கலைஞர் மு கருணாநிதியும் தர்மதுரை ரஜினிகாந்த்தும்


Original

கலைஞர் கருணாநிதி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி (2010)

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் நம் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
ஆசை மட்டும் போவதில்லை
அடிக்கும் பணம் ஓடிவிடும் பதவி விட்டுப் போவதில்லை

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தாலும் சொத்து சுகம் தேவையிங்கே
ஆட்சி விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே
பா.ம.க. மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சாலும் நாற்காலி சுகம் போல் ஏதுமில்லே

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமுண்டு
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

 

One response to “கலைஞர் மு கருணாநிதியும் தர்மதுரை ரஜினிகாந்த்தும்

  1. //அடிக்கும் பணம் ஓடிவிடும் பதவி விட்டுப் போவதில்லை//

    பணத்தையும் பதவியையும் இடம்மாற்றி போட்டால் அர்த்தம் இன்னும் பொருத்தமாக இருக்குமோ!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.