Category Archives: Quotes

(Scary) Quote for the day

“Just the idea that this person could get away with what he was doing and no one could press charges has made me angry.”

JANE THOMPSON, of East Los Angeles, on a pedophile blogger who she believes described her child in a posting.

from Parents’ Ire Grows at Pedophile’s Unabashed Blog – New York Times : Los Angeles police say they have no legal recourse against a man who has written about how he trolls for children.

Quotable Quotes – Muthulingam

Thinnai :: இரண்டு முத்தங்கள்பொ கருணாகர மூர்த்தி

அ.முத்துலிங்கம் கதையில் ‘என்னுடைய சேர்ட் கொலர் சைஸும், என் வயதும் ஒன்றாயிருந்த வருடம்’ என்கிற வரியை நான் வெகுவாக இரசித்தேன். அ. முத்துலிங்கம் சொல்லும் உவமானங்கள் எப்போதும் தனித்துவமானவை.

ஒரு முறை சொன்னார் : ‘இளமையில் யாருக்கும் காலம் புது டாய்லட் பேப்பர் சுருள் உருள்வதைப்போல மெல்ல மெல்லத்தான் உருள ஆரம்பிக்கும்…………பின் வயசாக ஆகத்தான் வேகம் பிடிக்கும்.’

Thinnai :: முகம் கழுவாத அழகிஅ.முத்துலிங்கம்

பொஸ்டன் நகரத்து வீதிகளை நம்ப முடியாது. வளைந்து நெளிந்து மேடும் பள்ளமுமாக இருக்கும். திடீரென்று நெடுஞ்சாலை வரும், போகும். நெடுஞ்சாலை வரிக்காசு சரியாக வைத்திருக்க வேண்டும். பாதைகள் சுழன்று சுழன்று இடப் பக்கம், வலப்பக்கம் என்று பிரிந்துபோய் எனக்கு குழப்பம் உண்டாக்கும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன்.

அந்தப் பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துப்போக வரும் தாய்மார்களில் ஒலிவியா வித்தியாசமானவளாக இருந்தாள். எல்லோருமே இளம் தாய்மார்தான். பளவென்று இருப்பார்கள். இரவு விருந்துக்கு புறப்பட்டதுபோல ஒப்பனையுடன் அலங்காரம் செய்திருப்பார்கள். உடைகள் ஆடம்பரமானவை என்பது பார்த்தவுடனேயே தெரியும். அவர்கள் வரும் வாகனங்களும் உயர்ந்த ரகமாகவே இருக்கும். இதற்கு விதி விலக்கு நான் ஒருத்தன் மட்டுமே. எனக்கு அடுத்தபடி வருவது ஒலிவியா. அவள் முடி கலைந்து இருக்கும். முகம் காலையிலோ மாலையிலோ அதற்கிடைப்பட்ட காலத்திலோ தண்ணீர் என்ற பொருளை காணாததாக இருக்கும். விற்பனைப் பெண், வரவேற்பறைப் பெண் அல்லது உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்போல கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்துவிடும் புன்னகையுடன் அவள் இருப்பாள்.

பொஸ்டன் நகரத்தில் எட்டு லட்சம் கார்கள் இருப்பதாக எங்கோ புள்ளிவிபரத்தில் படித்திருந்தேன். அன்று பார்த்து அத்தனை கார்களும் இருபதாவது நெடுஞ்சாலையில் நின்றன.

இருவருமே சாதுவான குழந்தைகள். ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது விளைவு மோசமாக இருந்தது. நான் வேதியியல் மாணவனாக இருந்தபோது தண்ணீர் போலத் தெரியும் இரண்டு திரவத்தைக் கலந்தபோது குபீரென்று ஊதா நிறமாக மாறியது ஞாபகத்துக்கு வந்தது. அப்ஸரா ஒரு விளையாட்டு சாமானைத் தூக்கினால் அது அனாவுக்கு வேண்டும்; அனா எடுத்தால் அந்த நிமிடமே அப்ஸராவுக்கும் அது தேவை. சிரிக்கும்போது இருவரும் குலுங்கி சிரித்தார்கள்; அழும்போது இருவரும் சேர்ந்து அழுதார்கள்.

How to write an ‘Editor’s Note’ – MSDN Mag

By Stephen Toub

Writing an editor’s note  is not an easy task. Based on my extensive research into many development magazines, I’ve found that to do it correctly you need to start by writing about a topic completely unrelated to anything development-focused.

