நேற்று நிருபர்களிடம் பேசியதிலிருந்து (உபயம்: தினமணி)
* திமுக அணியிலிருந்து மதிமுக வெளியேறி அதிமுகவுக்கு வர வேண்டும் என சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா. காளிமுத்து கூறியிருக்கிறார். கிடைக்கிற ஆதாயத்துக்கு ஏற்ப அணிமாறும் சபல குணம் படைத்தவர்கள் யாரும் எங்கள் கூட்டணியில் இல்லை.
* மதிமுக பற்றி தொடர்ந்து செய்திகள் வந்தபோதிலும், அதன் தலைமை விளக்கம் தரவில்லையே என்ற கேள்வி எழவில்லை. அந்தக் கட்சியின் தலைமைக்கும் எனக்கும் நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் இருக்கிற நெருக்கம்தான் அதற்குக் காரணம். அதனால் அவர் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றார் கருணாநிதி.










