முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கிட்டு வரது இந்த க்ரீமி லேயர் கூட்டம் தான். அது பார்த்தனா OC சீட் இருந்தா OCல எடுக்கும் இல்லைனா BCல எடுக்கும். இப்ப அதை தூக்கி OCல மட்டும் தான் நீ எடுக்கனும்னு சொல்லிட்டா ரெண்டு பேருக்கும் செம சண்டையா இருக்கும் இல்ல.
இப்ப
- 295 எடுத்த ஒரு BC பையன் இருக்கான்.
- அவனுக்கு அடுத்து 294.98 எடுத்த FC பையன் நிக்கறான்.
இப்ப அண்ணா யுனிவர்சிட்டில BCல ஒரு சீட் இருக்கு PSGல ஒரு சீட் இருக்குனு வை. இந்த் Creamy layer பிரிக்கலைனா அந்த BC பையன்
- அண்ணா யுனிவர்சிட்டில BC கோட்டால எடுக்கனும்னா எடுக்கலாம்.
- இல்லைனா OCல எடுக்கலாம்.
ஆனா Creamy layer பிரிச்சிட்டானு வை அவன் கண்டிப்பா OCல தான் எடுப்பான்.
- இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்..அது செயல்படுத்தப்படும் முறையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது.
- கிரீமி லேயர் என்பது கண்டிப்பாக அவசியம். அதைச் செயல்படுத்த வேண்டும்.
//சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்… கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?//
இந்த லாஜிக் தப்பு…
அந்த லேயர கண்டுபிடிக்கறதால FCக்கு ஆப்பு தானே தவிர அவர்களுக்கும் எதுவும் பெருசா நல்லதாக போறதில்லை.
- தொழிற்கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்ற ஒரு விஷயத்தை மட்டும் முன்வைத்து இந்த க்ரீமி லேயர் வாதம் வைக்கப்படுகிறது என்று அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் –
- இட ஒதுக்கீட்டை சுத்தமாகத் துடைத்து எறிவதற்காக ஊடகங்களாலும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் குழுக்களாலும் வைக்கப்படும் திட்டத்தின் முதல் படி மட்டுமே இது.
- வி.ஏ.ஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பியூன்கள், வங்கி மேனேஜர்கள், கிளர்க்குகள், பள்ளிக்கூட வாத்தியார்கள், எம்.எல்.ஏக்கள் (ரிசர்வ் தொகுதிகள்), பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று இட ஒதுக்கீட்டால் பயனடைபவர்களை, இஞ்சினியர் டாக்டர்களைத் தாண்டியும் பாருங்கள் – சமமான பிரதிநிதித்துவம் தற்போது இருக்கிறதென்றால் இட ஒதுக்கீட்டால் வந்ததுதான்.
பொன்ஸ்~~Poorna:
எப்படி க்ரீமிலேயரை நடைமுறைப்படுத்தி லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரன் ஆக்காமல் தடுக்க முடியும்?
செய்தி :
‘பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை: ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
Affirmative Action & India’s Reservations:
இனம், மொழி போன்றவற்றுடன் கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:
- பள்ளியில் கிடைத்த கிரேட் – ஜி.பி.ஏ.
- SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்
- பெற்றோர் கல்லூரியில் படித்தவர்களா?
- விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்
- எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்?
- எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…?)
- தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு
- பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்?
- கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்
- கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்
- ரெஃபரன்ஸ் – (பரிந்துரை – சிபாரிசுக் கடிதம்) எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார்? அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார்? அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா?
- எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்?
- எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார்? அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்?
இவை அனைத்தும் முக்கியம். இட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.
ஆதிக்க வெறி, ஐஐடி மற்றும் ஆங்கில அனானி – ஜெகத்
அன்று மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துக் கல்லூரிகளும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. மக்கட்தொகையில் 4 விழுக்காட்டுக்கு குறைவாக இருந்த சமூகம் கல்லூரிகளில் 71 விழுக்காடு இடங்களைப் பெற்றிருந்தது. அன்றும் சில மேதாவிகள் இதற்கு “திறமையை” காரணமாகச் சொல்லியிருப்பார்கள். சில சாதிகள் இயல்பிலேயே அறிவாளிகள் என்றும் வேறு சில சாதிகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் நம்பப்பட்டக் காலம் அது.
