நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons
தொடர்புள்ள பதிவு: Fitna – தேவையற்ற அச்சுறுத்தல் | Pa. Raghavan
தொடர்பில்லாத பதிவு: குப்பை வலை: பாலாஜி சித்ரா கணேசன்: “‘பிரபாகரன்’ வளர்க! பிரபாகரன் ஒழிக!”
நன்றி: Ted Rall, comics, editorial cartoons, email comics, political cartoons
தொடர்புள்ள பதிவு: Fitna – தேவையற்ற அச்சுறுத்தல் | Pa. Raghavan
தொடர்பில்லாத பதிவு: குப்பை வலை: பாலாஜி சித்ரா கணேசன்: “‘பிரபாகரன்’ வளர்க! பிரபாகரன் ஒழிக!”
மாலனின் தினமணிக் கட்டுரை – எதிர்வினை மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக தொடர்பாக:
1.
கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும்
…
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற காரணத்தாலேயே ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பது போன்றவற்றை யாரும் செய்யக்கூடாது என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது என்றார்.
First Amendment என்று அமெரிக்காவில் பெருமையாக சொல்லிக் கொள்வது பாராட்டத்தக்கது. இஸ்லாமியர்களை புண்படுத்தும் டென்மார்க் கேலிச்சித்திரங்களை வெளியிடுவதாகட்டும்; வெள்ளை இனத்தவர்களே உயர்ந்தவர்கள் என்று பறை சாற்றி, கருப்பர்களை ஆப்பிரிக்காவிற்கே திரும்பப் போகச் சொல்லும் கூ க்ளூ க்ளானுக்கு (Ku Klux Klan) உரிமை தருவதில் ஆகட்டும்; இராக் போர் எதிர்ப்பை சுட்டிக்காட்ட, ஜனாதிபதி வீட்டின் முன் தர்ணா போடுவதாகட்டும்…
கருத்துகள் வெளியில் வர வேண்டும்; முட்டி மோதிக் கொள்ள வேண்டும்; அவர்களின் கேணத்தனத்தையோ புத்திசாலித்தனத்தையோ பொதுமக்களே தெரிந்து கொள்வார்கள். அதற்கேற்ப ஆதரவு பெருகலாம்; அல்லது வாதத்தின் செறிவற்ற தன்மை விளங்கிக் கொள்ளப்படும்.
தொடர்புள்ள பதிவு: Case of the Month October 1999
சுடச்சுட அலசப்படும் புத்தகம்: Amazon.com: Freedom for the Thought That We Hate: A Biography of the First Amendment: Anthony Lewis: Books
குறிப்பிடப்பட்ட தினமணி கட்டுரையின் பிரதி இங்கே கிடைக்கிறது: தடுமாறுகிறார் முதல்வர், ஏன்? – மாலன்
2.
தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை
…
தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது?
‘ருஷியாவுக்கு புதிய அதிபர் வந்திருக்கிறார். இனி புடின் செல்வாக்கு செல்லாக்காசு’ என்று சொல்வது போல் இருக்கிறது இந்த போர் விவகாரம். இராணுவ உடை போட்டுக் கொள்ளவில்லை; அதனால் அவர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் பங்குபெற மாட்டார் என்பது 100% தவறு. அப்பொழுது வாசிக்க கிடைத்த நேரடி பதிவுகளில் தமிழ்செல்வன் கடைசி வரை போராளியாகவே, திரைமறைவு தாக்குதல் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாகவும், அதையே விரும்பியதாகவும் பகிர்ந்தது கிடைக்கிறது.
பூட்டோ இறந்தால் தீக்குளிப்பது முதல் சுகார்தோ மறைவு வரை தொண்டர்கள், தங்களுக்கு பணிக்கப்பட்டதை குழு மனப்பான்மையோடு துக்கம் அனுஷ்டிப்பதை வைத்து, ‘அய்யோ பாவம்… நாலு பேருக்கு நல்லது செய்ததால்தானே கண்ணீர் விடுகிறார்கள்’ என்பது போன்ற வாதமும் ஏற்றத்தக்கதன்று.
