விதி வலியதா? மதியால் சதியை முறியடிக்க முடியுமா?
அம்மா கதை சொல்கிறார்.
பகுதி இரண்டு: தலையெழுத்து இரகசியம் – எருது & ஒரு படி முத்து ===> வாழ்க்கை
பகுதி மூன்று: அறஞ்செய்ய விரும்பு – பிரம்மனின் கெஞ்சல்
விதி வலியதா? மதியால் சதியை முறியடிக்க முடியுமா?
அம்மா கதை சொல்கிறார்.
பகுதி இரண்டு: தலையெழுத்து இரகசியம் – எருது & ஒரு படி முத்து ===> வாழ்க்கை
பகுதி மூன்று: அறஞ்செய்ய விரும்பு – பிரம்மனின் கெஞ்சல்
Posted in Uncategorized
மாநகராட்சி தேர்தல்: நெல்லை, கோவையை ம.தி.மு.க. கேட்கிறது
சென்னை, செப். 22-
உள்ளாட்சி தேர்தலுக்கான இடப் பங்கீடு அரசியல் கட்சிகள் இடையே அதி வேகத்தில் நடந்து வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே நேற்று மாலை முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை நீடித்தது.
நெல்லை
ம.தி.மு.க. தனக்கு சாதக மான நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி பகுதிகளை குறிப் பிட்டு பட்டியல் கொடுத்து இருக்கிறது. அதே போல விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள பகுதிகளை கேட்டு பட்டியல் கொடுத்து இருக் கிறார்கள்.
ம.தி.மு.க.வினர் கோவை, திரு நெல்வேலி மாநகராட்சியை கேட்கிறார்கள். ஆனால் ம.தி.மு.க.வுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
சென்னையில் கணிச மாக வார்டுகளை ம.தி.மு.க. கேட்டுள்ளது. தென்சென்னை யில் 29 வார்டுகளையும், வட சென்னையில் 25 வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வற் புறுத்துகிறார்கள்.
சேலம்
விடுதலை சிறுத்தை சேலம் மாநகராட்சியை குறி வைத்துள்ளது. சேலம் மாநகராட்சி பெண்களுக்கு (எஸ்.சி.) ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதை விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கினால் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சேலத்தை விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கலாமாப என அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா பரிசீலித்து வருகிறார். இது தவிர விடுதலை சிறுத்தை 11 நகராட் சியையும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 இடங்களையும் கேட்டு உள்ளது.
ஒன்றிய, ஊராட்சி பதவி களை பொறுத்தவரை சதவீத அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை
சென்னை மாநகராட்சியில் 21 வார்டுகள் தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 15 வார்டுகளையும் பொது வார்டுகளில் 8-ம் விடுதலை சிறுத்தை கேட்டுள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டுகள், நகரசபைகள், பேரூராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரி கிறது. மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க அ.தி.மு.க. தீர்மானித்துள்ளது.
Posted in Uncategorized
வெற்றிகரமான நூறாவது நாள் – சிக்குன் குன்யா
சிக்குன்-குனியாவால் அதிமுக பிரமுகர் ஆரம்பித்து என்னுடைய அம்மா, அண்ணன் வரை பலரும் அவதிப்பட்டு, சில பலர் (ஏறக்குறைய 150க்கும் மேற்பட்டோர்) உயிரையே இழந்திருக்கிறார்கள்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி ‘ஆராய்ச்சி மையம்’ ஆரம்பித்து வைத்திருக்கிறார். நாடு தழுவிய நோக்கில், பாதிக்கப்பட்டவர்களின் குணநலன்களை ஆராய்ந்து கூடிய சீக்கிரமே தடுப்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்துவார் என்று நம்புவோமாக.
தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலன் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அஇஅதிமுக பிரமுகர்கள் விடும் அறிக்கைகளுக்கு மறுப்பு அறிக்கைகளை உடனுக்குடன் விட்டுக் கொண்டேயிருக்கிறார். மருத்துவ முகாம்களை திறந்து வைக்கிறார்.
சிக்கூன் குனியா தடுப்பை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தவறியிருக்கிறது.
