Monthly Archives: நவம்பர் 2007

இன்று ஒரு தகவல் – Numbers

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் தமிழர்கள் சதவீதம் = 5 %

2001-ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 5,244

தமிழகத்திலிருந்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 254 பேர்.

ஆண்டுதோறும் சராசரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளில் சேருபவர்கள்: சுமார் 250 பேர்

ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை – தமிழ்நாடு தமிழனின் பார்வை

முதலில் விடை தெரியாத கேள்வி:

  • விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆர்வத்துடன் துவங்கியவர் ரணில் விக்கிரமசிங்கே.
  • ஏ9 சாலையை மீண்டும் திறந்து யாழ்ப்பாணத்தை மீண்டும் அடைய வைக்க ஒப்பந்தமானது.
  • அங்கே மீன் பிடிக்க செல்லக்கூடாது; இங்கே சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து‘ போன்ற கெடுபிடிகள் தளர்ந்தது.

அமைதியைக் குறிவைத்து இப்படி ஏகப்பட்ட ஆக்க பூர்வமான ரணிலுக்கு தமிழர்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? ‘நிச்சயம் ஒடுக்குவேன்‘ என்று அறிவித்த ராஜபக்சவுக்கு 51 சதவீதமும், பேச்சுவார்த்தையில் உறுதுணையாற்றிய விக்கிரமசிங்க்வுக்கு 49 சதவிகிதமும் வாக்கு கிடைக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியாகி ஓய்வெடுக்கும் சந்திரிகா குமாரதுங்கா. தமிழர்கள் வாக்களித்திருந்தால் மீண்டும் ரணில் வந்திருப்பார்.

இலங்கையில் சாதாரண பொதுபுத்தி எடுபடாது. ‘இப்படித்தான் யோசிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால், நேர் எதிர் வியூகம் அமைத்து பாதாள குழியில் விழுவது போன்ற முடிவுகள் சகஜம். இதை பின்னணியாக வைத்துக் கொண்டுதான் ‘அடுத்து என்ன‘ என்று ஆருடம் போடமுடியும்.

இலங்கை அரசுக்கு தமிழர்கள் மேல் பரிவு இருப்பது போல் காண்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். சிலசமயம் இந்த நாடகத் தோற்றத்தில் வெற்றி காண்கிறார்கள். முல்லைத்தீவு சம்பவம் போல பெரிய தாக்குதல்கள் முதல் அன்றாடப் போரில் இறப்புகள் உட்பட, ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு மாற்றான சக்தியாக இல்லாமல், ரேசிஸ்டாக பேரினவாதத்திற்கு ஆதரவான சித்தரிப்புக்குள் அடங்கிப் போகிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் போரின் மகத்துவம் தெரிந்தே இருக்கிறது. சுனாமி வந்தால் பணம் கிடைக்கும். போர் என்றால் பணம் கொட்டும். இதை முன்னிட்டுதான் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது முக்கியமானதாகிறது. இதனால் ஆட்கடத்தல், போதை மருந்து சரக்கு பரிமாற்றம் போன்ற அதிகாரபூர்வமற்ற வழிமுறைகளினால் நிதி திரட்டப்படும். பிரபாகரனுக்கு கையிருப்பு குறைவதை விட கரும்புலிகளின் சேர்க்கைதான் மிகப் பெரிய பிரச்சினை.

சிறார்களை முளைச்சலவை செய்கிறார்கள்; கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்; அப்பாவி சிங்களர்களைக் கொல்கிறார்கள் போன்ற மனித உரிமை நெறிகளை கைவிட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் தோற்றம் காண்பிக்கும்வரை அவர்கள் மீது கரிசனப் பார்வை உலக அரங்கில் கிட்டப்போவதில்லை.

சூடான், ருவாண்டா மாதிரி பிரச்சினை இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்று ஐ.நா. எண்ணுகிறது. ஈராக், இரான் மாதிரி எண்ணெய் வளமும் கிடையாது. அப்புறம் எப்படி கரிசனம் கிடைக்கும்?

