நாட்டு வளம்: பனை மரத்தின் பயன்: இலங்கையும் தமிழ்நாடும்


சாப்பாட்டு நிகழ்ச்சியைக் கூட புதிய தலைமுறை டிவியின் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ செய்முறை விளக்கமாக சுருக்காமல், ‘நீங்கள் கேட்ட பாடல்’ விஜயசாரதி போல் தகவல் அடுக்கும் சாதனமாக மாற்றி இருக்கிறது.

சமீபத்தில் கலிஃபோர்னியா சென்று வந்ததில் இருந்து பனை மரம் மீது பாசம் கலந்த ஆர்வம் தொற்றிக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில் சமீபத்தில் ’சோற்று சரித்திர’த்தத்தை பனை மர ஸ்பெஷலாக்கி இருந்தார்கள்.

பனம்பழ புட்டு, வீட்டுக்கு மேலே பனை ஓலை, பனங்கிழங்கு ஃப்ரை என்று இத்தனை உபயோகங்களை ஆதிகாலத்தி தமிழர் கண்டு பிடித்திருக்கிறாள்! மரமாக வளர வைத்து பயன்படுத்துகிறாள். குட்டிச் செடியாகவே எடுத்தும் உபயோகிக்கிறாள்.

இன்றைய சமூகம் இணையத்தைக் கொண்டு சின்ன சின்ன சேவைகளை அறிமுகம் செய்வது போல் அன்றைய நாகரிகம் இயற்கைப் பொருள்களை வைத்து புதுப் புது பயன்களை கண்டுபிடித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

கூடவே நன்றாக தின்றும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.