சிதம்பரம் ஆலயத்தில் தமிழில் பாட தடை குறித்த சர்ச்சை
தமிழ் நாட்டில் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொற்சபையிலிருந்து தமிழ் பக்தி பாடல்களான, தேவாரம் , திருவாசகம் போன்றவற்றை பக்தர்கள் பாட, கோவிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு, இரு தரப்புகளும் கலந்தோலோசித்து ஒரு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்று பொது தீட்சிதர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.
தமிழோசைக்கு அளித்த ஒரு பேட்டியில், சம்பந்தம் அவர்கள் இந்த கோவிலில் 1987ம் ஆண்டில், தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, தீட்சிதர்களே ஆறு கால பூஜைகளின் போது , வேத மந்திரங்களுடன் தேவார திருவாசகப் பாடல்களை பாடிவருவதாகக் கூறினார். ஆனால் இந்த முறை , பக்தர்களும் ஓதுவார்களும் பொற்சபையிலிருந்து தாங்களே இந்த பாடல்களை பாடி இறைவனை வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்று கோருவதாலேயே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
இது குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அதிகாரி இரண்டாண்டுகளுக்கு முன்னரே அளித்த உத்தரவில், தீட்சிதர்கள் பொற்சபையிலிருந்து தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடலாம் என்றும் மற்றவர்கள் பொற்சபையின் முன்னுள்ள பிரகாரத்திலிருந்து அந்த பாடல்களை பாடலாம் என்றும் கூறப்பட்டிருப்பதாகவும் கூறிய சம்பந்தம், இந்த உத்தரவைத் தாண்டி புதிய முடிவு எடுக்கப்படுமானால் அதன் சட்டபூர்வ தன்மை குறித்து நீதி மன்றங்கள்தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.











தகவலுக்கு நன்றி, பா.பா.
இதைத்தான் முதல்வரும் கூறியிருக்கிறார்.
புரிபவர்களுக்குப் புரிந்தால் சரி.
This issue has been wantonly
politicised by vested interests.
I hope that better sense will prevail.
வழி மொழிகிறேன்.