You then wax poetic about the weather, political affairs, or the latest fad in high-tech gadgetry. And you need to come up with a few minimally thought-out recommendations for strategies that will solve all of the world’s problems.

To make it a truly outstanding editor’s note, however, you also need to invent a new word for something that already has several well-known names, “proclamize” your publication as the best thing since sliced bread, include several acronyms without definition, and throw in a few trite lines of code (which, ideally, will have a few lurking bugs).

When I set out to write this page, I intended to do none of this, but the pattern is difficult to avoid, IMHO. This being my first editor’s note, and most likely my last, I feel no compulsion to continue the pattern with the non sequitur that is supposed to follow—inevitably an attempt at using misdirection to convince the reader that everything discussed up to this point is crucial to her ability to implement the next big software application, or to even comprehend the pages that follow.

Kosu (Novel) – Pa Raghavan : Bits, Metaphors, Quotes

  • கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு
  • சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.
  • ஆட்சி கையில் வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா
  • வாழ்க்கை சுலபமானதுதான். பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத பட்சத்தில்.
  • பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்ட செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.
  • எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.
  •  துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.
  • எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது. அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது.
  • கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கை கூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்கு தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரெண்டு சென்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும்.
  • எப்போதுமே தொடக்கம்தான் சிக்கல்களும் பிரச்னைகளும் கொண்டது. ஒரு படி ஏறிவிட்டால் போதும். பின்னால் வருபவர்கள் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
  • குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகி விடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.
  • ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.
  • சிறியதொரு குன்று போலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும்.
  • ஒரு கட்டத்துக்கு மேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஒடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம்கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.
  • காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது.
  • தீக்குளிச்சாங்க நிரூபிக்க முடியும்? பேசுனா, அரசியல்வாதி பேச சொல்லித் தரணுமான்னுவிங்க. பேசாம திரும்பிப் போனா திமிரப்பாருன்னுவிங்க. நொந்துபோன மனச, அனுமாரு போட்டோ மாதிரி பொளந்துகாட்டத் தெரியலிங்க எனக்கு.

Anbumani chats with ex-colleague Dayanidhi Maran

AnbumanI Ramadoss dayanidhi maran quote

Inspired by: வ..வ..வம்பு

Karaintha Nizhalgal – Asokamithiran (1)

அவர் பேச்சு முடிந்தபிறகு, காலி கப்-சாஸர்கள், தட்டுகள் அகற்றப்பட்ட பிறகு  விருந்தினர் பார்ப்பதற்காகவென்று முந்தைய ஆண்டு ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம் பெற்று, சினிமா விசிறிகள் சங்கம் (ரிஜிஸ்டர்), தலை சிறந்த படம் என்று நற்சான்றிதழ் வழங்கிய தமிழ்ப்படம் ஆரம்பித்தது.

…..

ராம்சிங் அந்தப் பாராட்டை அப்படியே அங்கீகரித்துக் கொண்டான்.

‘சோக அம்சம்தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது’ என்று செக்காரர் சேர்த்துக் கொண்டார்.

இப்போது ராம்சிங்குக்கும் சிறிது சந்தேகம் வந்தது. ஜகன்னாத்ராவ் கண்களில் ஓரளவு தெரியுமளவுக்கு விஷமம் தென்பட்டது. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக் கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கைபோய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.

‘வாழ்க்கையே சோகம்தானே’, என்று ராம்சிங் சொன்னான்.

‘எங்களுக்கு (நாஜி) ஆக்கிரமிப்பு இருந்தது. லட்சக்கணக்கான பேர் நசித்துப் போனார்கள். அப்படியும் எங்கள் கதைகளை விட உங்களுடையதில் சோகம் அதிகமாகத்தான் இருக்கிறது.’

திரவியம் ஏனிந்தப் பேச்சைத் தொடங்கினோம் என்ற சங்கடம் தெரிய நின்றுகொண்டிருந்தார்.

செக்காரர் இறுதியாக ஒன்று கூறி முடித்தார். ‘நானும் மூன்று இந்தியப் படங்களைப் பார்த்து விட்டேன். உங்கள் கதாநாயகர்களுக்கு பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப் பட்டது. அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றுக்கும் அழுது விடுகிறார்.’

