Daily Archives: ஒக்ரோபர் 9, 2006

Price Comparison for Commodities – ADMK vs DMK Govt

Dinamani.com – TamilNadu Page

பொருள்கள் விலை: ஜெ. ஒப்பீடு

சேலத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைவாக இருந்தது; தற்போது அவற்றின் விலை அதிகரித்து விட்டது என்று புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.

அவர் குறிப்பிட்ட விலை விவரம்: (அடைப்புக்குறிக்குள் அதிமுக ஆட்சியில் நிலவிய விலை)

மஞ்சள் ஒரு கிலோ ரூ.50 (ரூ.28)

புளி கிலோ ரூ.50 (ரூ.25)

வெள்ளைப்பூண்டு ரூ.75 (ரூ.50)

துவரம்பருப்பு ரூ.52 (ரூ.28)

உளுத்தம்பருப்பு ரூ.65 (ரூ.25)

கடலைப்பருப்பு ரூ.45 (ரூ.18)

பாசிப்பருப்பு ரூ.55 (ரூ.26)

மைதா ரூ.21 (ரூ.12)

கோதுமை மாவு ரூ.20 (ரூ.12)

ரவை ரூ.22 (ரூ.14)

மொச்சைப்பயறு ரூ.60 (ரூ.25)

காராமணி ரூ.50 (ரூ.25)

தனியா ரூ.45 (ரூ.28)

மிளகாய்வத்தல் ரூ.45 (ரூ.30)

சுண்டல்கடலை ரூ.50 (ரூ.30)

சீரகம் ரூ.125 (ரூ.90)

கடுகு ரூ.30 (ரூ.15)

வெல்லம் ரூ.12 (ரூ.6)

சர்க்கரை ரூ.18 (ரூ.15)

மிளகாய்த்தூள் ரூ.105 (ரூ.55)

பாமாயில் ரூ.50 (ரூ.30)

நல்லெண்ணெய் ரூ.50 (ரூ.38)

தேங்காய் எண்ணெய் ரூ.75 (ரூ.50)

ரீபைண்டு ஆயில் ரூ.55 (ரூ.28)

இதுதான் திமுக ஆட்சியின் லட்சணம் என்றார் ஜெயலலிதா.

ரசிக்கும் சீமானே

ஓ…
ரசிக்கும் சீமானே வா

ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

கற்சிலையின் சித்திரமும் கண்டு
அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு

வீண் கற்பனையெல்லாம்
மனதில் அற்புதமே என்று
மகிழ்ந்து விற்பனை செய்யாதே
மதியே

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…
ரசிக்கும் சீமானே வா

வானுலகம் போற்றுவதை நாடி
இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி

வெறும் ஆணவத்தினாலே
பெரும் ஞானியைப் போலே நினைந்து
வீணிலே அலைய வேண்டாம்!

தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்.

ஓ…
ரசிக்கும் சீமானே வா


அன்றும் இன்றும்

  • அன்று: ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். குமாரி கமலா நடனம் ஆடுவார். கனவான்கள் திண்டு சகிதம் அமர்ந்திருக்க சிவாஜி வந்து சேருவார். பாட்டின் முடிவில் சிவாஜிக்கு மயக்க மருந்து தரப்படும்.

    இன்று: நேரு உள்நாட்டு விளையாட்டரங்கத்தில் சினேகா ஆடுகிறார். கலைஞர் இளமையில் எழுதிய பாடலுக்கு புது முலாம் பூசப்படுகிறது. திரையுலகின் மணிரத்னம், அஜீத் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர குறிப்பிடத்தக்க அனைவரும் ஆஜர். பொதுஜனம் லத்திசார்ஜ் வாங்கினாலும், ஆஜர் ஆகிவிடுகிறார்.

  • அன்று: ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?’ என்று வசனம் எழுதினார்.

    இன்று: ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?’ என்று எண்ண வைக்கிறார்.

