ஒன்று கவனித்தீர்களா? தமிழ் நாட்டில் இவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு விழா அல்லது ஏதாவது ஒரு பெருத்த கலவரத்தை எப்பொழுதும் நடத்திக் கொண்டே இருப்பார்கள். மக்கள் எதைப் பற்றி பேசுவார்கள்?
பொன் விழா, பிறந்த நாள் விழா, சங்கமம் விழா, தினகரன் எரிப்பு, தயாநிதி, கனிமொழி எம் பி ஆனது…
ஆக மொத்தத்தில் இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையான பிரச்சினைகளும் ஆட்சியின் திறமையின்மையும் தந்திரமாகப் பின்னால் தள்ளப் பட்டு விடுகிறது. இது போன்ற விழாக்களையும் மக்களைத் திசை திருப்பும் நிகழ்ச்சிகளையும் இவர்கள் ஒரு ஸ்டிராடஜியாகவே செய்கிறார்கள். இப்பொழுது தி மு க முழு மூச்சாக டி வி நடத்தப் போகிறார்களாம், இவர்கள் என்றைக்கு அரசாங்கம் நடத்தப் போகிறார்கள் ?
அடுத்து மதுரை தேர்தல் அப்புறம் இன்னொரு விழா இப்படியாகவே தமிழ் நாட்டில் பொழுது கழிகிறது.










