நேற்று வழக்கம் போல் 5:30 இருவுள் வாயிலைப் பிடிக்க முடிந்தது. ட்ரெயினின் சில பெட்டிகளில் குளிரூட்டுவது குறைவாக இருந்ததால், ஏசி இல்லாத பெட்டியில் இருக்கை எளிதில் வாய்த்தது. பக்கத்தில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண். உட்கார இடம் கொடுப்பதற்காக கைப்பையை சீட்டில் இருந்து எடுத்து, மடியில் புதைத்துக் கொண்டாள்.
‘You don’t know anybody in the train, right?’
அலெக்ஸாண்ட்ரோ கொன்சாலெஸ் திரைப்படத்தைப் பாதியில் பார்க்க ஆரம்பித்தவன் போல் பேந்த பேந்த விழித்தேன். இந்த ரயிலில் சில இந்தியரை எனக்கு தெரியும். என்னுடைய குக்கிராமம் அருகே, இறங்குபவர்களில் ஓரிரு சக பயணியரை முகமன் சொல்லும் பழக்கம் உண்டு. இவளுக்கு என்ன ஆச்சு? எனக்கு யாரைத் தெரிந்தால், இவளுக்கு என்ன பயன்?
கோடை ஆரம்பித்தாலும் மலையுச்சி பனி தாமதமாக உருகுவது போல் கொஞ்ச நேரம் கழித்தவுடன் உறைத்தது.
‘இல்லை… என்னுடையவர்கள் எவரும் இல்லை!’
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். எங்கள் சம்பாஷணை இனிதே முடிந்தது. பேப்பரை புரட்டியதில் ஜிதான் செய்தது சரியா, மோசமான புத்தக விமர்சனம் என்று பாப்புலரான செய்திகளை நிம்மதியாகப் படிக்க முடிந்தது.
ஆங்கில வலையகங்களில் சில:














