Vijay’s Vettaikaaran: Nan Adicha Thanga mata


நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட

நான் புடிச்சா உடும்புப் புடி
நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள் பறை நீ

ஏய் வாழு வாழு வாழ விடு
வாழும் போதே வானைத் தொடு

வம்பு பண்ணா வாளை எடு
வணங்கி நின்னா தோளைக் கூடு

உணவு உடை இருப்பிடம்
உழவனுக்கும் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கணும்

ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழாதே
வீண் பேச்சு பேசாதே

காலம் கடந்து போச்சுதுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து

வரட்டி தட்டும் செவத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா

புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சை மீறாதே
தீயோர் சொல் கேட்காதே

ஏதோ நானும் சொல்லிப்புட்டேன்
ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையினா உன்ன நீயே மாத்திக்கோ

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.