————————————————————————————–
எனக்கு மதப்பற்று கிடையாது
கவிஞர் சல்மா – நேர்காணல் – வி.சி.வில்வம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் ரொக்கையா என்கிற கவிஞர் சல்மா. பெண்ணுரிமைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், பேரூராட்சி தலைவர், சமூகநல வாரியத் தலைவர் என்கிற பயனுள்ள பல முகங்கள் இவருக்குண்டு. இவரின் பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னும் ஒரு மாலையும், இரண்டாம் ஜாமங்களின் கதை ஆகியவை புகழ்பெற்ற ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
அண்மையில் அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகம் சென்று வந்திருக்கிறார். மே 4,5இல் நிகழ்ந்த தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சி குறித்தான கருத்தரங்கில் இவரின் கவிதைகள், நாவல்கள் சிறந்த படைப்பாக தேர்வாயின. தெற்காசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே படைப்பாளர் இவர். அவரை ‘உண்மை’ இதழுக்காகச் சந்தித்தோம்.
உங்களுக்கான ‘தொடக்கம்’ எப்போது?
பதினாறு வயதில் கவிதை துவங்கியது. பிறகு வாசிக்கும் ஆர்வம் வந்தது. இசுலாமிய சமூகத்தில் எனக்கான கல்வி ஒன்பதாம் வகுப்போடு முடிக்கப்பட்டது. இந்த முடிவு என்னை வெகுவாகப் பாதித்தது. இந்நிலையில் என் எழுத்தும், வாசிப்பும் பல மடங்கு அதிகரித்தன. நிறைய வாசிக்க வேண்டும் என்கிற வேட்கை, என் தேடலை அகலப்-படுத்தியது. கிராமம் போன்ற பகுதியில் வசித்-தாலும், அங்குள்ள நூலகத்தை வெகுவாகப் பயன்படுத்தினேன். வசிக்கும் இடத்தில் வாசிக்கத் தடை விதித்தார்கள். மீறிப் படித்-தேன். தேடித் தேடிப் படித்தேன்.
அத்தேடலில் தான் பெரியார் என் கைக்கு வருகிறார். எத்தனையோ நூல்கள் படித்திருப்-பேன். பெரிய பாதிப்புகள் என்னுள் நிகழ-வில்லை. ஆனால் பெரியார் எழுத்துகள் என் உடலில் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தின. குறிப்-பாக பெண்ணுரிமைக் கருத்துக்கள் என்னை வியப்படையச் செய்தன. குழப்பமான பல நிலைகளிலும் நான் தீர்வு பெற்றேன். எழுதவும், வாசிக்கவும் எனக்கிருந்த எதிர்ப்பை பெரியாரின் துணை கொண்டு முறியடித்தேன்.
எழுதவும், படிக்கவும் இவ்வளவு எதிர்ப்புகள் – இதில் அரசியல் நுழைவு எப்படி சாத்தியம்?
அது இயல்பானது. துவரங்குறிச்சி பகுதி மகளிர் தொகுதியாக மாறிய நேரம். அப்போது பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது. நானும் வேட்பாளராக நிற்கும் நிலை. சுயேச்சையாக நின்று வென்றேன். ‘வென்றேன்’ என்கிற வார்த்தைக்குப் பின் நிறைய போரா-டியுள்-ளேன். ஜமாத் பெரியவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தந்தார்கள். மீண்டு வந்தேன்.
பேரூராட்சி தலைவராக உங்களின் பணி எப்படியிருக்கிறது?
மக்கள் பாராட்டும்வண்ணம் செயல்-பட்டேன். துவரங்குறிச்சி பேரூராட்சி தேர்தல் பல ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. உள்ளூரில் சிலரின் ஆதிக்கத்தில் அது அகப்-பட்டுக் கிடந்தது. என் பொறுப்புக்குப் பின்-னால் முறையான தேர்தல் நடந்தது. அதே-போன்று பேரூராட்சிக்கு 11 கடைகள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு மேல், மிகக் குறைந்த வாடகையில் பலரும் அனுபவித்தார்கள். குறிப்பாக ஆர்.எ°.எ°. ஆட்களின் ஆக்கிர-மிப்பில் இருந்தது. அவர்களை அப்புறப்படுத்தி 11 கடைகளை 18 கடைகளாக மாற்றியமைத்து, இன்றைக்கு ஆண்டு வருமானம் 14 இலட்சம் வருகிறது. இதுபோன்று பல.
அண்மையில் உங்களின் அமெரிக்க வாய்ப்பு மற்றும் வேறு பயணங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?
அமெரிக்கா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சித்துறை இருக்கிறது. தெற்காசிய மொழிகள் அனைத்திலும் இருந்து ஒருவரின் படைப்புகள் தேர்வாகிறது. இம்முறை தமிழில் என் எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்திருந்-தனர். அதற்காக அமெரிக்கா சென்றேன். 2002ஆம் ஆண்டு பெண்ணுரிமை மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்று வந்தேன். உள்ளாட்சி அமைப்பில் சிறப்பாக செயல்பட்-டதற்காக 2005ஆம் ஆண்டு பாகி°தான் சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 2006இல் சென்று வந்தேன்.
பொது வாழ்க்கையில் பலப்பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டி வருமே, உங்களுக்கு எப்படி?
இல்லாமல் இருக்குமா? அதிகபட்சமாய் சந்தித்து விட்டேன். என் அரசியல் நிகழ்வு-களுக்கு என் குடும்ப ஆதரவு உண்டு. அதனால் கொஞ்சம் பலம் பெற்றேன். எழுத்து, பயணம், அரசியல் இவைகளைக் கடக்க ஆண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. ஒரு பெண்ணாய் நான் நிறைய போராடியுள்ளேன். பல நிலைகளையும் கடந்துதான் இன்றைக்கு தமிழக அரசால் சமூகநல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
திராவிடர் கழகம் குறித்த உங்களின் பார்வை?
என் வாழ்வின் தொடர் போராட்டங்களில், எனக்கு எல்லாமுமாக இருந்தது தந்தை பெரியார் கருத்துகளே! அந்த இயக்கத்தின் மீது எப்போதுமே நான் அபிமானம் கொண்டுள்-ளேன். அரசியலுக்கு வராமல் பல சாதனை-களை நிகழ்த்துவது திராவிடர் கழகமே! குறிப்பாக ஆசிரியர் மீது நான் தனி மரியாதை வைத்துள்ளேன். அவர்களின் தொடர் உழைப்பும், சுறுசுறுப்பும் என்னை வியப்-படையச் செய்துள்ளன. இந்த இயக்கமே பெண்களை மேம்படச் செய்யும்.
மதம் குறித்து?
எனக்கு மதப்பற்று கிடையாது. மனிதராக வாழவே ஆசை. பெண்ணுரிமைக் கருத்துகளை அதிகம் வலியுறுத்துவேன். பெண்களின் பெயருக்குப் பின்னால் கணவன் அல்லது தந்தையின் பெயரை இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனித்த அடையாளம் தேவையாக உள்ளது.
– நேர்காணல் – வி.சி.வில்வம்
Continue reading →