  • அன்று: கிட்டத்தட்ட நிரந்தர முதல்வராக உள்ள ம.கோ.ரா.விற்கு பாராட்டு விழா எடுக்க பிரபலங்கள் அணுகுகின்றனர். ‘நாங்கள் தற்போது ஆரம்பித்திருக்கும் “சத்துணவு திட்டத்திற்கு”, விழாவிற்கு ஆகும் செலவை கொடுத்து விடுங்க… எனக்கு விழா வேண்டாம்’ என்று நாசூக்காக மறுத்து, பொதுநலத்திற்கும் நிதி சேர்க்கிறார் அன்றைய முதல்வர். (படித்த இதழ்: இதயம் பேசுகிறது)

    இன்று: பக்கத்து வீட்டில் சிகுன் குனியா, அண்டை மாநிலத்தில் டெங்கு என்று நோய்கள் பிரச்சாரம் இல்லாமல் பெருகினாலும், பிரச்சாரத்திற்காக பெருவிழா எடுத்து இளைஞர்களைக் கவரும் ரெகார்ட் டான்ஸ் விழா.

    திரையுலகக் கலைஞர்கள் எடுத்த விழா குறித்த தமிழ்ப்பதிவுகள்:

    1. நுனிப்புல்: நல்லா நடிக்கிறாங்கப்பா!

    2. பினாத்தல்கள்: பிரம்மாண்ட நட்சத்திரக்கலைவிழா..

    3. அலசல்: யார் இதை சொன்னாங்கன்னு தெரியுமா?

    4. கில்லி – Gilli » Tamil Cinema felicitates Chief Minister Karunanidhi


    | | | |

  • Flashback – 5 Years Back & Still unanswered Questions

    Dinamani.com – Editorial Page

    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?

    அ.கி. வேங்கட சுப்ரமணியன்

    மறுபடியும் சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடக்கப் போகிறது. 2001 சென்னை மாநகராட்சித் தேர்தலில் சராசரி வாக்குப் பதிவு சுமார் 35 சதவீதம்தான். சில கோட்டங்களில் 20 – 25 சதவீதம்தான். இந்தக் கோட்டங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கோட்டத்தில் உள்ள மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகள் கூட கிடைக்கவில்லை. மாநகராட்சி முழுவதிலும் சேர்ந்து முக்கிய இரு கட்சிகளுக்கும் மொத்த வாக்குகளில் சுமார் 10 சதவிகிதமே கிடைத்தது.

    வாக்குப் பதிவின் போது சில கோட்டங்களில் வன்முறையால் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. குறைவான வாக்குப்பதிவுக்கு இந்த வன்முறையும் ஒரு காரணம். பிற்பகலில் வாக்களிக்கலாம் என்று இருந்த வாக்காளர்கள் முற்பகலில் நடந்த வன்முறையைத் தொலைக்காட்சியில் பார்த்த பின்பு வாக்களிக்க வேண்டாம் என்று வீட்டிலேயே இருந்து விட்டார்கள்.

  • “சென்னையில் சில வாக்குச் சாவடிகள் சூறை; அ.தி.மு.க., – தி.மு.க. மோதல்: வாக்குச் சீட்டுக்கள் கிழிப்பு”
  • “தி.மு.க, அ.தி.மு.க பரஸ்பர புகார்”
  • “திருவான்மியூரில் இரு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பாதிப்பு; கராத்தே தியாகராஜன், சரத்குமார் வாக்குவாதம்; டி .வி., காமிரா சேதம்; மூன்று வேட்பாளர்கள் தர்ணா”

    மேற்கண்டவை எல்லாம் 17-10-2001 தினமணி நாளிதழில் வெளியான செய்தித் தலைப்புகள்.

    வாக்களிக்கும்போது மட்டுமல்ல, 22.10.2001 அன்று வாக்குகள் எண்ணப்படுகின்ற மையங்களிலும் வன்முறை நடந்தது. 23.10.2001 தினமணியில் இதுபற்றி வெளியான செய்தித் தலைப்புகள்:

  • “சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் அ.தி.மு.க வன்முறை – ஸ்டாலின் புகார்”
  • “சென்னையில் 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் – கருணாநிதி கோரிக்கை”

    இந்தச் செய்தியில் “ஜனநாயகப் படுகொலை செய்யப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தற்போது RAPE செய்யப்பட்டிருக்கிறது என்றார் கருணாநிதி” என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி ஆட்சி தேவையில்லை. அந்தந்தப் பகுதி மக்களே தங்களுக்குள் ஒரு நல்ல நபரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 152வது கிழக்கு அடையாறு கோட்டத்தில் ஒரு வேட்பாளர் “கிழக்கு அடையாறு குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின்” சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. வேட்பாளருக்காக எளிய முறையில் பிரசாரம் நடந்தது; அவருக்கும் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் குடிமக்களின் இந்த முன் முயற்சி (initiative) இறுதியில் ஒரு சோக நாடகமாகவே முடிந்தது.

