று அனுமானித்திருந்தால் எனக்கு இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுந்திருக்காது.
வெங்கட்டின் பதிவில் கவர்ந்த கருத்துகளில் சில…
அலகிலா விளையாட்டு: “அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.”
என்பதுதான் என் கட்சி
3 பின்னூட்டங்கள்
Posted in Blogs, Comments, Expression, feedbacks, Freedom
குறிச்சொல்லிடப்பட்டது அச்சு, அடக்குமுறை, இடுகை, இணையம், ஊடகம், கருத்து, சுதந்திரம், சென்சார், தணிக்கை, பதிவுகள், பத்திரிகை, பின்னூட்டம், மறுமொழி, வலைப்பதிவு