கொசு மூலம் சிக்கன் – குனியா காய்ச்சல் பரவுவதால் பழைய தண்ணீரை தொட்டிகளில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது என்றும்; அதற்காக தொட்டிகளைக் கழுவி சுத்தம் செய்யவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு ‘அறிவிப்புகள்’ தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, அரசு பணத்தை அள்ளி விடுவதாகவே செய்திகள் உணர்த்துகிறது. இருந்தாலும் அது செயலாக மாறி பலன் தராமால், அதிகாரிகளின் விழலுக்கு இறைத்த நீராக மாயமாகி, சாதாரண பொதுமக்களின் மரணங்களாக மாறிக் கொண்டே இருக்கின்றன.
தமிழ்நாடு முழுக்க சீரான நடவடிக்கை, அதிகாரிகளை இறப்புகளுக்கு காரணமாகப் பார்த்து அவர்களிடம் பயம் கலந்த அக்கறையை வரவழைத்தல், கிராமவாசிகளிடம் துரித கவனிப்பு, அவசர கால நிலையாக கொசு ஒழிப்பு & தடுப்பு துரிதப்படுத்தல்கள் போன்றவை தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் கூட புதிய அரசிடம் இருந்து கிடைக்காமல் அலட்சியப்போக்கு தொடர்கிறது. பல வீடுகளில் சாவு செய்தி மூன்றாம் பக்க மூலையின் எட்டாம் பத்தியாகி புரட்ட வைத்து செல்கிறது.
இந்த அறிக்கைப் போர் படிக்க முடியாதவர்களுக்காகவும், நல ஒதுக்கீடுகளின் பலனை அனுபவிக்காமல் வாடுபவர்களின் நினைவாகவும், ஒருவர் சாவு என்று செய்தியாகி வாடி வதங்குபவர்களின் நினைவாக சில இணைய செய்தித் துளிகள்:
1. மா.கலை அரசன்
“சிக்கூன் குனியாவினால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை கடுமையான ஜூரத்திற்கு உட்படுகின்றார்கள், கூடவே உடலில் உள்ள அத்தனை மூட்டுக்களிலும் தாங்க முடியாத வலி. இந்த மூட்டு வலி ஒரு வாரம் முதல் ஆறு மாதம் வரை தொடரலாம். நோய் வாய்ப்பட்டவர் காலைக்கடனை கழிக்கச்செல்ல மற்றவர் துணை தேவைப்படலாம் [இதில் தப்பிப்பிழைப்பவர் உண்மையில் புண்ணியம் தெய்தவராவார்]. பலருக்கு மூட்டு வீக்கமும் ஏற்படுகின்றது. கொஞ்சம் குண்டானவர்கள் பாடுதான் திண்டாட்டம்.
அரசின் கையாலாகாத்தனத்தாலும், நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் அரசு ஏற்படுத்த தவறியதாலும் மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய தவறான எண்ணமும் பய உணர்ச்சியுமே மேலோங்கி நிற்கிறது. இது மக்களிடம் சிக்கூன் குனியா நோய் பற்றிய வேண்டாத பீதியையும் கலக்கத்தையுமே ஏற்படுத்துவதுடன் அரசு மீதும் மக்களுக்குள்ள நல்லெண்ணெத்தையும் சீர்குலைப்பதாகவே அமையும். எனவே அரசு இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுத்து சிக்கூன் குனியா பரவலாக உள்ளதை பெருந்தன்மையோடு ஒத்துக்கொண்டு, அந்நோய் பரவால் தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு, அந்நோயைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்த முனைய வேண்டும்.” (முழுவதும் படிக்க)
செப்டம்பர் 20, 2006 – தினமணி செய்திகள்
விழுப்புரம் அருகே சிக்குன்-குனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் சிக்குன்-குனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிக்குன்-குனியாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். புதுக்கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் கண்ணன்(50). இவர் கடந்த 10 நாள்களுக்கு முன் சிக்குன்-குனியாவால் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த இவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
இவரது உறவினர்கள் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர்.
சென்னையில் வேகமாகப் பரவி வரும் சிக்-குன் குனியா காய்ச்சலைத் தடுக்கவும், பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கவும், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் உள்ள 10 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது. தி.நகர் பஜனை கோயில் தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தி.நகர் பகுதியில் சிக்-குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், மருந்துகளும் வழங்கப்பட்டன.
மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த, மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் பெ. குகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியது:
4,000 பேர் பாதிப்பு: கடந்த 4 மாதங்களில் மட்டும் சிக்-குன் குனியா காய்ச்சலால் 4,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் 1,062 பேர். 3 லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மருத்துவ பரிசோதனையும், 211 இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் வடசென்னையைச் சேர்ந்தவர்கள்.
தனியார் மருத்துவமனைகளுக்கு வேண்டுகோள்: சிக்-குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வருபவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களை, தொடர்புடைய மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
அந்த முகவரிகளைப் பெற்றுக் கொள்ளும் மாநகராட்சி களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்வர். அவர்களது வீடுகளில் கொசுக்களை ஒழிக்கும் மருந்து அடிக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றார் டாக்டர் குகானந்தம்.
குனியா காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு அதிமுக பிரமுகர் கே.வெங்கடாசலம் உயிரிழந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். வெங்கடாசலம் நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி அதிமுக செயலாராக இருந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் பிறகு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்நோயால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனைக்குரியது என்றார்.
‘தீமதரிகிட‘ ஞானி :: செப்டம்பர் 2006
முதுமையில் சிலரைத் தாக்கக்கூடிய ஆர்த்திரைடிஸ் நோய்கூட உடலின் ஏதாவது ஒரு மூட்டுப் பகுதியை மட்டுமே பொதுவாகப் பாதிக்கிறது. ஆனால், சிக்குன் குனியா உடலில் உள்ள எல்லா மூட்டு இணைப்புகளிலும், அசைக்கவே அஞ்சும் அளவுக்கு வலி உண்டாக்குகிறது. உட்கார, எழுந்திருக்க, படுக்க, கை கால்களை அசைக்க விரும்பினால், ஒவ்வொரு அசைவையும் கடும் வலியுடன்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிரமப்பட்டு எழுந்து நடந்தால், ஏறத்தாழ குரங்கிலிருந்து உதயமான ஆதி மனிதனைப் போல சற்றே மடித்த காலும், கூனுமாக நடக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் இந்த நோயின் பெயரை ‘முடக்கிக் குறுக்கும் நோய்’ என்று ‘ப்ரிக்க ஸ்வாஹிலி’ மொழியில் சூட்டியிருக்கிறார்கள்.
கடுமையான காய்ச்சல், சுமார் 103 டிகிரி வரை முதல் மூன்று தினங்களுக்கு நீடிக்கிறது. காய்ச்சல் இறங்கிய பின்னரும் ஓரிரு வாரங்களுக்குக் குறையாமல் மூட்டு வலி தொடர்கிறது. சிகிச்சை என்பது காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளும், வலி நிவாரணிகளும் மட்டுமே! உடல் உழைப்பிலான தினக்கூலி வேலைகள் செய்யும் தொழிலாளர்கள் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டால், குடும்பமே மிகப் பெரும் துயரத்துக்கு உள்ளாகும். தற்போது தமிழகத்தில் சிக்குன் குனியா தாக்குதல் அடிமட்டத் தொழிலாளி முதல் ஐ.டி. துறை வரை பரவலாக இருக்கிறது. ஆவடி புறநகர் மருத்துவமனையில், ஒரே வேளையில் புற நோயாளிகளில் 500 பேர் சிக்குன் குனியா பாதிப்புடன் வந்திருக்கிறார்கள். கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் ஒரு மருத்துவ முகாமுக்கு சிகிச்சைக்கு வந்த 90 பேரில் 62 பேருக்கு சிக்குன் குனியா! தமிழ்நாட்டிலும் இன்னும் சில மாநிலங்களிலுமாக பல லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் அன்புமணி மக்களவையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
சிக்குன் குனியாவுக்கு யார் பொறுப்பு? கொசுக்களைக் கட்டுப்படுத்தமுடியாத அரசாங்கங்கள்தான் பொறுப்பு. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சிக்குன் குனியா பாணி நோய்கள் வருவதில்லையே, ஏன்? பொது சுகாதாரத்தை அங்குள்ளஅரசுகள் ஒழுங்காகப் பேணுவதுதான் காரணம். கட்டமைப்பு என்ற பெயரில் பிரமாண்டமான சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நிகராக பொது சுகாதாரத்துக்கு நமது அரசுகள் நிதி ஒதுக்குவதில்லை.
