இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் ஆல்பர்ட் ஃப்ராங்க்ளின் (எஸ். கோபாலியுடன் இணைந்து மொழிபெயர்த்தார்) நாவலின் தலைப்பை ‘பாத்திரங்களின் வரிசை’ (Cast of Characters)என்று வைத்தார்.
ஓர் அத்தியாயத்தில் கால நிர்ணயத்துக்கு இடம் கொடுக்கும் ஓர் உண்மைத் தகவல் வந்துவிட்டது; அது நாவலின் தரத்தைக் குறைத்துவிட்டது என்று தி.க.சி. சொன்னார். அந்த நேரத்தில் இந்த உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராக அவர் எனக்குத் தோன்றினார்.
செப். 2005 முன்னுரையில் அசோகமித்திரன்.
சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், புரொடக்ஷன் – புரோகிராம் மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக அமைந்துவிடுவதில்லை. திரையில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து உரமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பியக்கத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் அசோகமித்திரன், ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவரது பல படைப்புகள் இந்திய-அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. இந்த நாவல் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. அசோகமித்திரன், ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1996-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
1. எண்ணங்கள்: படித்த இரு கதைகள்
பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.
2. புத்தக அறிமுகம்: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’
வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.
3. Thinnai :: அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ – ‘சூரியராஜன் ‘
4. சுரேஷ் கண்ணன் (maraththadi.com) – கரைந்த நிழல்கள்
பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.
6. Karaintha Nizhalgal – Asokamithiran (1) | பகிர்வு II
7. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் :: மீதமிருக்கும் சொற்கள்!
சினிமா உலகின் நிஜத்தை முகத்தில் அறைவது போலச் சொல்லும் அசோக மித்திரனின் ஒரு சிறுகதை இருக்கிறது. அக்கதை ‘புலிக் கலைஞன்’. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்ற அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அது இருக்கிறது.
8. அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்
சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் ‘கனவுத் தொழிற்சாலை’ ஒரு கோடி காட்டியதென்றால்
9. Riyadh Tamil Sangam – ரியாத் தமிழ் சங்கம்
அசோகமித்திரனும் ஆறாவது கூட்டமும் – லக்கி ஷாஜஹான்.
10. அம்பலம் – ஒரு நுட்பமான படைப்பாளி அசோகமித்திரனுடன் நேர்காணல்










