Daily Archives: ஒக்ரோபர் 3, 2006

Thirunelveli – Who is the DMK’s Mayoral Candidate?

Dinamani.com – TamilNadu Page

நெல்லை மேயர் பதவிக்கான திமுக வேட்பாளர் யார்?

ப. இசக்கி

திருநெல்வேலி, அக். 4: திருநெல்வேலி மாநகராட்சித் தேர்தலில், திமுகவில் மேயர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. மேயர் பதவிக்கான வேட்பாளரை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால், அப் பதவியைக் கைப்பற்ற பலரும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.

இம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தேர்தல் இம் மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் மேயரையும், மாமன்ற உறுப்பினரையும் தனித்தனியாக வாக்காளர்களே நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். இம் முறை அப்படி அல்லாமல், வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து மேயரைத் தேர்ந்தெடுக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இம் மாமன்றத்திற்கு மொத்தம் 55 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும், அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக களத்தில் உள்ளன. இவர்களுடன் தேமுதிக மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.

வெற்றி பெறும் மாமன்ற உறுப்பினர்களில், பெரும்பான்மையை பொறுத்து மேயர் பதவி திமுகவுக்கா அல்லது அதிமுகவுக்கா என்பது தெரிய வரும். எனினும், மேயர் பதவிக்கானப் போட்டியில் இவ்விரு கட்சிகள் மட்டுமே போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இதில், குறைந்தபட்சம் 28 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவர் மேயர் ஆவார்.

மேயர் பதவியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் திமுக, மொத்தம் உள்ள 55 வார்டுகளில் 32 வார்டுகளில் போட்டியிடுகிறது. எஞ்சிய இடங்களில் தோழமைக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

திமுக உறுப்பினர்கள் அதிகமாக வெற்றி பெற்றால், அக் கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக, தற்போதைய மாவட்ட அவைத் தலைவர் சுப. சீத்தாராமனை நிறுத்தலாம் என கட்சித் தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் 22-வது வார்டில் போட்டியிடுகிறார்.

ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ.வான அ.லெ. சுப்பிரமணியனுக்கு, கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படாததால் மேயர் பதவிக்கான வேட்பாளராக அவரை நிறுத்த வேண்டும் என ஒரு கோஷ்டியினர் வற்புறுத்தியதால் அவர் 40-வது வார்டில் போட்டியிடுகிறார்.

இதனிடையே மாவட்ட இளைஞரணி பொறுப்பாளரும், 20-வது வார்டு வேட்பாளருமான கா. முத்துராமலிங்கம், தனக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு இருப்பதால், தானே மேயர் வேட்பாளர் என தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.

இவர்களுடன், 7-வது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பி. சுப்பிரமணியன், தற்போதைய துணை மேயர் விஸ்வநாதன் ஆகியோரும் மேயர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

“உள்ளடி’ வேலைகள் ஆரம்பம்: மேயர் பதவிக்குப் போட்டியிடுபவர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அடிப்படை அவசியம். எனவே, மேயர் பதவியைக் கைப்பற்ற நினைப்பவர்கள் ஒவ்வொருவரும் போட்டியாளர்களை, உறுப்பினர் தேர்தலிலேயே தோல்வி அடையச் செய்யும் “உள்ளடி’ வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களில் தப்பியவர் சுப்பிரமணியன் மட்டுமே.

இதற்காக, மேயர் பதவிக்கான வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில் அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவோருடன் “உறவு’ வைத்துக் கொண்டு செயல்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வகையில், மேயர் பதவிக்கான வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோரின் தேர்தல் செலவுகள் மட்டுமின்றி, அவர் வெற்றி பெற்றால், தான் மேயராக ஆதரவளிக்க வேண்டும் என்ற “உறுதிமொழி’ பெறப்பட்டு அதற்கான “உதவிகள்’ அனைத்தும் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Usilampatti’s Kodikkulam – Dalit Lady Candidate in the footsteps of Pappapatti & Keeripatti

Dinamani.com – TamilNadu Page

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்று தேர்தலைக் கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் மேலும் ஒரு கிராமம்

உசிலம்பட்டி, அக். 4: மதுரை மாவட்டத்தில், தேர்தல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் மேலும் ஒரு கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி அருகே உள்ளது கொடிக்குளம் ஊராட்சி.