சைப்ரஸுக்கே இப்போதுதான் தனி நாடாக முடிகிறது. ஃபாக்லாந்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது போல் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளே முடிவுறாத நிலையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு அறிவுரை சொல்லி, ஈழத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, சுதந்திரம் கிடைக்கும் அதிகாரத்தை தரும் நிர்ப்பந்த நிதர்சனங்களை வலியுறுத்தும் நிலையில் இல்லை. சீனா, ரஷியா, இந்தியா போன்ற இன்ன பிறருக்கும் இப்போதைய குழப்ப சிக்கல்களே சாலச் சிறந்ததாக இருக்கும் வேளையில் தெற்காசிய கூட்டமைப்புகளும் இடித்துரைத்து ராஜபக்ஷவை கண்டிக்க முடியாத அவலம்.

விடுதலைப் புலிகளிடம் இன்னும் போதுமான அளவு நிலப்பரப்பு இல்லை. அதற்கு ஈடாக உயிரின் அருமை தெரியாத, தற்கொலையை விரும்புவதற்கு அடிமையாக்கப்பட்ட, கரும்புலிகள் நிறைய இருக்கிறார்கள்.

பேரம் பேச தேவையான அளவு இராச்சியம் கிடையாது. ஆனால், அதற்கு ஈடாக அமைதி காலத்தில் சேகரித்த படைகலன்கள் குவிந்திருக்கிறது.

செத்து மடிவதற்கு சிறார்களும் அவர்கள் சக தமிழர் மீதோ அல்லது எதிராளி மீதோ வீசுவதற்கு சவாப்தாரியாகாத குண்டுகளும் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை பாவ்லாக்கள் கிடைக்காது.

கடைசியாக இஸ்லாமியர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு புலிகளும் ஆகவில்லை; இலங்கை அரசு மீதும் கரிசனம் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலை பரிதாபகரமானது!

எது நடந்தாலும் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பொறுப்பேற்காமல் ‘அந்தப் பக்கம்தான் இந்த நிலை/அசம்பாவிதத்தீற்கு காரணம்‘ என்று சுட்டுவிரல் விளையாட்டு மட்டுமே முடிவாக சொல்ல முடிகிறது.

முந்தைய பதிவு: ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்

Quotable Quote – Fear vs Greed

“This week it’s been all about fear overtaking greed.”

JAMES PAULSEN, chief investment strategist at Wells Capital Management, on the stock market downturn.

Separated at Birth – Tamil Movies

இது அசல்:

trisha_duplicate_hands_tamil_cinema_movies.jpg

இது ‘பழனி’ படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால்:

kajal_aggarwal_pazhani_bharath_trisha_duplicate.jpg

அலைவரிசை பயணங்கள்

கிட்டத்தட்ட ஓராண்டு முன்பு கில்லிக்காக எழுதியது.

நான் ஒரு பழைய கார் வைத்திருந்தேன்.

அமெரிக்கா வந்த புதிது. வங்கிக் கணக்கில் மாதத்துக்கு இரண்டு முறை சம்பளம் போடுவார்கள். பதினைந்தாம் தேதியும் ஒன்றாம் தேதியும் விடிந்தவுடன் கொண்டாட்டம். பத்தாம் தேதியிலிருந்தும் இருபத்தைந்தாம் தேதியிலிருந்தும் திண்டாட்டம். அந்த மாதிரி நிலையில்தான் நியு யார்க் மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மலையுச்சியில் கன்சல்டண்ட்டாக புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இயற்கை கொஞ்சும் இடமாக இருந்ததாலும், இருட்டில் வளைவுகள் எதுவும் விளங்காததாலும், பாடிகாட்டாக பாடல் அலறும். என்னிடம் இருந்த கைக்காசுக்கு, காஸெட் பாடும் கார் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு கலர் – ஆக்ஸிலேட்டர் அமுத்தினால் ஓட வேண்டும். ப்ரேக் போட்டால் பிடிக்க வேண்டும். எனக்கு பிடித்திருப்பது முக்கியமல்ல.

நண்பர்களைப் பார்க்க ஐநூறு மைல் ஹைவே ஓட்டினாலும் பண்பலையில் பாடல் ஒலிக்கும். பின்னிரவில் வேலை முடித்து பசி கிறக்கத்தில் கீழிறங்கினாலும் அமெரிக்க கீதம் கூவும்.

கோபமாக இருந்தால் ஹெவி மெட்டல். கோயிலுக்குப் போனால் மேஸ்ட்ரோ. காலையில் பாப். மாலையில் ஜாஸ் என்று வழக்கப் படுத்திக் கொண்டேன் எல்லா எஃப்.எம்.களையும்.

