ஹாலந்தில் இருந்து ஐஷ்வர்யா ராய்க்கு 23,000 யூரோக்கள் தாங்கிய தபால் வந்திருக்கிறது.

நான் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்போதும், ‘லக்கேஜில் என்ன இருக்கிறது‘ என்று சுங்க அதிகாரிகள் வினவினால், பதவிசாக, ‘துணிமணி இருக்குங்க சாமீயோவ்! அப்பால கொஞ்சம் பொஸ்தவம் கூட இருக்குங்க!’ என்று உட்டாலக்கடி விடுவது போல் ‘மின் சாதனங்கள் மட்டுமே இருக்கிறது’ என்று அனுப்பியவர் டபாய்த்திருக்கிறார்.
இந்த மாதிரி புதையல்கள் அஞ்சலில் வந்தால் என்ன செய்வது? தப்பித்தால் தப்பில்லை.
முகம் தெரியாத ஒருவர், எனக்கு இவ்வாறு பொன்முடிப்பு கொடுத்தால் ‘கடவுளாப் பார்த்து பிச்சை போட்டது‘ என்று வைத்துக் கொள்ளவே தோன்றும். Reserve Bank of Indiaவோ எஃப்.பி.ஐ.யோ கதவைத் தட்டி ‘5,000 ரூபாய்க்கு மேல் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டினால், மாட்டிக் கொள்வாய்’ என்று விசாரிக்காதவரை லாபமே!
DNA – Mumbai – Aishwarya quizzed over cash in parcel – Daily News & Analysis: “Bollywood actress Aishwarya Rai is being quizzed by customs officers after a parcel from a man in the Netherlands sent to her former address was found to contain 23,000 euros ($29,500).”