  • கொடிக்குளம்,
  • கே.கே. காலனி,
  • வடுகபட்டி,
  • பிரவியம்பட்டி,
  • ஜோதிமாணிக்கம்,
  • உடன்காட்டுப்பட்டி ஆகிய பகுதிகள் இந்த ஊராட்சியில் வருகின்றன.

    இந்த ஊராட்சி கடந்த ஊராட்சித் தேர்தலில் பெண்- பொதுப் பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, சுழற்சி முறையில் தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலத்தில் இதற்கு முன்னர் நடைபெற்றது போன்று, இங்கும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் முயற்சி நடைபெற்றது.

    அதாவது, தேர்தலை புறக்கணிப்பது, அல்லது யாரேனும் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்ற கையோடு ராஜிநாமா செய்ய வைப்பது என கிராமத்தினர் முடிவு செய்திருந்தனர்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செல்லம்பட்டி ஒன்றியத் தலைவி ஜெயமணி ஊராட்சித் தலைவர் பதவிக்கும், உறுப்பினர் பதவிக்கு காளியம்மாள் என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

    இதை சற்றும் எதிர்பாராத கிராமத்தினர் ஜெயமணிக்கு எதிராக தலைவர் பதவிக்கு வீமன் மனைவி பாலாமணி என்பவரை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இவரை வெற்றி பெற்ற செய்து, அதன் பின்னர், பதவியை ராஜிநாமா செய்ய வைப்பது என கிராமத்தின் ஒரு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், மார்க்சிய கம்யூ. சார்பில் போட்டியிடும் ஜெயமணி கூறுகையில், இத் தேர்தலில் நான் போட்டியிடுவது எவருக்கும் எதிரானதல்ல. ஒட்டு மொத்த கிராம வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதுதான் நோக்கம். எனவே, பெரும்பான்மையான மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்றார்.

    ஆனால், இப்பிரச்சினை குறித்து கிராமத்தினரிடம் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

  • Varun Gandhi the rising ’son’ in BJP – Vidisha: As of now, BJP undecided

    Headline News – Maalai Malar

    மத்தியபிரதேச எம்.பி. இடைத்தேர்தல்: வருண்காந்தியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுமா?

    புதுடெல்லி, அக். 3-
    மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரி பதவிக்காக அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விதிஷா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த மாத கடைசியில் விதிஷா எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    பாரதீய ஜனதா சார்பில் இந்த தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

  • முதல்-மந்திரியின் மனைவி சதானாசிங்,
  • வருண்காந்தி,
  • சுஷ்மாசுவராஜ்,
  • முதல்-மந்திரியின் தீவிர ஆதரவாளரும், மந்திரியுமான ராம்பால்சிங் ஆகியோர் போட்டிக்கான வாய்ப்பில் உள்ளனர்.

    ஆனால் பாரதீய ஜனதா இன்னும் முடிவு செய்யவில்லை. வருண்காந்திக்கு டிக்கெட் கிடைத்தால் ஒருவேளை அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வருண்காந்திக்கு டிக்கெட் கிடைக்காது என்று காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் கருதுகிறார்கள். வருண்காந்தி போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜே.பி. அகர்வால் வேட்பாளராக நிறுத்தப்படலாம். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை நாளை முடிவு செய்கிறது.

    வருண்காந்திக்கு ஒருவேளை டிக்கெட் கிடைத்தாலும் தேர்தல் பிரசாரத்தின்போது பெரியம்மா சோனியா பற்றி விமர்சிக்க மாட்டார். அவர் தனது சகோதரர் ராகுல், சகோதரி பிரியங்காவுடன் நெருக்கமாகவே இருக்கிறார்.

    மேலும் வருண்காந்தி பாரதீய ஜனதாவை சேர்ந்தபோது அவருக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். இதனால் சோனியா பற்றி அவர் பிரசாரத்தின் போது எதுவும் பேசமாட்டார்.