பாத்ரூமில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் புருஷன் பாடினதில் ஆரம்பித்து ஆப்பிரிக்காவில் இருந்து நாடோடியாகப் பஞ்சம் பிழைக்க வந்த க்ரூப் வரை கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் கேட்கக் கிடைத்தது. நிக்கோல் ரிச்சி ஜட்டி போடுவதில்லை என்று மட்டும் அறிந்திருந்த அறியாப் பிள்ளைக்கு, அவரின் அப்பன் அமோகமாக கலக்குவார் என்று அகர முதல் எழுத்தெல்லாம் அறியக் கிடைத்தது. ‘அகிலா அகிலா’ என்று தேவா போட்டது ‘பஃப்லோ சோல்ஜர்’ என்பார்கள். அந்த மாதிரி ஸ்ரீதேவி பாட்டு இங்கே இருக்கு என்று அளக்க, அளப்பரிய வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுது ஒரு நத்தார் தினம் வந்தது. அன்றைய விடுமுறையை கும்மாளமிட தேசி மக்கள் வந்து க்ரீன் கார்ட் பெறுவது, கம்பெனி மாறுவது, காண்ட்ராக்டை உடைப்பது, லைசென்ஸ் வாங்குவது, நைட்க்ளப் செல்வது, சனியிரவு பெண் பிடிப்பது என்று வாழ்க்கைத் தேடல்களை பேசிக் களைத்தவுடன், என்னுடைய பாடல் தொகுப்பை ஒலிக்க விட்டேன்.

நோ டவுட், சன்ஷைன், கார்டிகன்ஸ், செலீன் டியான், பார்பீ என்று கவர்ச்சியான மெட்டு இருக்கும். சில சமயம் பாடல் கூட புரியும்.

பாடல்கள் எப்படி என்னைக் கவர்ந்தது?

திரும்பத் திரும்பப் பல முறை கேட்டாலும், அலுக்காத ட்யூன். அதுதான் என்னை உள்ளே இழுக்கிறது. பன்னிரெண்டு டாலர் காசு கொடுத்து சிடி வாங்க வைப்பது. அதற்குப் பிறகு கொஞ்சம் கவர்ச்சியான வார்த்தைக் கோர்ப்பு. வரிகளில் வைரம் மின்னுவது எல்லாம் முக்கால்வாசி நேரம் விளங்குவதில்லை.

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இணையப் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

வேலையில் போரடித்தால் தமிழ்மணம். இரண்டு மணி நேர கம்பைல் ஆரம்பித்தால் ப்ளாக்லைன்ஸ். ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் என்றால் தேன்கூடு. இரவு நேர சப்போர்ட் மாரடித்தல் என்றால் கிஞ்சா.

பாஞ்சாலிக்குக் கண்ணன் சேலை கொடுத்த மாதிரி வண்ணவண்ணமாய் முடியவே முடியாத வலைப்பதிவுகள். துச்சாதனனாய் துகிலுரிக்கப் பார்த்தேன். வேர்த்து, விறுவிறுத்து, துரியோதனன் ஐகாரஸ் கட்டளைக்குட்பட்டு, அடிமுடி அறியவொண்ணா முழுமைக்கு முயற்சித்தேன்.

ஸ்பானிஷ் பாடல்கள் என்றொரு உலகம். கஜல் இன்னொரு கடல். வளைகுடா சங்கீதம் சொக்கியிழுத்துக் கட்டிப்போட்டு விடும் அண்டம். அமெரிக்கா சங்கீதத்தின் பல பாடல்களை கேட்டு, அவ்வளவுதான் என்று மருகி சொக்கித் திளைத்து, அதில் இவை சிறந்தது என்று அன்று நினைத்திருந்தேன். அதே போல், அனைத்துப் பதிவுகளையும் படித்து அவற்றில் இவை சிறந்தது என்று கில்லியில் இட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே எனக்கு நிறைவையும் மனமகிழ்வையும் தந்தாலும் முழுமையானது அல்ல.

எட்டிய மட்டும் நீந்தி, கிடைத்த காட்சிகளைப் படம்பிடித்து, தண்ணீர்க் கோலங்கள் இம்புட்டுதான் என்பது போலவே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடத்தின் கவர்ந்த பதிவுகளுக்கொரு பதிவு.