தினமணி.காம் செய்தி :: ஜூன் 16, 2006:
சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த பேரணாம்பட்டில் உள்ள 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 1.85 லட்சம் வழங்கப்பட்டது. பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மிட்டாளம், மேல்பட்டி, மாச்சம்பட்டு, பல்லலகுப்பம், பத்தலபள்ளி, சாத்தம்பாக்கம், சி.டி. செருவு உள்ளிட்ட 18 கிராமங்களில் இந்நோயால் பெரும்பாலோனர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிராமங்களில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கடந்த வாரம் சந்தித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆறுதல் கூறினார். இங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்குமாறு பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனத்துக்கு உத்தரவிட்டார்.
அதன்படி ஒன்றியத்தில் உள்ள மேல்பட்டி, நரியம்பட்டு, மேல்சாணாங்குப்பம் ஆகிய 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஊசி, மருந்து, மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர் வாங்கிக்கொள்ள ரூ. 1.85 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சிக்குன் குனியா காய்ச்சல்: இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டார் ஜெ.
பத்திரிகைகளைத் தினமும் படித்துவிடுவேன் எனக் கூறி வரும் முதல்வர் கருணாநிதி, சிக்குன் குனியா குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படிக்கிறாரா இல்லையா?
முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தமிழகத்தில் சிக்குன் குனியா இல்லை என்றும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் சட்டப்பேரவையில் பதிவு செய்து விட்டார்கள்.
அதை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களே தவிர, காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இல்லை; நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை.
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அரசைப் பற்றி குறை கூற வேறு விஷயம் இல்லை. எனவே, அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றன.
நன்றி: Chiken Kuniya
Posted in Uncategorized
உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 5 நூல்கள்: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியீடு
பா. ஜெகதீசன்
சென்னை, செப். 22: உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் 5 நூல்கள் வெளியாகி உள்ளன.
ஜனநாயகத்தின் நாற்றங்கால்களாகத் திகழும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 13. 15-ல் இரு கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. புதன்கிழமையில் இருந்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி விட்டது.
சுமார் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், பொது மக்களும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் குறித்து எளிதாக அறிந்து கொள்ள உதவும் விளக்கக் கையேடுகளாக இந்நூல்கள் அமைந்துள்ளன.
சென்னையில் உள்ள “நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ வெளியிட்டுள்ள இந்த 5 கையேடுகளும் மொத்தம் ரூ.95 விலைக்கு விற்கப்படுகின்றன.
கையேடுகளின் பெயர்:
(1) சிற்றூராட்சி நிர்வாகம்,
(2) ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்,
(3) மாவட்ட ஊராட்சி நிர்வாகம்,
(4) சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்,
(5) கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்
என்கிற ஐந்து தலைப்புகளில் இந்த விளக்க நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி அமைப்புகளை மக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், வளர்ச்சியை உருவாக்கும் நிறுவனங்களாகவும் மாற்றும் நோக்கில் இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மக்கள் தலைவர்களுக்கும், அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்து வரும் க. பழனித்துரை இந்த 5 நூல்களையும் எழுதி உள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் வரலாறு, அவற்றின் சட்ட விதிகள், உரிமைகள் -கடமைகள், வரி விதிப்பு முறைகள், மன்றக் கூட்டங்களை நடத்தும் விதம், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு உள்ள அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.
Posted in Uncategorized
இந்தப் படம் எந்த வித்தியாசங்கள்், எவ்வித பாகுபாடுகள், எத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்கும்?
Social Class :: சமூகப் பிரிவு:
Posted in Uncategorized
நேரடித் தேர்தல் ரத்தால் நெருக்கடியில் அரசியல் கட்சிகள்
எஸ்.திருநாவுக்கரசு
கோவை, செப்.21: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடையே இடப் பங்கீடு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் முதல் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தபோது, தலைவர் பதவியைக் கொண்டு இடப் பங்கீட்டை அரசியல் கட்சிகள் செய்து கொண்டன. வார்டுகளை மட்டும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பேசிப் பிரித்துக் கொண்டனர்.