எல்லோரும் லேசாகச் சிரித்தார்கள். உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டில் ஒரு சிலரால் கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் பெற்றவர்.

நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் 

Chewing now… Pondering later

  • Never confuse motion with action – Benjamin Franklin
  • Before we set our hearts too much on anything, let us examine how happy are those who already possess it.
  • A friend to all is a friend to none.
  • A great many people mistake opinions for thoughts.
  • Speak not of my debts unless you mean to pay them.
  • Before you criticize someone, walk a mile in his shoes. That way, if he gets angry, he’ll be a mile away, and barefoot.
  • When I die, I want to go like my grandfather did, peacefully in his sleep, not yelling and screaming, like all the passengers in his car.
  • The more you know, the less you understand.
  • To let a fool kiss you is stupid, to let a kiss fool you is worse.
  • War doesn’t decide who’s right, only who’s left.

Quotes: Thinnai VeSaa – Arts, Music, Dance, Performance

தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம் :: வெங்கட் சாமிநாதன்

  • தமிழ் நாட்டில் செவ்விய கலைகளாக, சங்கீதத்திற்கும் நடனத்திற்கும் உள்ள ரசனையின் வியாபகமும் ஆதரவும், இந்தியாவில் வேறு எங்கும் எந்த செவ்விய கலைக்கும் இல்லை.
  • இன்றைய சினிமாவை மீறி, அரசியலை மீறி ராக்ஷஸ பலம் கொண்ட தொலைக்காட்சியையும் மீறி, அது தன்னைக்காத்துக் கொண்டுள்ளது சற்று நம்ப முடியாத ஆனால், சந்தோஷம் அளிக்கும் ஒன்று தான்.

கர்னாடக சங்கீதம் ஒரு நாதோபாசனை என்று சொல்வதுண்டு. இன்று கர்னாடக சங்கீதம் உள்ள நிலையில் அதை நாதம் என்றோ உபாசனை என்றோ எவ்வளவுக்கு சொல்லமுடியும், எவ்வளவு பேரிடம் இதைக் காணமுடியும் என்பது எனக்கு சந்தேகமே.

இவ்வளவு செல்வாக்கும் ஆதரவும் இருந்த போதிலும், இன்று அது பாடுதல் (performance) என்ற அளவிலேயே இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை மீறி நாதத்தில் நம்மையோ, பாடுபவர் தம்மையேவோ மறந்து திளைக்கச் செய்யும் ஒரு அனுபவமாக(experience) எழுச்சி பெறுவது என்பது கிடைப்பதில்லை.

வேறு வார்த்தைகளில் சொன்னால்,

கற்ற காரணத்தால், செய்யுள் இயற்றத்தெரிகிறது, ஆனால் கவிதை பிறப்பதில்லை என்பது போலத்தான்.

இத்தகைய மீறலை, நிகழ்ச்சி அனுபவமாக எழுச்சி பெறுவதை நான் சில சமயங்களில், ஓ.எஸ் அருணிடம், சஞ்சை சுப்பிரமணியனிடம் கண்டிருக்கிறேன். அனேக மற்ற சமயங்களில், ‘ கச்சேரி எவ்வளவு நன்னா அமைஞ்சுட்டது பாத்தியா? என்பது போலத்தான் ஒரு உணர்வு.

ஒரு கிஷோரி அமன்கரோ, உஸ்தாத் அமீர் கானோ, குமார் கந்தர்வாவோ பாடும்போது ஏற்படும் அனுபவ மெய்சிலிர்ப்பு வெகு அரிதாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் இன்று கிடைக்கிறது. ஸ்வரங்கள் ராகமாவது போல, ராகம் ஒரு நாத உலகமாக, ஒரு தவமாக, தன்னை மறந்த லயிப்பாக, சஞ்சாரமாக அனுபவ மாற்றம் பெறுவதில்லை. சங்கீதம் இரண்டு மணிக்கான நிகழ்ச்சி நிரலாக, மாறியுள்ளது.

பாடகர்கள் தம் குரலைப் பற்றிக் கவலைப் படுவது என்பது முன்னரும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. தனக்காகப் பாடுவது, மற்றோர் கேட்பது என்பது இன்றைய நடைமுறையில் இல்லை.

