Category Archives: Lyrics

Nandha – Engengo Kaalkal Sellum Paathayil

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
உன் சொந்தம் இங்கு யார் யாரோ?
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..
எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?
எதனைக் கொண்டு போகின்றோம்..?
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?
வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?

அழ வைக்கும் ராஜா & எஸ் வரலஷ்மி மீண்டும் வேண்டும்

YouTube – Unnai Naan Ariven from Guna
tamil Rekha Gunaa Kamal Guna

படம்: குணா
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, எஸ் வரலஷ்மி
எழுதியவர்: வாலி

உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்

கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்

யாரிவர்கள் மாயம் மானிடர்கள்
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்

தேவன் என்றால் தேவனல்ல
தரை மேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவனல்ல
என்னைப் போல் இல்லை சலனம்

நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச் செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தாயோ
காற்றே நீயே சேற்றின் ஆடை கொள்ள வேண்டும்

YouTube – Appanendrum from Gunaa

Vairamuthu Question & Answer – Incidents, Detractors

தொடர்புள்ள பதிவு:

Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs

அ.அமலோர்ப்பவமேரி, ஆத்தூர்.

உங்கள் இலக்கியப் பயணத்தில் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

‘தினமணி கதிரி’ல் சுதாங்கன் ஆசிரியராயிருந்தபோது, ‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்ற ஒரு தொடரை இலக்கிய ஆர்வலர் சிவா எழுதி வந்தார். தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடிக் கவிஞர் ஒருவர் தீப்பிழம்பாய்ச் சினந்தெழுந்தார். ஒரு சிறு பத்திரிகையில் எதிர்ப்பறிக்கையும் எழுதி வெளியிட்டார். ‘‘யாரோடு யாரை ஒப்பிடுவது? ‘வள்ளுவர் கடல்’; வைரமுத்து குட்டை’’ என்று முடித்திருந்தார்.

அறிக்கை வந்த அடுத்த வாரம் அதே கவிஞரின் தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழா. நானும் அதில் சொற்பொழிவாளன். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மன்றம் முழுக்க நிலவியது ஒரு மயான அமைதி. நான் எழுந்தேன். ஒலிபெருக்கி முன்னால் முப்பது நொடிகள் மௌனம் காத்தேன்; பிறகு பேசினேன்.

‘‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்று ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அவரவர் உரிமை. அறிக்கை வெளியிடுவது அவரவர் திறமை. ஆனால் அறிக்கையில் பொய் சொல்லக்கூடாது. அறிக்கை வெளியிட்டவர் ‘வைரமுத்து குட்டை’ என்று முடித்திருக்கிறார். நீங்களே சொல்லுங்கள். நானா குட்டை? இங்கிருக்கும் கவிஞர்களில் நான்தானே உயரம்?’’ என்றேன். இறுக்கமாயிருந்த அரங்கம் இன்னிசையாய் சிரித்தது.

சில எதிர்ப்புகள் திருத்திக்கொள்ள; பல எதிர்ப்புகள் சிரித்துக்கொள்ள.

க.சோமசுந்தரம், குடியாத்தம்.

‘‘எச்சத்தால் காணப்படும்’’ என்கிறாரே வள்ளுவர்! அது என்ன எச்சம்?

நீ இல்லாத இடத்திலும், காலத்திலும் உன் பெருமையோ, சிறுமையோ பேசும் நுண்பொருளோ பருப்பொருளோ உன் எச்சம்.

ஜான். புஷ்பராஜ், சீர்காழி.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் நீங்கள் கூர்ந்து கவனிக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

சன் டி.வி. _ சென்றவார உலகம்

ஜெயா டி.வி. _ தேன் கிண்ணம் (கறுப்பு வெள்ளைப் படப் பாடல்கள்)

விஜய் டி.வி. _ நீயா? நானா?