தலைவரை வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், மெஜாரிட்டி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினருக்கே தலைவர் பதவி கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எத்தனை வார்டுகளில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி போட்டியிடுவது, மீதியை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இல்லையேல், கூட்டணிக் கட்சிகளின் தயவை நாட வேண்டியிருக்கும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினரைப் பெற வேண்டுமானால் அந்த அளவுக்கு வார்டுகளில் போட்டியிட வேண்டும்.
மொத்த வார்டுகளில் 50 சதத்துக்கும் மேலாக ஒரு கட்சி போட்டியிட்டால் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதி வார்டுகளை பிரித்துக் கொடுப்பது சாத்தியமில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.
மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யும் முறை இருக்கும்போது, அப்பதவியை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பறிக்க முடியாது. ஆனால், கவுன்சிலர்கள் சேர்ந்து அவர்களில் ஒருவரை மேயராகவோ, நகர்மன்றத் தலைவராகவோ, பேரூராட்சித் தலைவராகவோ தேர்ந்தெடுக்கும்போது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அவர்களின் பதவியைப் பறிக்க முடியும்.
இச்சூழலில் உள்ளாட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு வரும் கட்சி, மன்ற உறுப்பினர்களில் மெஜாரிட்டியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், கூடுதல் வார்டுகளில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சியிலும் கூட்டணி தான்?: திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மாநில அரசில் எப்படி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறதோ, அதேபோல உள்ளாட்சி அமைப்புகளிலும் கூட்டணி ஆட்சி நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிப் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வோம். அதற்கேற்ப, வார்டுகளை விட்டுக்கொடுத்து போட்டியிடுவோம் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை புதன்கிழமை சென்னையில் முடித்து, சனிக்கிழமைக்குள் மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தையை முடிக்க திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி அமைப்பு இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் சிக்கல் இல்லை. கூட்டணிக் கட்சிகளான மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் பெரிய எதிர்பார்ப்பில் இல்லை. எனவே, சுமுகமான முறையில் இடப் பங்கீடு நடக்கும் என அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சினை இல்லாத கட்சி: நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்ற நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை அனைத்து நிலைகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாத நிலையில் இடப் பங்கீடு பிரச்சினைகள் எதுவும் இல்லாத கட்சியாக அது உள்ளது.
Posted in Uncategorized
தூர்தர்ஷன் தொகுப்பில் சன் டி.வி. மறுபிரவேசம்: புதிய இணைப்பு சன் நியூஸ்
ஏ.தங்கவேல்
புது தில்லி, செப்.21: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தூர்தர்ஷனின் டிடிஎச் (கேபிள் இணைப்பின்றி, வீட்டுக்கு நேரடியாக டி.வி. இணைப்புப் பெறும் வசதி) தொகுப்பில் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சந்தடியின்றி மறு பிரவேசம் செய்திருக்கிறது சன் டி.வி.
இதில் விசேஷம் என்னவெனில், சன் டி.வி. மட்டுமின்றி, கட்டண சானலான சன் நியூஸ் சானலும் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷனின் டிடிஎச் ஒளிபரப்பில், 33 சானல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஐம்பதாக உயர்த்த பிரசார் பாரதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் தூர்தர்ஷன் சானல்கள் தவிர, இலவசமாக ஒளிபரப்பாகும் தனியார் சானல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில்தான் சன் டி.வி.யும் இடம் பெற்றிருந்தது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஜூன் 16-ம் தேதி சன் டி.வி. தூர்தர்ஷனின் (டிடி -டிடிஎச்) தொகுப்பிலிருந்து விலகிக் கொண்டது. டிடி-டிடிஎச் ஒளிபரப்புத்தரம் மிகவும் மோசமாக இருப்பதால் விலகியதாக அப்போது காரணம் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், சன் டி.வி. கட்டண சானலாக மாறப் போகிறது என்றும் பேச்சு அடிபட்டது.
ஆனால், இதுவரை இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சானல்கள், இனிமேல் ஒளிபரப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று பிரசார் பாரதி புதிய விதியை அமல்படுத்தியதே சன் டி.வி.யின் கோபத்துக்குக் காரணம்.
சன் டி.வி டிடி தொகுப்பிலிருந்து வெளியேறியதும், அந்த இடம் (அலைவரிசை 12534) ஜெயா டி.வி.க்குக் கொடுக்கப்பட்டது. பிரசார் பாரதி கேட்ட ஒரு கோடி கட்டணத் தொகையையும் ஜெயா டி.வி. செலுத்திவிட்டது.