குமார் கந்தர்வாவின் மகன், ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு காளி கோயிலில் தங்கி பூஜை செய்வதும், கோயிலைச் சுத்தப்படுத்துமாக நாட்களைக் கழிப்பவர், பெயர் மறந்து விட்டது, எப்போதாவது யாராவது அழைத்தால் படுவது என்று வாழ்க்கை மாறியுள்ளது அவருக்கு. அப்படி இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த மனம் வேண்டும்.

யாரும் தன் கவனத்தைக் கெடுத்தால், மனம் சரியில்லை என்றால், மேடையை விட்டு எழுந்து விடும் கிஷோரி அமன்கரின் சங்கீத அர்ப்பணிப்பு சங்கீதத்திற்குத் தேவை.

சடங்காக உள்ள ஒன்று பூஜையானால் நல்லது. குறைந்தது அது அர்ப்பணிப்பாக, தன்னை மறத்தலாக அல்லது ஒரு பங்கு பெறும் அனுபவமாகவாவது ஆவது நல்லது. அப்போது தான் அது கலையாகும். இல்லையெனில் பயின்ற தொழில் தான்.

Sathguru Jaggi Vasudev’s Esha Yoga

தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சி :: மாரீசன்
புதிய பார்வை – ஏப்ரல் 16-30, 2007

சமூகம் என்பது பல்வேறு மனிதர்களின் தொகுப்பு. மனிதன் என்பவன் பல்வேறு சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படும் சமூகப்பிரஜையாக இருக்கிறான். ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் குறுக்கும் நெடுக்குமாகப் பல்வேறு சிந்தனைகள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் கவனமும் அதை விட்டு விலகிய வேறு பல சிந்தனைகளும் ஒரு சினிமாவைப் போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இத்தகைய சிந்தனைகளே அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைந்த மனிதனை வேறு தள வரிசைக்கு இட்டுச் செல்கிறது. இதனையே நாம் தேடுதல் என்றுக் குறிப்பிடுகிறோம். இந்தத் தேடுதல் என்பது வாழ்க்கை முழுமை அடையாத தன்மையை, அதிருப்தியை, நாகரிகமாகக் குறிக்கிறது.

தேடுதல் என்பது எது குறித்து நிகழ்கிறது? எதனைத் தேடுகிறோம்? என்ற பல உளவியல், ஆன்மிகம் சார்ந்த கேள்விகளை உள்ளடக்கியே இருக்கிறது. அவரவர் அனுபவர்த்திற்கும் சமூகச் சூழலுக்கும் ஏற்ற வண்ணம் தேடுதலை மனிதர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். வேகமாக மாறிவரும் வாழ்க்கை, கலாசார சிதைவு, பல்வேறு ஊடகங்களின் தாக்குதல், நவ நாகரிக உலகின் ஊடுருவல்கள் தனி மனிதனைப் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகின்றன. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், அன்பு செலுத்த மனிதர்கள் என்ற நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்குள் ஏதோ ஒரு தாகம், அதிருப்தி இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான விடையைத் தேடுபவனையே நாம் தேடுதலில் உள்ளவன் என்று குறிக்கிறோம்.

இவனுக்கு வழிகாட்ட எப்போதுமே சமூகத்தில் உளவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மதவாதிகள், ஆன்மிகவாதிகள் எனப் பல்வேறு ஆளுமைகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு துறையில் மிக ஆழமாக ஈடுபட்டாலும் அந்த ஒரு குறிப்பிட்ட துறையின் ஆளுமை வளர்கிறதே தவிர வாழ்வில் முழுமை வருவதே இல்லை. எனில் வாழ்வின் முழுமை எதில்தான் இருக்கிறது?

Clinton Addresses Harvard Grads

Former President Bill Clinton told more than 1,600 graduating seniors at Harvard College that the biggest problem facing humanity today is people’s tendency to highlight differences and reject their common humanity.

  • ‘I was considering why I was chosen to speak. Maybe because you’re about to name (Drew Gilpin) Faust president, and I think women should run everything now,’ Clinton said in a not-so-veiled reference to his wife, New York Sen. Hillary Rodham Clinton.
  • ‘I believe one of the most important problems is the way people think about each other, that our differences are more important than our humanity, when our humanity is more important than our differences’.
  • “For all the opportunity, there’s a lot of inequality”.
  • “The world is awash today with political, psychological conflicts, which require us to divide up and demean people.”