ரொம்ப மண்டையைக் குடையாமால் கூகிளைக் குழப்பாமல் யோசித்ததில் மனதில் தங்கிப் போன பத்து சினிமா வசனங்கள்:
1. …’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’…
2. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை
3. அவன் ஹேர்ஸ்டைலை பார்த்தியா? ஏ. ஆர். ரெஹ்மானையும் ஆதித்யனையும் மிக்ஸ் பண்ணி வளர்த்திருக்கான். இன்னொரு ஆங்கிளில் இருந்து பார்த்தா ‘அவதாரம்’ நாஸர் மாதிரியே இருக்கான்.
4. சபாஷ்! சரியான போட்டி.
5. உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா!
6. தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை – மன்னிப்பு.
7. தீவிரவாதியெல்லாம் என்ன மாதிரி அசிங்கமா இருக்க மாட்டான் சார். அழகா… உங்கள மாதிரி இருப்பான்.
8. எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!
9. ஓடினாள்… ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…
10. நீ மலையா? இருக்கலாம்… ஆனா, மலை உடைஞ்சா மண்ணுதான்.
நிறையப் படம் மனதில் ஓடினாலும், வசனம் வரமாட்டேங்குது. உங்களுக்கு நினைவுக்கு வந்த உரையாடல் என்ன 😉