ஆனால், தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 15-ம் தேதி முதல் மீண்டும் டிடி-டிடிஎச் தொகுப்பிலிருந்து சன் டி.வி. ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கிறது. பிரசார் பாரதி கேட்ட ஒரு கோடி ரூபாய் கட்டணத்தையும் செலுத்திவிட்டது.
அதுமட்டுமன்றி, மேலும் ஒரு கோடி செலுத்தி, கட்டண சானலான சன் நியூஸ் சானலையும் இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள்.
பிரசார் பாரதி நிறுவன விதிகளின்படி, டிடி-டிடிஎச் தொகுப்பில் ஒளிபரப்பாகும் எந்தச் சானலும் கட்டணச் சானலாக இருக்க முடியாது. இதுபற்றி தினமணிக்குப் பேட்டியளித்த பிரசார் பாரதியின் பொது மேலாளர் (ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு) மணீஷ் தேசாய், “இலவச சானலாக டிடி தொகுப்பில் சேர்ந்த பிறகு, கட்டணச் சானலாக மாற முடிவெடுத்தால், அந்தத் தொகுப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும்’ என்றார்.
“சன் நியூஸ் தொலைக்காட்சி டிடி தொகுப்பில் சேர்ந்ததால் பிரசார் பாரதியின் கொள்கைகளில் எந்தப் பாதிப்பும் வராது. இத்தொகுப்பில் உள்ள எல்லா சானல்களும் இலவச சானல்கள் என்ற கொள்கையை சன் டி.வி. நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்றார் தேசாய்.
சன் டி.வி அலைவரிசையில் இருந்த ஜெயா, ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிகள், சன் டி.வி.யின் மறுபிரவேசத்தால் புதிய அலைவரிசைக்கு (10977) மாற்றப்பட்டன. அதாவது, சன் டி.வி.யில் இருந்து 30 சானல்கள் பின்னால் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் பற்றி ஜெயா டி.வி. நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அந் நிறுவனத்தின் சார்பில் மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்த பிறகுதான் மாற்றம் பற்றிய தகவல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
“சன் டி.வி. நீண்டகால சந்தாதாரர் என்பதால் அவர்களுக்கு பழைய இடமே கொடுக்கப்பட்டது. அதனால், ஜெயா டி.வி.யைப் புறக்கணிப்பதாக அர்த்தம் இல்லை’ என்றார் தேசாய்.
சன் டி.வி. நிறுவனத்தின் துணைத் தலைவரான (தொழில்நுட்பம்) கண்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சன் நியூஸ் தொலைக்காட்சியும் டிடி தொகுப்பில் சேர்ந்திருப்பதை உறுதி செய்தார்.
ஆனால், டிடி தொகுப்பிலிருந்து வெளியேறி மூன்று மாத இடைவெளியில் மறுபிரவேசம் செய்திருப்பது ஏன்? தூர்தர்ஷனின் தொகுப்பிலிருந்து விலகியதால், ஜெயா டி.வி. தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், தரப்பட்டியலில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்றும் சன் கருதியிருக்கலாம்.
மேலும், சமீபத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, ஜனவரி 1 முதல் ஒரு தொலைக்காட்சிக்கு சந்தாதாரரிடம் மாதம் ரூ.5 மட்டுமே வசூலிக்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனத்தில் உள்ள எல்லா சானல்களையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதனால், எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்று அச்சமடைந்திருக்கலாம்.
அத்துடன், திமுகவின் சாதனைப் பிரசார விளம்பரங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய தூர்தர்ஷனின் தொகுப்புதான் சரியான வழியாக இருக்கும் என்றும் முடிவெடுத்திருக்கலாம்.
Posted in Uncategorized
இந்த வருடம் ஃபேர்-ஒன் – ஃபிலிம்ஃபேர் விருதுகளை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். கவர்ந்த சில விஷயங்கள்:
என்று எட்டு விருதுகளை அன்னியன் பெற்றிருக்கிறது என்று எட்டின் பெருமையை எடுத்து வைத்தார்.