சமீபத்தில் பெண்டாமீடியா எடுத்த பாண்டவாஸ் அனிமேசன் படம் பார்த்தேன். மிக மோசமான படம். துள்ளித் துள்ளி நீ ஓடம்மா என்று திரைக்கதை பாய்ந்தோடியது. குழந்தைகளைக் கவரும் ஸ்பெசல் எஃபக்ட்ஸ் பெரிதாக, காட்சிக்கு காட்சி வராமல், அவர்களின் கவனத்தை நோகடித்தது. துரி, தேவ் என்று செல்லமாக அழைத்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் இரண்டு வருடமாய் டிவியில் வந்த சோப்ரா பாரதத்தை, இரண்டு மணியில் மஹாபாரதமாக்கி இருந்தார்கள். அதற்காகவே பாராட்டலாம். அதற்கு மட்டுமே பாராட்டலாம்.

அந்தப் படம் மாதிரி கடந்த வருடத்தின் அலைவரிசைப் பயணங்கள்:

ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி மாதம். சுரேஷ் கண்ணன் இலக்கியவாதி (பிச்சைப்பாத்திரம்: பாலாவும் என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பகுதியும்). பத்ரியோ பதிப்பாளி (பத்ரியின் வலைப்பதிவுகள் – நான் வாங்கிய புத்தகங்கள்).

நாராயண் மருதநாயகம் பற்றி கமலுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதங்களும் இலக்கியம்தானே என்கிறார் செல்வராஜ் (என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் » Blog Archive » பழைய கடிதம் ஒன்று). ‘அழகி’ படத்தின் மூலம் வாழ்க்கை இலக்கணத்தைப் பார்க்கிறார் தமிழ்தேனீ (வண்ணக்குழப்பம்: மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை).

சுந்தரமூர்த்தி Looking for Comedy in the Muslim World என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தூரப் பார்வை பார்த்தார். நிலவு நண்பன் நீங்கள் இன்னும் பார்க்காத ‘யதார்த்தம்’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுகிறார். அதிகம் அறியாத படங்களைப் பகிரும் சன்னாசி Palindromesஐ திருப்பிப் போடுகிறார். இயக்குநர் அருண் வைத்யநாதன் திரைப்படமே எடுத்து வெளியிடுகிறார் (Agara thoorigai » Blog Archive » ‘தனியொரு மனிதனுக்கு’ குறும்படம்)

நபகோவின் லோலிடாவை செல்வன் வாசக அனுபவமாக்குகிறார். ஈழ நூல்களை இணையத்தில் காண நூலகம் துவங்குகிறது. (“ம்…” – விட்டு விடுதலையாகிநிற்போம்…!). அருந்ததி ராயின் கட்டுரைத் தொகுப்பை ஜெயந்தி சங்கர் விமர்சிக்கிறார். (வல்லமை தாராயோ: the algebra of infinite justice (நூல் அறிமுகம்))

டிவியில் தங்கவேட்டையை பின்னூட்ட வேட்டையாளர் இலவச கொத்தனார் கவனிக்கிறார் (இலவசம்: தகதகதகதக தங்கவேட்டை). ரங்கா அண்டங்காக்கைகளையும் பனிக்கரடிகளையும் பார்க்கிறார். (இதர எண்ணங்கள்: கறுப்பும் – வெளுப்பும்)

இண்டிப்ளாகீஸ் தேர்தல் குறித்து தருமி அலசினார் (தருமி » 123. Election Analysis…). லண்டன் பயணங்களில் நம்மையும் டிக்கெட் செலவு வைக்காமல் கூட்டிப் போகிறார் இரா முருகன் (vembanattu-k-kaayal: எடின்பரோ குறிப்புகள் – 5).

இன்னும் குட்டி ரேவதி எஸ்.ராமகிருஷ்ணன், வைகோ அணி மாறல், திருமா பாமக விடுதல், துபாயின் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ராஷித் பின் மக்தூம் மரணம், ரங் தே பஸந்தி, கோல்டன் க்ளோப் என்று செய்திக் குறிப்புகள் திரும்பிய சுட்டியெல்லாம் படிக்கக் கிடைத்தாலும் நேர்மையான சொந்தக் கதையை எளிமையாக எழுதியிருக்கும் அருள்குமார் பதிவு நெஞ்சில் நிற்கிறது (நான் பேச நினைப்பதெல்லாம்: “தீம்தரிகிட” – வாக்குப்பதிவு)

நான்தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே! நான் அகலக்கால் வர்க்கம். ‘ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்று சுருக்காமல், நூறாயிரம் விதமாக விவரிப்பதை ரசிப்பவன். ரசிப்பவர்களில் திளைப்பவன். எத்தனை சம்பளம் வந்தாலும் அதிகம் இரண்டணா செலவு வைக்கும் பாலையாவின் கோபத்திற்கு ஆளாகுபவன்.

