Daily Archives: பிப்ரவரி 3, 2016

இண்டு இடுக்கு திரிதல்

When you turn the corner
And you run into yourself
Then you know that you have turned
All the corners that are left.

Langston Hughes, poet and novelist (1 Feb 1902-1967)

he Miriam and Ira D. Wallach Division of Art, Prints and Photographs: Art & Architecture Collection, The New York Public Library. (1858). Barber shaving a man's head bald, one onlooker, white building in the background Retrieved from http://digitalcollections.nypl.org/items/1e520e70-8a8e-0131-2755-58d385a7bbd0

he Miriam and Ira D. Wallach Division of Art, Prints and Photographs: Art & Architecture Collection, The New York Public Library. (1858). Barber shaving a man’s head bald, one onlooker, white building in the background Retrieved from http://digitalcollections.nypl.org/items/1e520e70-8a8e-0131-2755-58d385a7bbd0

சந்துமுக்கில் திரும்பும்போது
என் மீதே மோதிக்கொண்டேன்
இப்பொழுது புரிகிறது, திரும்பிவிட்டேன்
இனி எந்த மூலையும் பாக்கி வைக்கவில்லை.

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

தொடர்புள்ள பதிவு:  The Virtue of Contradicting Ourselves – The New York Times

அறிதிற மங்கல் (cognitive dissonance) என்றால் என்ன? நினைப்பது ஒன்று; ஆனால், வெளிப்படையாக சொல்வதோ இன்னொன்று என்று செயல்படும்போது வாய்க்கும் தொண்டைக்கும் நடுவே இடறும் அசௌகரியம் – இதுவே உள்ளொன்று நம்பிக்கை வைத்து புறமொன்று அரசியல் சரிநிலையாகப் பேசும் அவலத்தை நினைத்து கூனிக் குறுகுதல் எனலாம்.

மனநலவியலாளர்களும் உளவியலாளர்களும் இதற்கு பல சோதனைகளும் ஆராய்ச்சிகளும் செய்து பார்த்தார்கள். சிலருக்கு நூறு டாலர் கொடுத்தால் அட்ஜஸ்ட் மாடிச் செல்கிறார்கள். ‘இந்த இடத்திற்கு இதுதானேப் பொருத்தம்?’ என்று தனக்குத்தானே சமாதானம் கற்பித்துக் கொள்வதற்கு காரணம் தேடுகிறார்கள்.

ஒரு உதாரணம் பார்ப்போம். உங்களுக்கு அவசரமாக ஒரு போராட்டத்திற்குச் செல்ல வேண்டும். அது லஞ்சத்தையும் ஊழலையும் தட்டிக் கேட்கும் அறவழிப் போராட்டம். செல்லும் வழியில் ஆட்டோ பிடிக்கிறீர்கள். அவரோ மீட்டருக்கு மேல் பத்தோ இருபதோ கேட்கிறார். சரியான நேரத்தில் நீங்கள் செல்லாவிட்டால், போராட்டம் ஒழுங்காக நடக்காது. ஆட்டோக்காரர் செய்வதும் அக்கிரமமே. அவரைத் தட்டிக் கேட்டு, புகைப்படம் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அப்போதைக்கு ‘ஆட்டோ டிரைவரும் பொதுஜனம்தானே!’ என்று சமரசம் செய்து, அவரின் அடாவடியை அமைதியாக ஒப்புக்கொண்டு, கையூட்டு தருவது அறிதிற மங்கல்.

அறிவாற்றல் என்றால் கற்றுக் கொள்ளும் திறனும், அவ்வாறு கற்பதினால் நம் பார்வைகளைக் காலப்போக்கில் மாற்றிக்கொள்ளும் திறனும் எனலாம்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் வெகு சிறப்பாக செயலாற்றியவர்களைப் பார்த்தால், பெரும்பாலானோர் திறந்த சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடதுசாரி, வலதுசாரி வித்தியாசம் இல்லாமல் திறந்த மனதிற்கும் செயலூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.

ஆபிரஹாம் லிங்கனை எடுத்துக் கொள்ளுங்கள்: கறுப்பர்களைக் கொத்தடிமையாக வைத்திருப்பதற்கு ஆதரவாக தன் அரசியல் பயணத்தைத் துவங்கியவர், பிற்காலத்தில் அவர்களின் விடுதலைக்கும் குடியுரிமைக்கும் மிகப் பெரிய போராளியாக மாறினார்.

அடுத்தது எஃப்.டி.ஆர். எனப்படும் ஃப்ராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்: பட்ஜெட்டை சமன் செய்வேன் என்றும், பற்றாக்குறையைப் போக்குவேன் என்றும் வாக்குறுதி கொடுத்து ஜெயித்தவர். தலைவரான பிற்பாடு, அவருடைய புது ஒப்பந்தம் மூலமாக பற்றுக்கணக்கை பன்மடங்கு ஊதிப் பெருக்கினார்.

“I have forced myself to contradict myself, in order to avoid conforming to my own taste.”
– Marcel Duchamp

“நானே எனக்கு நண்பனில்லையே…
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே!”
– வைரமுத்து

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கி

Imposter syndrome is a predictor of success. If you feel like a fraud, research suggests you may be on the right track.

இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:

Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William

Medical Medium - Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal

அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.

கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).

அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.

நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.

இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?

Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

Cure - A Journey into the Science of Mind Over Body by Jo Marchant

எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.

”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.

அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”

திருநாவுக்கரசர் அன்றே பாடினார்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.

எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.

’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!

திருக்குறள் : 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.