அதிகாரபூர்வமாக கன்சலேட், ஹை கமிஷன் போன்ற பெயர்களில் உளவு செய்தியை சேகரிப்பார்கள். ஈழம் தனி நாடு ஆகாத காரணத்தினால், அதிகாரபூர்மில்லாத 007 ஏஜென்டாக தமிழ்செல்வன் செயல்பட்டார். அங்கு தூதரக அதிகாரி என்னும் போர்வை; இங்கே சமாதான தூதுவர் என்னும் வெளிப்படுதல். அவர் ‘இறந்ததை வைத்து மேலும் காசு சம்பாதிக்கலாம்’ என்னும் பிரபாகரனின் திட்டமும் ஒத்துழைக்க தமிழ்செல்வன் பலிகடா ஆகிறார்.
என்னுடைய முந்தைய பதிவு: ஈ – தமிழ்: தமிழ்ச் செல்வனின் மரணம்
தொடர்புள்ள செய்தித் தொகுப்பு, பதிவுகள், வரலாறு, வலையகம்: Snap Judgement: LTTE
முதலில் விடை தெரியாத கேள்வி:
அமைதியைக் குறிவைத்து இப்படி ஏகப்பட்ட ஆக்க பூர்வமான ரணிலுக்கு தமிழர்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? ‘நிச்சயம் ஒடுக்குவேன்‘ என்று அறிவித்த ராஜபக்சவுக்கு 51 சதவீதமும், பேச்சுவார்த்தையில் உறுதுணையாற்றிய விக்கிரமசிங்க்வுக்கு 49 சதவிகிதமும் வாக்கு கிடைக்கிறது.
முன்னாள் ஜனாதிபதியாகி ஓய்வெடுக்கும் சந்திரிகா குமாரதுங்கா. தமிழர்கள் வாக்களித்திருந்தால் மீண்டும் ரணில் வந்திருப்பார்.
இலங்கையில் சாதாரண பொதுபுத்தி எடுபடாது. ‘இப்படித்தான் யோசிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால், நேர் எதிர் வியூகம் அமைத்து பாதாள குழியில் விழுவது போன்ற முடிவுகள் சகஜம். இதை பின்னணியாக வைத்துக் கொண்டுதான் ‘அடுத்து என்ன‘ என்று ஆருடம் போடமுடியும்.
இலங்கை அரசுக்கு தமிழர்கள் மேல் பரிவு இருப்பது போல் காண்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். சிலசமயம் இந்த நாடகத் தோற்றத்தில் வெற்றி காண்கிறார்கள். முல்லைத்தீவு சம்பவம் போல பெரிய தாக்குதல்கள் முதல் அன்றாடப் போரில் இறப்புகள் உட்பட, ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு மாற்றான சக்தியாக இல்லாமல், ரேசிஸ்டாக பேரினவாதத்திற்கு ஆதரவான சித்தரிப்புக்குள் அடங்கிப் போகிறார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் போரின் மகத்துவம் தெரிந்தே இருக்கிறது. சுனாமி வந்தால் பணம் கிடைக்கும். போர் என்றால் பணம் கொட்டும். இதை முன்னிட்டுதான் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது முக்கியமானதாகிறது. இதனால் ஆட்கடத்தல், போதை மருந்து சரக்கு பரிமாற்றம் போன்ற அதிகாரபூர்வமற்ற வழிமுறைகளினால் நிதி திரட்டப்படும். பிரபாகரனுக்கு கையிருப்பு குறைவதை விட கரும்புலிகளின் சேர்க்கைதான் மிகப் பெரிய பிரச்சினை.
சிறார்களை முளைச்சலவை செய்கிறார்கள்; கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்; அப்பாவி சிங்களர்களைக் கொல்கிறார்கள் போன்ற மனித உரிமை நெறிகளை கைவிட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் தோற்றம் காண்பிக்கும்வரை அவர்கள் மீது கரிசனப் பார்வை உலக அரங்கில் கிட்டப்போவதில்லை.
சூடான், ருவாண்டா மாதிரி பிரச்சினை இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்று ஐ.நா. எண்ணுகிறது. ஈராக், இரான் மாதிரி எண்ணெய் வளமும் கிடையாது. அப்புறம் எப்படி கரிசனம் கிடைக்கும்?