மற்ற மாதங்களுக்கும் மிச்ச சுட்டிகளுக்கும் ப்ரேமலதாவின் (Kombai) பரிந்துரைக்கேற்ப ஓல்ட் இஸ் கோல்ட் (கில்லி – Gilli » OIG)-இல் சந்திக்கிறேன்.

இனிய சுட்டிகளும் அமைதியானப் பூக்களும் நிறைந்த வலைப்பூ ஆண்டாக 2007 அமைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Blogger repeats itself.

ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்

முதலில் கதை.

பாஸ்டனில் இன்று அடித்த லேசான பனி போன்ற குளிர் இரவு. ஆனால், கதை நடப்பது பழைய தில்லி. இராஜாதி ராசா அக்பர் அலுங்காமல் குலுங்காமல் நடை பயிலுகிறார். வானத்தில் நிலா பளிச்சென்று பாடலுக்கு மேக்கப் போட்ட அசின் போல் சிரிக்கிறது. அரண்மனை சிற்றோடையில் அசின் தெரிவதாய் நினைத்து தொட்டுப் பார்க்க சில்லென்று காதலில் ஷாக்கடிக்காமல், கை உறைய வைக்கும் குளுமை.

சமாளித்துக் கொண்டு, ஜொள்ளைத் துடைத்துக் கொண்டு பாதுகாப்புக்கு ‘ஆமாம் அரசே‘ போடும் பொடியர்களிடமும், புத்திசாலியாக தன்னைக் காப்பாற்றும் வகை அறிந்த பீர்பாலிடமும் சவடால் விடுகிறார். ‘இந்தத் தண்ணீரில் பகலவன் உதயமாகும் வரை எவனாவது நிற்க முடியுமா?’

தான் எதற்கும் பொறுப்பேற்று தர்மம்/சங்கடம் போன்றவற்றில் மாட்டிக் கொள்ளாத மந்திரி தண்டோரா போடுகிறார். அரசருக்கும் எவனோ அகப்பட்டு இரா முழுக்க frozen to death ஆனது தனிக்கதை.

ஈழப்போரில் பிரபாகரனும் பீர்பால் போல் ‘கரும்புலியாவது யாரு’ என்று வினவ அப்பாவிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அக்பர் சாலை போட்டார். அசோகர் மரம் நட்டார் மாதிரி விடுதலைப்புலிகள் ஏதாவது பாடம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது புத்தகம்: One Day the Soldiers Came: Voices of Children in War – Charles London

கடைசியாக இரு தலைவர்கள்: சிட்டி க்ரூப்பும் மெர்ரில் லின்ச்சும் கொண்டாடிய சி.யீ.ஓ.க்கள்.

அமெரிக்காவில் கடன் கொடுப்பதில் எல்லோரும் தாராளமாக இருந்த காலம், கடந்த காலம். வீடு வாங்குவதற்காக வரவுக்கு மேலே பத்தணா கேட்கும் பத்திரங்கள் விற்று வந்தார்கள். அப்படி தாராளமாக திறந்து விட்டு, தங்கள் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கிக் கொண்டார்கள்.

இந்த இருவர்கள் மட்டுமல்ல. அனைத்து நிதித்துறையும் செய்ததுதான். இருந்தாலும் இருவரும் பணால் ஆகி இருக்கிறார்கள்.

நேரடியாக களத்தில் இறங்கி தானப்பிரபுவாக அள்ளிவிடச் சொன்னது இவர்கள் அல்ல என்றாலும், பொறுப்பு என்றோ, கடமை என்றோ, பலிகடா வேண்டும் என்றோ, பிறருக்கு நம்பிக்கையூட்ட இன்னொருவர் தேவை என்றோ விலகிக் கொண்டிருக்கிறார்கள்.

தியாகம் என்று சொல்ல முடியாதபடி பல மில்லியன் வருவாயை வழித்துக் கொண்டு சென்றாலும், தவறான பாதையில் அழைத்து சென்றதற்காக நிறுவனத்தின் தலைவர்கள் பதவியிழந்தார்கள்.

