Category Archives: Bloggers

Thamizmanam Introductions – Observations for Life: Tamil bloggers perceptions

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « நட்சத்திரம் – காசி

வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கும், விரும்பிய துறை அறிவுக்கும் தேவைப்படுவதைத் தவிர பெரிதாக வாசித்ததில்லை.
மொழி ஒரு மனிதருக்குக் கருவி மட்டுமில்லை, அது ஒரு சமுதாய அடையாளம் என்ற நம்பிக்கை. எந்த ஒரு மொழியும் இன்னொருமொழியை விட சிறந்ததில்லை என்பதும், அதே சமயம் தாய்மொழியை உதாசீனப்படுத்தும் சமுதாயம் தலைநிமிர்ந்து வளருவது கடினம் என்பதும் கூட நம்பிக்கைகள். இந்த நம்பிக்கைகளே தமிழில் இணைய எழுத்துக்கள், கணினி நுட்பங்கள் வளரவேண்டும் என்று ஆசைப்படவும், அதற்கு ஆன பங்களிப்பைச் செய்யவும் தூண்டுகோலாய் இருக்கின்றன.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « “வற்றாயிருப்பு” சுந்தர்

தொழில் : உண்மையைச் சொன்னால் நிறைய பொய் சொல்லி வாடிக்கையாளர்களிடம் ‘சேவை’யை விற்று வருவாயீட்டும் பொட்டி தட்டும் தொழில்! ‘விற்பனை’ என்ற பெயரில் பில் கேட்ஸின் பவர் பாயிண்ட்டை வைத்துக்கொண்டு படம் போட்டு நான் செய்யும் அநியாயங்களுக்கு எனக்கு விமோசனமே கிடைகாது என்று தெரிந்தாலும், I love my job!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « Chameleon – பச்சோந்தி

நான் ஒரு திரிலோக சஞ்சாரி.
நான் சஞ்சரிக்கும் மூவுலகங்கள்.

1.பாதாள உலகம்
தொழிலாளி, அதிகாரி, முதலாளி.

2. பூவுலகம்
கைநாட்டு, பட்டதாரி, முனைவர்.

3. தேவ உலகம்
குழந்தைகள், பெரியோர், முதியோர்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « ROSAVASANTH

உலகத்தின் எந்த பகுதியிலும் காணவியலாத வகையில், போலித்தனத்தை வாழ்வின் அத்தனை தளங்களிலும் பேணுவதாக (இன்னமும்) நினைக்கும் சென்னைக்கு, அதன் போலித்தனத்தை எதிர் கொள்வதிலிருந்து எல்லா வகையிலும் தப்ப விரும்பிய மனநிலையை, காலத்தின் போக்கில் தாக்குபிடிக்கும் அளவிற்கு கரைத்துக் கொண்டு, மிக விரும்பி மிகுந்த மனத் தெளிவுடன் இங்கே வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளேன்.

ரோஸாவசந்த் என்ற பெயரை மிக எதேச்சையாக திண்ணை விவாதகளத்தில் எழுத (குறிப்பாக சின்னக் கருப்பன் அவர்களுக்கு ஒரு எதிர்வினை வைக்க) தீர்மானித்த தருணத்தில் தேர்ந்தெடுத்தேன். ஒரு எதிர்வினையாக மட்டுமே, இணையம் அளிக்கும் வசதி மற்றும் சுதந்திரத்தினால் எழுதத் தொடங்கினேன். எழுதியதில் பெரும் விழுக்காடு எதிர் வினைகளாகவும், போலமிக்ஸாகவும் இருப்பதை ஒப்புகொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. சுயநினைவுடன், அதற்கான தேவை கருதி அதன் எல்லைகளை கணக்கில் கொண்டே, வாய்திருக்கும் வசதிகொண்டு, முடிந்தவரை அதை செய்வதாக நினைக்கிறேன்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « பொடிச்சி

வலைப்பதிவுகளின் வருகை தணிக்கையற்ற (சுயதணிக்கைகளைத் தவிர) விவாதங்களிற்கு வழிவிட்டிருக்கிறது. பெரும்பான்மைக் குரல்களுக்குள் சக்திவாய்ந்த மாற்றூடகம் என்ற வகையில் தடைகளற்று எழுதுவது பிடித்திருக்கிறது (சிலவேளை அலுப்படித்தாலும்). எல்லாவற்றிலும் விட, நான் வாழ நேர்கிற இந்த உலகில் எதிர்கொள்கிற அத்தனை முரண்பாடுகள் குறித்தும் — பல சமயங்களில் எழுதுவது தவிர வேறு வழியில்லாததால் எழுதிக் கொண்டிருக்கிறேன்!