சைப்ரஸுக்கே இப்போதுதான் தனி நாடாக முடிகிறது. ஃபாக்லாந்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது போல் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளே முடிவுறாத நிலையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு அறிவுரை சொல்லி, ஈழத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, சுதந்திரம் கிடைக்கும் அதிகாரத்தை தரும் நிர்ப்பந்த நிதர்சனங்களை வலியுறுத்தும் நிலையில் இல்லை. சீனா, ரஷியா, இந்தியா போன்ற இன்ன பிறருக்கும் இப்போதைய குழப்ப சிக்கல்களே சாலச் சிறந்ததாக இருக்கும் வேளையில் தெற்காசிய கூட்டமைப்புகளும் இடித்துரைத்து ராஜபக்ஷவை கண்டிக்க முடியாத அவலம்.
விடுதலைப் புலிகளிடம் இன்னும் போதுமான அளவு நிலப்பரப்பு இல்லை. அதற்கு ஈடாக உயிரின் அருமை தெரியாத, தற்கொலையை விரும்புவதற்கு அடிமையாக்கப்பட்ட, கரும்புலிகள் நிறைய இருக்கிறார்கள்.
பேரம் பேச தேவையான அளவு இராச்சியம் கிடையாது. ஆனால், அதற்கு ஈடாக அமைதி காலத்தில் சேகரித்த படைகலன்கள் குவிந்திருக்கிறது.
செத்து மடிவதற்கு சிறார்களும் அவர்கள் சக தமிழர் மீதோ அல்லது எதிராளி மீதோ வீசுவதற்கு சவாப்தாரியாகாத குண்டுகளும் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை பாவ்லாக்கள் கிடைக்காது.
கடைசியாக இஸ்லாமியர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு புலிகளும் ஆகவில்லை; இலங்கை அரசு மீதும் கரிசனம் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலை பரிதாபகரமானது!
எது நடந்தாலும் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பொறுப்பேற்காமல் ‘அந்தப் பக்கம்தான் இந்த நிலை/அசம்பாவிதத்தீற்கு காரணம்‘ என்று சுட்டுவிரல் விளையாட்டு மட்டுமே முடிவாக சொல்ல முடிகிறது.
முந்தைய பதிவு: ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்
முதலில் கதை.
பாஸ்டனில் இன்று அடித்த லேசான பனி போன்ற குளிர் இரவு. ஆனால், கதை நடப்பது பழைய தில்லி. இராஜாதி ராசா அக்பர் அலுங்காமல் குலுங்காமல் நடை பயிலுகிறார். வானத்தில் நிலா பளிச்சென்று பாடலுக்கு மேக்கப் போட்ட அசின் போல் சிரிக்கிறது. அரண்மனை சிற்றோடையில் அசின் தெரிவதாய் நினைத்து தொட்டுப் பார்க்க சில்லென்று காதலில் ஷாக்கடிக்காமல், கை உறைய வைக்கும் குளுமை.
சமாளித்துக் கொண்டு, ஜொள்ளைத் துடைத்துக் கொண்டு பாதுகாப்புக்கு ‘ஆமாம் அரசே‘ போடும் பொடியர்களிடமும், புத்திசாலியாக தன்னைக் காப்பாற்றும் வகை அறிந்த பீர்பாலிடமும் சவடால் விடுகிறார். ‘இந்தத் தண்ணீரில் பகலவன் உதயமாகும் வரை எவனாவது நிற்க முடியுமா?’
தான் எதற்கும் பொறுப்பேற்று தர்மம்/சங்கடம் போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாத மந்திரி தண்டோரா போடுகிறார். அரசருக்கும் எவனோ அகப்பட்டு இரா முழுக்க frozen to death ஆனது தனிக்கதை.
ஈழப்போரில் பிரபாகரனும் பீர்பால் போல் ‘கரும்புலியாவது யாரு’ என்று வினவ அப்பாவிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அக்பர் சாலை போட்டார். அசோகர் மரம் நட்டார் மாதிரி விடுதலைப்புலிகள் ஏதாவது பாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது புத்தகம்: One Day the Soldiers Came: Voices of Children in War – Charles London
கடைசியாக இரு தலைவர்கள்: சிட்டி க்ரூப்பும் மெர்ரில் லின்ச்சும் கொண்டாடிய சி.யீ.ஓ.க்கள்.