பிராயசித்தமாக, பிறிதொரு பாதையில் செல்வதற்கு புது முகம் தேவை என்பதற்காக, மாற்றுவழியை உறுதியுடன் நம்புபவர் வேண்டும் என்பதற்காக கழற்றி விடப்பட்டார்கள்.

பங்குச்சந்தை ப்ரெஷருக்கு மட்டுமல்ல… உலக அரங்கிலும் நம்பிக்கையூட்ட பிரபாகரன் விலகினால்தான் ஈழத்துக்கு விடுதலை.

பின்னணி/தொடர்புள்ள பதிவுகள், செய்திகள்/தொகுப்பு: Snap Judgement: LTTE

பேராசைகள் – அகமும் புறமும்

1. ஐம்பது சவரனுக்கு நகை போட்டிருக்கிறார்கள். 23 வயது பெண்ணை சந்தோஷமாக இருப்பாள் என்னும் நம்பிக்கையில் அமெரிக்கா அனுப்பி இருக்கிறார்கள். அங்கு சென்றாலும் வரதட்சணை விடாது கேட்டு படுத்தும் கணவன் & குடும்பத்தார். காரில் ஏறும்போது தடுக்கி விழுந்து விபத்தாகி கோமாவுக்கு சென்றதாக கணினி வல்லுநர் கதை விடுகிறார். படித்தவனுக்கு புத்தி, சமூக அறிவு, சிந்தனை இருக்கும் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் 😦

அது நேற்றைய செய்தி. இன்று அசோக்குமார் & சுபரஞ்சனி.

திருமணத்திற்காகும் செலவில் 50:50 காணும் காலம் வர குறைந்தது ஐம்பதாண்டுகள் பிடிக்கும்.

2. தமிழகத்தில் ஏழைகளுக்கெல்லாம் தொலைக்காட்சி வழங்கி சிவந்த கரங்கள், இப்பொழுது அடுக்குமாடி வீடுகளுக்கும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக வழங்கிவருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போர் எல்லோருக்கும் ஒரு டிவி. இதற்காக ஆகும் செலவை தேங்கியிருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தவோ அல்லது கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்கோ அல்லது பிறிதொரு நம்பிக்கை தரும் விஷயத்திற்கோ பயன்படுத்தாமல் விழலுக்கிறைத்த வெந்நீர்.

சீர்வரிசைக்கு முக்காடு போட்டு கேட்கிறார்கள். ‘எனக்கு வந்துடுச்சு; நீங்களும் வாங்கிட்டீங்களா‘ என்று டிவிக்கு வரிசையில் வெளிப்படையாக விசாரிக்கிறார்கள்.

Metropolitan Diary

இது நியு யார்க் டைம்ஸில் பிரதி திங்கள்கிழமையும் வெளியாகும் பத்தி. நியு யார்க் நகரத்தின் மாந்தர்களை, குணாதிசயங்களை, லேசாக்கி பகிர்ந்து கொள்கிறார்கள். புத்தம்புதிய பட்டாடை நனைகிறதே என்று குடை ஈந்த வள்ளல், இனிப்பு சாப்பிட தடா போட்டதை பிரிவாக அனுமானித்த கதைகளுடன்

Dear Diary:

Two years ago, I was attempting to escape the predictable Halloween madness. I decided that an Indian restaurant on Columbus Avenue might serve as a respite.

No such luck. Costumed kids paraded in and out repeatedly. The staff was aware of this peculiar American custom and had equipped itself with a large bowl of candy.

I asked my waiter, jokingly, if this holiday was celebrated in India. I didn’t anticipate his answer.

“We have something like it, but the children have to sing a song to get a treat. Here they do nothing and still expect a reward.”

Don Hauptman

ஆளவந்தான்

truth_vegas_one_way_multiple_paths_new_yorker_cartoon.jpg

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு சன் டிவியில் ஆளவந்தான் போட்டிருக்கிறார்கள். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து விடலாம் என்று பெரிய மனது செய்து, பதிவானவற்றை மேய்ந்ததில் தெரிய வந்தது.

அரை மணி நேரம்தான் கிடைக்கப்பெற்றேன். அடுத்த முறை இந்தியா போகும்போது மோஸர் பேயரில் வாங்கி வர வேண்டும்.

நந்து அறிமுகமாகும் காட்சியில் கூடவே குரங்கு தோன்றுகிறது. அது கடுவணா, மந்தியா என்றெல்லாம் யோசிக்காதவனாக நந்து வளர்ந்திருக்கிறான்.