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « அசுரன்

இணையத்தில் எழுத தூண்டுகோலாக இருந்தது இங்கு பிற்போக்கு சக்திகள் கேள்வி கேட்க ஆளின்றி பொய்களையும், புரட்டுகளையும் பரப்பி வந்ததும், உலகமய பொருளாதாரத்தில் வளப்பமுறும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு பகுதி, தமது சம்பளத்திற்க்கு மதிப்பை கொடுக்கும் பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி சுயநலத்திலும், பிழைப்புவாதத்திலும் மூழ்கி இருப்பதுமே ஆகும். இந்த இரண்டையும் எதிர்த்தே இங்கு எனது எழுத்து ஆரம்பித்தது.

சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும் ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « இலவசக்கொத்தனார்

ஆதங்கம் : இன்று வலைப்பதிவுகள் மூலம் எவ்வளவோ சாதிக்க இருக்க, மீண்டும் மீண்டும் இங்கு நடக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் தனிமனிதத் தாக்குதல்களும்தான். எவ்வளவுதான் ஒதுங்கிப் போனாலும் மீண்டும் மீண்டும் இதே நடப்பதால் சில சமயங்களில் நாமும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிவிடும் வீக்னெஸ்.

thamizmaNam : தமிழ்மணம் « முகப்பு « கைப்புள்ள

எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். கண்காட்சியில் வண்ண விளக்குகளையும் விதவிதமான விளையாட்டு பொம்மைகளையும் கண்டு அதிசயித்து வாய் பிளந்து நிற்கும் ஒரு சிறுவனைப் போன்றே அமைந்துள்ளது இது வரையிலான என் பயணம். அப்பயணத்தில் நான் மிகவும் ரசித்து வாய் பிளந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு கருவியாகவே என் வலைப்பூவைக் காணுகிறேன்.

குணச்சித்திரம் : 1 – ஐ(இ)காரஸ் பிரகாஷ்

இந்தத் தொடரைப் பதிந்து வைக்கலாம் என்றவுடன் பத்ரி, மூக்கன், மதி, ஆசிப், குசும்பன் போன்ற வலையோர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்களைக் குறித்த என் அனுமானங்களையும் சந்தித்த சரித்திரங்களையும் நினைவுக்கு எட்டிய வரை குறிப்பதாக திட்டம்.அமெரிக்க டிவியில் தொடர்கள் ஒளிபரப்பாவதற்கு ஒத்திகையாக வெள்ளோட்டத்தை pilot என்றழைத்து ‘புலி வருது’ கணக்காக மார்க்கெட்டுவார்கள். அந்த மாதிரிதான் பிரகாஷை பிள்ளையார் சுழியிடுவது.

இணையத்தில் வளைய வந்ததை வைத்து, கண் கட்டிய நிலையில் கொம்பைக் கொண்டு உறி அடிப்பது போன்ற விளையாட்டு. சில சமயம் துணியை சரியாகக் கட்டாததல் இலக்கு துல்லியமாகத் தெரியும். சுற்றி விடுபவரே pinata-வுக்கு 180 டிகிரியில் நிற்கவைத்து அனுப்பும் போங்கும் நடக்கும். கன்ணாடியைக் கழற்றினாலே முழுக்குருடான என்னைப் போன்றோருக்கு யானையைத் தடவி அறியும் பயிற்சியாகவும் கொள்ளலாம்.

ஒரே வாரத்தில் வழக்கு விழுந்தால், காலைக் கையைப் பிடித்தால், இளகும் தன்மை உடையவர். அவரை வைத்தே மண்டகப்படியை ஆரம்பிக்கலாம்.

எல்லா நல்ல எழுத்தாளர்களைப் போல் ஆரம்பத்தில் புயலென்று வந்தவர். ராயர் காபி க்ளபில் நுழைந்த போது இருந்த வீரியம் குரல்வலை: பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்! போன்ற பின்னூட்டங்களில் எப்போதாவது இன்னும் எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

ஆறும் அது ஆழமில்ல‘ என்பது போல் அழுத்தம் ஜாஸ்தி. அந்தளவு போட்டுப் பார்ப்பதில் வல்லவர் என்பதை வெளிக்காட்டாமல் மந்தமாக இருப்பதே கஷ்டமான சாமர்த்தியம். ஆனால், புரை தீர்ந்த நன்மை தரும் லாவகத்துடன் ‘எடுக்கவோ, கோர்க்கவோ‘ என நம்மிடம் கையாள்பவர்.

