சொல்றாங்க சொல்றாங்க


1. கவிஞர் வாலி – கருணாநிதி கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பாடியது:

‘கை’ உன் கை அருகில்
‘பம்பரம்’ உன் பை அருகில்
‘மாம்பழம்’ உன் மடியில்
‘செங்கொடிகள்’ உன் கையில்
வைகோ போவது வேறு கைக்கோ
அப்படி பத்திரிகைகள் எழுதுவது
வெறும் ‘சைக்கோ’

2. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் மதிமுக இன்னும் இன்னமும் இருக்கிறது. – வைகோ

3. எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. காந்தி கனவு கண்ட சுயராஜ்யம் இல்லை. ஆனால் வெளிநாட்டு கம்பெனிகள் வருவதற்குத் தடை நீக்கப்படுகிறது. அப்படி வந்தால் உள்ளூர் வியாபாரி எப்படி வாழ்வான்? – விஜயகாந்த் (மேலும் பல சுவையான தகவல்கள் நிரம்பிய செய்தி இது)

4. தமிழகத்தில் பாரதீய ஜனதா தனித்துப் போட்டியிடும். இது ஓராண்டுக்கு முன் எடுத்த முடிவு. – பொன்.ராதாகிருஷ்ணன்.

5. திமுக அணியில் ஏழு தொகுதிகளை முஸ்லிம் லீக் கேட்கும். தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன்.

6. வணிகர்களின் 27 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரவை ஆதரவு அளிக்கும். – தலைவர் த.வெள்ளையன் (எல்லாக் கட்சிகளுமே வாக்குறுதி அளித்தால் என்ன செய்வார்?)

2 responses to “சொல்றாங்க சொல்றாங்க

  1. ஜாமீன் கிடைத்தால் தேர்தலில் போட்டி-ஜெயலட்சுமி
    (http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060215105409&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.