சரி, மீதி 29% இடங்கள் யாருக்குப் போயிருக்கக் கூடும்? அந்தக் காலத்தில் இந்தியக் கல்லூரிகளில் படித்தவர்களிடையே ஆங்கிலேயர்களின் வாரிசுகளும், ஆங்கிலோ இந்தியர்களும் உண்டு. அக்கால தமிழ் சமூகத்தைப் பற்றிய நம் அறிவை வைத்து நோக்குகையில் எஞ்சியுள்ள இடங்களில் பெரும்பாலானவற்றை இதர ‘உயர்’ சாதியினர் (முதலியார், வெள்ளாளர், நாயுடு..) கைப்பற்றியிருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். மக்கட்தொகையில் 85% இருக்கும் மற்ற பின்தங்கிய சாதியினர் (நாடார், தேவர், வன்னியர், மீனவர், தலித்துக்கள்..) முற்றிலும் “திறந்த போட்டி” நிலவிய அக்காலத்தில் கல்லூரிகளில் 10% இடங்களைக் கூட பெற்றிருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்டது.
உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம் –
இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், ‘டி’ கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா?
– ஏன் வேண்டும் இடஒதுக்கீடு – கட்டுரைகளின் தொகுப்பு
2. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப்பதவிகள் (அமைச்சர், ஐ.ஏ.எஸ் முதல் அர்ச்சகர் வரை), வணிகம், தொழில் முதலியவற்றில் பங்கு ஒவ்வொருசாதிக்கும் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட வேண்டும்.
4. ஒவ்வொரு சாதியிலும் (ஓப்பன் கோட்டா உட்பட) கிரீமிலேயர் எனப்படும் வசதியானவர்களின் பங்கு இப்போது கல்வியிலும் வேலைகளிலும் எவ்வளவு என்று கணக்கிடப்பட வேண்டும். சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்குள் அந்தந்தச் சாதியில் வசதி யற்றோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
5. அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில், தனியார் துறையிலேயே வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சாதிகளின் பங்கு எல்லாத் துறைகளிலும் கணக் கிடப்பட வேண்டும்.
6. பொது ஒதுக்கீட்டுக்கான சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் என்ற ஐந்து பிரிவுக்குள் எல்லாச் சாதிகளும் வந்துவிடும் என்பதால், சாதி பெயரிட்ட கம்யூனிட்டி சான்றிதழ்களை ரத்து செய்து, அவற்றுக்குப் பதிலாக மேற்படி ஐந்து பிரிவுகளை மட்டுமே சான்றிதழில் குறிப்பிடும் முறையைக் கொண்டுவரவேண்டும். தொலைநோக்கில் சாதியை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை களில் இதுவும் ஒன்று. கலப்பு மணம் செய்து குடும்பத்துக்குள் சாதியை ஒழிப்போரை ஆறாவது பிரிவாக ஆக்கலாம். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம்.
- Thinnai – முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள் :: சின்னக்கருப்பன்
Admission Data from http://www.hindu.com/2005/07/20/stories/2005072011970100.htm
| Community | Population (in Tamil Nadu only) | Population % (in Tamil Nadu only) | Reserved Seats(%) (in Tamil Nadu only) | Seats secured in OC (in Tamil Nadu only) | % in OC (in Tamil Nadu only) | +/- Over Population in OC (in Tamil Nadu only) | % in Total (in Tamil Nadu only) | +/- Over Population in Total (in Tamil Nadu only) |
|---|---|---|---|---|---|---|---|---|
| BC | 2,87,93,980 | 46.14% | 425(30%) | 321 | 74.65% | (+)28.51 | 52.72% | (+)6.58 |
| MBC/DC | 1,30,24,065 | 20.86% | 285(20%) | 57 | 13.25% | (-)7.61 | 24.16% | (+)3.30 |
| SC | 1,18,57,504 | 19.00% | 260(18%) | 14 | 3.25% | (-)15.75 | 19.36% | (+)1.36 |
| ST | 6,51,321 | 1.04% | 15(1%) | 0 | 0% | (-)1.04 | 1.06% | (+)0.02% |
| Forward Castes | 80,78,809 | 12.95% | 0(0%) | 38 | 8.83% | (-)4.12% | 2.68% | (-)10.27% |
| Total | 6,24,05,679 | 100.00% | 100% | 430 | 100% | 100% | 100% | 100% |