பிரகாஷை இரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். எழுத்தைப் போலவே எளிமையான, முதிர்ச்சியான 😛 தோற்றம். சூப்பர் ஸ்டார் ரசிகன் என்பதற்கேற்ப பேச்சில் வேகம். தள்ளி விலகாமல் நொடியில் அரவணைக்கும் நட்பு பாராட்டுதல். ITC பங்கை வாங்கி வைக்கச் சொல்லும் பழக்கம்.

பிரகாஷின் எழுத்தில் உள்ள நெகிழ்ச்சி, பேச்சில் மிஸ்ஸிங். அது எனக்கு ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை என்கிறார் மூக்கு சுந்தர். திண்ணையில் தனது குருவை விவரிக்கும் ஜெயமோகன் ‘அவரே தன் கல்வியை வெளிக்காட்டும் தருணங்கள் குறைவு. நாம் கேள்வி கேட்கையில் அவர் அதற்கான சிறிய ஆனால் கச்சிதமான விளக்கத்தை அளிப்பார்’ என்பார்.

இது இரண்டுக்கும் நடுவாந்தரமான கேந்திரத்தில், விவாதத்தை வளர்க்க, தொய்வு ஏற்படும்போது வெட்டிப் பேசுபவர்.

ராயர் காபி க்ளபில் இரா முருகன், வெங்கடேஷ், பாரா, எல்லே ராம், சொக்கன் என்று பஞ்ச பூதங்கள் ரஷித்தால், பாஞ்சாலியாக எல்லோரையும் மேய்த்தவர். பாஞ்சாலிக்கு கர்ணனையும் பிடிக்கும் என்பதுபோல் மரத்தடி பக்கமும் ஒதுங்கி பங்கெடுத்தவர். திரௌபதியின் வெளிப்படையான துடுக்குடன் Maraththadi : Message# 10053 மிளிர்ந்தவர், வானபிரஸ்தம் மேற்கொண்ட க்ளபிற்குப் பிறகு, விஸ்வரூபம் காட்டாமல், கில்லிக் குடுவையில் அடைந்து கிடக்கிறார்.

Pathbreaking-ஆக தனிப் பதிவில் குடித்தனம். மெத்தனமான தமிழ்ப்பதிவுகளுக்கு சூடான முன்னோடி ஒருங்கிணைப்பாக கில்லி. தமிழரின் தொன்மையான பற்றுக்களமான படத்திற்காக ட்ரிவியாபேட்டை.

இனிமையான மேலாளர்க்குரிய குணங்களாக சிலதைப் பட்டியலிடலாம்

  • ப்ரொஃபஷனல் & பெர்சனல் டச் வேண்டும்.
  • சிஈஓ, சி.எஃப்.ஓ போன்ற மாடி ரூம் சன்னலோரவாசிகளை குஷிப்படுத்த வேண்டும்.
  • ப்ராஜெக்ட் மேனெஜர், பிஸினஸ் அனலிஸ்ட் இடையே போதிய அரசியல் புகை வரவழைக்க வேண்டும்.
  • இதெல்லாம் செய்ய வேண்டும் என்று படித்து அறிந்தவரும், உணர முடியாதவாறு இவற்றை இயல்பாக்க வேண்டும்.

பிரகாஷ் அருமையான ஆதர்ச மேலாளரும் கூட.

பதிவில் எப்படி நகைச்சுவை இழையிட வைப்பது, என்ன வெரைட்டி கொடுக்கலாம் என்று குழம்பினாலோ, அலுத்தாலோ, ஆதி ராயரில் Icarus என்று தேடி மெல்லுங்கள். எழுத விஷயம் கிடைக்கவிட்டாலும், இனிமையான நேரங்கழித்தலுக்கு நான் உத்தரவாதம்.

வழக்கம் போல் சில சுட்டிகள்:

  1. My Nose – விரதம்..?? !!!
  2. ஈ-தமிழ்: Chat Meet – Icarus Prakash
  3. Prakash’s Chronicle 2.0