Category Archives: செய்தி

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I

அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் பெருமையும் கொண்ட நாடாகத் தன்னைக் கருதிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இறை நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையும் பெருமையும் அது. உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவிவிட வேண்டும் என்பதை ஒரு உன்னத நோக்கமாகக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆயினும் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் பிரதிநித்துவத்தின் உயரிய வெளிப்பாடான பொது வாக்கெடுப்பு முறை அமெரிக்காவில் மிகவும் குழப்பம் மிகுந்ததும் குறைபாடுகளுள்ளதுமாகவே காணப்படுகிறது.

1. கல்லூரிச் சாலை
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பவர்கள் எலக்டோரல் காலெஜ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அமெரிக்காவின் மகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் அதன் செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை (House of representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் சமமான எலக்டோரல் காலேஜ் வாக்குகள் வழக்ங்கப்படுகின்றன. மொத்தம் 538 எலக்டோரல் காலெஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினரைப்போல தான் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் வாய்ப்பு எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அவ்வாறு வாக்களிப்பதில்லை. அமெரிக்காவில் 50ல் 48 மகாணங்கள் தங்கள் மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கே அத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகளையும் தந்துவிடுகின்றன. ஆக மக்கள் பிரதிநித்துவம் மகாண அளவிலானதாகிவிடுகிறது. இந்தியாவைப்போல ஒவ்வொரு தொகுதியும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, கீழ்நிலை பிரதிநித்துவத்தை இந்த முறை மறுதலிக்கிறது. மெய்ன்(Maine) மற்றும் நெபராஸ்கா மகாணங்கள் மட்டுமே மாவட்டவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எலக்டோரல் காலெஜ் வாக்குகளை வழங்குகின்றன.

இந்த முறையின்படி Popular Vote எனப்படும் நாடு முழுவதுமான வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் போதுமான அளவு எலக்டோரல் காலெஜ் வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வி அடையும் நிலை உள்ளது. 2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் அவ்வாறே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் அவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

எலக்டோரல் காலேஜ் முறையை மாற்றியமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மகாணங்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரே அந்த மகாணத்தின் அனைத்து பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறும் முறையை மாற்றி நாடளவில் அதிக வாக்குகளைப் பெற்ற (Most popular votes) வேட்பாளர் பெறும் முறையை உருவாக்கும் முயற்சி நடந்துவருகிறது. இது பிராந்திய மக்களின் பிரதிநித்துவத்தை குறைத்துவிடும் முயற்சியாகும். சரியான மக்கள் பிரதிநித்துவம் மாவட்ட வாரியாக, சிறிய தொகுதிகள் வழியாக நிலைநாட்டப் படுவதே சிறப்பானதாகும். இத்தகைய கீழ்நிலை பிரதிநித்துவம் பிராந்திய அரசியலுக்கு குறிப்பாக சாதி, இன அரசியலுக்கு வழிவகுக்கும் என்பது வேறொரு விவாதத்திற்கான கருத்து.

2. பட்டியல்
அமெரிக்க வாக்காளர் பட்டியல் தற்போது கணினிவழி பதிக்கப்படுகிறது. கணினிமயமாக்கல் வேலையை எளிதாக்கினாலும் முற்றிலும் குறைகளற்ற முறையல்ல. குறிப்பாக தட்டச்சுப் பிழைகளால் தங்கள் வாக்குகளை பலரும் இழக்க நேரிடுகிறது.

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவரின் பெயர் விபரங்கள் ஏற்கனவே இருக்கும் அரசு கணினி தகவல் தொகுப்புகளான (Databases) ஓட்டுநர் உரிமம் பெற்றோரின் தகவல் போன்ற அரசின் தகவல் தொகுப்புக்களோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து மாறினாலும் வாக்காளரின் தகவல் சரிபார்க்கப்பட முடியாதத்து அல்லது தவறானது என கணினி கூறிவிடும். விஸ்கான்சின் மகாணத்தில் 22% பதிவுகள் இம்முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன இதில் தேர்தலை கண்காணிக்கும் ஆறு முன்னாள் நீதியரசர்களில் நான்குபேரின் தகவல்களும் அடக்கம். இறுதியில் விஸ்கான்சின் வாக்காளர் பதிவை ஒப்பிட்டு சரிபார்க்கும் முறையையே கைவிட்டது. ஆனால் ஃப்ளோரிடாவில் 9000 புதிய வாக்காளர்கள் இம்முறையில் வாக்குரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் வாக்களிக்கலாம் ஆனால் முறையான ஆவனங்களை சமர்பித்தபின்னரே இவர்களின் வாக்குகள் எண்ணப்படும். ஒகையோவில் 2 லட்சம் பேரின் பதிவுகள் சரிபார்க்க இயலாதவையாக உள்ளன.