    இந்தக் கோட்டத்தின் வாக்கு எண்ணிக்கை இரவு 9.45க்குத் தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வாக்கு எண்ண மறுத்து தர்ணா செய்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்திய பிறகு இரவு சுமார் 1 மணிக்குத்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

    பிறகு நடந்தது இந்தக் கோட்டத்தில் உள்ள 16 வாக்காளர்கள் சேர்ந்து அளித்த தேர்தல் மேல்முறையீட்டு மனுவில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால், முறையாக வாக்குச்சீட்டுகள் எண்ணப்படுவது நடைபெற இயலாத சூழ்நிலை வன்முறையால் உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை மையத் தலைமை அலுவலரிடமும், காவல் துறையினரிடம் எவ்வளவோ முறையிட்டும் ஒரு பயனும் கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையை விடியோ படம் எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற ஆணை இருந்தும் அது நடைபெறவில்லை.

    நான் அறிந்த வரை இந்தியாவிலேயே வாக்காளர்கள் தேர்தல் மனு தாக்கல் செய்தது இதுவே முதல் தடவை.

    இதைப்போலவே இதர மையங்களிலும், வாக்குச் சாவடிகளிலும் நடந்த அராஜகச் செயலால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களும், தேர்தல் மனு தாக்கல் செய்தனர். சுமார் 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    ஏறக்குறைய ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், அடுத்த நகராட்சித் தேர்தலும் அறிவிக்கப்பட்ட பிறகும், வாக்காளரது தேர்தல் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. அதில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மாநிலத் தேர்தல் ஆணையம், சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர் ஆகியோர் தங்களது எதிர்மனுவை (Counter) இதுவரை தாக்கல் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டவர் மட்டும் எதிர்மனு தாக்கல் செய்ததாகக் கூறி வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கிறார்.

    முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் மனுக்கள், மனுதாரர் வருகை தராததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன (Dismissed). இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்ததாகத் தெரியவில்லை.

    இந்தச் சூழலில் பல கேள்விகள் எழுகின்றன.

    * தேர்தல் முறையீடுகளை விசாரித்து தீர்ப்பளிப்பதற்கு காலவரையறை கிடையாதா?

    * வாக்காளர்கள் கொடுத்த தேர்தல் மனுவின் மீது மாநிலத்தேர்தல் ஆணையமும் மாநகராட்சியும் எதிர்மனு தாக்கல் செய்யாததற்கு மனுவில் கூறிய சம்பவங்கள் நடைபெறவில்லை என்று அவர்களால் வாதாட இயலாத நிலைதான் காரணமா?

    * வன்முறை நடந்த பொழுது அதைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் அவர்களது தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்பட்டபொழுது ஏன் மேல் முறையீடு செய்யவில்லை?

    * சென்ற முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்தில் வாக்குச்சீட்டுகள் முறைகேடாக கையாளப்பட்டதைத் தவிர்த்திருக்க முடியும். இதை ஒரு பாடமாகக் கருதி இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் ஏன் பயன்படுத்தப்படவில்லை?

    * வாக்கு எண்ணிக்கை மையத்தில் அராஜகம் நடத்தியவர்கள் சொன்னது, “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது நாங்கள் அதைச் செய்கிறோம்”. இப்பொழுது இவர்களும், “அன்று அவர்கள் இதையேதான் செய்தார்கள். இப்பொழுது எங்கள் முறை” என்று சொல்லப்போகிறார்களா?

    * அரசியல் என்பது கட்சிகளுக்கிடையே உள்ள ஒரு போர் விளையாட்டு (War Game). அதில் குடிமக்களின் பங்கு தேர்தலில் ஓட்டுப் போடுவது அல்லது போடாமல் இருப்பது என்பது மட்டும்தானா?

