ஓவியர் சை த்வாம்ப்ளி – அஞ்சலி

பார்த்தால் கிறுக்கல் மாதிரிதான் தெரிகிறது.

சுருள் சுருளாக…
கோழிக் கிண்டல்களாக…
அவிழ்க்காத முடிச்சாக…
புதிர் ஒளிந்திருக்கும் சாதனமாக…
புரியாத கவிதையாக…
எகிப்திய, மெசொபெடேமிய நாகரிக குறியீடுகளாக…

டாம்ப்ளியின் ஓவியங்களைப் பார்த்தால் எந்தக் கலைஞருக்கும் நம்பிக்கை பிறக்கும். `நானும் ஓவியனாகலாம்; மாடர்ன் ஆர்ட் போடலாம்’ என்று சிறுவருக்கும் சிரிப்பு கலந்த ஏளனம் உண்டாகலாம்.

பாஸ்டன் மீன்-காட்சியகத்தில் நீர் யானைகள் வரைந்த ஓவியத்தைக் கண்டதுண்டு. அசப்பில் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால், எழுத்தாளர் சுஜாதா மாதிரி ஆகிருதி கொண்டவர். எவரையும் எளிதில் அண்ட விடாதவர். எழுத்தில் பாயாமல், வரைகலை பாயட்டும் என்று விட்டு விட்டவர். எம் எஃப் ஹுசேன் கூட இவரை மாதிரி சரஸ்வதியை அம்மணமாக்கி இருக்கலாம். நபிகள் நாயகத்தைக் கூட இப்படி சித்தரிக்கலாம்.

Artist Cy Twombly Dies At 83

Cy Twombly: Comprehensive collection of more than 200 images of artist’s works with biography, articles and exhibition information – இல் இருந்து சில பார்வைக்கு:

வாழ்க்கையில் வெல்லவே ‘டேக் இட் ஈஸி பாலிசி’

லோகத்தில் இரு விஷயங்கள் சிரமமானவை.

1. இன்னொருவரின் மண்டைக்குள் உங்கள் எண்ணத்தை விதைப்பது

2. இன்னொருவரின் பணத்தை உங்கள் கைக்கு வரவைப்பது

.
.
.
.
.

முதலாமவதில் வெற்றி பெறுபவர் –ஆசிரியர்

இரண்டாமவதில் வெற்றி காண்பவர் –முதலாளி

இரண்டிலும் கலக்குபவர் –மனைவி

அடுத்தவரின் விருப்பத்தை தன் கைக்காசு போட்டு நிறைவேற்றுபவர் – ‘இல்லத்தரசர்’

(இணையத்தில் வாசித்தன் மொழியாக்கம்)

தண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1

மதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்

இந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:

  1. ஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்
  2. விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.
  3. முன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.
  4. ஜெனரலைஸேஷன் நிறைந்திருக்க வேண்டும்.
  5. தற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.
  6. அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.

இந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலைப்பதற்கு பதிலாக,

  • கேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …
  • ஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …

மைல்கல் மைனர்களைப் பிரார்த்திக்கின்றேன்.

Sanchita Padukone

Separated at Birth

Ron Swanson & Gemini Ganesan

Earlier Post

Untitled – Dandelion

The wind blows as hard as it ever can,
Making the trees whoosh side to side.
While a superstar is waiting for her fans,
A beggar is trying to hold his pride.
The birds keep chirping,
As the day keeps moving.

மகளின் கவிதை

நிமித்தகாரன்: குறும்படம்

இணைய நண்பர்கள் இணைந்து எடுத்த படம். புக் கிரிக்கெட் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் களமிறங்கி இருக்கிறது.

‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்னும் பாலாஜி மனோகரன். தமிழோவியம்.காம் எடிட்டர், வலையக நிர்வாகம், அரங்கேற்றங்களுக்கு கேமிரா படப்பிடிப்பு என்றிருந்த கணேஷ் சந்திரா. ஒரு கை விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை கொண்ட திறன்மிக்க இணைய கதாசிரியர்களுள் துள்ளலும் தனித்துவமும் நிறைந்த புனைவுகளைப் பதிவில் இடும் ஒருபக்கம் ஸ்ரீதர். நியூ ஜெர்சி டிராமா குழு மேடையேற்றும் எல்லா நாடகத்திலும் முக்கிய கதாபத்திரமோ, முக்கால் நிமிட வேடமோ… நினைவில் நிற்க வைக்கும் மோகன்.

