Daily Archives: ஜூலை 14, 2005

கள்ள மார்க்கம்

என்.வினாயகம் ::

சில தினங்களுக்கு முன் பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் ரோட்டில் என்னுடைய டூவீலரில் வந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு ஓரமாக நின்றுகொண்டு ரோட்டில் செல்லும் வாகனங்களை வீடியோ கேமராவில் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நான் உட்பட யாரும் அவரை சட்டை செய்யாமல்தான் கடந்து சென்றோம். ஆனால், அவர் வீடியோ எடுத்ததற்கான காரணம்… பதினேழு நாட்களுக்குக்குப் பிறகுதான் தெரிந்தது.

‘நீங்கள் ஒருவழிப் பாதையில் சென்றிருக்கிறீர்கள். அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது. எனவே நூறு ரூபாய் அபராதம் கட்டுங்கள்’ என்று பெங்களூர் நகர போக்குவரத்துக் காவல் துறையிலிருந்து கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்கள். தவறு செய்ததை உணர்ந்த நான் உடனடியாக பணத்தைக் கட்டிவிட்டேன்.

போக்குவரத்து விதிகள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி வைத்துக் கொண்டு, காவலர்கள் போராடுவதை விட, இப்படிச் செய்தால் சத்தமில்லாமல் விதி மீறல்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. தமிழகத்திலும் இதை பின்பற்றலாமே ?

பிரமேயம்

THANGAIKKOR GEETHAM ::

தட்டிப் பார்த்தேன்
கொட்டாங்கச்சி
தாளம் வந்தது
பாட்ட வச்சி

தூக்கி வளர்த்த
என் அன்புத் தங்கச்சி
தூக்கி எறிஞ்சா
கண்ணு குளமாச்சி

தேனாக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும்
தேளாகக் கொட்டிவிட
நானும் துடிச்சேன்

தோள் மீது
தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல
நான்தானே சீராட்டினேன்

யாரென்று நீ கேட்க
ஆளாகினேன்
போவென்று நீ விரட்டும்
நாயாகினேன்

மலராக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட
நானும் தவிச்சேன்

பாதியில வந்த சொந்தம்
பெருசு என்றே
ஆதி முதல் வளர்த்த என்ன
வெறுத்து விட்டே

பாசம் வச்ச என் நெஞ்சு
புண்ணாகவே
புருஷன் பக்கம்
பேசிவிட்ட தங்கச்சியே

கிளியாக நெனச்சுத்தான்
உன்ன வளர்த்தேன்
நீயும் கொட்டி விட
வலியில நானும் தவிச்சேன்

பொண்ணா பொறக்கலையே போ

வே சேஷாசலம்

கோல விழியிலையே கொஞ்சும் மொழியிலையே
சேல உடம்புலயுஞ் சுத்தலையே – எலேடேய்
இன்னா கவிபடிச்சும் அப்ளாஸ் நமக்கில்லையே
பொண்ணா பொறக்கலையே போ.

நன்றி: தன்னம்பிக்கை – நவ. 2004

குறிப்பு: ‘பாரதி சின்னப் பயல்’ போல் அர்த்தத்தை மாற்றும் எசப்பாட்டு வெண்பாக்கள், ‘பொண்ணா பொறக்கலையே போ’ ஈற்றடிகளுடன் கிடைக்குமா?

இடஞ்சுட்டல்: ஆகாசம்பட்டு என்னும் தம் ஊர்ப்பெயரிலேயே கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பு முழுவதும் வெண்பாக்கள்தாம். – பெருமாள் முருகன்