வாக்காளர் பதிவுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் பலரும் மக்களை மிரட்டும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஹிஸ்பானிக் என அழைக்கப்படும் தென்னமெரிக்க வம்சாவழியினரை அவர்கள் அமெரிக்க குடிமக்களானாலும் தேவையற்ற ஆதாரங்களைக் கேட்டு மிரட்டுவது ஜியார்ஜியா மகாணத்தில் நடந்துள்ளது. மிசிசிப்பியில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன் வீட்டிலிருந்து வேலை செய்கையில் தவறுதலாக 10,000 வாக்கலர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். பின்னர் இவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.
வாக்காளர் பதிவு முற்றிலும் பிரச்சனையற்ற முறையாக இல்லை. லட்சக்கணக்கில் வாக்குப் பதிவுகள் விலக்கப்பட்டிருக்கலாம் எனக் கவலை கொள்கிறது டைம் பத்திரிகை. (Millions have been stripped from voter rolls in key states, but the legitimacy of those eliminations remains unclear.).

வாக்காளர் பதிவில் மேலும் ஒரு கவலைதரும் விஷயம் இந்தத் தேர்தலில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏக்கார்ன் (ACORN) எனும் தன்னார்வக் குழு ஏழ்மை நிலையில் இருப்பவர்களை அவர்களின் பல உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள் இத்தகைய கீழ்நிலையில் இருக்கும் மக்களை (குறிப்பாக கறுப்பினத்தவர்கள், பிற சிறுபான்மையினர்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யயும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இம்முறை ஏக்கார்ன் தனது பிரதிநிதிகளிடம் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கேற்ப உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனச் சொன்னதன் விளைவாக மிக்கி மவுஸ் முதற்கொண்ட கற்பனை பாத்திரங்களின் பெயர்களையும் வாக்காளர் பதிவில் சேர்த்து ‘சேவை’ செய்துவிட்டனர் ஏக்கார்னில் வேலை செய்த 13000 பகுதி நேர வேலையாட்களில் சிலர்.

வாக்காளர் பதிவில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் இருபெரும் கட்சிகளான குடியர, ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவு குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படும் ஜனநாயகக் கேலிக் கூத்தானாலும் இது முறைகேடான வாக்குப் பதிவுக்கு இட்டுச் செல்வதில்லை. மிக்கி மவுஸ் டிஸ்னி சேனலில் மட்டுமே வாக்களிக்கச் செல்ல முடியும். ஆனால் தவறான வாக்குப்பதிவுகளின் விளைவாக வாக்களிப்பவர்கள் அதீத கட்டுப்பாட்டுகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களின் வாக்குப்பதிவு தீவிர சரிபார்த்தலுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. இது பல விளிம்புநிலை வாக்காளர்களையும் வாக்குப்பதிவிலிருந்து மறைமுகமாக தடுக்கிறது.

(தொடரும்…)

கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு

ஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்

யாஹு

ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.


வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு

தினத்தந்தி

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.

இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.

கவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.


அதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்

தினத்தந்தி

அமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.

முன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.

அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.

வாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.

கல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.

வாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.

சாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.

சாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா? குவைத்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.


அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்

மாலை மலர்

முன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.

ஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.

பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

அர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.


அதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை

நியூஸ் ஒ நியூஸ்

“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


அதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்!

யாஹு & மாலை மலர்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.

4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.

அதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.


அயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா!

வெப்துனியா

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.

அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.


‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்

தினமலர்

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:

கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?

பதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.


பின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி

நியூஸ் ஒ நியூஸ்

பாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.

எனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.

அதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


தேர்தல் நிலவரம்

[clearspring_widget title=”Decision ’08 Presidential Results” wid=”48f7b94a8845f8a3″ pid=”4909d03c7137d6e6″ width=”300″ height=”545″ domain=”widgets.clearspring.com”]

அதிபருக்கு பள்ளி மாணவர்களின் கடிதம்!

தேசிய எழுத்து இயக்கமும், கூகுள் டாக்ஸும் இணைந்து, ‘அடுத்து வரவிருக்கும் அமேரிக்க அதிபருக்கு கடிதம்’ என்ற தலைப்பில் 13 முதல் 18 வயதிலான நடுநிலை மற்றும் உயர்பள்ளி மாணவர்களுக்காக கடிதம் எழுதும் போட்டி நடத்துகின்றனர்.

