Category Archives: Quotes

Quotable Quotes – தந்தை பெரியார் அறிவுரை

வயிறு வளர்க்கும் கூட்டம்

“ஒரு விசயத்தைப் பற்றிச் சரியோ, தப்போ என்பதைக் கவனிக்காமல், எதைச் சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து வயிறு வளர்ப்பதையே வாழ்க்கையாய்க் கொண்ட மக்கள் உலகம் எங்கும் இருந்துதான் வருகின்றார்கள். இவர்களுடைய உதவி யாருக்கும், எவ்வளவு குறைந்த விலைக்கும் கிடைக்கக் கூடும்.”

(“குடிஅரசு”, 25.12.1932)

எனது ஆசை
“எனக்கு ஆசை எல்லாம், மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் `பார்ப்பனர்’ இருக்கக் கூடாது. இதுதான் என் கொள்கை.”

(“விடுதலை”, 28.8.1972)

சீர்திருத்தம்
“ஒரு சிறு சீர்திருத்தம் கொண்டு வருகின்ற காலத்திலும் சீர்திருத்த விரோதிகள் எழுந்து நின்று ‘வந்துவிட்டது மதத்திற்கு ஆபத்து‘, ‘மதம் போச்சுது, மதம் போச்சுது‘ எனக் கூப்பாடு போட்டால், இந்த நிலைமையில் சீர்திருத்தக்காரர்கள் என்ன செய்ய முடியும்?’
(‘குடிஅரசு’, 30.8.1931)

முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட
“ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும், சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.”
(‘குடிஅரசு’, 25.8.1940)

தேர்தலும் – பொதுவுடைமையும்
“எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற தேசியத்தின் பேராலும், சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியம் என்றோ சொல்லிவிட முடியாது.”
(‘குடிஅரசு’, 12.6.1936)

Arunagiri: Quotable quotes – Alternates on Global Warming

எல்லாவித சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பசுமைப் பாதுகாப்புக்கும் வசதியான overarching canvas-ஆக இன்று குளோபல் வார்மிங் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஸ்ட்ராடஜிக்காக எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும். இயற்கையும், சுற்றுச்சூழலும் மாசுபடுவதை அவற்றின் லோக்கலைஸ்டு நேரடி காரணிகளை முன்னிறுத்தி எதிர்க்கும் அணுகுமுறையையே நான் ஆதரிக்கிறேன்.

எப்பொழுதுமே மேற்கிற்கு ஒரு பிரம்மாண்ட எதிரி தேவைப்படுகிறது. இல்லாவிடில் உலகத்தில் அதற்கு தேவையான கவனம் கிடைக்காது. நிலப்பிரபுத்துவம், வர்க்கப்போராட்டம் என்ற பிரம்மாண்ட ஆனால் எளிமைப்படுத்தப்பட்ட கேன்வாஸ்களில் சிக்கலான லோக்கலைஸ்டு சமூக இயக்கவியல் மாற்றங்களை அடைத்து கருத்தியல் பிரம்மாண்டத்தை உருவாக்கிய மார்க்ஸிஸத்திற்கும், நேரடியாகக் காணக்கூடிய காரணிகளைக் கீழேதள்ளி குளோபல் வார்மிங் என்ற பிரம்மாண்ட கேன்வாஸில் அவற்றைப் புதைக்கமுனையும் அவசரத்திலும் நான் காண்பது ஒரே அணுகுமுறையையே. மார்க்ஸிசமும் குளோபல் வார்மிங்கும் மேற்கின் வயிற்றில் பிறந்தது தற்செயல் அல்ல.

குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்று அரசியல் லாபியாக மாற்றப்பட்டு விட்டது. இந்த நிலையில், புஷ் கூட்டம் சொல்வது என்பதற்காக மட்டுமே ஒரு விஷயத்தை விலக்குவது ad hominem அணுகுமுறையென்றே நான் காண்கிறேன். இதே புஷ் கூட்டம் குளோபல் வார்மிங் ஆதரவாளர்களாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும் என் கணிப்பு.

குளோபல் வார்மிங் என்ற பெயரில் வரும் அத்தனை அழுத்தங்களையும் பாரதம் நிராகரிக்க வேண்டும் என்று உறுதியாகக் கருதுகிறேன்.