முதலில் பிடித்தவை

  • கனவு காண்பவரின் உச்சரிப்பு; இயல்பான முகசேஷ்டை
  • இம்புட்டு பெரிய கதையை ஒப்பிப்பது போல் இல்லாமல், சுவாரசியமாக்கிய நிமித்தகாரன்
  • மிரட்சியும் மிளிர்வும் கொண்ட கனவு தேவதை
  • நேர்த்தியான எடிட்டிங்
  • அந்தப் பழைய ஓலைச்சுவடி போன்ற புத்தகம்
  • ஒளிப்படங்களை வைத்து யட்சிணியைக் காட்சியாக்கிய விதம்
  • குழப்பமில்லாத, எளிதில் புரியக்கூடிய சிம்பிளான படமாக்கம்

சில ஒப்பீடு

  • ஓவியம் என்டெர்டெயின்மென்ட்ஸ் குழுவினர், கலைஞர் டிவி ‘நாளைய இயக்குநர்‘ பார்க்கலாம்.
  • இன்செப்சன்‘ படம் வெளியாவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை! இம்ப்ரெசிவ்
  • ராமேஸ்வரம் கோவில் மண்டபம் போன்ற புகழ்பெற்ற புகைப்படத்திற்கு பதிலாக அரிதான படம் போட்டிருக்கலாம்.

கடைசியாக குறை

  • த்ரில்லருக்கு இசை அதிர வேண்டியதுதான். மோகனின் வசனத்தையும் கேட்க விட்டிருக்கலாம்.
  • Show but Not Tell என்போம். அதற்கு இன்னும் பெரிய பட்ஜெட் தேவையாக இருக்கலாம். இது விஷுவல் கம்யூனிகேசன் அல்லவா?

கதை வசனகர்த்தா: Post by ஸ்ரீதர் நாராயணன் from ஒரு பக்கம்

விமர்சகர் அவுரங்கசீப்: முயற்சிக்கு வாழ்த்து. நாஞ்சில் சம்பத் சொற்பொழிவுக்கு நிகரான நீளம் கொண்ட வசனங்கள் மட்டும் சற்று பிரச்னையாக உள்ளன. கதையை அப்படியே படமாக்கியதுபோல் உள்ளது. இடையே திரைக்கதை என்று ஒன்று உள்ளதை நினைவில் இருத்தியிருக்கலாம். இயக்குநர் இந்தியா வந்தால் சின்னத்திரைகளில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தோன்றுகிறது.

எழுத்தாளர் என் சொக்கன்: இந்தக் கதையை ஏற்கெனவே படித்தேனா என்பது நினைவில்லை, ஆனால் படமாகப் பார்க்க நன்றாக இருந்தது.

12 நிமிடப் படத்தில் 11 நிமிடங்கள் ஒரே ரூம், வெறும் டயலாக், அதைச் சுவாரஸ்யமாகக் காட்டுவது சுலபமில்லை, அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

கடைசி நிமிட ட்விஸ்ட்மட்டும் கொஞ்சம் குமுதம் ஒரு பக்கச் சிறுகதைபோலப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிற சாத்தியம் உள்ளது 🙂

அதேபோல், அந்தக் கடைசி நிமிடத்தில் பேசும் பெண்ணுக்கு டப்பிங் வேறு யாராவது பேசியிருக்கலாம். உணர்ச்சியே இல்லாத குரல்.

Dhobi Ghat (Mumbai Diaries): குறிப்புகள்

கோஸ்லா கா கோஸ்லா‘ பிடித்திருந்தால் ‘தோபி கட்’ உங்களுக்குப் பிடிக்கும், என்கிறது நெட்ஃப்ளிக்ஸ். கூடவே ‘எ வெட்னெஸ்டே‘வும் பரிந்துரைக்கிறது.

என்னைப் போன்றோர் அல்காரிதம் எழுதும் வரை ‘எந்திரன்‘ உலகை ஆள முடியாது என்று நிம்மதி வரவழைக்கும் More Like… ரெகமன்டேஷன்கள்.

