புதிய பெற்றோர்கள் (நதியின் கரையில்) :: பாவண்ணன்
புதிய பார்வை – ஏப்ரல் 16-30, 2007
கனவுகளை யாரும் ஊட்டிவிட முடியாது. அவை தானாகவே ஊறிவரவேண்டும் என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். கனவை வரித்துக் கொள்கிறவர்களுக்கு அதை அடையத் தேவையான திட்டங்களும் உழைப்பும் தாமாவே வடிவமுறுகின்றன.
பழைய பெற்றோர்களையும் புதிய பெற்றோர்களையும் ஒப்பிட்டு என் மனம் தானகவே ஓர் உரையாடலில் இறங்கியது.
விவசாயச் சமூகத்தை சேர்ந்த பழைய பெற்றோர்களின் வாழ்வில் கல்வி குறுக்கிட்டு சற்றே தடுமாற்றத்தில் ஆழ்த்தியதைப் போல, கல்விச் சமூகத்தைச் சேர்ந்த புதிய பெற்றோர்களின் வாழ்வில் கனவுகள் குறுக்கிட்டு தடுமாற வைப்பதாகத் தோன்றியது.










