அழைப்பு வந்தால் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க பரிசீலனை – திருமாவளவன். இதில் முக்கியமாய் சொல்லியிருப்பது விஜயகாந்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்பது பற்றி. ஆக, இங்கும் இடம் பெயர் படலம் ஆரம்பிக்கலாம். [தினந்தந்தி]
திண்டிவனம் ராமமூர்த்தி தன் ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கி, அ.தி.மு.கவோடு இணையலாம். அவர் வருவதால் பெரியதாக அ.தி.மு.க. விற்கு பயனில்லை. ஆனால், தி.மு.க வோடு இருக்கும் காங்கிரஸில் உள்ளடி வேலைகள் நடக்கலாம்.
வை.கோ தன் பேச்சிலிருந்து எதையும் கண்டறிய முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே உறவினராய் இருந்தாலும், முறையான அழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆக, வை.கோவின் இடம் பெயர்தலுக்கான சூழலை அவரே உருவாக்கிவிடுவார்.
மிகத் தெளிவாக, இந்த மாத ‘உண்மை’ இதழில், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி வந்த ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொண்டு அதில் எப்படி எம்.ஜி.ஆரின் துப்பாக்கி சூடு, பெரியார் திடலில் நடக்க திட்டமிடப்பட்டதாக சொல்லியிருப்பதை இழுத்து, ஆர்.எம்.வீ க்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஒரு பிளவினை உண்டாக்க முயன்றிருக்கிறார். ஆர்.எம்.வீ இப்போது தி.மு.க பாசறையில் இருப்பதும், கீ.விரமணி அ.தி.மு.க அனுதாபியாக இருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களிடத்தில் ஆர்.எம்.வியினைப் பற்றிய ஒரு கசப்புணர்ச்சியினை தூண்ட இது வழிவகுக்கும்.
இந்த வார காமெடி, நடிகர் செந்தில் விகடனில் சொல்லியிருப்பது [ஏ கருணாநிதி!]