ராஜ் டி.வி. _ செய்திகள்

மக்கள் தொலைக்காட்சி _ நீதியின் குரல்.
என். உஷாநந்தினி, மண்ணச்சநல்லூர்.

கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல்களைச் சொன்னீர்களே… கதாநாயகிகளுக்கு?

பத்மினி _ பூவே பூச்சூட வா (பூவே பூச்சூட வா),

சரோஜாதேவி _ சின்னக்கண்ணா (தாய்மேல் ஆணை),

லட்சுமி _ கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்),

சுஜதா _ தாலாட்டு மாறிப்போனதே (உன்னை நான் சந்தித்தேன்),

ஸ்ரீப்ரியா _ தேர்கொண்டு சென்றவன் (எனக்குள் ஒருவன்),

ராதிகா _ தென்கிழக்குச் சீமையில (கிழக்குச் சீமையிலே),

சரிதா _ கண்ணான பூ மகனே (தண்ணீர் தண்ணீர்),

அம்பிகா _ பாடவா உன் பாடலை (நான் பாடும் பாடல்),

ராதா _ ராசாவே ஒன்ன நம்பி (முதல் மரியாதை),

சுஹாசினி _ நானொரு சிந்து (சிந்துபைரவி),

பூர்ணிமா _ சாலையோரம் சோலை ஒன்று (பயணங்கள் முடிவதில்லை),

ரேவதி _ வான்மேகம் (புன்னகை மன்னன்),

பானுப்ரியா _ நாடோடி மன்னர்களே (வானமே எல்லை),

ஊர்வசி _ சிறிய பறவை (அந்த ஒரு நிமிடம்),

குஷ்பூ கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை),

ரோஜா _ ஆசை கேப்பக்களிக்கு ஆசை (தமிழ்ச்செல்வன்),

ஷோபனா _ முத்தம் போதாதே (எனக்குள் ஒருவன்),

நதியா _ அன்புள்ள அப்பா (அன்புள்ள அப்பா),

அமலா _ புத்தம் புது ஓலைவரும் (வேதம் புதிது),

மதுபாலா _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா),

நக்மா _ தங்கமகன் இன்று (பாட்ஷா),

மனிஷாகொய்ராலா _ கண்ணாளனே (பம்பாய்),

ஐஸ்வர்யாராய் _ நறுமுகையே (இருவர்),

சிம்ரன் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாதமனமும் துள்ளும்),

ஜோதிகா _ திருமண மலர்கள் (பூவெல்லாம் உன் வாசம்),

ஷாலினி _ சிநேகிதனே (அலைபாயுதே),

யுக்தா முகி _ யுக்தா முகி (பூவெல்லாம் உன் வாசம்),

ரீமாசென் _ ஆரிய உதடுகள் உன்னது (செல்லமே),

த்ரிஷா _ நீ யாரோ? நான் யாரோ? (ஆய்த எழுத்து),

மீனா _ தில்லானா தில்லானா (முத்து),

சௌந்தர்யா _ நகுமோ (அருணாசலம்),

சுஷ்மிதாசென் _ சோனியா (ரட்சகன்),

கஜோல் _ பூப் பூக்கும் ஓசை (மின்சாரக் கனவு),

மீனாட்சி சேஷாத்ரி _ குளிச்சாக் குத்தாலம் (டூயட்),

ஷில்பாஷெட்டி _ தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை (மிஸ்டர் ரோமியோ),

சிநேகா _ காடுதிறந்தே கிடக்கின்றது (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்),

மீராஜாஸ்மின் _ சண்டக்கோழி (ஆய்தஎழுத்து),

அசின் _ மனமே மனமே (உள்ளம் கேட்குமே).

சட்டென்று நினைவுக்கு வந்தது இவ்வளவுதான்; விட்டுபோனவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..

கே: வாழ்க்கை என்பது?
ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.

கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்?
ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”

கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?
ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்;

காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்;

அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்;

நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்;

கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்;

மூத்த சவரத் தொழிலாளி;

விதவைகளின் மாமியார் மற்றும்

விலைமகளின் தாயார்.

Nina Simone – Backlash Blues

NPR : Remembering Singer Nina Simone

Mr. Backlash, Mr. Backlash
Just who do think I am
You raise my taxes, freeze my wages
And send my son to Vietnam

You give me second class houses
And second class schools
Do you think that alla colored folks
Are just second class fools
Mr. Backlash, I’m gonna leave you
With the backlash blues

When I try to find a job
To earn a little cash
All you got to offer
Is your mean old white backlash
But the world is big
Big and bright and round
And it’s full of folks like me
Who are black, yellow, beige and brown
Mr. Backlash, I’m gonna leave you
With the backlash blues

Mr. Backlash, Mr. Backlash
Just what do you think I got to lose
I’m gonna leave you
With the backlash blues
You’re the one will have the blues
Not me, just wait and see

Langston Hughes

பாடலைக் கேட்க

நன்றி : Ahhh, Nina « And She Wrote

Random Songs

வீட்டில் இலக்கின்றி தட்டுமுட்டு வேலைகள் செய்யும் நேரம். சத்தமாக பாடல் பாடிய போது வாயில் முணுமுணுத்தவை:

1. ‘காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்;
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்’

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

2. ‘பருவ மழை பொழியப் பொழிய உறவு தாம்பத்யம் ஆகாதோ;
இவள் வாழ்வில் பருவ மழை பெய்ததால் உடம்பு பாலைவனமாகியதே’

வேறு இடம் தேடிப் போவாளோ 

3. ‘இது தேவதையின் பரிசு; யாரும் திருப்பித்தர வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நடக்க ஒரு சம்மதமும் வேண்டாம்’

சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

4. ‘பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்தில’

நிலா அது வானத்து மேலே

5. ‘தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுதே’- ராஜராஜ சோழன் நான்

6. ‘காலங்கள் போனால் என்ன…
தலை சாய இடமா இல்லை; இளைப்பாறு பரவாயில்லை’

அகரம் இப்போ சிகரமாச்சு

7. ‘நிலவெங்கே சென்றாலும் பின்னால் வராதா;
நீ வேண்டாமென்றாலும் வட்டமிடாதா’

புது ரூட்டுலதான்

8. ‘மனதின் ஆசைகள்; மலரின் கோலங்கள்; குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்’

புத்தம் புதுக்காலை பொன்னிற வேளை

9. ‘நடந்தவை எல்லாம் வேஷங்களா; நடப்பவை எல்லாம் மோசங்களா…
திரை போட்டு நீ மறைத்தாலென்ன தெரியாமல் போகுமா?’

வாழ்வே மாயமா பெருங்கதையா கடும்புயலா வெறுங்கனவா

10. ‘ஆட்டுக்கு வேலி தேவையும் இல்ல;
என் பாட்டுக்குத் தாளம் தேவையும் இல்ல’

ஒயிலாப் பாடும் பாட்டில ஆடுது ஆடு

முந்தைய பத்து

Anbu – Thavaminri Kidaitha Varame

வித்யாசாகரின் இசையில் ‘அன்பு‘ திரைப்படத்தில் வரும் பாடல்
பாடகர்கள்: ஹரிஹரன் & சாதனா சர்கம்

தவமின்றி கிடைத்த வரமே…
இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

நீ சூரியன்…
நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன்
நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன்
நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன்
நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்!

Vairamuthu lists his favorite Movie Lyrics & Songs

வாசு.ஸ்ரீராம், செந்தலை.

தமிழ் சினிமாக் கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது?

பட்டியல் நீளும் ; பரவாயில்லையா?

