சொல்றாங்க சொல்றாங்க


1. தமிழகத்திலும் புதுவையிலும் பாமக தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது. தமிழகத்திலும் புதுவையிலும் பாமக இப்பொழுது மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கும். – அன்புமணி

2. திமுகவுடன் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலோசனை நடத்தினேன். விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. – ராமதாஸ்

3. நாம் போகி கொண்டாடுகிறோம். அழுக்கைப் போக்கிவிட்டு பொங்கல் கொண்டாடுகிறோம். அதேபோல தரமற்ற ஆட்சியை அகற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். – கருணாநிதி

4. தமிழகத்தில் கட்சி வளர்ந்துள்ளது. எனவே அதிகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று திமுகவை வற்புறுத்துவோம். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன்

5. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று தமிழ் தேசியக் கட்சி அறிவித்துள்ளது. (யாருக்காவது இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று தெரியுமா?)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.