    * முக்கியக் கட்சிகள் முறை போட்டு முறைகேடு செய்தால் யாரிடம் முறையிடுவது?

    * நீதிமன்றத்திலே முறையிட்டால் நீண்ட காலம் ஆகிறது. நீண்டகாலத்திற்குப் பிறகு தீர்ப்பு வந்தாலும் அராஜகச் செயலைச் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகச் சான்று இல்லை. ஜனநாயகப் படுகொலை அல்லது rape செய்பவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா?

    * கட்சிகளுக்குப் பெருத்த பண பலம், (Money Power), படை பலம், (Muscle Power), பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பலம் (Media Power) இருக்கிறது. இதற்கு மேலும் கூட்டணி பலம் இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தால் அதிகார பலமும் இருக்கிறது. இவ்வளவு பலம் இருந்தும் நேர்வழியில் தேர்தலை நேர்கொள்ளாது வன்முறையிலும், குறுக்கு வழியிலும் அவர்கள் வெற்றி பெறத் துடிப்பது ஏன்? அந்த அளவிற்குப் பதவி மோகமா? அதிகார தாகமா?

    * அப்படியானால்~

    “என்று தணியும் இந்த அதிகார தாகம்?
    என்று மடியும் எங்கள் குடிமையின் சோகம்?”

    இந்தக் கேள்விகளுக்கு விடைகளை சம்பந்தப்பட்டவர்களிடமும் தங்களுக்குள்ளேயும் மக்கள் கேட்க வேண்டும்.

  • Children employed as Campaign Workers in TN Local Elections

    Dinamani.com – TamilNadu Page

    பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் கட்சிக் கொடிகள்: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் சிறார்கள்!

    மதுரை, அக். 9: குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதே லட்சியம் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கோஷம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் குழந்தைகள் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிவதை எக்கட்சியும் கண்டுகொள்ளவில்லை.

    ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள்களை ஏற்றிவரும் அரசியல் கட்சிகள், தற்போது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தினக்கூலி அடிப்படையில் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.

    காலையில் பள்ளி செல்வதற்கு முன்பும், மாலையில் பள்ளி முடிந்த பின்னர் இரவு 9 மணிவரையும் வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் குழந்தைகளுக்கு தினமும் ரூ.30 முதல் 70 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுதவிர, இடையிடையே டீ, பிஸ்கட், சாக்லேட் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

    சிறார்களைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு குறைந்த அளவே சம்பளம் கொடுத்தால் போதுமானது என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் சிறார்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

    மன ரீதியான பாதிப்பு: தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளைப் பொருத்தவரை உழைப்புச் சுரண்டல் என்ற கருத்து இல்லாவிட்டாலும், வேறு விதமான பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    “குறிப்பாக, தேர்தல் பணியில் வீடுவீடாகச் செல்லும் கட்சித் தொண்டர்கள் அதிக அளவில் பீடி, சிகரெட், மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர். அதை வாங்கி வருவதற்கும் சிறுவர்களைப் பயன்படுத்துகின்றனர்.

    இது சிறுவர்கள் மனதில் புகைப்பிடிக்கும் பழக்கம் குறித்து ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எதிர் அணியினர் பற்றி தகாத வார்த்தைகளால் திட்டுதல், வன்முறையில் ஈடுபடுதல் ஆகியவற்றை காணும் சிறுவர்களிடம் உடல், மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இது குழந்தைகளை மொட்டிலேயே கருகச் செய்யும் செயல்” என்கின்றனர்.

    இந்நிலையில், வீடு, ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 6 மாத சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் வரும் செவ்வாய்க்கிழமை (அக்.10) முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் தேர்தல் பணியில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுப்பது எப்போது?.