முந்தைய சில விருதுப் பதிவுகள் –
2004 :: மெடிமிக்ஸ் – தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்
2005 :: தினகரன் – மெடிமிக்ஸ் விருதுகள்
Posted in Uncategorized
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் கௌஸ்பாஷா
மதுரை, செப். 20: மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.கௌஸ்பாஷா புதன்கிழமை மனு தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி, அவர் தமது மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
தமிழக அரசின் சாதனைகளே எனது வெற்றிக்கு வழி வகுக்கும்.
மறைந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இத் தொகுதியில் செயல்படுத்துவதாக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன். கோயில் மாநகரான மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரவும், அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
நகரில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கொசுத் தொல்லையைப் போக்கவும், போக்குவரத்து நெரிசலைப் போக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
இத் தொகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் மாதத்துக்கு ஒரு முறை வார்டு வாரியாக மக்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கட்சித் தலைவர் மு.கருணாநிதி, அமைச்சர்கள் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், மு.க.அழகிரி, கூட்டணி கட்சியினரின் ஆதரவுடனும், பொதுமக்கள் ஆதரவுடன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் எஸ்.எஸ்.கௌஸ்பாஷா.
மதுரையைச் சேர்ந்த கௌஸ்பாஷா (44) எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். இவர் திமுகவில் 1977-ம் ஆண்டு சேர்ந்து, கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்டத் தொண்டர் அணி துணை அமைப்பாளர், வட்டச் செயலர், மாமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
Posted in Uncategorized
தமிழகத்தில் அக்.13, 15-ல் உள்ளாட்சித் தேர்தல்
சென்னை, செப். 20: தமிழகத்தில் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 13, 15 தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது.
வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப். 20) தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 18-ம் தேதி நடைபெறும்.
இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது.
எந்தெந்த இடங்களில்…: முதல் கட்டமாக சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகளில் அக்டோபர் 13-ல் தேர்தல் நடைபெறும்.
2-ம் கட்டமாக மதுரை, திருச்சி மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அக்டோபர் 15-ல் நடைபெறும்.
1.31 லட்சம் பதவிகள்: சிற்றூராட்சிகளில் தொடங்கி மாநகராட்சி வரையிலான அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் நிர்வகிக்க ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 962 மக்கள் பிரதிகள் இத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மொத்தம் உள்ள 12,618 ஊராட்சிகளில் 97 ஆயிரத்து 485 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
385 ஊராட்சி ஒன்றியங்களில் 6,570 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
29 மாவட்ட ஊராட்சிகளில் 656 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
561 பேரூராட்சிகளில் (டவுன் பஞ்சாயத்துகளில்) 8,807 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 987 கவுன்சிலர்களும், 102 நகராட்சிகளில் 3,392 கவுன்சிலர்களும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் 474 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவற்றில் சிற்றூராட்சித் தலைவர், அவற்றின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. இதர அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.
டெபாசிட் தொகை: உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.200.
சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் -ரூ.600.
மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் -ரூ.1,000.
பேரூராட்சி -3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.500.
மாநகராட்சி உறுப்பினர் -ரூ.2,000.
பொது வேட்பாளர்களுக்கான இந்த டெபாசிட் தொகையில் பாதியை தாழ்த்தப்பட்ட -பழங்குடி சமுதாய வேட்பாளர்கள் கட்டினால் போதும்.
இத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறைதான் பின்பற்றப்படும்.
தேர்தல் பணியில் 4.5 லட்சம் ஊழியர்கள்: இத்தேர்தல் பணிகளில் மாநிலம் முழுவதும் நாலரை லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
தேர்தல் பணிகளைப் பார்வையிட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். பதற்றமான பகுதிகளைக் கண்டறியவும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாநகராட்சிகளில் அக்.13-ல் தேர்தல்
சென்னை, செப். 20: சென்னை உள்ளிட்ட 4 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 13-ல் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் அக். 13-ல் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. 2-வது கட்டமாக, மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளுக்கு அக். 15-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் அட்டவணை
வேட்புமனுத் தாக்கல் – 20.09.2006
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் – 27.09.2006
வேட்புமனுக்கள் மீது பரிசீலனை – 28.09.2006
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் – 30.09.2006
வாக்குப்பதிவு – 13.10.2006, 15.10.2006
வாக்கு எண்ணிக்கை – 18.10.2006
புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு – 25.10.2006
மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் – 28.10.2006
Posted in Uncategorized