அந்த போட்டியில் ‘மக்களுக்காக மக்களால்’ என்ற தலைப்பில் ‘டேனியல்’ என்ற ஒரு மாணவன் எழுதியிருந்த கடிதம் பின்வருவதுபோல் துவங்குகிறது.

–இந்த தேசத்தை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.   மக்கள் ஆள்வதற்காக மக்களுக்காக இந்த தேசம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இருந்தாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த கருத்து மறக்கப்பட்டுவிட்டது.–

மேலே படிக்க இங்கே செல்லவும் http://www.letters2president.org/letters/270-by-the-people-for-the-people

சேமி என்ற இன்னொரு மாணவரின் கடிதம் இப்படியாகத் துவங்குகிறது,

–நான் குழந்தையல்ல, இருந்தாலும் உங்களுக்கு அதுபோல் தோன்றலாம். எவ்வாறு நமது தேசத்தை அடுத்த தலைமுறையினருக்கு நல்ல இடமாக்க வேண்டுமென்று பல்வேறு சிந்தனைகளும் ஒருமித்த குரலும் கொண்ட ஒரு அமேரிக்க குடிமகன் நான்–

மேலே படிக்க http://www.letters2president.org/letters/221-we-cant-afford-to-get-smarter

மொத்தமாய் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களின் கடிதம் அந்த தளத்தில் உள்ளது, படித்துப் பாருங்களேன்!

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி

டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது!

ஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


மாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது

ஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.


தட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது

வெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது!

வாக்குசீட்டு & வாக்காளர்

ஒரு அமேரிக்க வாக்காளரின் விபரம், அவர் கடந்த தேர்தல்களில் அளித்த வாக்கு விபரங்கள், இணையத்தில்:

மாதிரி வாக்குசீட்டு – 1/3 முன்பக்கம்:

மாதிரி வாக்குசீட்டு – 2/3 முன்பக்கம்:

வேலையிலிருக்கும் அனைத்து நீதிபதிகளுக்கு (முக்கால்வாசி ஜனநாயக கட்சியினர்) எதிர்த்து அளிக்கப்படும் வாக்காளரின் 2008 வாக்கு.

வாக்களிக்க முடிவு செய்துள்ளவை கரும் கோளத்தில் தெரிகின்றன!

ஒரு அமேரிக்க மாநிலத்தில் நடக்கவிருக்கும் அதிபர் மற்றைய தேர்தல்களின் முழு வாக்குசீட்டை காண ஆர்வமுள்ளோர், இங்கு காணலாம்:

வாக்குசீட்டு

ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்

அன்று:

நேற்று:

இன்று:

ஆசைப்பட்டதோ?

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Americas | Colin Powell backs Barack Obama

2. Powell says he will vote for Obama – First Read – msnbc.com

“when I look at all of this… But which is the president that we need now… I come to the conclusion … because of who he is, he has both style and substance … I think he is a transformational figure… For that reason, I will be voting for Sen. Barack Obama.”

3. Colin Powell endorses Obama – CNN.com:

  • Ex-Secretary of State Colin Powell voting for Barack Obama
  • Powell makes announcement on ‘Meet the Press’ Sunday
  • Powell told CNN in February: ‘Keeping my options open’ on endorsing
  • The former general has said the next president will have to restore America’s image

'ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாதது உண்மையிலேயே அதிசயம்'

இனவாதம் மிக்க அமெரிக்க சமூகத்தில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாமல் இருப்பது உண்மையிலேயே அதிசயமாகும் என கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்தார். ‘கியூபாடிபேட்’ வெப்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“அமெரிக்காவிலுள்ள மில்லியன்கணக்கான வெள்ளையர்கள், கறுப்பு இனத்தவர் ஒரு வரும் அவரது மனைவி பிள்ளைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லை.

ஏனெனில் அவர்கள் இனத் துவேஷம் காரணமாகவே ஜனாதிபதி மாளிகைக்கு ‘வெள்ளை’ என்ற அடைமொழியை சேர்த்துள்ளார்கள்” என குறிப்பிட்ட பிடெல் காஸ்ட்ரோ, ‘அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கறுப்பு இன அரசியல்வாதியான பராக் ஒபமா தெரிவு செய்யப்பட்டிருப்பதும் இன்னும் அவர் படுகொலை செய்யப்படாமல் இருப்பதும் உண்மையிலேயே அதிசயமானதாகும்’ எனக் கூறினார்.