    ‘MGR and every other leader paid money to the Electorate’ – Panruti Ramachandran

    Headline News – Maalai Malar

    தாத்தா டி.வி. கொடுக்கிறார் பேரன் சம்பாதிக்கிறார்: தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

    மதுரை, அக். 9-
    முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவரு மான பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரை வந்திருந்தார். அவர் மாலைமலர் நிருப ருக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    இந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட இருக்கிற மாற்றம் பிறர் மரளத்தக்க வகையில் தே.மு.தி.க. வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதியை பொறுத்த வரை தே.மு.தி.க. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெறுவது மூலம் தி.மு.க – அ.தி.மு.க.வினரின் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. ஆனால் தே.மு.தி.க. வுக்கு தேர்தல் கமிஷன் மூலம் அங்கீகாரம் தரும் நிலை ஏற்படும்.

    விஜயகாந்த் சொல்லி வரும் கருத்துக்கள் விவசாயிகளையும், படித்த இளைஞர்களையும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

    நான் 1967-ம் ஆண்டிலிருந்து பல தேர்தல்களை பார்த்து வருகிறேன். எல்லா தேர்தல்களிலும் பணம் விளையாடியது உண்டு. ஆனால் மக்கள் பண அடிப்படையில் வெற்றி தோல்வியை தருவது இல்லை என்பதே எனது அனுபவம் ஆகும்.

    கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை.

    கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தும் கொசுவை ஒழிக்க முடிய வில்லை என்று விஜயகாந்த் பேசி வருகிறார். இதற்கும் காரணம் உண்டு. உள்ளாட்சித் துறை கொசு மருந்து வாங்குகிறது. அதில் லஞ்சம் பெற்று கொண்டு நீர்த்து போன மருந்தை வாங்கி தெளிக்கும் போது கொசுவுக்கு சுகமாக இருப்பதால் அது சாவதில்லை.

    எனவே மருந்து வாங்குவதில் உள்ள ஊழலை ஒழித்தாலே நம்மை எல்லாம் நோய் வாய்ப் பட வைக்கும் கொசுவை ஒழித்து விடலாம். எதிலும் அக்கரையும், நாணயமும் இருந்தால் வெற்றி முடியும். அந்த அடிப்படையில் விஜயகாந்த் சொல்கிறார்.

    கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி. மு.க.வுக்கு ஒரு பபபப என்ற தாகம் மககளிடையே இருக் கிறது. அதை மூப்பனார் முதல் ரஜினிகாந்த் வரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை. புரட்சி கலைஞர் விஜயகாந்த் துணிந்து தனது சொந்த செலவில் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிடுகிறார். ஆகவே மக்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

    ஒரு சர்வேபடி 32 சதவீதம் பேர் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை பிடிக்காதவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் தே.மு.தி.க. பக்கம் வருவதால் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.

    தி.மு.க. அறிவித்து உள்ள திட்டங்கள் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கும். வறுமையில் இருந்து அவர்களை விடுவிக்காது. 2 ஏக்கர் இலவச நிலம் போன்ற திட்டத்தை கடந்த 1974-ம் ஆண்டு அர்ஜின்டினா நாட்டில் நிறைவேற்றப்பட்டது. இலவச நிலத்தை 10 ஆண்டு களுக்கு விற்கக்கூடாது என்று ஆணையிடப்பட்டு இருந்தது.

    தற்போது அங்கு நடத்திய சர்வேயில் நிலம் பெற்றவர்கள் எந்த வகையிலும் முன் னேறாமல் ஏழைகளாகவே உள்ளனர். காரணம் அவர் களுக்கு வேறு வழியில் வருமானம் இல்லாததால் வங்கி எதுவும் கடன் கொடுப்பது இல்லை. இதனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. எனவே இங்கும் இலவச நிலம் பெற்றவர்கள் மேலும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

    ஏழைகளின் வறுமையை போக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நல்ல அறிவும் தேவை. எனவே விஜயகாந்த் சொல்வதை போல 25 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப்பதை விட அவர் களுக்கு வேலை கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். வறுமையும் குறையும்.

    இந்த இலவச டி.வி. கொடுப்பதை நினைக்கும்போது, `தாத்தா அரசு செலவில் கலர் டி.வி. தருகிறார். பேரன் கேபிள் இணைப்பு மூலம் வருடத்திற்கு 300 கோடி வரை சம்பாதிக்கிறார்’ என்று தான் சொல்ல தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன் னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உடன் இருந்தார்.