அமெரிக்காவில் கடன் கொடுப்பதில் எல்லோரும் தாராளமாக இருந்த காலம், கடந்த காலம். வீடு வாங்குவதற்காக வரவுக்கு மேலே பத்தணா கேட்கும் பத்திரங்கள் விற்று வந்தார்கள். அப்படி தாராளமாக திறந்து விட்டு, தங்கள் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கிக் கொண்டார்கள்.
இந்த இருவர்கள் மட்டுமல்ல. அனைத்து நிதித்துறையும் செய்ததுதான். இருந்தாலும் இருவரும் பணால் ஆகி இருக்கிறார்கள்.
நேரடியாக களத்தில் இறங்கி தானப்பிரபுவாக அள்ளிவிடச் சொன்னது இவர்கள் அல்ல என்றாலும், பொறுப்பு என்றோ, கடமை என்றோ, பலிகடா வேண்டும் என்றோ, பிறருக்கு நம்பிக்கையூட்ட இன்னொருவர் தேவை என்றோ விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
தியாகம் என்று சொல்ல முடியாதபடி பல மில்லியன் வருவாயை வழித்துக் கொண்டு சென்றாலும், தவறான பாதையில் அழைத்து சென்றதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் பதவியிழந்தார்கள்.
பிராயசித்தமாக, பிறிதொரு பாதையில் செல்வதற்கு புது முகம் தேவை என்பதற்காக, மாற்றுவழியை உறுதியுடன் நம்புபவர் வேண்டும் என்பதற்காக கழற்றி விடப்பட்டார்கள்.
பங்குச்சந்தை ப்ரெஷருக்கு மட்டுமல்ல… உலக அரங்கிலும் நம்பிக்கையூட்ட பிரபாகரன் விலகினால்தான் ஈழத்துக்கு விடுதலை.
பின்னணி/தொடர்புள்ள பதிவுகள், செய்திகள்/தொகுப்பு: Snap Judgement: LTTE
அமெரிக்காவில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தாலும் ஹைத்தி, க்வெதமாலா போன்ற நாடுகள் முன்னேறாமல் உள்நாட்டு கலகம், முடியாட்சி, அடக்குமுறை போன்ற சகல வாஸ்துகளுடனும் கோலோச்சுகின்றன. ஏன்? அப்போதும் ஐ.நா. இருந்திருக்கிறது. இருந்தாலும் கொடுங்கோலர்களுக்கும் இராணுவத்தைக் கைப்பிடியில் வைத்திருந்தவர்களுக்கும் கொண்டாட்டம்தான். ஒரு நாட்டின் வரலாறு…
1. The Art of Political Murder by Francisco Goldman | Chron.com – Houston Chronicle
2. ‘The Art of Political Murder’ by Francisco Goldman – Los Angeles Times: “A look at the 1998 murder of a Guatemalan bishop in the aftermath of the country’s 30-year civil war.”
3. Uncover what violence begets in ‘Art of Political Murder’
4. A meddlesome priest – The Boston Globe
1. முதலாம் சரித்திர குறிப்பு: வெற்றி
/* இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? */
நான் கேள்விப்பட்ட தகவலொன்றையும் [உறுதிப்படுத்தப்படாத தகவல்] இங்கே
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.
ஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.
இந்திய நடுவண் அரசு, ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளைச் செய்து வரும் போதும் விடுதலைப் புலிகள் இந்திய நலனுக்கு எதிராகப் பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ தொடர்பு வைப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
ஆனால், புலிகளாலும், ஈழமும் இந்திய நலனுக்கு எதிரானது எனும் மாயையை ஒரு குறிப்பிட்ட சாதியினரும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த தகவற் தொடர்பு சாதனங்களும் பரப்பி வந்தன. வருகின்றன. அரசியலை நன்கு அறிந்தவகளுக்கு இது எப்படிப்பட்ட மாயை என்பது தெளிவாகப் புரியும்.