  • எம்.ஜி.ஆர். –_ சந்தனப்பேழையே (அஞ்சலிப்பாடல்)
  • சிவாஜி _ பூங்காத்து திரும்புமா (முதல் மரியாதை)
  • சிவக்குமார் _ கலைவாணியே (சிந்துபைரவி)
  • ரஜினிகாந்த் _ ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் (படிக்காதவன்)
  • கமல்ஹாசன் _ அந்திமழை பொழிகிறது (ராஜபார்வை)
  • விஜய்காந்த் _ எரிமலை எப்படிப் பொறுக்கும் (சிவப்பு மல்லி)
  • கே. பாக்யராஜ் _ எண்ணியிருந்தது ஈடேற (அந்த ஏழுநாட்கள்)
  • ராஜேஷ் _ ஓடுகிற தண்ணியிலே (அச்சமில்லை அச்சமில்லை)
  • பிரபு _ பூவே இளைய பூவே (கோழி கூவுது)
  • அர்ஜுன் _ தாயின் மணிக்கொடி (ஜெய்ஹிந்த்)
  • சத்யராஜ் _ தாயும் யாரோ (பெரியார்)
  • சரத்குமார் _ கொட்டப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் (நாட்டாமை)
  • விக்ரம் _ மூங்கில் காடுகளே (சாமுராய்)
  • மோகன் _ இளையநிலா பொழிகிறதே (பயணங்கள் முடிவதில்லை)
  • கார்த்திக் _ பனிவிழும் மலர்வனம் (நினைவெல்லாம் நித்யா)
  • தியாகராஜன் _ ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்நேரம் (கொம்பேறி மூக்கன்)
  • பார்த்திபன் _ அம்மா யாரு அப்பா யாரு (புதிய பாதை)
  • பாண்டி-யராஜன் _ ஆராரிரோ பாடிய-தாரோ (தாய்க்-கொரு தாலாட்டு)
  • பாண்-டியன் _- பொத்-திவச்ச மல்லிகை மொட்டு (புதுமைப் பெண்)
  • மோகன்லால் _ நறுமுகையே (இருவர்)
  • முரளி _ ஒரு ஜீவன் அழைத்தது (கீதாஞ்சலி)
  • ராமராஜன் _ ஓடம் எங்கே போகும் (நம்ம ஊரு நல்ல ஊரு)
  • அரவிந்த் சாமி _ காதல் ரோஜாவே (ரோஜா)
  • பிரபுதேவா _ என்னவளே அடி என்னவளே (காதலன்)
  • விஜய் _ சர்க்கரை நிலவே (யூத்)
  • அஜீத் _ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் (அமர்க்களம்)
  • சூர்யா _ ஜன கண மன (ஆய்த எழுத்து)
  • மாதவன் _ தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டால்)
  • பிரசாந்த் _ அன்பே அன்பே கொல்லாதே (ஜீன்ஸ்)
  • ரகுமான் _ வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)
  • தனுஷ் _ என்னம்மா கண்ணு (திருவிளையாடல்)
  • ஸ்ரீகாந்த் _ ஆப்பிள் பெண்ணே (ரோஜாக்கூட்டம்)
  • ஜெயம் ரவி _ மண்ணிலே வந்து உடையிது வானம் (மழை)
  • விஷால் -_ ஆரிய உதடுகள் (செல்லமே)
  • ஷாம் _ காதல் வந்தால் சொல்லி அனுப்பு (இயற்கை)
  • ஜீவா _ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யும்)
  • ஆர்யா _ ஒவ்வொரு பிள்ளையும் (வட்டாரம்)
  • பிருதிவிராஜ் _ காற்றின் மொழி (மொழி)

A Song and a Blog Post

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா என் வாழ்க்கை

உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனிமையில்தான் உருகும்

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே என்னிடம் இல்லை

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை உண்டோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ

செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே.