காவேரி கரையை விட்டு கூவம் நதிக்கரைக்கு வரும் மகாநதி கிருஷ்ணசாமி; எல்லோரும் பறந்துபோய்விட்ட உலகத்தில் தனிமையிலே இனிமை காணும் WALL-E; பிழைப்பில் எந்த சமரசமும் செய்யாமல் அதே சமயம் பெண்ணாகவும் போலியாக நடிக்கும் டூட்ஸி; கேபிடலிசத்தைக் கிழிக்கும் படங்களை ஹாலிவுட் பட்ஜெட்டில் எடுக்கும் மைக்கேல் மூர்; எல்லாவற்றையும் கண்டு களித்து, கேளிக்கையும் விமர்சனமும் செய்து கொண்டிருக்கும் நாம்.

ஆசையாக வளர்க்கும் ஆட்டை, ஆன்டவனின் கட்டளையாக பக்ரீத் விருந்துக்கு வெட்டுவது போல் பெற்றோரின் அரேஞ்ச்ட் மேரேஜுக்கு உட்பட்டவள் – யாஸ்மின்; மஹாநதியின் ஹீரோ போல் ஆசைகள் கொண்டவள். நடுத்தர வர்க்க டீசன்ஸி கொண்டு பயப்படுபவள்.

கமல் போல் கலைக்காக தனிமையைத் தேடும் குழப்பவாதி; வால்-ஈ போல் தன் சித்தப்படி நடப்பவர்; நடுத்தர வயது அலைக்கழிப்பு கொண்டவர்.

White-guiltல் மாட்டிக் கொண்ட ஏபிசிடி; சிக்கோ, துப்பாக்கி கொலம்பைன் என்று படமாக எடுத்துத் தள்ளும் மைக்கேல் மூர் – ஷாய்.

இவர்களுடைய அழுக்குகளைத் துவைக்கும் வண்ணான் முன்னா.

திரைப்படத்தில் நிறைய முயன்றிருக்கிறார்கள். முஸ்லீம் கதாபாத்திரங்கள். பம்பாய் ட்ரெயிலர். ஸ்லம்டாக் மில்லியனர். தாதா மெட்ரோ கம்பெனி.

அழகான பெண் என நினைக்கும்போது ‘நான் லெஸ்பியன்’ என்று சொல்லிவிடுவது போல் இந்தப் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது.


Buzz by Siddharth Venkatesan

பாய்ந்தோடிக்கொண்டே இருக்கும் பெருநகரமான மும்பையை பற்றி இதுவரை சொல்லப்படாத எதை ஒரு புதிய படம் சொல்லிவிட முடியும்? மிக மிகப்பரிச்சயமான ஓர் இசையை – பீத்தோவானின் ஐந்தாவது சிம்ஃபனி என்று வைத்துக்கொள்வோம் – நிகழ்த்தப்போகும் ஓர் இசை நடத்துனரின் சங்கடத்திற்கு நிகரானது இது. தந்திக்கருவிகள் இசையின் முதல் ஸ்வரங்களை மீட்டத்துவங்கியதுமே ரசிகர்கள் அடுத்து வரும் பகுதியை – ஒவ்வோர் மாத்திரையாக – எதிர்பார்க்கத்துவங்கிவிடுவார்கள். வெளிப்பாட்டில், வேகத்தில், உத்தியில் சில வேறுபாடுகளை கொண்டுவரலாம். ஆனால் ஒட்டுமொத்த இசைக்கோவையின் பிரம்மாண்டம்… அது மாற்றமுடியாதது. ஆனால், தந்திவாத்தியக்காரர்களின் குழாமிலிருந்து ஒரே இரு செல்லோ வாசிப்பாளரை மட்டும் முன்னே வரச்செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இது போலவே காற்றுவாத்தியக்காரர்களிலிருந்து ஒற்றை சாக்ஸஃபோன் வாசிப்பாளரையும் தோல்வாத்தியக்குழாமிலிருந்து ஒற்றை டிம்பன் வாசிப்பாளரையும், பிராஸ் குழாமிலிருந்து ஒற்றை ட்ரம்போன் வாத்தியக்காரரையும்… மற்ற அனைவரும் மௌனமாகின்றனர். இந்த நால்வரிலிருந்து எழும் ஒலி முழு சிம்ஃபனியின் ஒலியாய் ஒரு போதும் ஆகாது. ஆனால், இந்த சோக இழைகளினூடே, அதன் முழுமையை – கண்ணுக்கு முன் நிகழ்வதில் அல்ல, உங்கள் தலையினுள் – நீங்கள் உணர்ந்துகொண்டே இருப்பீர்கள்.