2. இரண்டாம் வரலாற்று சாட்சியம்: Anonymous said…வெற்றி,
நீங்கள் குறிப்பிட்டதுபோல நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல பி.ஜே.பி எதிர்க்கட்சியில் இருந்த போது புலிகளிடம் தம்மை ஒரு இந்துஅமைப்பாகவும் பெளத்தத்துக்கும் அதற்கு ஆதரவுதெரிவிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டமே ஈழப்போரென்றும் பிரகடனப்படுத்தச் சொல்லியும் கேட்டார்கள் என்றும் அறிந்தேன். அதற்கு புலிகளோ தாம் ஒரு மதம் சாராத அமைப்பு என்றும் தம்முடன் ஆரம்ப காலத்திலிருந்தே மிகப்பல கிறிஸ்தவர்கள் இப்ப்போரில் இணந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுகூட போராட்டத்தில் ஆதரவளிக்கும் கிறிஸ்துவர்கள் , முக்கியமாக பாதிரிகள் அவ்வாறே செய்யும்படியூம் தாம் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்து தமக்கு தமிழர் விடுதலை பெறுவதே முக்கியம் எனக்கூறினர் எனவும் அறியக்கூடியதாக இருந்தது. எனினும் புலிகள் எடுத்த முடிவு தூரநோக்குள்ளதே என நினைக்கிறேன்.- 8/08/2007 10:33:00 PM
It was on July 29, 1987, that then Indian prime minister Rajiv Gandhi flew to Colombo to sign the agreement with president J.R. Jayewardene in a bid to end a raging Tamil separatist drive.
For the first time in Sri Lanka’s troubled history, the country was formally recognised as a multi-religious, multi-ethnic and multi-lingual society. It also brought about the only major act of constitutional reforms, devolving powers to minorities in the form of provincial councils with judicial, civil and police services.
The fighting between the LTTE and Indians not only led to the death of nearly 1,200 Indian soldiers and hundreds of Tamils, combatants and non-combatants
இது செய்தி – The accord’s 20th anniversary.
இப்பொழுது புத்தகங்கள்:1. “Royal Murders” by Dulcie M. Ashdown (Sutton, 1998) – murders of European rulers
2. “Political Murder” by Franklin L. Ford (Harvard, 1985) – The most successful political assassins, he believes, approximate the pop-culture stereotype of lone killers who act primarily to earn a place in history, snuffing out useful lives so that their meaningless ones will be remembered.
3. “Killing No Murder” by Edward Hyams (Thomas Nelson, 1969) – Murderous anarchists would plague Europe and America for more than a decade.
4. “Assassination” by Linda Laucella (Lowell House, 1998) – looks at assassins as individuals
5. “American Brutus” by Michael W. Kauffman (Random House, 2004) – Kauffman’s Booth is the author of the 19th century’s most complex assassination conspiracy, designed to cripple the country’s command structure by eliminating the president, vice president and secretary of state in a single night’s work.
Fetherling, a Canadian novelist and poet, is the author of “The Book of Assassins” (John Wiley).
Today’s News & Analysis:
June 30, 2005 (Tamiloviam)
இந்தியாவும் வான்புலிகளும்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.
ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.
தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.
இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக ‘ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய’த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, ‘வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது’ எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.
தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
இது தவிர ஆயிரம் கி.மீ., 600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.
ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.
விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து:
“இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115”.
அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வந்த பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சுவீடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதிகள் இதைத் தெரிவித்துள்ளனர். சண்டையில் ஈடுபடுபவர்கள் சாதாரண மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, தாக்குதல் நடத்துகின்றனர்.
2. விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.
3. ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் கொலை
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்ட வாகரைப் பகுதிக்கு கடந்த வெள்ளிகிழமை இலங்கை ஜனாதிபதி விஜயம் செய்திருந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்றவர்களில் சந்திவெளிப் பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் செல்லையா பரமேஸ்வரக் குருக்களும் அடங்குவார்.
முழுமையான ஈழ செய்திகளுக்கு: Puthinam.com
இந்திய தினசரிகளில் ஈழம் குறித்த செய்திகளின் தொகுப்பு: LTTE :: Tamil News
முந்தைய டுடே பதிவு: Hinduism Today