‘கடவுள் பாதி மிருகம் பாதி’ பாடலின் ஆரம்பத்தில் வெளியே சுற்றும் குரங்கைத் துரத்தியடித்துவிட்டு ஆடிப் பாடுகிறான். போதையின் கிளர்ச்சியாக வரும் திரை மாற்றங்கள் தமிழ்ப்படங்களில் இது வரை யாருமே செய்யாதவை.

‘ராஜா சின்ன ரோஜா’வாக கார்ட்டூன் போடாமல், கோபத்தில் அடிதடி போடும் பொம்மை மனது. கம்பத்தைத் தேய்த்து காமாக்னியை தணித்துக் கொள்ளும் பாவம். விளையாட்டு மட்டையில் வெறியை உருட்டும் ஷோகேஸ்கள்.

நுழைவுச்சீட்டு வாங்கும் வரிசையில் நிற்கும் குழந்தையின் ஐஸ்க்ரீமை சார்லி சாப்ளின் கபளீகரம் செய்தால் சிரிக்கும் குழந்தையிடம் அதே செய்கையை செய்து, நிழல் நிஜமாவதின் யதார்த்தம்.

‘நீ பேசுவது புரியல’ என்று துணையெழுத்து படிக்கும் நக்கல். மனிதர்களே காட்சிப் பொருளாகவும் காட்சிப் பொருள்களே கனவாகவும் கனவுகளே வக்கிரமாகவும் நிற்பவை.

பச்சை வண்ணக் சொப்பனக் கலவை; சிவப்பு நிற வேகம்; நீல நிற குளிர் தாய்மை.

சாரு நிவேதிதாக்களுக்கு விளங்கவில்லையா? புரியாத மாதிரி வெறுப்பேற்றி காலந்தள்ளுகிறார்களா?

படம் பார்த்த அரை மணி நேரத்திலேயே சுஜாதாவின் கருத்துகள் தோன்றிப்போகிறது:

ஒரே படத்தில் பல விஷயங்களைச் சொல்ல வேண்டும், பல திறமைகளை தொழில்நுட்பங்களை காட்ட வேண்டும் என்கிற உங்கள் பரபரப்பினால் படம் நிச்சயம் பல இடங்களில் பாதிக்கப்படுகிறது. அவை இவை:

  • மாமாவின் தொண்டை கான்சரும், அதனால் அவர் கருவி மூலம் பேசுவதும் ஒரு அனாவசியமான கவனக் கலைப்பு.
  • கதையில் விஸ்தாரமாகக் காட்டப்பட்டு பயன்படுத்தப்படாத விஷயம் நந்து செத்துப் போய் விட்டான் என்று கடித்துக் குதறி, தலையை வெட்டி, அதிகாரிகளை விஸ்தாரமாக நம்ப வைப்பது விரயமாகி விடுகிறது. அடுத்த சீனிலேயே விஸய், ‘நந்து செத்து போயிருக்க மாட்டான்‘ என்று சொல்லிவிடுகிறான்.


சினிமா எடுப்பதின் மற்ற அவஸ்தைகளும் இடைவௌியில் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகளும் மன உளைச்சல்களும் தாமதங்களும் முடிக்க வேண்டிய கட்டாயங்களும் காரணங்களாக இருக்கலாம்.

இதயம் பேசுகிறது ‘தாயம்’ தொடர்கதையை விட திரைக்கதை-வசனத்தில் கமல் நன்றாகவே செய்திருக்கிறார்.

குருப்பெயர்ச்சி

work_new_yorker_boss.jpg

வயதானால் கடவுள் நம்பிக்கை வரும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார். எனக்கு குருப்பெயர்ச்சியில் நம்பிக்கை வந்திருக்கிறது.

பதினைந்து வாரமாக விடுமுறையில் இருந்த மேலாளர் திரும்ப வந்திருக்கிறார். குழந்தை பிறந்த குசலம் விசாரித்து முடித்து, சுபயோக நேரத்தில் வலைமேய்வதை நிறுத்தி விட்டு, அரட்டைப் பெட்டிகளை மூடிவிட்டு, மீண்டும் வேலை பக்கம் திரும்பினேன்.

பேறு காலம் முடிந்து எனக்கு கஷ்டகாலம் என்று அலுத்துக் கொண்ட மேனேஜருக்கு குரு சரியில்லை போல…

golf_sex_work_thoughts_new_yorker_imagine.jpg