பரத்வாஜ் ரங்கன் எழுதிய “தோபி காட்” விமர்சனத்தின் ஒரு பத்தியின் மொழியாக்கம். மிக நல்ல விமர்சனம்: Review: Dhobi Ghat « Blogical Conclusion

தோபி காட்: நுட்பமான திரைமொழி! « கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

அமெரிக்காவில் முதலீட்டு வங்கி நிபுணராக பணிபுரியும், தற்காலிக விடுமுறைக்கு மும்பைக்கு வரும் ஷாய் எனும் பெண், வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களை ஓவியங்களாக வரையும் அருண் எனும் ஓவியன், சல்மான் கான் போல சினிமா நட்சத்திரமாக ஆசைப்படும் சலவைத் தொழிலாளியும், இரவில் எலி அடிக்கும் நகர சுத்தித் தொழிலாளியுமான முன்னா என்றழைக்கப்படும் ஜகீம், யாஸ்மின் என்ற திருமணமான இளம் பெண் ஆகிய நால்வரது வாழ்க்கை.

நால்வரது வாழ்க்கையும் சில புள்ளிகளில் ஒன்று கலப்பதையும், ஒருவர் மீது ஒருவர் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அதன் மூலம் பெருநகர வாழ்வின் வர்க்க, சமூகப் பிரிவினைகளை ஒவ்வொருவரும் தத்தமக்கே உரிய முறையில் உணரத் தலைப்படுதலையும், திரைப்படம் சொல்கிறது.

முன்னாவிடம் ஷாய் தனது பீகார் கிராமத்தின் நினைவு வருவதில்லையா எனக் கேட்கிறாள். கிராமத்தை நினைத்தாலே தான் உணர்ந்த பசிதான் நினைவுக்கு வருவதாக முன்னா கூறுகிறான். நகருக்கு இடம் பெயர்ந்த தொழிலாளிகள், உரையாடலின் துவக்கத்திலேயே தமது கிராமத்தைக் குறித்து நினைவு கூறும் பொழுது, இப்படியொரு கருத்தை உதிர்ப்பார்கள் எனத் தோன்றவில்லை.

பக்கோடா பேப்பர்கள்: தோபி காட் – ஹிந்தி சினிமா

தன் சகோதரனைப் போல முறையற்ற வழிகளில் சம்பாதிக்காமல், நேர்மையாகச் சம்பாதிப்பதை விரும்பும் முன்னா, அப்பார்ட்மெண்ட்களில் எலிகளை அடித்துக் கொல்வது, ரயிலில் அடிபட்டு இறப்போரை நகர்த்திக் கிடத்துவது போன்றவைகளையும் கூடுதல் பணம் சம்பாதிக்கும் பொருட்டு செய்து வருகிறான் முன்னா. முன்னாவாக ப்ரதீக்பப்பார் (ஸ்மிதா பாட்டீல் / ராஜ்பப்பார் மகன்) அறிமுகம்

வீட்டை செட் செய்யும் போது அருணுக்கு ஏற்கனவே அங்கிருந்தவர்கள் விட்டுச் சென்ற மூன்று வீடியோ காஸட்டுகளும், ஒரு வெள்ளிச் செயினும், மோதிரமும் கிடைக்கிறது. “அவற்றை யாரும் பெற்றுக்கொள்ள வரமாட்டார்கள், வீசிவிடு” என்று சொல்கிறார் வீட்டு ஓனர்.

