படைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்


நேர்காணல்: கனடாவைக் குறித்து எனக்குத் தெரியாது.

அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இந்தியாவில் தமிழ் இலக்கியம் பரவலாக சென்றடையாமல் இருப்பதற்கும் ஒரே காரணம்தான்.

அமெரிக்காவில் எல்லோரும் புத்தகம் வாசிக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு நூலாவது படித்து முடித்து விடுகிறார்கள். இந்தியாவில் ரமணி சந்திரன் படித்தாலே பெரிய படிப்பாளி.

அமெரிக்காவில் எல்லோருமே ஒரு புத்தகமாவது எழுதுகிறார்கள்… அவர்களின் அனுபவம் சார்ந்து; துறை சார்ந்து; சொந்த வாழ்க்கை சார்ந்து…

தமிழரில் புத்தகம் போட்டால், ‘தமிழ் வாழ்க’ என்றோ ‘சிலப்பதிகாரம், திருக்குறள்’ சார்ந்தோ மட்டுமே மருத்துவ டாக்டர்கள் முதற்கொண்டு ஆய்வு பிஎச்டிக்கள் வரை எழுதுகிறார்கள். அவர்களே தங்களின் ஸ்பெஷலைசேஷனில் பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.

அமெரிக்காவில் பாதிப் பேர் கம்ப்யூட்டர்; மீதி பேர் பிஸினஸ். கணினி மொழி குறித்தும் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்தும் தமிழில் எழுதலாம்தான்.

காலச்சுவடுகளும் குமுதங்களும் அதை பரவலாக மக்களிடம் கொண்டு செல்லாது. காசும் பெயராது. அதற்கு பதில் அந்த நாலும் மணி நேரம் நிரலில் எழுதி நானூறு டாலர் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.