Pros & Cons – Politics behind the Panchayath Board Conversions


Dinamalar.com

கட்சி சார்ந்த தேர்தல் “பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகளில் “புரமோஷன்’ பின்னணி அம்பலம்” – தினமலர்

சமீபத்தில் மாற்றப்பட்ட பேரூராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கும் கட்சி அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளை பேரூராட்சிகளாக மீண்டும் மாற்றியதற் கான காரணம் வெளிப் பட்டுள்ளது.

தமிழகத்தில் 611 பேரூராட்சிகள் இருந்தன (டவுன் பஞ்சாயத்துகள்). பெரும்பாலான மாநிலங்களில் பேரூராட்சிகளே கிடையாது. மத்திய அரசு கிராம மேம்பாட் டுக்காக வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான பயன்கள் தமிழகத்தில் உள்ள பேரூராட் சிகளுக்கு கிடைக்காமல் இருந் தன. இதனால் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதியை பெறுவதற்காக முந்தைய அ.தி.மு.க., அரசு 50 பேரூராட்சிகளை மூன்றாம் நிலை நகராட்சிகளாகவும், 561 பேரூராட்சிகளை, சிறப்பு ஊராட்சிகளாகவும் மாற்றி உத்தரவிட்டது. எனினும் பேரூராட்சிகளில் முன்பு இருந்த அதே நிர்வாக முறை மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் முறை மாற்றப்படவில்லை.

தற்போது தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இம்மாத துவக்கத்தில் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டது. இதன்மூலம் 561 சிறப்பு ஊராட்சிகளையும் மீண்டும் பேரூராட்சிகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது. இவ்வாறு மாற்றியதற்கு காரணம், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக தான் என்று பேசப்பட்டது. இதுதவிர, மாநகராட்சிகளில் மேயர் மற்றும் நகராட்சிகளில் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கு பதிலாக கவுன்சிலர்களே தேர்ந் தெடுக்கும் வகையில் மற்றொரு அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணையம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டவுன் பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் இதர நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுமென தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன் 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் பேரூராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், அதன்பின் 2004ம் ஆண்டு தான் பேரூராட்சிகள் சிறப்பு ஊராட்சிகளாக மாற் றப்பட்டன. எனவே இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது கட்சி அடிப்படையில் இந்த சிறப்பு ஊராட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஊராட்சிகளுக்கு மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் கட்சி சின்னம் இல்லாமல் சுயேச்சையாக தான் போட்டியிட முடியும். அவ்வாறு சிறப்பு ஊராட்சிகளில் சுயேச்சைகளாக கட்சியினர் போட்டியிட்டால், ஒரே கட்சியினருக் குள்ளும், கூட்டணி கட்சியினருக்கு இடையேயும் பல்வேறு பகுதிகளில் மோதல் உருவாகும் என கருதப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆளும் கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகள் மற்றும் 150 நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சிகளில் மட்டும் தான் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ளாட்சிகளை பிரித்துக் கொள்வதில் அதிருப்திகள் உருவாகும். மேலும் பல பகுதிகளில் பதவிக்காக காத்திருக்கும் கட்சியினரை திருப்திபடுத்த முடியாமல் போகும்.

எனவே தான் 561 சிறப்பு ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றி, அங்கு கட்சி அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலும் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அறிவுரைகள் கொண்ட கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஓட்டுச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தேர்தல் அதிகாரி முக்கியமானதாக கருதும் இடங்களில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலின் இரண்டு பிரதிகள் அரசியல் கட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வார்டுக்கும் நூறு பிரதிகளை அச்சிடுமாறு மாநில தேர்தல் கமிஷனின் செயலர் தங்கசாமி பிறப் பித்துள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.