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? « நெஞ்சின் அலைகள்

என் ஜன்னலுக்கு வெளியே…: கோடையில் ஒரு குழப்பம்

Global Warming – Alternate Perspectives due to Farming Shortage Crisis :: உயிர் எரிசக்தி மாயை-ஓர் அபாயம்! – ஆர்.எஸ்.நாராயணன்

Protecting the farmlands for Food Consumption – Environment, Ethanol, Ethics :: உணவு தானியத்துக்குப் பாதுகாப்பு & புவி வெப்பம்: சிக்கல்களும் தீர்வுகளும் – கொ. பாலகிருஷ்ணன்

Pa Ilankumaran: World Forests day – City Gardens & Wild woods :: துருவப் பகுதி வானிலையும் அதன் தாக்கமும் – இரா. நல்லசாமி

Global Warming – Environmental Pollution: Analysis, History, Current Developments – வேலியே பயிரை மேயும் நிலை! – ந. ராமசுப்ரமணியன்

Global Warming – Environmental Pollution: Reports, History, Current Developments :: உலக வெம்மை’ ஏமாற்று வேலையா? – ந.ராமசுப்ரமணியன்

India’s Rice production hampered by Global Warming :: சீதோஷணநிலை காரணமாக இந்தியாவில் நெல் உற்பத்தி பாதிப்பு

Environmental Impact – 10 More Years Left :: உலகம் பேரழிவைச் சந்திக்க இன்னும் பத்தே ஆண்டுகள்தான்! – கே.என். ராமசந்திரன்

Environment Issues Topples World Governments – N Ramasubramanian :: ஆட்சிகளைக் கவிழ்க்கும் சூழல் பிரச்சினை – என். ராமசுப்ரமணியன்

Quotable quotes – Observations on Tamil Nadu Politics (Author unknown)

ஒன்று கவனித்தீர்களா? தமிழ் நாட்டில் இவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு விழா அல்லது ஏதாவது ஒரு பெருத்த கலவரத்தை எப்பொழுதும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். மக்கள் எதைப் பற்றி பேசுவார்கள்?

பொன் விழா, பிறந்த நாள் விழா, சங்கமம் விழா, தினகரன் எரிப்பு, தயாநிதி, கனிமொழி எம் பி ஆனது…

ஆக மொத்தத்தில் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையான பிரச்சினைகளும் ஆட்சியின் திறமையின்மையும் தந்திரமாகப் பின்னால் தள்ளப் பட்டு விடுகிறது. இது போன்ற விழாக்களையும் மக்களைத் திசை திருப்பும் நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஒரு ஸ்டிராடஜியாகவே செய்கிறார்கள். இப்பொழுது தி மு க முழு மூச்சாக டி வி நடத்தப் போகிறார்களாம், இவர்கள் என்றைக்கு அரசாங்கம் நடத்தப் போகிறார்கள் ?

அடுத்து மதுரை தேர்தல் அப்புறம் இன்னொரு விழா இப்படியாகவே தமிழ் நாட்டில் பொழுது கழிகிறது.

Maslow’s Hierarchy of Needs and Need Levels

7.      Aesthetic
6.     Know & Understand
5.     Self-actualize
4.     Esteem or Ego
3.     Love & Belonging
2.     Safety & Security
1.     Physiological

மெய் வாக்கு

1. முதல்வர் கலைஞர் மு கருணாநிதி : திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது.

2. தயாநிதி மாறன்: எனக்கும், தினகரனுக்கும், சன் டி.வி.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

3. இஃது -/பெயரிலி.யின் தனிப்பட்ட கருத்து; தமிழ்மணத்தினது கருத்து அல்ல.

இந்த இடுகை அதற்கான நோக்கம் நிறைவேறிய பின்னால் விலக்கப்படாத இடுகை.

A Song and a Blog Post

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா என் வாழ்க்கை

உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனிமையில்தான் உருகும்

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே என்னிடம் இல்லை

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை உண்டோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ

செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே.