அந்த வீடியோக்களை பார்க்க ஆரம்பிக்கிறான் அருண். சாதாரணமாகத் துவங்கும் அந்த வீடியோ, உத்தரபிரதேசத்தின் மல்யாபாத் கிராமத்திலிருந்து திருமணமாகி வந்த ஒரு இளம் பெண், யாஸ்மின், தன் சகோதரனுக்காக, மும்பையை சுற்றிக் காட்டிக் கொண்டே பேசிய கடிதங்கள் அவை. அந்த வீடியோக்கள் பார்ப்பது அருணின் தினசரி வேலையாகவே ஆகிவிடுகிறது. ஒரு அடிக்ட் போல அவற்றை பார்த்துக் கொண்டே நேரங்களைக் கழிக்கிறான். அவனுடைய புதிய ப்ராஜக்ட் ஒன்றிற்காக அதைப் பார்த்து பல ஓவியங்களும் வரைகிறான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan|: தோபி காட்[Dhobi Ghat][2011][இந்தியா][ஹிந்தி]

இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆஸ்தான இசையமைப்பாளரான குஸ்டவோ சண்டவோலல்லா இருமுறை ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர், அமெர்ரோஸ் பெர்ரோஸ், பாபெல், 21 க்ராம்ஸுக்கு இசையமைத்து உலகப்புகழ் பெற்றவர் அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சாருவின் விமர்சனம்

இது மிகக் குறைந்த செலவில், கெரில்லா படப்பிடிப்பு என்ற உத்தியின் மூலம் எடுக்கப்பட்டது. அதாவது, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரு குட்டி ராணுவ அணிவகுப்பு அளவுக்கு ஆள் படை அம்புகளும் விளக்குகளும் ஜெனரேட்டர்களும் இல்லாமல், இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே, நிஜமான சூழலில், படம் எடுக்கப்படுகிறது என்ற விஷயமே யாருக்கும் தெரியாமல் எடுப்பதுதான் கெரில்லா ஷூட்டிங். ஸ்டார்ட், ரோலிங், கட், இடையில் இயக்குனர் போடும் சுத்தத் தமிழ் வார்த்தைகள் என்ற எந்த சத்தமும் இருக்காது. ட்ராலிகள் இயங்காது. பூதாகாரமான விளக்குகள் இல்லை. சினிமா படப்பிடிப்பு என்று நாம் அறிந்திருக்கும் எந்த அடையாளமும், paraphernaliaவும் இல்லாமல் ரகசியமாக எடுக்கப்படுவதே கெரில்லா ஷூட்டிங். இப்படி எடுப்பதால் மட்டுமே ஒரு நகரத்தை அதன் உயிர்த்தன்மை கெடாமல் காண்பிக்க முடியும். அந்த வகையில் டோபி காட்டை எல்.எஸ்.டி.க்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம். உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான குஸ்தாவோ சந்த்தாவோலால்யாவை வைத்து எடுக்கப்பட்டும் டோபி காட்டின் பட்ஜெட் 11 கோடிதான். வசூல், படம் வெளிவந்த இரண்டே தினங்களில் 11 கோடியைத் தாண்டி விட்டது.

போட்டி

http://twitter.com/#!/snapjudge/status/53439389321269248

சார்லி ஷீன்: வசைபாடி? தசை நாடி? ஆசை கோடி!

பெயரிலி ட்வீட்:

Charlie Sheen is the best Sufi poet alive today. Why do y’all make fun of him?

சார்லி ஷீன் எப்படி செய்தி ஆனார்?

1. போதைப்பொருள் அதிகமாகியதால் ஜனவரி 27 மருத்துவமனைக்கு சென்றார்.

2. தொலைக்காட்சியில் வாரந்தோறும் வரும் ‘டூ அன்ட் எ ஹாஃப் மென்‘ நகைச்சுவைத் தொடரின் படப்பிடிப்பை சி.பி.எஸ் டிவி தாற்காலிகமாகத் தள்ளிவைக்கிறது.

3. ஒரு வாரத்திற்கு இரண்டு மில்லியன் வீதம் சம்பளம் கிடைத்தாலும், CBS TV தன்னுடைய பெயரினால் மட்டுமே திங்கள்கிழமைகளில் பிழைப்பு நடத்துகிறது என்று பேட்டி கொடுக்கிறார் ஷீன். நான்கு நாளில் நடித்துக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான ஊதியத்தை மூன்று மில்லியனாக உயர்த்தாவிட்டால், வெளியேறுவேன் எனவும் மிரட்டுகிறார்.

4. ட்விட்டரில் கணக்குத் துவங்கிய இரு நாளுக்குள் ஒன்றரை மில்லியன் பேரை பின் தொடர வைக்கிறார். கின்னஸ் சாதனை.

5. ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி இருந்தாலும், விலைமாதருடன் தொடர்பு கொண்டிருந்ததும் பல்பெண்டிர் பாலியல் உறவு பரபரப்பு செய்தி ஆகியதும் சமீபத்திய துணைவியாரின் பிரிவுக்கான காரணமாக சொல்லலாம்.

6. தொலைக்காட்சி கேமிராக்கள் சுழல, பத்திரிகையாளர் படம்பிடிக்க, சார்லியின் இரட்டை மகன்கள் அவரின் வீட்டில் இருந்து கொண்டு செல்லப்படுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சில் இருந்து

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

மனிதனின் அன்பு கருணை பாசம் தியாகம் அனைத்தையும் திரை விலக்கி நோக்கினால் மனித அகத்தில் நிறைந்திருப்பது அடிப்படை விலங்கியல்புகளே என்ற நம்பிக்கை. மனிதன் சுயநலத்தால், காமத்தால், வன்முறையால், அகங்காரத்தால் ஆனவன் என்ற நம்பிக்கை.
.
.
.
மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காம குரோத மோகம்’ என்றது.
.
.
.
இன்பத்திற்காக. ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை.
.
.
.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் கலையின் இலக்கியத்தின் சாரமாகக் கண்டது இதுதான். கலை என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை நிகழ்த்துவது.

Two and a Half Men” தொடரும் இதைப் பின்னணியாக வைத்து இயங்குகிறது.

இரு சகோதரர்கள். ஒருவன் வாழ்க்கை மணமுறிவில் முடிந்து, திருமணத்தின் பயனாக இருக்கும் பதின்ம வயது Half Men கொண்டது.

இன்னொரு சகோதரன் கடற்கரையைப் பார்த்த வீட்டில், தினம் ஒரு அழகியோடு சல்லாபமும், காலை எழுந்தவுடன் விஸ்கியும் அருந்தி உல்லாசியாக கழிப்பவன்.

அதாவது ஒருவன் சாதாரண மானிடன். இன்னொருவன் அந்த சாதாரணனின் பார்வையில் பொறாமை கொள்ள வைக்கும் சொகுசுக்காரன்.

நடுத்தரவர்க்க தொலைக்காட்சிப் பார்வையாளனின் வாழ்க்கையில் சார்லி ஷீன் என்பவன், ஹாலிவுட் ஜாலிநாயகன். ஆனந்த தாண்டவன்.

சார்லி ஷீனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் உள்ள ஒற்றுமை?

‘நான் கடவுள்’ கொள்கையில் ஸ்திர நம்பிக்கை உடையவர்களை சினிமாத் துறையில் நிறைய காணலாம். ‘இளைய தளபதி’ விஜய் அதிரடி வசனம் சொல்வது; சிறார்கள் சூழ உறங்கும் கோலாகலத்தை வர்ணிக்கும் மைக்கேல் ஜாக்சன்; தந்தையுடன் அரை நிர்வாண கவர் ஸ்டோரி போடும் ஹானா மொன்டானா…

எழுத்துலகில் பிறரைப் படிப்பதால் இவ்வகையினர் அரிதே என்றாலும், சாரு நிவேதிதா போல் தன்னைச் சுற்றியே உலகம் சுற்றுகிறது நம்பிக்கையாளர் கிடைக்கின்றனர். அரசியலில் ஆட்சியில் இருக்கும் வரை ஒளிவட்டமும் சாமரம் வீசும் மேடையும் கிடைக்கிறது.

வசைகளை நாடிச் செல்கிறார்களா? கவனத்தில் இருப்பதை மட்டுமே விரும்புகிறார்களா? மிட் லைஃப் குழப்பமா? வாழ்க்கையின் அர்த்தம் தேடும் போராட்டமா? மிஷ்கின் படத்தில் குத்துப் பாடலில் பாண்டியராஜன் ஆகாத சோகமா?

தன்னைக் கவர்ந்த பிரயோகமாக சார்லி சீன் சொன்னது;

Marlon Brando’s character in Apocalypse Now, “You have the right to kill me, but you do not have the right to judge me.”

தொடர்புள்ள சுட்டி:
Charlie Sheen Quotes As New Yorker Cartoons: Pics, Videos, Links, News