Raji’sView: மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு:

அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

Ten Random Songs – Ten Music Directors

  1. பாடல்: கருடா கருடா
    • பாடகர்: கிருஷ்ணராஜ், சுஜாதா
    • இசை: தேவா
    • படம்: நட்புக்காக
  2. பாடல்: அட யாரோ
    • பாடகர்: எஸ்பிபி
    • இசை: டி ராஜேந்தர்
    • படம்: ரயில் பயணங்களில்
  3. பாடல்: ஆடிடும் ஓடமாய்
    • பாடகர்: ஜானகி, மலேசியா வாசுதேவன்
    • இசை: கங்கை அமரன்
    • படம்: சுவரில்லாத சித்திரங்கள்
  4. பாடல்: வண்ண வண்ணப் பூவே
    • பாடகர்: ஜானகி
    • இசை: இளையராஜா
    • படம்: பூட்டாத பூட்டுக்கள்
  5. பாடல்: தேனூறும் ராகம்
    • பாடகர்: ஜானகி
    • இசை: லஷ்மிகாந்த்-ப்யாரெலால்
    • படம்: உயிரே உனக்காக
  6. பாடல்ஆகாயம் பூக்கள்
    • பாடகர்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
    • இசை: சிற்பி
    • படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
  7. பாடல்: காடு கொடுத்த கனியிருக்கு
    • பாடகர்:
    • இசை: கேவி மகாதேவன்
    • படம்: நீதிக்குப் பின் பாசம்
  8. பாடல்: கவிதைகள் சொல்லவா
    • பாடகர்: எஸ்பிபி, சுஜாதா
    • இசை: கார்த்திக் ராஜா
    • படம்: உள்ளம் கொள்ளை போகுதே
  9. பாடல்: இதற்குப் பெயர்தான் காதலா
    • பாடகர்: ஹரிஹரன், சுஜாதா
    • இசை: பரத்வாஜ்
    • படம்: பூவேலி
  10. பாடல்: செல்வமே, ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
    • பாடகர்: எஸ்பி ஷைலஜா
    • இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    • படம்: அமரகாவியம்

Why I admire TR – 1

Ithu Kuzhanthai Paadum Thalaatu

Movie Name: Oru Thalai Raagam
Singer: Balasubramanyam S P
Music Director: Rajender T

Idhu Kuzhandai Paadum thaalatu
idhu iravu nera poobaalam
idhu merkil thoonthrum udhayam
idhu nadi-illaada oodam

nadai maranda kazhalkal thannin thadaiyathai parthen
vadamilantha ther-rathu ondrai naalthoorum illukiren
sirakilantha paravai ondrai vaanathil paarkiren
sirakilantha paravai ondrai vaanathil paarkiren
uravuvuraatha pennai yenni naalleallaam vazhkiren

(Idhu Kuzhandai…)

Verum naarril karam kondu poomaalai thodukiren
verum kaatril uli kondu silai ondrai vadikiren
vidinthu vita poozhuthil kuda vinai-innai paarkiren
vidinthu vita poozhuthil kuda vinai-innai paarkiren
virupanmila pennai yenni ulagai naan verukiren

(Idhu kuzhandai…)

ulamarinda pinthaanea avalai naan ninaithathu
ularvuvullaval yenna thaanaa manathai naan koodhuthathu
uyireillantha karuvai kondhu kavithai naan vadipathu
uyireillantha karuvai kondhu kavithai naan vadipathu
oruthaalaiyaai kaathaliyea yethanai naal vazhvadu

(Idhu Kuzhandai…)
றேடியோஸ்பதி: இது குழந்தை பாடும் தாலாட்டு

பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு
படம்: ஒருதலை ராகம்
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர்: T ராஜேந்தர்

இது குழந்தை பாடும் தாலாட்டு!
இது இரவு நேர பூபாளம்!
இது மேற்கில் தோன்றும் உதயம்!
இது நதியில்லாத ஓடம்!

(இது குழந்தை பாடும்…..)

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்

(இது குழந்தை பாடும்…..)

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்

(இது குழந்தை பாடும்…..)

உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது

(இது குழந்தை பாடும்…..)

பாடும் நிலா பாலு!: இது குழந்தை பாடும் தாலாட்டு