Raji’sView: மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு:

அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

Did you visit Experiences

Living is like tearing through a museum. Not until later do you really start absorbing what you saw, thinking about it, looking it up in a book, and remembering – because you can’t take it in all at once.
Audrey Hepburn

Observations – Nirmal

  • பகுத்தறிவு, சுயமரியாதை உள்ள சமுதாயத்தில் அனைவருக்கும் அனைவர் நோக்கி மரியாதை உண்டு. ஆனால் ஆண்டவனாக யாரும் சித்தரிக்கப்படுவதில்லை.
  • ஆண்டவன் பற்றிய விளக்கங்களும், சிந்தனைகளும் தனிமனிதனின் உரிமையாக கொள்ளப்படுகின்றது,
  • கூட்டுச்சமுதாயம் சகமனிதனை முத்திரைகள் அற்ற மனிதாய் பார்க்கின்றது.
  • உருக்கம், கண்ணீர், கோபம், எள்ளல் போன்ற பலகீனமான தருணங்களில் பகுத்தறிவோ, சுய மரியோதையோ இருப்பதில்லை.

சொன்னார்கள்

Knowledge is power, if you know it about the right person.
Ethel Mumford

The first question I ask myself when something doesn’t seem to be beautiful is why do I think it’s not beautiful. And very shortly you discover that there is no reason.
John Cage

This Week’s Jeyamohan quota

அழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ :: ஜெயமோகன்

  • கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது.
  • புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே அந்தரங்கம் என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.
  • ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, தன் விதி மீதான வன்மம். ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.
  • ஒருவரின் சிறு மகிழ்ச்சி கூட பிறரிடமிருந்து பறிக்கவேண்டிய ஒன்றாக அமையுமளவுக்கு வறுமையும் போட்டியும் நிலவும் உலகம் அது. அத்துடன் மீட்பு கண்ணுக்குத்தெரியாத கொடிய வறுமை மூலம் உருவான முரட்டுத்தனமும் குரூரமும் அவர்களை ஆள்கிறது.
  • துயரமே வாழ்க்கையாக உள்ள அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் பிறருக்கு முடிந்தவரை தீங்கிழைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட கொடிய வாழ்க்கையை மேலும் மேலும் துயரம் மிக்கதாக ஆக்கிக் கொள்கிறார்கள். அந்தச் சூழலின் ஒவ்வொருவருமே அதே நரகத்தில்தான் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெருவில் சண்டை நடக்கிறது. உள்ளங்கள் குத்தி கிழிக்கப்படுகின்றன. எளியமுறையிலான வாழ்க்கையைக்கூட பக்கத்துவீட்டாரை வதைத்துத்தான் வாழவேண்டியுள்ளது, அல்லது பக்கத்து வீட்டாரை அஞ்சி வாழவேண்டியுள்ளது.
  • கொஞ்சம் கூலி அதிகம் கிடைப்பதற்காக பக்கத்து தெருவுடன் வேலைக்குப் போனால் சிக்கல் உருவாகிறது. பக்கத்து தெருவினர் இந்ததெருவுக்கு ஜென்ம எதிரிகளாக இருக்கின்றனர்.
  • ஒரு பழங்குடிச் சமூகத்தில் தனிமனித சிந்தனை, தனி வாழ்க்கை என்பதற்கே இடமில்லை. பழங்குடி சமூகமென்பது ஓர் உடல் போல ஒற்றைஅமைப்பு. அதன் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் இறுக்கமாகப் பிணைந்துள்ளது. ஆகவே ஒருவரை அவர் சமூகமே ஒவ்வொரு கணமும் கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது. பழங்குடிச் சமூகங்களில் சமூகக் கட்டுப்பாடுகள், சடங்குமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் குடித்தலைவனின் ஆணைகள் கிட்டத்தட்ட இயற்கையின் மாறாவிதிகள் போன்றவை. ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாகவே வாழும்வரை அது இயல்பாக இருக்கிறது. ஒருவர் சிறிதளவு மீற ஆரம்பித்தால்கூட மொத்தச் சமூகத்தின் அழுத்தமும் மாபெரும் வன்முறையாக அவர் மீது கவிகிறது
  • இருபதாம் நூற்றாண்டில் பழங்குடிச் சமூகங்களில் கல்வி ,மதமாற்றம், இடம்பெயர்தல் ஆகியவை நிகழ ஆரம்பித்ததுமே பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் வன்மூறை மிக்கதாக ஆகிவிட்டன. ஊர்விலக்கு, சமூக விலக்கு முதல் ஊர்க்கொலைகள் வரை நடக்க ஆரம்பித்தன. நம் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே பழங்குடிவாழ்க்கையே தொடர்கிறது என்பதைக் காணலாம்.
  • பழங்குடிவாழ்க்கையின் இரு கூறுகள், இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்பிரிவினைகள்.