அத்துடன் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் கடற்படையில் பணியாற்றிய போது பெற்றிருந்த குறைந்த தராதரம் குறித்து சாடிய பிடெல் காஸ்ட்ரோ, “அக்கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளரான சாரா பாலினுக்கு எதைப் பற்றியும் ஒன்றும் தெரியாது” என குற்றஞ்சாட்டினார்.

மேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: Castro: Racism in US keeps many away from Obama

2. Castro says it’s a ‘miracle’ Obama hasn’t been assassinated- Politics/Nation-News-The Economic Times

தொடர்புள்ள செய்திகள்:

1. FactCheck.org: McCain Links Castro With Obama

2. McCain Campaign Running Obama-Castro Ad

3. Gateway Pundit: Fidel Castro Stumps For Obama… Slams McCain & "Rifle Lady"

4. McCain Criticizes Obama for Cuba Policy – FOXNews.com Elections: “John McCain lashed out at Barack Obama Tuesday for his pledge to meet ‘unconditionally’ with oppressive leaders, including Cuba’s Raul Castro, if elected president.”

ஒபாமா பெயர் ஒஸாமா என்று அச்சிட்ட வாக்குச்சீட்டுகள்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டு அச்சடிப்பதில் குளறுபடி: ஒபாமா பெயர் ஒசாமா என்று மாறியது

நியுயார்க் ஓட்டுச்சீட்டு:


வாக்குச்சீட்டு புகைப்படம்: CNN Political Ticker: All politics, all the time Blog Archive – New York county prints ‘Barack Osama’ on ballots « – Blogs from CNN.com (பரிந்துரை: இலவசக்கொத்தனார்)

அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: 'பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது'

சாரா பேலின் பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் – அறிக்கை

குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்
குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் சாரா பேலின்

அமெரிக்க குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான அலாஸ்கா ஆளுநர் சாரா பேலின், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா அரசியல் அமைப்பிற்காக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கையில், மூத்த அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சொந்த பிரச்சனைக்காக அலாஸ்காவின் பொதுபாதுகாப்பு ஆணையாளரான வால்டர் மோனிகனை சாரா பேலின் பதவியில் இருந்து நீக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அறிக்கையில், வால்டர் மோனிகன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடும்ப ரீதியான விரோதம் மட்டுமே காரணம் அல்ல ஆனால் அதுவும் ஒரு விடயமாக இருப்பது போல இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது.

தான் எவ்வித தவறையும் செய்யவில்லை என பேலின் கூறுகின்றார். இந்த அறிக்கைக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என ஜான் மெக்கெய்ன் பிரச்சார குழு கூறியிருக்கின்றது.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Friday’s report from special investigator Stephen Branchflower to Alaska’s Legislative Council – TIME :: What the Troopergate Report Really Says: “Not only did people at almost every level of the Palin administration engage in repeated inappropriate contact with Walt Monegan and other high-ranking officials at the Department of Public Safety, but Monegan and his peers constantly warned these Palin disciples that the contact was inappropriate and probably unlawful.”

2. Palin ethics lapse cited – Los Angeles Times: “Public Safety Commissioner Walt Monegan was subjected to a veritable barrage of demands from Palin, her husband and her staff to fire the trooper, Mike Wooten, whom they saw as unfit for the job. Wooten had been involved in a bitter divorce and custody battle with Palin’s sister.”

3. BBC NEWS | Americas | Economy could deflect probe sting: “At first glance the publication of the ethics report into Sarah Palin might seem highly damaging to the McCain-Palin campaign, given that both candidates have pledged themselves to weed out abuse of power in government.”

4. McCain Camp Fails to Block "Troopergate" Probe: “McCain campaign and the Bush-Cheney machine — which in recent weeks has effectively taken strategic and operational control of GOP presidential and congressional campaigning — moved key operatives and resources into Alaska to try and shut down the ‘Troopergate’ probe.”

5. Sarah Palin Trooper Inquiry News – The New York Times

6. ABC News: Troopergate Report: Palin Abused Power: “The report found that Palin let the family grudge influence her decision-making

The investigator, Stephen Branchflower: “[Palin] knowingly … permitted [husband] Todd Palin to use the governor’s office and the resources of the governor’s office … in an effort to find some way to get Trooper Wooten fired.””

7. ABC News: Complete Coverage: Troopergate