Thinnai :: இரண்டு முத்தங்கள் – பொ கருணாகர மூர்த்தி
அ.முத்துலிங்கம் கதையில் ‘என்னுடைய சேர்ட் கொலர் சைஸும், என் வயதும் ஒன்றாயிருந்த வருடம்’ என்கிற வரியை நான் வெகுவாக இரசித்தேன். அ. முத்துலிங்கம் சொல்லும் உவமானங்கள் எப்போதும் தனித்துவமானவை.
ஒரு முறை சொன்னார் : ‘இளமையில் யாருக்கும் காலம் புது டாய்லட் பேப்பர் சுருள் உருள்வதைப்போல மெல்ல மெல்லத்தான் உருள ஆரம்பிக்கும்…………பின் வயசாக ஆகத்தான் வேகம் பிடிக்கும்.’
Thinnai :: முகம் கழுவாத அழகி – அ.முத்துலிங்கம்
பொஸ்டன் நகரத்து வீதிகளை நம்ப முடியாது. வளைந்து நெளிந்து மேடும் பள்ளமுமாக இருக்கும். திடீரென்று நெடுஞ்சாலை வரும், போகும். நெடுஞ்சாலை வரிக்காசு சரியாக வைத்திருக்க வேண்டும். பாதைகள் சுழன்று சுழன்று இடப் பக்கம், வலப்பக்கம் என்று பிரிந்துபோய் எனக்கு குழப்பம் உண்டாக்கும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன்.
அந்தப் பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அழைத்துப்போக வரும் தாய்மார்களில் ஒலிவியா வித்தியாசமானவளாக இருந்தாள். எல்லோருமே இளம் தாய்மார்தான். பளவென்று இருப்பார்கள். இரவு விருந்துக்கு புறப்பட்டதுபோல ஒப்பனையுடன் அலங்காரம் செய்திருப்பார்கள். உடைகள் ஆடம்பரமானவை என்பது பார்த்தவுடனேயே தெரியும். அவர்கள் வரும் வாகனங்களும் உயர்ந்த ரகமாகவே இருக்கும். இதற்கு விதி விலக்கு நான் ஒருத்தன் மட்டுமே. எனக்கு அடுத்தபடி வருவது ஒலிவியா. அவள் முடி கலைந்து இருக்கும். முகம் காலையிலோ மாலையிலோ அதற்கிடைப்பட்ட காலத்திலோ தண்ணீர் என்ற பொருளை காணாததாக இருக்கும். விற்பனைப் பெண், வரவேற்பறைப் பெண் அல்லது உயர் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண்போல கணத்தில் தோன்றி கணத்தில் மறைந்துவிடும் புன்னகையுடன் அவள் இருப்பாள்.
பொஸ்டன் நகரத்தில் எட்டு லட்சம் கார்கள் இருப்பதாக எங்கோ புள்ளிவிபரத்தில் படித்திருந்தேன். அன்று பார்த்து அத்தனை கார்களும் இருபதாவது நெடுஞ்சாலையில் நின்றன.
இருவருமே சாதுவான குழந்தைகள். ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது விளைவு மோசமாக இருந்தது. நான் வேதியியல் மாணவனாக இருந்தபோது தண்ணீர் போலத் தெரியும் இரண்டு திரவத்தைக் கலந்தபோது குபீரென்று ஊதா நிறமாக மாறியது ஞாபகத்துக்கு வந்தது. அப்ஸரா ஒரு விளையாட்டு சாமானைத் தூக்கினால் அது அனாவுக்கு வேண்டும்; அனா எடுத்தால் அந்த நிமிடமே அப்ஸராவுக்கும் அது தேவை. சிரிக்கும்போது இருவரும் குலுங்கி சிரித்தார்கள்; அழும்போது இருவரும் சேர்ந்து அழுதார்கள்.