  • Vijayganth to Demolish Mosquitoes if Voted to Power in Local Body Polls

    Dinamani.com – TamilNadu Page

    எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் கொசுவை ஒழித்துக் கட்டுவேன்: விஜயகாந்த்

    சென்னை, அக். 3: எங்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

    உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

    கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டேன். நான் தனித்து நிற்பதுபோல் மற்ற கட்சிகளும் போட்டியிட தயாரா என்று கேட்டேன் யாரும் பதில் சொல்லவில்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – திமுகவுக்கு மாற்றாக எங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவே வந்துள்ளேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

  • ஒரே ஆண்டில் சென்னையில் கொசுக்களை ஒழித்துக் காட்டுவேன். தவறு என்றால் ஒப்புக் கொள்வேன்.
  • மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகள் போல் தரமானதாக மாற்றிக் காட்டுவேன்.
  • ஆளும் கட்சியாக வந்தால்தான் மாநகராட்சிக்கு நிதி கிடைக்கும் என்று நினைக்காதீர்கள். மாநகராட்சிக்கு என்று தனி நிதி இருக்கிறது. மத்திய அரசு தரும் நிதியும் இருக்கிறது.
  • நூற்றுக்கு நூறு என்று டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள். மக்கள் அப்படி சொல்லவில்லை. டி.வி. விளம்பரத்துக்கு கொடுக்கப்படும் பணம் நமது வரிப்பணம்.

    காட்டு யானையைத்தான் நாம் பார்க்கவேண்டும். சின்ன முயலைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை என்கிறீர்கள். நீங்களும் முயலாகவும் எலியாகவும் பூனையாகவும் இருந்ததை யோசித்துப் பாருங்கள். சின்னத்தை முடக்கிய பின்னரும் நாங்கள் தனித்து நிற்கிறோம். நீங்கள் சின்னம் இல்லாமல் நிற்க தயாரா?

    எனக்கு மக்கள்தான் எஜமானர்கள். திமுகவும் அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்வார்கள் என்று பட்டாப் போட்டு கொடுக்கவில்லை. அவர்கள்தான் ஆட்சிக்குத் தொடர்ந்து வரவேண்டுமா? உண்மையைப் பேசினால் என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்கிறார்கள். நான் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. ஆறிலும் சாவு நூறிலும் சாவு எனவே உண்மையைச் சொல்ல அஞ்சமாட்டேன் என்றார் விஜயகாந்த்.

  • Madhavaram – ADMK vs DMK

    Dinamani.com – TamilNadu Page

    உள்ளாட்சித் தேர்தல்-2006: மாதவரம்: அதிமுக-திமுக கடும் போட்டி

    சென்னை, அக். 3: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் சென்னை மாதவரம் நகராட்சியில் வெற்றிப் பெறுவது யார் என்பதில் திமுக, அதிமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான மாதவரம் நகராட்சியில் 2001 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அதிமுகவினர் தலைவர் பதவியை கைப்பற்றினர்.

    கடந்த 5 ஆண்டுகளில் இங்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருவதாக தற்போதைய தலைவர் வி. வீரமணி (அதிமுக) தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியது:

  • கடந்த 5 ஆண்டுகளில் மாதவரத்தில் 42 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்பட்டன.
  • ரூ. 3.39 கோடியில் மழை நீர் கால்வாய்கள் மேம்பாடு, 1.50 கோடியில் மேல் நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைத்தது என எங்களது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

    இருப்பினும் இங்கு அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டதே மிகப்பெரிய சாதனை என்றார் வீரமணி.

    ஆனால், ஆதிமுக தரப்பு தெரிவிப்பது போல இங்கு எந்த சாதனையும் நடக்கவில்லை என திமுகவினர் மறுக்கின்றனர்.

    மாதவரத்தில் இன்றளவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் பட்டியல் சாதனைப் பட்டியலை விட பெரியதாக உள்ளது என திமுக சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் எஸ். சுதர்சனம் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியது:

  • பல இடங்களில் இன்னமும் சாலைகள் குண்டும் குழியுமாகவே உள்ளன. நகராட்சியின் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் இன்றளவும் கானல் நீராகவே உள்ளது என்றார் அவர்.
  • சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் மிகவேகமாக வளர்ந்து வரும் மாதவரம் நகராட்சியின் தேவையின் அடிப்படையில் கணக்கிட்டால் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மிகக் குறைவு என இப்பகுதி மக்கள் கூறினர்.
  • Marathadi Pep Sundar 

    Marathadi Pep Sundar Posted by Picasa

    Soban Babu – Teluegu Actor 

    Soban Babu – Teluegu Actor Posted by Picasa

    Seenu – Thamizh Valaipathivar 

    Seenu – Thamizh Valaipathivar Posted by Picasa

    Mu Ka – Book Author J Ramki 

    Mu Ka – Book Author J Ramki Posted by Picasa

    Madurai Sivamurugan 

    Madurai Sivamurugan Posted by Picasa